Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

S.S.66
S.S.66
S.S.66
Ebook282 pages1 hour

S.S.66

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையின் பிரபல ஹோட்டலான ஆன ராக்-அண்ட்-லாண்ட் ல் மர்மமான முறையில் இறந்து போன பிரபல சினிமா பட இயக்குனர் ஷாம்-ன் கொலை வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகளை துப்பறியும் நிபுணரான சங்கர்லால் எவ்வாறு அவிழ்க்கிறார்.

ஷாமின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? மற்றும் அதன் காரணங்களை எவ்வாறு கண்டறிகிறார் என்பதை விறுவிறுப்பான திருப்பங்களுடன் பார்ப்போம்.

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136605877
S.S.66

Read more from Tamilvanan

Related to S.S.66

Related ebooks

Reviews for S.S.66

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    S.S.66 - Tamilvanan

    http://www.pustaka.co.in

    எஸ்.எஸ்.66

    S.S.66

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    1

    இந்தியாவிலேயே இரண்டே இரண்டு ஓட்டல்கள்தாம் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றிருந்தன. ஒன்று, டில்லியில் உள்ள அசோகா ஓட்டல். மற்றொன்று பம்பாயில் உள்ள தாஜ்மகால் ஓட்டல். மூன்றாவது ஓர் ஓட்டல் சென்னையில் மிக அண்மையில் உருவாகி ஐந்து நட்சத்திரங்களைப் பெற்று விட்டது. இதன் பெயர், ராக் அண்ட் ஸாண்ட்.

    சென்னையின் பக்கத்தில், கடற்கரையின் அருகே கட்டப்பட்டிருந்த ராக் அண்ட ஸாண்ட ஓட்டலைப் பார்த்தவர்கள் இதற்கு ஐந்து நட்சத்திரங்கள் கிடைத்ததைப் பற்றிக் கொஞ்சமும் ஐயப்படமாட்டார்கள். இதை இவ்வளவு அழகாக இவ்வளவு ஆடம்பரமாகக் கட்டியவர் யார் என்று தான் வியப்படைவார்கள்.

    பத்து மாடிகளைக் கொண்ட இந்த ராக் அண்ட் ஸாண்ட் ஓட்டலில் ஒரே ஒரு குறை. எட்டவாது மாடியில் ஓர் அறை இருந்தது. இந்த அறையின் எண் 484. இந்த அறை மட்டும் எப்போதும் காலியாகவே இருந்தது. மற்ற அறைகள் எல்லாம் நிரம்பிவிட்டபோதிலும் இந்த அறையை மட்டும் காலியாகவே வைத்திருந்தார்கள். வெளியிலிருந்தே பார்ப்பதற்கு இந்த அறை பளிச்சென்று தெரியும். ஆகையால் வெளியேயிருந்து வந்ததும் பலர் இந்தக் குறிப்பிட்ட அறையைச் சுட்டிக்காட்டி இதுதான் வேண்டும் என்று கேட்பார்கள். இப்படிக் கேட்பவர்களுக் கெல்லாம் ஓட்டல் பொறுப்பாளர் அமைதியுடன், அடக்கத்துடன் பதில் சொல்லுவார்.

    பொறுத்துக்கொள்ளுங்கள். அதைவிட ஓர் நல்ல அறை அதே மாடியில் இருக்கிறது. கொடுக்கிறேன்.

    எனக்கு 484 எண்ணுள்ள அறைதான் வேண்டும். வேறு அறை வேண்டாம்.

    இது உங்கள் ஓட்டல் மாதிரி! உங்களுக்கு இல்லாததா? உங்களுக்கு இல்லை என்றால் என் வேலையே போய்விடும்! அதே நேரத்தில் உண்மையைச் சொல்லிவிட்டாலும் என் வேலை போய்விடும்!

    என்ன உண்மை? விரைந்து சொல்லுங்கள்.

    பிரபல சினிமாப்பட டைரக்டர் ஷாம் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்?

    ஆமாம். ஹிந்திப் படங்களை டைரக்ட் செய்து பெயரும் புகழும் பணமும் பெற்றவர். அவர் எடுத்த படங்களை நான் பார்க்கத் தவறியது இல்லை. அவருக்கு ரிசர்வ் செய்திருக்கிறீர்களா? யாரிடம் கதை விடுகிறீர்கள்? இந்த ஷாம் கொஞ்ச நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாகச் செய்தி வந்ததே! இப்போது அவர் சொர்க்கத்தில் இருப்பார், அல்லது நரகத்தில் இருப்பார்!

    அவர் நரகத்தில்தான் இருப்பார்! ஏனென்றால் அவர் செய்த பாவங்கள் கொஞ்சநஞ்சமல்ல!

    எங்கேயாவது கிடக்கட்டும்... 484

    வருகிறேன். இந்த டைரக்டர் ஷாமுக்கும் 484 அறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சொன்னால் நம்பமாட்டீர்கள்!

    நம்பும்படி சொல்லுங்கள்!

    இந்த ஓட்டலைத் தொடங்கியதும் டைரக்டர் ஷாம் அடிக்கடி சென்னைக்கு வந்து, இந்த ஓட்டலில், 484 எண்ணுள்ள அறையில் தங்குவார். ஒரு தடவை அவர் வந்து தங்கி இரண்டு நாட்களாகியும் வெளியில் வரவில்லை. கூப்பிட்டும் பார்த்தார்கள். கதவைத் தட்டிப் பார்த்தார்கள். கடைசியில் ஐயம் கொண்டு போலீஸைக் கூப்பிட்டுக் கதவை உடைத்தார்கள். உள்ளே பிரபல டைரக்டர் ஷாம், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள்?

    எட்டாவது மாடியே வேண்டாம்! வேறு எந்த மாடியில் வேண்டுமானாலும், எந்த அறை வேண்டுமானாலும் கொடுங்கள்.

    இதே மாதிரி ராக் அண்ட் ஸாண்ட் ஓட்டலுக்கு வந்தவர்களில் பலர் 484 எண்ணுள்ள அறையைக் கேட்டுவிட்டுப் பிறகு விவரம் தெரிந்ததும் எட்டாவது மாடியிலேயே தங்களுக்கு அறை வேண்டாம் என்று சொல்லுவது சர்வ சாதாரணமாகி விட்டது!

    484 எண்ணுள்ள அறையில் ஷாம் தூக்குப் போட்டுக் கொண்டார் என்பதோடு நிற்காமல், அது ஒரு மர்மம் மிக்க அறையாகவே விளங்கியது! அந்த அறையில் அடிக்கடி விளக்குகள் எரிந்தன! தலையாய பிரச்சனைகள் பல அங்கே தீர்க்கப்பட்டன! இது ஓட்டலில் உள்ள பணியாட்களிலேயே பலருக்குத் தெரியாது!

    *****

    2

    ராக் அண்ட் ஸாண்ட் ஓட்டலின் வெளியே ஒரு பழைய பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்து மூன்று பேர்கள் இறங்கினார்கள். மூன்று பேர்களும் குத்துச் சண்டை வீரர்களா, மல்யுத்த வீரர்களா, சினிமாவில் ஸ்டண்ட் செய்பவர்களா என்று எண்ணும்படி இருந்தார்கள்.

    மூவரும் ராக் அண்ட் ஸாண்ட் ஓட்டலுக்குள் நுழைந்ததும் லிப்டில் எட்டாவது மாடியை அடைந்தார்கள். 484 அறையின் முன் அவர்கள் சென்றபோது...

    கதவு திறந்துகொண்டது.

    அவர்கள் உள்ளே சென்றதும், கதவு மூடிக்கொண்டது.

    கதவுக்கு அப்பால் கதவைத் திறந்து மூடிய மனிதன் நின்றுகொண்டிருந்தான்.

    மூவரும் அவனைப் பார்க்காமல் அறையின் நடுவில் போடப்பட்டிருந்த மேல்நாட்டு நாற்காலியைப் பார்த்தார்கள். பெரிய அளவு நாற்காலி அது. நாற்காலியின் பின்புறம் தான் அவர்களுக்குத் தெரிந்தது நாற்காலியில் உட்கார்ந்திருந்த மனிதனின் தலையின் மேல்பாகமும், அவருடைய கைகளின் சில பாகங்களும் மட்டும் தெரிந்தன. அவர் மடியிலே அழகிய ஸயாம் நாட்டுப் பூனை ஒன்று உட்கார்ந்திருந்தது. மூன்று பேர்களும் வந்து பின்னால் கொஞ்சத் தொலைவில் நின்றதும், பூனை மட்டும் தலையை நீட்டித் தனது கண்களால் அவர்களை உற்றுப் பார்த்துவிட்டுத் தலையை இழுத்துக்கொண்டது.

    நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் சொன்னார்: நீங்கள் மூவரும் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்குத் தெரியும். எப்படிப்பட்ட செயலிலும் நீங்கள் இதுவரையில் தோல்வியுற்றது கிடையாது. ஆனாலும் இப்போது நான் சொல்லப்போகும் வேலையை வெற்றியுடன் உங்களால் செய்யமுடியுமா என்று தெரியவில்லை!

    எங்களால் முடியாதது மற்றவர்களாலும் முடியாது. நீங்கள் என்ன சொன்னாலும் உடனே செய்து முடிப்போம்! சொல்லுங்கள்! என்றான் மூவரில் ஒருவன்.

    அவன்தான் அந்த மூவருடைய தலைவன்.

    நாற்காலியில் உட்கார்ந்திருந்த மனிதர் இலேசாகச் சிரித்தார். அவர் சிரித்தபோது கேலியாகச் சிரிக்கிறார் என்பது மட்டும் மூவருக்கும் புரிந்தது. ஆனால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. பார்க்கத் துணிவும் இல்லை!

    நான் சொல்லப்போகும் வேலையில் தோல்வியடைந்தால் உங்கள் தலைமட்டும் போகாது, என் தலையும் போய்விடும். ஆகையால் ஒரு சிறு தவறும் நடக்கக் கூடாது! ஏதாவது தவறு நடந்தால், முதலில் உங்களை உடனே ஒழித்துவிடுவேன்.

    ஒருவரும் பேசவில்லை!

    நாற்காலியில் இருந்த மர்ம மனிதர் பேச்சைத் தொடர்ந்தார்:

    சங்கர்லாலைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது! இந்தச் சங்கர்லாலால் எனக்கு ஆபத்து ஏற்படலாம்! எந்த நிமிஷமும் ஆபத்து ஏற்படலாம்! அவரால் ஆபத்து ஏற்படுவதற்கு முன் நாம் முந்திக் கொள்ள வேண்டும்! சங்கர்லாலை ஒழிக்க வேண்டும்!

    சங்கர்லாலின் பெயரைக் கேட்டதும் மெஸ்மரிஸத்தினால் கட்டுண்டவர்களைப்போல் நின்றார்கள் மூவரும்.

    நாற்காலியில் உட்கார்ந்திருந்த மனிதர் சொன்னார்:என்னைப் பற்றிய பைல் ஒன்று போலீஸ் இலாகாவில் உருவாகி இருக்கிறது. ஆனால் போலீஸாரால் என்மீது எந்தவிதக் குற்றத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை! என்னைப் பற்றிச் சங்கர்லால்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப், என் பைலைச் சங்கர்லாலுக்கு அனுப்பி யிருக்கிறார். சங்கர்லால் மிக அண்மையில் தான் ஜப்பானிலிருந்து திரும்பி வந்தார். அவருடைய முல்லைவன எஸ்டேட்டில், மலைபங்களாவில் தங்கியிருக்கிறார். அவருடன் அவர் மனைவி இந்திரா, வேலைக்காரன் மாது, மலையாளச் சமையல்காரன், மாணிக்கம், மைனா, கத்திரிக்காய், பங்களாவுக்குக் காவலாகப் பொன்னன் ஆகிய இத்தனை பேர்களும் தங்கியிருக்கிறார்கள்! இவர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் குடும்பத்தோடு, பங்களாவோடு ஒழிக்க வேண்டும்! புரிகிறதா?

    ஒருவரும் பேசவில்லை.

    நாற்காலியில் உட்கார்ந்திருந்த மனிதர் சொன்னார்:சங்கர்லாலை எதிர்த்துப் போராடிக் கொல்ல முடியாது. மறைந்திருந்து தாக்கியும் தப்ப முடியாது. ஆனால் அவர் குடும்பத்தையே ஒழிக்க நாளை ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கிறது! அதைக் கைவிடக் கூடாது! நான் சொல்கிறபடி செய்ய வேண்டும்

    அப்போதும் ஒருவரும் பேசவில்லை!

    பூனையைத் தடவிக் கொடுத்தபடியே மேலும் தொடர்ந்தார் அந்த மனிதர். அவருடைய மற்றொரு கையிலே புகைந்து கொண்டிருந்த விலையுயர்ந்த சிகரெட்டிலிருந்து புகையை இழுத்து விட்டுவிட்டுச் சொன்னார்:

    சங்கர்லாலுக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தினர் நாளை மாலை டாக்டர் பட்டம் கொடுக்கப் போகிறார்கள். இந்தக் கௌரவப் பட்ட விழாவுக்கு ஏகப்பட்ட பெரிய மனிதர்களும் தலைவர்களும் வருகிறார்கள். இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளச் சங்கர்லால் குடும்பமே போகிறது. பங்களாவில் யாரும் இருக்கமாட்டார்கள். பட்டமளிப்பு விழா முடிந்து முல்லைவன எஸ்டேட்டுக்குத் திரும்பிவர இரவு பதினோரு மணியாகும். பட்டமளிப்பு விழாவில் நடந்ததைப் பற்றிப் பன்னிரண்டு மணிவரையில் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது சங்கர்லால் பங்களாவின் கூடத்தில் உள்ள ஆள் உயரமுள்ள சுவிட்சர்லாந்து கடிகாரம் பன்னிரண்டு தடவைகள் மணி அடிக்கும். அது பன்னிரண்டு மணி அடித்து முடிந்ததும், பங்களா முழுவதும் வெடித்துச் சிதற வேண்டும்! பங்களாவில் உள்ளவர்கள் யாரும் உயிருடன் தப்பக் கூடாது! இடிந்து நொறுங்கும் பங்களாவில் சிக்கி அனைவரும் ஒழியவேண்டும்.

    *****

    3

    முல்லைவன எஸ்டேட்டில் ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

    சங்கர்லாலின் விலை மிகுந்த பங்களாவில் உள்ளேயும் ஒருவரும் இல்லை. வெளியேயும் ஒருவரும் இல்லை. எங்கும் அமைதி நிலவியது.

    சங்கர்லாலுக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் அளிக்க ஏற்பாடு செய்திருந்ததால், சங்கர்லாலும் இந்திராவும் மாதுவும் மாணிக்கமும் கத்திக்காயும் மைனாவும் மலையாளச் சமையல்காரனும் காவலாளி பொன்னனும் கூடச் சென்னைக்குப் போயிருந்தார்கள். சங்கர்லாலுக்குப் பட்டமளிப்பதைப் பார்க்க எல்லோருமே கிளம்பிவிட்டதால் பங்களா மூடப்பட்டுக் கிடந்தது!

    மலைபங்களாவிலிருந்து இரண்டு கார்கள் புறப்பட்டன. ஒன்று சங்கர்லாலின் டிசோட்டா; மற்றொன்று மாணிக்கத்தின் பாண்டியாக் கார்.

    இரண்டு கார்களும் சங்கர்லாலின் குடும்பத்துடன் சென்னையை நோக்கிச் சென்றுவிட்டன.

    இரவு மணி ஒன்பது அடித்தது.

    சங்கர்லாலின் பங்களாவில் இருந்த ஆள் உயரமுள்ள சுவிட்சர்லாந்துக் கடிகாரம் மணியடித்தபோது அமைதியான முல்லைவன எஸ்டேட் முழுவதும் ஓசை இனிமையாகப் பரவியது. ஒன்பது தடவைகள் அந்தக் கெடிகாரம் அடித்துவிட்டு ஓய்ந்தபோது, சங்கர்லால் குடும்பத்தினர் இன்னும் திரும்பி வரவில்லையே என்று அது ஏங்குவதைப் போல் இருந்தது!

    கார், பங்களாவின் ஒரு பக்கமாக வந்து நின்றது. அதிலிருந்து, மூன்று பேர்கள் இறங்கினார்கள். மூவரும் ராக் அண்ட ஸாண்ட் ஓட்டலில் 484ம் எண்ணுள்ள அறையில் கூடிச் சங்கர்லாலையும் அவர் குடும்பத்தையும் ஒழிக்கப் புதுத் திட்டத்துடன் புறப்பட்டவர்கள்.

    மூன்று முரடர்களில் தலைவனைப்போல் இருந்த ஒருவன் மற்றொருவனைப் பார்த்து,பங்களாவில் ஒருவரும் இல்லை. பூட்டைத் திற. வேலை முடிந்ததும் மறுபடியும் அப்படியே பூட்டைப் பூட்டுவிடவேண்டும் என்றான்.

    ஆகட்டும் என்று சொல்லிவிட்டு அவன் சென்றான்.

    எப்படிப்பட்ட பூட்டையும் ஒரு சில வினாடிகளில் திறந்து விடுவான் அவன். பூட்டுகளைத் திறப்பதிலும் உடைப்பதிலும் வல்லவன் அவன். ஒரு சாவிக் கொத்தை எடுத்து எப்படிப்பட்ட பூட்டையும் திறந்து விடும் ‘மாஸ்டர் கீ' எனப்படும் சாவிகளைப் போட்டான். எந்தச் சாவியாலும் பூட்டைத் திறக்க முடியவில்லை!

    பூட்டை உடைத்தால் நமது வேலை கெட்டுவிடும். யாரோ பங்களாவுக்குள் வந்து போயிருக்கிறார்கள் என்ற ஐயம் சங்கர்லாலுக்கு வந்துவிட்டால் போதும், நமது திட்டம் குட்டிச் சுவராகிவிடும். உள்ளே போக வேறு வழி ஏதாவது இருக்கிறதா பார் என்றான் தலைவன்.

    இந்த நேரத்தில் மூன்றாவது மனிதன் காரிலிருந்து சில பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தான். ஜாதிக்காய் மரத்தினால் ஆன அந்தப் பெட்டிகளின் மீது ‘ஆபத்து' என்று எழுதி இருந்தது. எல்லாப் பெட்டிகளையும் அவன் பாதுகாப்புடன் கீழே இறக்கி வைத்தான்.

    பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டு அவன் நிமிர்ந்து பார்த்த போது மற்ற இருவரும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

    புறக்கடையின் பக்கம் ஒரு சன்னல் இருக்கிறது, கண்ணாடிச் சன்னல் அது. அதை மெல்லத் திறந்துவிட்டேன். அதன் வழியாக உள்ளே போகலாம். பிறகு வரும்போதும் அதே வழியில்தான் வரவேண்டும் என்றான் பூட்டுகளை உடைப்பவன்.

    விரைந்து வேலை நடக்கட்டும். நான் சொல்லுகிற இடங்களில் பள்ளங்களைத் தோண்டுங்கள் என்றான் தலைவன்.

    அவன் மின்பொறி விளக்கை அடித்துப் பங்களாவின் ஓரமாக எல்லாப் பக்கங்களிலும் ஒரு சில வட்டங்களைப் போட்டான் சாக்கினால்.

    மற்ற இருவரும் அவன் சாக்கினால் வட்டம் போட்ட இடங்களில் பள்ளம் தோண்டினார்கள். பிறகு, ‘ஆபத்து' என்று போடப்பட்ட பெட்டிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பள்ளத்தில் வைத்தார்கள். அந்தப் பெட்டிகளுக்குள் இருந்தவை வெடி மருந்துகள்.

    ஒருவன் மெல்லிய தீப்பிடிக்கும் திரி ஒன்றைக்

    Enjoying the preview?
    Page 1 of 1