Manithan - Sirukathai Thoguppu
By Indhumathi
()
About this ebook
Read more from Indhumathi
Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Maalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Oru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Tholaithoorath Thandavalangal Rating: 3 out of 5 stars3/5Irandu Per Rating: 5 out of 5 stars5/5Sarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Koondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Antha Sila Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Yaar Rating: 5 out of 5 stars5/5Kadalorak Karaigal Rating: 4 out of 5 stars4/5Enakkendru Nee Rating: 5 out of 5 stars5/5Maaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsThotti Meengalum Koondu Kiligalum Rating: 5 out of 5 stars5/5Kaagitha Kappal Rating: 5 out of 5 stars5/5Neeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Nenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Enge Antha Sorkkam Rating: 5 out of 5 stars5/5Kalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Odum Megangale Rating: 5 out of 5 stars5/5Pani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Avalukku Amuthendru Per Rating: 4 out of 5 stars4/5Yen Eppadi Rating: 5 out of 5 stars5/5Geethamadi Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Puthai Manal Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Manithan - Sirukathai Thoguppu
Related ebooks
Un Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5Janani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsSarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Muyandrean... Mudiyavillai! Rating: 5 out of 5 stars5/5Murintha Ambugal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnakkendru Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Ellaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Megalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsVaaththiyaaramma Rating: 0 out of 5 stars0 ratingsEnnithunithal Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsOru Renduzhuthu Nadigaiyin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsCurrency Vettai Rating: 5 out of 5 stars5/5Kari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Nenjam! Rating: 5 out of 5 stars5/5Ella Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5Bookmarks Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Illatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsKai Niraiya Vairam Rating: 0 out of 5 stars0 ratingsThaabamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsMaya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsSoorasamharam Rating: 0 out of 5 stars0 ratingsNayakkar Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsMithrahasini Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Manithan - Sirukathai Thoguppu
0 ratings0 reviews
Book preview
Manithan - Sirukathai Thoguppu - Indhumathi
13
நாக்கு
அவள் அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியையாகச் சேர்ந்து இரண்டே மாதங்கள்தான் ஆகியிருந்தன. பெண்கள் பத்திரிகை மாதம் இரண்டு இதழ்கள். எல்லாப் பெண்கள் பத்திரிகைகளிலும் வெளிவருகிற வழக்கமான செய்திகள் இதிலும் உண்டு ஒரு உண்மைக் கதை. சமையல் பகுதி, அழகுக் குறிப்புகள் என எல்லாம் உண்டு. இவற்றுக்கிடையில் ஒரு கதை. ஒரு கட்டுரை என சிந்தனையைத் தூண்டுகிற இலக்கியத்தரம் வாய்ந்த பகுதியும் பிரசுரிக்கப்படுவதுண்டு. அந்தப் பகுதிகளால் அதிகம் கவரப்பட்டே அவள் அப்பத்திரிகையில் உதவி ஆசிரியையாகச் சேர்ந்திருந்தாள்.
பத்திரிகை அலுவலகத்தில் வேலை என்பது அவள் பள்ளிக்கூட நாட்களிலிருந்தே கண்ட கனவு. தேடித் தேடிப் புத்தகங்களைப் படித்ததன் விளைவு. ஆங்கில இலக்கியத்தைக் கல்லூரியில் பாடமாக எடுத்துக் கொண்டிருந்தாலும் தமிழிலும் அவளால் சரளமாக எழுத வந்தது. சில பிரபலமான பத்திரிகைகளில் வெளியான அவளது கவிதைகளும், சிறு கதைகளும் வாசகர்களின் கவனத்தில் பதிந்திருந்த காரணத்தினாலேயே அவளுக்கு அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியை வேலை கிடைத்தது.
அந்த வேலையில் சேர்ந்த அன்று அவள் பட்ட சந்தோஷம் அதிகம். கண்ணில் தெரிந்த பொருளினைக் கைகள் கவர்ந்துவிட்ட சந்தோஷம். மண்ணில் தெரிந்த வானம் அவளது வசப்பட்டுவிட்ட சந்தோஷம். சம்பளம் என்று பார்த்தபோது சற்றுக் குறைவான ஊதியம்தான். என்றாலும் ஆத்மாவிற்குத் திருப்தி தரக்கூடிய, மனதை மகிழ வைக்கக்கூடிய ஒரு பெரிய காரியத்தில் தானும் ஒரு துளியாய்ப் பங்கு பெறப்போகிற சந்தோஷம். நிறைய இலக்கியம் படைக்கப்போகிற சந்தோஷம்.
அந்தப் பத்திரிகையில் அவள் விரும்பிப் படிக்க சிறுகதைப் பகுதியையும், சிந்தனைக் கட்டுரைகளையுமே அவள் பார்த்துக் கொள்ள நினைத்தாள். அவற்றில் எவ்வளவோ மாற்றங்கள் செய்ய ஆசைப்பட்டாள். தான் தேடிப் படித்திருந்த சிறு பத்திரிகைகளின் எழுத்தாளர்களிடமிருந்து கதைகள் வாங்கிப் போட நினைத்தாள். தன் மனதைத் தொட்ட கவிஞர்களின் கவிதைகளை வெளியிட ஆவலாக இருந்தாள். தானே சில அறிவு பூர்வமான கட்டுரைகளை எழுத ஆயத்தமானாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்து வந்து மாதிரி அவளுக்கு அந்த இலக்கியப்பகுதி கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக வெளியில் போய் சில பெரிய இடத்துப் பெண்களைப் பேட்டி காணுவதும், பிரபலங்களைச் சந்திக்க வைத்து அவர்களின் உரையாடலைக் கட்டுரையாக்குவதும், சினிமா நட்சத்திரங்களைப் பற்றின குறிப்புகளைச் சேகரிக்கிற விஷயங்களுமே தரப்பட்டன.
அதில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொண்டாள். கொடுக்கப்பட்ட இப்பகுதிகளையே இலக்கியத் தரமானதாக மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை வந்தது. தன் எழுத்தால் எதையும் சுவைப்படச் சொல்லமுடியும் என்ற காரணத்தால், அதனையும் சந்தோஷத்துடனே செய்யத் துவங்கிய போதுதான் அன்று அவளுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது.
பத்திரிகையின் ஆசிரியர் கூப்பிட்டுச் சொன்னார். மறுநாள் காலை எட்டு மணியளவில் பிரபல சமூக சேவகி - அந்த ஆண்டு அதற்காகப் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீ ரஞ்சனியையும், ஏம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிரபல பழைய திரைப்பட நடிகை ஒருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்ததைக் குறிப்பிட்டார்.
இந்த ஏற்பாட்டைச் செய்யறதுக்குள்ள போறும்னு ஆயிருச்சு. எம்.பி.யோட செகரெட்டரிகிட்டப் பத்துத் தரத்துக்கு மேல போன் பண்ணிப் பேசி கடைசியா ஒரு வழியா அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கினேன். அந்தம்மாவோட அப்பாய்ன்ட்மெண்ட் கிடைச்ச விஷயத்தை இந்தம்மா ஸ்ரீரஞ்சனிகிட்ட சொல்லி நாளைக்கு காலைல எட்டு மணிக்கு நீங்க எம்.பி. வீட்டுக்கு வந்துடுங்கம்மா ஊர்ல இவங்க என்னவோ அது தன் மரியாதைக்குக் குறைச்சல்ன்ற மாதிரிப் போறாங்க. ஏன், எம்.பி.யை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்களேன்றாங்க...
"அது எப்படியம்மா... அவங்க எம்.பி. அதுக்கு மரியாதை தர்ற விதமாக நாம போறதுதான் நல்லா இருக்கும். இந்தச் சந்திப்பு நாளைக்கு உங்களுக்கு நிறைய விஷயங்களில் உதவியா இருக்கும்னு சொன்னப்புறமும் தயங்கிக்கிட்டே ஒத்துக்கிட்டாங்க. இரண்டு தேசத்தோட பிரதம மந்திரியைக் கூட சுலபமா சந்திக்க வச்சுடலாம் போல இருக்கு. இரண்டு பிரபலமான பெண்களைச் சந்திக்க வைக்கிறது பெரும் பாடாக இருக்கு. ஈகோ கிளாஷ் நிறைய வர்றது. அதனால் ரொம்பப் பாடுபட்டு ஏற்பாடு செய்த சந்திப்பு.
இதைத் தவற விட்டுடாதீங்க. எட்டு மணின்னால் நீங்க ஏழரைக்கே போயிடுங்க. நேரா அந்தம்மா ஸ்ரீரஞ்சனி வீட்டுக்குக் காரை எடுத்திட்டுப் போய் அவங்களைக் கூட்டிக்கிட்டு சரியா எட்டு மணிக்கு எம்.பி. வீட்டுக்குப் போயிடுங்க. போட்டோகிராபர்கிட்டே சொல்லிடுங்க. அவரை எம்.பி. வீட்டுக்கே வரச்சொல்லிடுங்க. அட்டைப் படத்துலயே போடணும். அதுக்குத் தகுந்த மாதிரி எடுத்துக்கச் சொல்லுங்க. உள்ளயும் போட கலர் போட்டோ எடுக்கணும். முக்கியமா நீங்க சீக்கிரம் போயிடுங்க. அப்புறம் உங்களால் லேட்டுன்னு மேட்டர் கிடைக்காமப் போயிடக்கூடாது. என்ன... புரிஞ்சுதா...? எப்படியாவது மேட்டரை முடிச்சுக்கிட்டு வாங்க என்ன...?"
சரி சார்...
மறுநாள் காலையில் அவள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, வீட்டில் தன் வேளைகளை முடித்துக் கொண்டு, டேப்ரிகார்டரையும் இரண்டு காஸெட்டுகளையும், குறிப்பு நோட்டையும் பையில் போட்டுக் கொண்டு ஆபீஸ் கார் வந்ததும் சரியாக ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டாள். அவள் வீட்டிலிருந்து அந்தச் சமூக சேவகியின் வீடு பக்கத்தில்தான் இருந்தது. அங்கு அவள் போய்ச் சேர்ந்தபோது மணி ஏழேகால்தான் ஆகியிருந்தது.
சமூக சேவகி என்றதும் இவள் எளிமையானதோர் வீட்டைக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தாள். ஓர் ஆசிரமம் மாதிரி இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தாள். சமூக சேவகியும் கதர் அல்லது கைத்தறி புடவையில் இருப்பாள். தலையை இறுகக் கட்டி, மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு இவளைப் பார்த்தும் கைகூப்பி வரவேற்பாள் என்பதெல்லாம் இவளது எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் இவள் போய் இறங்கின வீடோ வாசல் கூர்காவும், பெரிய அல்சேஷன் நாயுமாகப் பணத்தில் மினுமினுத்தது. வீட்டின் போர்டிகோவில் ஒரு வெள்ளை மாருதியும், சிமெண்ட் வர்ண பியட்டும், வீட்டை ஒட்டி பக்கத்தில் ஆழ்ந்த நீல அம்பாஸிடர் காரும் நிறுத்தப்பட்டிருக்க இவள் யோசித்தாள்.
‘இத்தனை கார்கள் இருக்கிறபோது இந்தம்மா எதற்காக எடிட்டரிடம் கார் கொண்டு வரும்படி சொன்னாள்...?’
கூர்காவையும், அல்சேஷனையும் தாண்டி உள்ளே போனதும் வாசல் வராந்தாவிலேயே ஒரு வேலைக்காரப் பையன் எதிர்ப்பட்டான். அவனிடம் இவள் தான் வந்திருக்கிற விஷயத்தைத் தெரியப்படுத்தியனுப்பினாள். ஐந்து நிமிடத்திற்கெல்லாம் திரும்பி வந்த பையன் அம்மா உங்களை உட்காரச் சொன்னாங்க. வராங்களாம்...
என்றான்.
இவள் வராந்தாவில் போடப்பட்டிருந்த பிரம்புக்கூடை நாற்காலிகள் ஒன்றில் உட்கார்ந்து டீபாயில் கிடந்த பழைய ஆங்கிலப் பத்திரிகையைப் புரட்டினபோது -
உள்ளே சமூகசேவகி யாருடனோ டெலிபோனில் பேசுவது கேட்டது. குழைவான மெல்லிய தொனியில் கொஞ்சலான ஆங்கிலப் பேச்சு. இடையிடையே வெளிப்பட்ட சிரிப்பு. கிட்டதட்ட கால்மணி நேரப் பேச்சிற்குப் பின்னர் - சிரிப்பிற்குப் பின்னர் ஸோ வென் ஆர் யு கமிங் டு மெட்ராஸ்...?
என்ற கேள்வி.
ஐ வில் பி எக்ஸ்பெக்ட்டிங் யு. இஃப் யு டோண்ட் டர்ன் அப். ஐ வில் காட்சி தி ப்ளைட் அண்ட் கம் டு யுவர் ப்ளேஸ்
பெரியதாய் அலை அலையாய் ஓடிய சிரிப்பிற்குப் பின்னர் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட இவள் தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். ஏழு நாற்பது. இப்போது கிளம்பினால்தான் எம்.பி.யின் வீட்டிற்கு எட்டு மணிக்குப் போக முடியும். இன்னும் சமூக சேவகி தன் முகத்தைக்கூடக் காட்டவில்லை. புகைப்படக்காரர் வேறு எம்.பி.யின் வீட்டில் காத்துக் கொண்டிருப்பார். ஒரு வேளை இங்கு நேரமாகி எம்.பி.யின் வீட்டிற்குப் போகத் தாமதமாகிற பட்சத்தில் எம்.பி. சந்திப்பிற்கு மறுத்துவிட்டால் என்ன ஆவது? பத்திரிக்காசிரியருக்கு என்ன பதில் சொல்வது? சமூக சேவகியின் வீட்டிலேயே நேரமானது தெரியாமல் அவர் தன்னைத்தான் சத்தம் போடுவார்.
என்னம்மா பொறுப்பில்லாம நடந்துக்கறே... எத்தனை தரம் இந்த மேட்டர் முக்கியம்னு சொல்லியனுப்பினேன். அது புரியாம இப்போ ஏதோ சாக்கு சொல்லிட்டு வந்து நிற்கறியே...
என்று கோபப்படுவார்.
‘கடவுளே! அதற்கெல்லாம் இடம் வைக்காமல் இந்தச் சமூக சேவகியம்மாளை சீக்கிரம் வெளியில் வரவழையேன்...’
இவளது பிரார்த்தனை கடவுளை எட்டியிருக்கும் போலிருக்கிறது. அடுத்த சில நிமிஷங்களில் சமூக சேவகி வெளியில் வந்தாள். பளீரென்ற பச்சை பிரிண்டெட் பட்டுப் புடவையும், அதே பிரிண்டெட் பட்டியில் ஜாக்கெட்டும், முகம் நிறைய தன் நிறத்தை இன்னும் அதிகமாக்கிக் காட்டுகிற மேக்கப்பும், கன்னங்களில் லேசான ரூஜ் மின்னலும், கண்களில் ஐ லைனரும், இமைகளைப் பெரிதாக்கிக் காட்டுகிற மஸ்காராவும், உதட்டில் சிவப்பும், காதிலும், கழுத்திலும், கைகளிலும் மின்னிய ஒற்றைக்கல் வைர நகைகளும்...!
இவள் சடாரென்று எழுந்து நின்று குட்மார்னிங் மேடம்...
என்றாள்.
வாம்மா... சந்திப்பு எப்ப? எட்டரை மணிக்குத்தானே?
இல்ல மேடம் எட்டு மணிக்கு.
எட்டு மணிக்கா? என் செகரெட்டரி எட்டரைன்னு இல்ல சொன்னா... ஜஸ்ட் எ மினிட்.
என்று உள்ளே திரும்பி பவானி
என்று குரல் கொடுத்தாள்.
பாப் தலையும், சமூக சேவகியை விட அதிக மேக்-அப்புமாக வந்த அந்த இளம் பெண் எஸ் மேம்...?
என்றாள்.
இவங்க பத்திரிகை சந்திப்பு எட்டரை மணிக்குன்னு இல்ல நீ என்கிட்ட சொன்ன?
இல்ல மேம் எட்டுன்னு சொன்னேன். காலைல நீங்க டெல்லி கால் பேசறதுக்கு முன்னால் கூட ஞாபகப்படுத்து-
ஓ. கே. தட்ஸ் ஆல்ரைட் நீ போ... யார் போன் பண்ணினாலும் நான் இன்னும் டூ அவர்ஸ்ல வந்துடுவேன்னு சொல்லு... கெட் மீ மை ஹாண்ட் பாக்...
அந்தப் பெண் கைப்பையைக் கொண்டு வர உள்ளே சென்ற சில விநாடிகளில் இவளிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டன.
போட்டோகிராஃபர் வரலையா?
அவர் நேரே எம்.பி. வீட்டுக்கு வந்து காத்துட்டிருப்பார் மேடம்.
போட்டோகிராஃபர்?
இவள் பெயரைச் சொன்னாள். நல்லா எடுப்பாரில்ல...?
ரொம்ப நல்லா எடுப்பார்.
கலர்தானே?
ஆமாம்
- இவள் வேண்டுமென்றே அதுவரை சொல்லிக்கொண்டு வந்த மேடத்தைத் தவிர்த்தாள்.
அட்டையிலேயே வருமில்ல...
ரேப்பர் மேட்டர்தான்...
போஸ்ட்டர் ஒட்டுவீங்க இல்ல...
ஐ திங்க் ஸோ...
நோ, நோ... போஸ்ட்டர் அடிச்சு ஒட்டணும்னு உங்க எடிட்டர்கிட்ட சொல்லிடு. நிறைய பப்ளிசிடி தரணும். பப்ளிசிடி கூடத் தரலைன்னால் எப்பிடி?
இவள் பேசாமலிருக்க சமூக சேவகியிடமிருந்து அதட்டலாகக் குரல் வந்தது.
என்ன?
எடிட்டர்கிட்ட சொல்றேன். இதெல்லாம் அவர் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
நான் சொன்னேன்னு சொல்லு...? இந்தப் பச்சைப் புடவையே போறுமா? கலர்ல நல்லா வருமா?
வரும்னுதான் நினைக்கிறேன்.
எதுக்கும் கைல இன்னொரு கலர் புடவையும் ஜாக்கெட்டும் எடுத்துக்கறேன். இன் கேஸ் இது சரியா வராதுன்னு உங்க போட்டோகிராஃபர் அபிப்ராயப்பட்டால் அங்க எம்.பி. வீட்டிலேயே மாற்றிக்கலாம் பாரு.
புடவை கொண்டு வர அவள் உள்ளே போக இவள் பதட்டப்பட்டாள். கைவிரல் நகங்களைக் கடித்தாள். மீண்டும் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். நல்ல வேலையாக அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சமூக சேவகி ஒரு வெளிநாட்டுப் பையும், வெளிநாட்டு அழகிய அலங்காரக் கைப்பையும், அப்போது அடித்துக்கொண்டு வந்த செண்ட்டும் மணக்க வந்து சேர்ந்தாள்.
புறப்படலாமா? கார் கொண்டு வந்திருக்க இல்ல...?
கொண்டு வந்திருக்கேன். காம்பவுண்டிற்கு வெளில இருக்கு.
உள்ள கூப்பிடு. நான் வெளில போய் ஏர்ற வழக்கமில்ல.
கார் உள்ளே வந்து ஏறினதும் புறப்பட்டு எம்.பி.யின் வீட்டை அடைந்தபோது மணி எட்டு இருபது.
இவளுக்குப் படபடத்தது; நேரம் தவறி வந்த காரணத்தினால் எம்.பி. இந்தச் சந்திப்பு இல்லை என்று சொல்லிவிடப் போகிறாளே என்கிற பயம் வந்தது.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எம்.பி.யின் உதவியாளர் வந்து அவர்களை, இவள் சமூக சேவகியின் வீட்டு வெளிவராந்தாவில் உட்கார்ந்திருந்த மாதிரி வெளி வராந்தாவின் கூடை நாற்காலிகளில் உட்காரச் செய்தார். இவர்களுக்கு முன்னால் வந்து காத்திருந்த புகைப்படக்காரர் எழுந்து இவளிடம் ஏதோ சொல்ல வருவதற்கு முன் உதவியாளர் சொன்னார்.
உட்காருங்க. இதோ அம்மா ரெடியாயிட்டாங்களான்னு பார்த்திட்டு வரேன்...
உதவியாளர் உள்ளே போனதும் புகைப்படக்காரரை