Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Vaanvavil
Karuppu Vaanvavil
Karuppu Vaanvavil
Ebook219 pages1 hour

Karuppu Vaanvavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386583482
Karuppu Vaanvavil

Read more from Rajesh Kumar

Related to Karuppu Vaanvavil

Related ebooks

Reviews for Karuppu Vaanvavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Vaanvavil - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கறுப்பு வானவில்

    Karuppu Vanavil

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    என்னுரை

    அன்புக்குரிய வாசக நெங்சங்களுக்கு!

    வணக்கம்!

    உங்கள் கரங்களில் இடம் பிடித்து இருக்கும் கறுப்பு வானவில் நாவல் ஒரு பிரபல வார இதழில் வெளிவந்த தொடர்கதை.காதலும்,க்ரைமும் கலந்த ஒரு சரிவிகித கலவை.வாழ்வில் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்துவிடுவது இல்லை.நியாயமான ஆசைகளோடு கூடிய இலட்சியங்களை அடையவே நிறைய பேர் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.ஒரு அசாதாரண லட்சியத்தைத் தொட வேண்டுமானால் இன்னமும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. கொண்ட ஆசைகள் நியாயமானவையாக இருந்தால் அவற்றில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்.அதுவே முறையற்ற ஆசைகளாக இருந்தால் வெற்றி பெறுவது கடினம்.அப்படியே வெற்றி பெற்றலாலும் அது முழுமையான வெற்றியாக அமையாமல் ஒரு கேள்விக் குறியாய் மாறிவிடும்.சொல்லப் போனால் ஒரு வானவில் ஏழு வர்ணங்களோடு தோன்றிவிடும்.இந்த நாவலில் இடம் பிடித்துள்ள கருத்தும் இதேதான் என்பதை நீங்கள் படிக்கும்போது புரிந்து கொள்ள முடியும்.

    எழுதுவது ஒரு 'க்ரைம் நாவல்' என்றாலும் அந்தக் கதையில் கூட ஒரு 'ஆழசயட'இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.அந்த நினைப்பை இந்த நாவலிலும் செயல்படுத்தியுள்ளேன்.

    'கறுப்பு வானவில்' நாவலை பூம்புகார் பதிப்பகத்தார் சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். என் எழுத்துக்களை அழகிய புத்தகமாக்கிக் கொடுத்த பூம்புகார் பதிப்பகத்தார்க்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக்க அன்புடன்

    -ராஜேஷ்குமார்

    1

    கண்ணாடி முன் நின்று தன் சுருண்ட முடியை நேர்த்தியாய் சீவிக் கொண்டு இருந்த அரவிந்தை நெருங்கினாள் சொர்ணம். கையில் மணக்க மணக்க காபி.

    அரவிந்த்…

    என்னம்மா…

    காப்பியை சூடா குடிச்சாத்தான் நல்லாயிருக்கும்.

    இதோ…சீப்பை எறிந்து விட்டு காப்பி தம்ளரை வாங்கிக்கொண்ட அரவிந்துக்கு இருபத்தைந்து வயது.ஆறடி உயர உடம்பு. எடுப்பான நாசியும் வலதுபக்கம் குழிவிழுகிற கன்னமும் எந்தப் பெண்ணையும் சற்றே பேதலிக்க வைத்து 'இவனைக் காதலிக்கலாமா!' என்று யோசிக்க வைக்கும்.அவனுடைய கோதுமை நிறத்துக்கு அணிந்திருந்த இளநீல வர்ண சட்டையும் கறுப்பு வண்ண பேண்ட்டும் பாந்தமாயிருந்தது.

    அம்மா… ஒரு வாய் காப்பி சாப்பிட்ட அரவிந்த் நிமிர்ந்து சொர்ணத்தைப் பார்த்தான்.

    என்னடா?

    அரவிந்த்…

    என்னம்மா?

    இன்னிக்கு இண்டர்வியூக்குப் போற இந்தக் கம்பெனியில் உனக்குக் கண்டிப்பா வேலை கிடைச்சுடுமா?

    கிடைச்சுடும்.கவலைப் படாதேம்மா…

    இண்டர்வியூக்குப் போற ஒவ்வொரு தடவையும் இந்த வார்த்தையைத்தான் சொல்லிட்டுப் போறே, திரும்பி வரும் போது உதட்டைப் பிதுக்கிட்டு வர்றே…

    நான் என்னம்மா பண்றது?முதல் வகுப்பில் எம்.காம்., பாஸ் பண்ணியிருக்கேன்.விளையாட்டுல எக்கச்சக்கமா மெடல்களை வாங்கி வைச்சிருக்கேன்.இண்டர்வியூல்ல என் சர்ட்டிபிகேட்டுகளைப் புரட்டிப் பார்க்கவே பத்து நிமிடமாகும்.இவ்வளவு தகுதிகள் இருக்கிற எனக்கு எப்படியும் வேலை கிடைக்கும்ங்கிற நம்பிக்கையோடுதான் போறேன்.கேட்ட கேள்விக்கெல்லாம் மணியடிச்ச மாதிரி பதில் சொல்றேன்.கடைசியில் வேற யார்க்கோ அந்த வேலை கிடைச்சுடுது…

    சொர்ணம் லேசா கண்கலங்கினாள். உன் அப்பா மட்டும் உயிரோட இருந்திருந்தார்ன்னா ஒரு வேலைக்காக இப்படி அலைய வேண்டியதே இல்லை…

    அட… ஏம்மா கண் கலங்கறே! இப்ப என்னை இண்டர்வியூக்குக் கூப்பிட்டிருக்கிற கம்பெனி தமிழ்நாட்டிலேயே பெரிய கம்பெனி.இந்தியா பூராவும் நுற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கு.

    உனக்கு வேலை கிடைக்குமா?

    நிச்சயமா கிடைக்கும்மா.

    என்னமோ பார்க்கலாம்… எல்லாத்துக்கும் அந்தக் கருமாரியம்மன்தான் கண்திறந்து பார்க்கணும்…

    அரவிந்த் காப்பியை குடித்து முடித்துவிட்டு சர்ட்டிபிகேட் இருந்த ஃபைலை எடுத்துக் கொண்டான்.

    சொர்ணம் வாசல்பக்கம் பார்துக் குரல் கொடுத்தாள்.

    ஏண்டி கலா! ரோட்ல நல்ல சகுணம் இருக்கா?பார்த்து சொல்லு.

    ம்… வரலாம்.ஒரு சுமங்கலிப் பொண்ணு வந்துட்டிருக்கா…

    கிளம்புடா அரவிந்த்.

    அரவிந்த் கக்கத்தில் ஃபைலை அடக்கிக்கொண்டு ஃபோட்டோவை இமைக்காமல் பார்த்து அப்பாவைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு வாசலுக்கு வந்தான்.

    வித்தியாவும் கலாவும் பெரிய மனுசிகளைப் போல வாழ்த்தினார்கள்.எங்க ரெண்டு பேரொட ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டண்ணா… வேலை கிடைக்கும்.தைரியமா போயிட்டு வா…

    வர்றேன்! பாட்டிகளா…

    அரவிந்த் சிரித்துக் கொண்டே வாசற்படி இறங்கி தெருவில் கால் வைத்து வேகமாய் நடந்தான்.

    இரண்டு தெரு தள்ளி பஸ் ஸ்டாப் இருந்தது.வீட்டில் இருந்தவரைக்கும் மகிழ்ச்சியோடும் மலர்ச்சியோடும் இருந்த அரவிந்த் இப்போது முகம் மாறியிருந்தான்.

    இந்த வேலை கிடைக்குமா?

    அவனுக்கு நம்பிக்கை இல்லை.அந்தக் கம்பெனியில் காலியாக உள்ள ஒரு அக்கவுண்டண்ட் வேலைக்கு குறைந்த பட்சம் நூறு பேராவது மோதுவார்கள்.

    இது ஒருவேளை கண்துடைப்பு இண்டர்வியூவாகக் கூட இருக்கலாம்"

    என்ன தம்பி… பொம்பளை மாதிரி தலை குனிஞ்சுட்டு பார்க்காமலேயே போறீங்க?

    யோசனையிலிருந்து கலைந்து தலையை உயர்த்தினான்.

    அரவிந்த்.பெட்டிக் கடை வாசலில் கல்யாணத் தரகர் ராமசாமி நின்றிருந்தார்.அப்பா காலத்து மனிதர்.

    நான் கவனிக்கலை…

    இண்டாவியூக்கு போறீங்க போலிருக்கு?"

    ஆமா.

    எந்தக் கம்பெனி?

    கங்கா கவுரி குருப்ஸ்…

    அடடே…பெரிய கம்பெனியாச்சே அது.அந்த கம்பேனியிலிருந்து இண்டர்வியு கார்டு வர்றதே பெரிய விஷயம்! எப்படி…வேலை கிடைச்சுடுமா?

    அந்த நம்பிக்கையில்தான் போயிட்டிருக்கேன்…

    இதோ பாருங்க தம்பி, இந்தக் காலத்துல வெறும் நம்பிக்கை மட்டும் போதாது:வேற வழிகளும் வேணும்.சிபாரிசுக்கு யாரையாவது பிடிச்சிருக்கீங்களா?

    இல்லை.

    "என்ன தம்பி நீங்க?வீட்டுல இருக்கிற நிலவரம் புரியாமே இன்னம் சின்னக் குழந்தையா இருக்கீங்க.உங்கப்பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்ங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக மாசாமாசம் ரெண்டாயிரம் ரூபாய் மானியத் தொகையாக வருது.உங்க தங்கைங்க ரெண்டு பேரும் தையல் கிளாஸ் வச்சு நடத்துறது மூலமா கொஞ்சம் பணம் வருது.ஏதோ பசி பட்டினி இல்லாமல் வாழ்க்கை ஓடிட்டிருந்தாலும் பொண்ணுங்களுக்குக் கல்யாணம் நடக்க வேண்டாமா… உங்க அக்காவுக்கு வயது இருபத்தேழு.தங்கச்சிகளும் கல்யாண வயதுக்கு வந்து 'உன்னைப் பார் என்னைப் பார்'னு ஜோடி போட்டுகிட்டு நிக்கிறாங்க… அந்த வீட்டுல இருக்கிற ஒரே ஒரு ஆண் நீங்க.உங்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைச்சாதானே… நீங்க சீர் வரிசை சரியா பண்ணுவீங்கற தைரியத்துல

    உங்க வீட்டுக்குப் பொண்ணு எடுக்க வருவாங்க…"

    அரவிந்த் முகம் இருண்டு போய் தலை குனிந்தபடி நிற்க,பெரியவர் தொடர்ந்தார்.

    தம்பி! நான் ஒரு கல்யாணத் தரகராயிருந்தாலும் உங்க அப்பா காலத்து நண்பன்.உங்க அக்கா ரேணுகாவுக்கு எத்தனையோ மாப்பிள்ளைகளை நான் பார்த்துட்டேன்.மாப்பிள்ளைகளுக்குப் பெண்ணைப் பிடிக்குது.ஆனால் மாப்பிள்ளைளோட அம்மாவும் அப்பாவும் கணிசமா சவரன்களை எதிர்பார்க்கிறாங்க.இன்னும் சில பேர் பெண்ணோட தம்பி வேலைக்குப் போறதாயிருந்தாலும் பராவாயில்லை… அவனுக்கும் வேலை இல்லைன்னு சொல்றாங்க… அந்தக் குடும்பத்துல போய் எப்படி பெண் கேட்கிறதுன்னு கேட்கிறாங்க… மாப்பிள்ளை பார்த்துப் பார்த்து எனக்கு சலிச்சுப் போச்சு தம்பி.உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கலைன்னா இந்த ஜென்ம்த்துல உங்க அக்கா, தங்கச்சிகளுக்குக் கல்யாணம் நடக்காது…

    கண்களில் நீரோடு நிமிர்ந்தான் அரவிந்த்.

    நான் என்னங்க பண்ணட்டும்?கடந்த ரெண்டு வருடமா ஒரு வேலை கிடைக்காதான்னு நாய் மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன்.இண்டர்வியூ நல்லா பண்றேன்.ஆனா வேலை கிடைக்கமாட்டேங்குது…

    நம்ம தொகுதி எம்.எல்.ஏ.வைப் போய்ப் பார்த்தீங்களா?

    போய்ப் பார்த்தேன்.

    என்ன சொன்னார்?

    ஒரு இலட்ச ரூபாய் பணம் கேட்டார்.என்னால் முடியாதுன்னு சொல்லிவிட்டேன்.

    தரகர் பெருமூச்சு விட்டார்.எப்படியோ ஒரு நல்ல வேலையில் சேர்ந்துடுங்க தம்பி… இல்லேன்னா உங்க கூடப் பிறந்த மூணும் கன்னிக்கடன் கழியாமே காலம் பூராவும் வீட்டுல உட்கார்ந்துட்டிருக்க வேண்டியதுதான்.

    அரவிந்த் ஒன்றும் பேசாமல் தலையாட்டிவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

    கங்கா கவுரி குரூப்ஸ் கட்டிடம் ஏழு மாடிகளோடு ஒரு கேக் துண்டு மாதிரி நின்றிருக்க-வெளியே பார்க்கிங்கில் பல்வேறு ஜாதி கார்கள் தெரிந்தன.

    இண்டர்வியூ அறைக்குள் நுழைந்த அரவிந்துக்கு மார்பு அடைத்துக் கொண்டது.அறை முழுக்கப் போடப்பட்டிருந்த நுற்றுக்கணக்கான நாற்காலிகளில் இண்டர்வியூவுக்குக வந்ததிருந்த இளைஞர்கள் பட்டாளம் உட்கார்ந்து இருந்தது.அதில் பாதி பேர் பெண்கள்.

    'இந்த வேலை கிடைத்த மாதிரிதான்!'

    அரவிந்த் தளர்ந்து போய் அங்கிருந்த நாற்காலியொன்றில் சாய்ந்தான்.மனசுக்குள் பயம் பிறாண்டிக் கொண்டு இருந்தது.

    சரியாய் பத்து மணிக்கெல்லாம் இண்டர்வியூ தொடங்கியது.

    அரவிந்த் உள்ளே அழைக்கப்பட்டபோது பதினோரு மணி.வியர்த்து வழிந்து கொண்டு அந்த மேனேஜிங் டைரக்டரின் குளிர்சாதன அறைக்குள் நுழைந்தான்.

    மானேஜிங் டைரக்டர் கருணசேகர் ஐம்பது வயதில் புன்னகை முகத்தோடு தெரிந்தார்.நெற்றியில் சின்னதாய் குங்குமப் பொட்டு.கதர் வேட்டி, கதர் சட்டை.

    குட்மர்னிங் சார்…

    அவர் புன்னகை பெரிதாயிற்று.எதுக்குத் தம்பி குட்மார்னிங்கெல்லாம்?தமிழ்ல அழகாக வணக்கம் என்று சொல்லக்கூடாதா?

    வா… வ… வணக்கம் சார்…

    உட்கார் தம்பி.

    அரவிந்த் உட்காராமல் சரசரவென்று மேசையைச் சுற்றிக்கொண்டு போய் அவருடைய கால்களில் விழுந்தான்.

    அடடே!என்ன தம்பி இதெல்லாம்? எழுந்திரு…

    சார்… இந்த வேலை… எனக்குக் கண்டிப்பா வேணும். என் அப்பா ஒரு சுதந்திரப் போராட்ட கால வீரர்.அவர் இப்போ உயிரோடு இல்லை.எனக்கு இந்த வேலை கிடைச்சாத்தான் என் அக்காவுக்கும் ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் நடக்கும்… எனக்கு இங்கே வேலைகிடைக்காட்டி… நான் தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேறு வழியில்லை…கண்களில் நீர் வழிய சொல்லிக் கொண்டே எழுந்தான் அரவிந்த்.

    கருணசேகர் கையமர்த்தினார்.

    முதல்ல உட்கார் தம்பி.

    அரவிந்த் கண்களை துடைத்துக் கொண்டு போய் அமர- அவர் கையில் பேப்பர் வெயிட்டை வைத்து உருட்டிக் கொண்டே சொன்னார்."

    தம்பி! இந்தக் கம்பெனியில் சிபாரிசு எதுவும் செல்லாது, இங்கே திறமைசாலிகளுக்குத்தான் வேலை.இருக்கிற ஒரு அக்கவுண்டண்ட் வேலைக்கு நூத்தி அறுபத்தேழு பேர்ல நீ திறமைசாலியா இருந்தால் உனக்குக் கண்டிப்பா வேலை கிடைக்கும்.உன் ஃபைலைக் கொடு.

    கொடுத்தான்.

    சர்டிபிக்கேட்டெல்லாம் புரட்டிப் பார்தவர் மலர்ந்தார்.பரவாயில்லையே! படிப்பு, விளையாட்டு ரெண்டிலேயும் பிரகாசமா இருந்திருக்கே!நீ இண்டர்வியூ முடியற வரைக்கும் வெயிட் பண்ணு.மத்தவங்களுக்கு இண்டர்வியூவை முடிச்சுட்டு உனக்குப் பதிலைச் சொல்றேன்.

    நன்றி சார்.

    அரவிந்த் கைகளைக் குவித்து விட்டு ஒரு நூலிழை நம்பிக்கைளோடு வெளியே வந்தான்.

    இண்டர்வியூ முடியும்போது மத்தியானம் இரண்டு மணி.

    எல்லாரும் போய்விட்டு இருக்க… அரவிந்த் மட்டும் கடைசி வரிசை நாற்காலியில் எகிறுகிற இதயத்துடிப்போடு காத்திருந்தான்.

    பியூன் பக்கத்தில் வந்தான்.

    "சார்… உங்களை எம்.டி..

    Enjoying the preview?
    Page 1 of 1