Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Renduzhuthu Nadigaiyin Kathai
Oru Renduzhuthu Nadigaiyin Kathai
Oru Renduzhuthu Nadigaiyin Kathai
Ebook124 pages41 minutes

Oru Renduzhuthu Nadigaiyin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580124105180
Oru Renduzhuthu Nadigaiyin Kathai

Read more from Ja. Ra. Sundaresan

Related to Oru Renduzhuthu Nadigaiyin Kathai

Related ebooks

Reviews for Oru Renduzhuthu Nadigaiyin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Renduzhuthu Nadigaiyin Kathai - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    ஒரு இரண்டெழுத்து நடிகையின் கதை

    Oru Renduzhuthu Nadigaiyin Kathai

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    1998’ல் ‘சாவி’ இதழில் வெளிவந்த தொடர்கதை

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    (யாராயிருக்கும் இந்த நடிகை என்று மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். கதை முடியும் வரை காத்திருங்கள்.)

    சினிமா நடிகைன்னா கற்போட இருக்க முடியாதா? கற்பாக இருக்க முடியும் என்கிறதை நிரூபிக்கறதுக்காகவே நான் நடிகை ஆனேன்.

    அப்படியே இன்றைய தேதி வரையிலே சாமி சத்தியமாக இருந்துண்டு வர்ரேன்.

    எனக்கு ஒரு சவுகரியம். நான் பொறந்து வளர்ந்து படிச்சது எல்லாமே இந்த மெட்ராஸிலேதான். பி.எஸ்ஸி ஃபைனல் இயர். கல்யாணம்னு சொல்லி படிப்பை நிறுத்தும்படி ஆயிட்டுது. கடைசில கல்யாணமும் நின்னு போச்சு. அந்தக் கதையை அப்புறம் சொல்றேன். விஷயம் தெரியாம வெளியூர்லேருந்து சினிமா ஆசையாலே ஓடி வந்து ஏமாந்த ஜென்மம் அல்ல நான். கதை வுட்றேன்னு நினைச்சிடாதீங்கோ. என் சித்தப்பா துறுதுறுன்னு இருப்பார். அழகா பர்சனாலிடியா இருப்பார். அவர் சினிமாவிலே சின்னச் சின்ன வேஷத்திலே நடிச்சிட்டிருந்தாரு.

    எங்க வீட்டிலயேதான் இருந்தார். என் அப்பா ரொம்ப ஆர்தடாக்ஸ். எப்ப பார்த்தாலும் கோயில் குளம்தான். வீடு நிறைய சாமி படம்தான். அப்பா எதிரிலே சித்தப்பா சினிமா பற்றிப் பேச மாட்டார்.

    அப்பா இல்லாத சமயம் சித்தப்பா அரட்டை அடிப்பார் என் கூடவும் என் தங்கை தம்பி கூடவும்.

    சித்தப்பான்னா எங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ வொர்ஷிப். ராஜு அங்கிள், ராஜு அங்கிள்னு உசிரை விடுவோம். வீட்டு மொட்டை மாடியிலே ராஜு அங்கிள் தன் சொந்தச் செலவிலே அஸ்பெஸ்டாஸ் கூரை போட்டு ஒரு 'ஷெல்ட்டர்' போட்டுண்டிருந்தார்.

    அப்பா ராஜு அங்கிளை வீட்டிலே சேர்க்க இஷ்டப்படலை. சொந்தத் தம்பியானாலும் சினிமாவிலே நடிக்கப் போயிட்டதாலே நோ அட்மிஷன்.

    ராஜு அங்கிளுக்கு அதனாலே ஒரு கோபம் இல்லை.

    தனியா ரூம் எடுத்திண்டு அவர் தங்கியிருக்கலாம். தி.நகர்லே பிரபல நகைச்சுவை நடிகர் (அப்போ அவர் பிரபலமில்லை) தங்கியிருந்த ரூமிலே ரெண்டொரு வாரம் தங்கியிருந்தார்.

    'ஒரே ஸ்மோக்கிங்! பசங்கள்ளாம் தண்ணி போட்றாங்க. என்னாலே அங்கே இருக்க முடியலே' அப்படீன்னு வந்துட்டார்.

    சித்தப்பாவுக்கு லேசாக வீஸிங் டிரபிள் உண்டு. அழகா மொழு மொழுன்னு இருப்பாரே தவிர சிகரெட் புகையோ பெட்ரோல் புகையோ முகத்திலே பட்டால் ராத்திரியே வீஸிங் வந்துடும்.

    எங்ககிட்டே ஒரு நாள் ஒரு சமாசாரம் சொன்னார். "இன்னிக்கு ஷூட்டிங்கிலே ஒரு தமாஷ். ஒரு ஸ்டண்ட் நடிகையோட நடிச்சிட்டிருந்தேன். எனக்கொண்ணும் பெரிய ரோல் இல்லை. ஸீன் என்னான்னா, அவள் என் காலரைப் பிடிச்சு இழுத்து தன் முகத்துக்குப் பக்கத்திலே என் முகத்தைக் கொண்டு போய், ‘டேய்! நீ வேவு பார்க்க வந்தவன்தானே'ன்னு கேட்டுட்டு என்னைப் பின்னாலே தள்ளி விடுவாள்.

    "அந்த நடிகைகிட்டேயிருந்து சிகரெட் நாற்றம் அடிச்சுதுடி... பிராமிஸ்.

    "அவள் சிகரெட் குடிப்பா போலிருக்கு. ஒரு டேக்குக்கு மூணு டேக் வாங்கிட்டுது ஸீன்.

    "ஷூட்டிங் முடிஞ்சதும் வாஷ் பேஸினுக்கு ஓடி வாந்தி எடுத்தேன்.

    "அதை அந்த நடிகை பார்த்திட்டே இருந்தாள்.

    "எங்கிட்டே ஓசைப்படாமல் வந்து 'ராஜு! ஏன் வாந்தி எடுக்கிறே? ஏதாவது சாப்பிட்டாயா? 'ன்னு கேட்டுட்டு கர்ச்சிப் கொடுத்து 'இந்தா துடைச்சுக்க’ என்றாள்.

    "உண்மையைச் சொல்ல முடியுமா?

    'காலையிலே வீட்டில் டிபன் சாப்பிட்டேன். தொண்டையிலே கருவேப்பிலை மாட்டிண்டு டிரபிள் பண்ணிண்டிருக்கு...’ன்னேன்.

    அவள் சிரித்தாள். 'பாபு! நீ பொய் சொல்றே. எங்கிட்டேயிருந்து வந்த சிகரெட் வாடை உனக்குப் பிடிக்கலை. அதுதானே? சொல்லு'.

    நான் தைரியத்துடன் வந்தது வரட்டும்னு, 'ஆமாம் மேடம்!'னு பளிச்சினு சொல்லிட்டேன்.

    இதைக் கேட்டதும் அவ என்ன செஞ்சா தெரியுமா? 'பாபு இன்னியோட நான் சிகரெட்டை விட்டுட்டேன்'னு சொல்லி கையிலிருந்த 555 முழுப் பாக்கெட் சிகரெட்டையும் வாஷ் பேஸின்லே கொட்டி, தண்ணியைத் திறந்து விட்டுட்டு சிரித்தாள்.

    என் குரல் தழுதழுத்தது 'மேடம், மேடம்! எனக்காக நீங்க ஏன், ஏன்...?' என்று தடுமாறினேன்.

    'தட்ஸ் ஆல்ரைட்! பாபு! நீ என் தம்பி மாதிரி. எனக்குத் தம்பின்னு யாரும் கிடையாது. ஒரு பிரியமான தம்பி சொன்னால் அக்கா கேட்க மாட்டாங்களா?' சொல்லிட்டுப் போயிட்டாள்.

    "நான் ஸ்டுடியோவிலே யாரும் பார்க்காத இடமாப் பார்த்து உட்கார்ந்துட்டு ரொம்ப நேரம் அழுதுட்டு வந்தேன்.

    நான் யாரோ, அந்த நடிகை யாரோ. எனக்காக சிகரெட்டை விட்டுட்டாள். என்னைத் தம்பியா நினைச்சு ராஜு ராஜுன்னு பிரியமா கூப்பிடறா.

    சித்தப்பா அந்த நடிகையைப் பற்றின இந்தச் சம்பவத்தைச் சொல்லி முடிச்சிட்டு முகத்தைக் கைக்குட்டையால் மூடிண்டு விசும்பி விசும்பி அழுதார்.

    அழாதீங்க சித்தப்பான்னு நான் சமாதானப்படுத்தினேன்.

    அழுதுதாம்மா ஆகணும்னார் சித்தப்பா. ஏன் அப்படீன்னேன்.

    அந்த அக்கா இன்னைக்கி இறந்துட்டாம்மா. லங்ஸ்ல கான்ஸர். எனக்கு விவரம் தெரிஞ்சிருந்தா போய்ப் பார்த்திருப்பேன். திடும்னு ஸ்டுடியோவிலே சொல்றாங்க. அதுக்குப் போயிட்டு வந்தேன். அதான் இன்னிக்கு ரொம்ப லேட்.

    நானும் இதைக்

    Enjoying the preview?
    Page 1 of 1