Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Nilavu Varum
Meendum Nilavu Varum
Meendum Nilavu Varum
Ebook114 pages1 hour

Meendum Nilavu Varum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100900228
Meendum Nilavu Varum

Read more from Pattukottai Prabakar

Related to Meendum Nilavu Varum

Related ebooks

Reviews for Meendum Nilavu Varum

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Nilavu Varum - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    மீண்டும் நிலவு வரும்

    Meendum Nilavu Varum

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    கா

    லை மணி ஆறரை ஆகியும் நகராமல் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது ஒரு சதுர செ. மீ. பாக்கி வைக்காமல் பூமியை நனைத்துக் கொண்டிருந்த மார்கழிப் பனி.

    தெருவில் ஒரு வீடு தப்பாமல் வாசல்களில் கோலப் போட்டி போல வர்ணப்பொடிகள் நிரப்பி, பறங்கிப் பூ வைத்து விதவிதமான கோலங்கள். அருகாமை மாரியம்மன் கோவிலில் இருந்து அம்பிகையைக் கொண்டாட அழைக்கும் உச்ச டெஸிபல் எல். ஆர். ஈஸ்வரி, குழாயடியில் எல்லா நிறங்களிலும் பக்கெட்டுகள் கொண்டு இன்னும் பூ முடித்து, பொட்டு வைக்காதப் பெண்கள். விரைகின்ற பேப்பர் பையனின் சைக்கிள் கேரியரில் ஈரப் பதத்துடன் நியூஸ் ப்ரிண்ட் மணத்துடன் ‘ஹிந்து’க்கள், ‘தந்தி’கள், ‘மலர்’கள், ‘மணி’கள். டெலிபோன் கம்பிகள் தம் முயற்சி எதுவும் இல்லாமல் சேகரித்து வைத்திருந்த க்யூ வரிசை நீர் முத்துக்களில் ஒன்றிரண்டு அவ்வப்போது தரையில் குதித்துக் கொண்டிருந்தன. காணாமல் போனவர்கள் பட்டியலில் மிஸ்டர் சூரியபகவான்.

    சுரிதாரின் துப்பட்டாவை மப்ளர் போல தலையில் போட்டு தாடையில் முடிச்சிட்டுக் கொண்டிருந்த சூர்யா மொட்டை மாடியில் நடந்தபடி ஜெனரல் நாலெட்ஜ் புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள்.

    கதையில் இவள் ‘முற்றும்’ வரை வரப் போகிறவள் என்பதால் கொஞ்சம் வர்ணனைச் சலுகை காட்டி விடலாம்.

    சூர்யா இளம் பெண். ஆட்டோக்கள் சிபாரிசு செய்கிற திருமண வயதைத் தொட்டவள். படித்தது, பிரசிடென்ஸியில் பி. எஸ். சி. கெமிஸ்ட்ரி. உயரம் ஐந்து புள்ளி ஆறு. கறுப்புக்கும் சிவப்புக்கும் இடைப்பட்ட நிறம். நீளமான முகம். எப்போதும் திலகம் ஸ்டிக்கர் பொட்டு. ட்வீஸ் செய்யாமலேயே செய்தது போலத் தோற்றமளிக்கும் புருவங்கள். நுணுக்கி நுணுக்கி ஒரு சிறுகதை எழுதி விடலாம் போல படா படா கண்கள். நீளமான நாசி. ஒற்றைக் கல் மூக்குத்தி சூர்யா போல சில பெண்களுக்கு மட்டுமே கூடுதல் அழகு தருகிறது. வெளிரின ரோஜா நிற அளவான உதடுகளின் மேல் புத்தகங்களின் அட்டை மேல் செய்வது போல பிரம்மா ஒருவித லேமினேஷன் செய்திருக்க வேண்டும். விளைவாக ஆல் தி ட்வெண்ட்டிஃபோர் ஹவர்ஸ் ஒரு மினுமினுப்பு.

    தாடைக்கு நடுவில் லேசான ஒரு சிவரஞ்சனிப் பள்ளம் இருக்கிறதே அதைப் பற்றி தெருமுனையில் சதா கேரம் போர்டு விளையாடும் வேலை கிடைக்காத வேலுச்சாமி தன் அழுக்கான பழைய டைரியில் மூன்று தாள்களில் கவிதை எழுதி வைத்திருக்கிறான். அவசியமின்மை காரணமாக அந்தக் கவிதையை எடிட் செய்து விட்டு அடுத்த உறுப்புக்குத் தாவலாம்.

    அந்த அழகான தாடைக்கு நேர் கீழே ஒரு ஏரியல் (சலவைப் பவுடர் அல்ல) வியூவில் பார்ப்போமானால்… இருங்கள். என்னவோ போர்டு தெரிகிறது. கிட்டே போய்ப் படிக்கலாம். PRIVATE ZONE. அந்தரங்க ஏரியாவாம். சரி, டீசண்ட்டாகபுறப்பட்ட இடத்திற்குத் திரும்பி விடலாம்.

    மூன்று பாரா சமாச்சாரத்தை ஹைகூவால் கூவினால்…

    அவள் அழகாய்த்

    தெரிவாள் - உங்கள்

    காதலியைப் போல!

    வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் சூர்யா இன்றைக்குக் கலந்து கொள்ளப் போகிற நேர்முகத் தேர்வு பதினேழாவது. அழகான பெண்களுக்கு முதல் சீனிலேயே வேலையும் இலவச இணைப்பாகக் காதலும் கிடைத்து விடுவது சினிமாஸ்கோப் சினிமாக்களில்தான்.

    அந்த வீட்டில் சூர்யா தம்புராஜின் மகள். மணிவண்ணனின் தங்கை. ராஜிக்கு அக்கா. கல்யாணம் பண்ணிக் கொண்டுபோய் விட்டவர்களின் லிஸ்ட் அடுத்த பாராவில்.

    டி. லலிதா கோலார் தங்கச் சுரங்கத்தில் பணிபுரியும் சிதம்பரநாதனைக் கட்டிக்கொண்டு ஒன் ப்ளஸ் ஒன் பெற்றுக் கொண்டு வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து நிறைந்த போனஸ் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். டிபிக்கல் விளம்பர அம்மா.

    டி. பரமேஸ்வரி என்றதுமே ஒடிசலாக கண்ணாடி போட்ட பெண் நினைவுக்கு வருகிறாளா? கரெக்ட் உடுமலைப் பேட்டையில் வாழ்க்கைப்பட்டு பிரைவேட் நர்ஸரி ஸ்கூலில் கொண்டை போட்டு, குடை பிடித்துக் கொண்டு போய் தினம் அலுக்காமல் சலிக்காமல் ‘ஏஃபார் ஆப்பிள்’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, அவள் நாயகன் உடலாலும் மூளையாலும் உழைத்து தினம் நாக்-அவுட் விளையாடி விட்டதைப் படித்துக் கொண்டிருக்கிறான். பரமேஸ்வரியிடமிருந்து வருகிற நீலநிற இன்லண்ட் கடிதங்களில் ‘பேசாம செத்துடலாமான்னு தோணுது’ என்கிற வரி எத்தனை முறை வந்திருக்கிறது என்று அந்த வீட்டின் உறுப்பினர்களுக்கு மட்டும் போட்டியே வைக்கலாம்.

    இவர்களுக்கெல்லாம் இனிஷியல் கொடுத்த டிஃபார் தம்புராஜ் இந்த மார்கழிக் காலையில் தற்சமயம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையறிய மொட்டை மாடியில் சூர்யாவைப் படிக்க விட்டுவிட்டு இறங்கி வந்தோமென்றால்…

    திண்ணையிலிருந்து மைக் இல்லாமலேயே நாலு தெருவுக்குக் கேட்கும் கணீர் குரலில் தம்புராஜ் மடியில் காலை செய்தித் தாளைப் போட்டுக் கொண்டு, அதை ஓசியில் படிக்க வந்திருக்கும் எதிர்வீட்டு சந்தானத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

    ம்கூம். இந்த தேசம் உருப்படாதுங்கறேன். ஒரு நாளாச்சும் முகமூடி கொள்ளைன்னு சேதி போடாம இருக்கானாய்யா இந்த பேப்பர்காரன்?

    அவன் என்ன செய்வான்? நடக்குது! போடறான்.

    அதைத்தான் சொல்றேன். அராப் கண்ட்ரில தொழுகை நேரத்துல பஜார்ல கடை வெச்சிருக்கறவன் எல்லாம் போட்டது போட்டபடி அப்படியேத் திறந்து வெச்சிட்டு மசூதிக்குப் போறான்யா. நம்ம நாட்ல நடக்குமா?இங்கே அந்த மாதிரி செஞ்சா கடையில ஷட்டர் மட்டும்தான் மிஞ்சும். அங்க இல்லை. இங்கே இருக்குது ஏன்?

    ஏன்? கதாகாலட்சேபத்தில் சிஷ்யன் போல தூண்டும் கேள்வியைப் போட்டுவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1