Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arjunan Ambu
Arjunan Ambu
Arjunan Ambu
Ebook225 pages1 hour

Arjunan Ambu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580100905174
Arjunan Ambu

Read more from Pattukottai Prabakar

Related to Arjunan Ambu

Related ebooks

Related categories

Reviews for Arjunan Ambu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arjunan Ambu - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    அர்ஜுனன் அம்பு

    Arjunan Ambu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    தாற்காலிகமாகக் குளிரூட்டிவிட்டு தாமதமாகச் சூட்டைக் கிளப்பும் உத்தேசத்தில், காற்று பிடித்துத் தள்ளியதால் ஸ்லாஷ் கோடு போலச் சாய்வாகப் பெய்து கொண்டிருந்தது கோடை மழை.

    சாலையின் கருப்பு நிறத்தை முற்றிலும் மறைத்து ஓடிய பழுப்பு வெள்ளத்தில் காலண்டர் கடவுள் உள்படத் தொட்டிகளுக்கு வெளியே வீசப்பட்ட சகலவிதமான குப்பைகளும் மிதந்து ஊர்ந்தன.

    தொலைக்காட்சியில் தொண்டை நரம்பு புடைக்க தனது கட்சியின் அநியாயங்களை அழிச்சாட்சியமாக நியாயப் படுத்திய பிரமுகரை அடக்கி அடக்கிப் பார்த்த நெறியாளர் முடியாமல் போய் வேறு வழியில்லாமல் விளம்பர இடைவேளை விட்டதும்... சேனலை மாற்றினார் சதாசிவம்.

    டாடி... விளம்பரம் வர்றப்ப மியூட் பண்ணுங்களேன்... எத்தனை தடவை சொல்லிருக்கேன்.

    உள்ளறையில் லேப்டாப்பில் தட்டிய மதுமிதா குரல் கொடுக்க, நான் விளம்பரத்தையும் ரசிப்பேனே... ஃபேஸ்புக்ல அரட்டை அடிக்கறதுக்கும் சைலன்ஸ் தேவைப்படுதா? என்றார் சிரித்து.

    லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். காட்டினாள்.

    பாருங்க. நான் எஃப்பில இல்ல. எடிட் பண்ணிட்டிருக்கேன்.

    டின்னருக்கு இட்லியா, தோசையான்னு சொல்லிட்டு சண்டை போடுங்களேன்.

    இருவருக்கும் நடுவில் வந்து இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கேட்ட அமுதாவுக்கு பதில் சொல்லாமல் ஒலித்த போனை எடுத்தார் சதாசிவம்.

    யெஸ்... மதுமிதா வீடுதான். நீங்க...? லைன்ல இருங்க... பாக்கறேன்.

    மவுத் பீஸ் மூடி, சிவாவாம். தீபக் மேனேஜராம் என்றதும் அவசரமாகப் பிடுங்கிய மதுமிதா, சொல்லுங்க சார். எப்போ? நாளைக்கா? எங்க சார்? நோ ப்ராப்ளம் சார். வந்துடறேன். சார்... ஒன் அவர் வேணும். எக்ஸ்க்லூசிவ் கவர் பேஜ் மேட்டர். தேங்க் யூ என்றாள் உற்சாகமாக.

    யார்? என்றாள் அம்மா.

    எனக்கு தோசை என்றாள் மதுமிதா.

    எனக்கு இட்லி என்றார் சதாசிவம்.

    இருக்கறது மூணு பேரு. ரெண்டு டிஃபன் பண்ண முடியாது. சரி... நான் முடிவு பண்ணிக்கிறேன். போன்ல யாரு மது!

    தீபக் மேனேஜரும்மா. காலைல ஏழு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கன்ஃபர்ம் செஞ்சார்.

    அங்கயே டிஃபன் கொடுப்பாங்களா?

    காஃபிதான் குடுப்பாங்க.

    எங்க போகணும்?

    நீலாங்கரை

    எப்ப வந்து டிஃபன் சாப்டுவே?

    நான் வெளில பாத்துக்கறேன். இன்ட்டெர்வியூ முடிச்சிட்டு அப்டியே ஆபீஸ் போயிடுவேன்.

    இட்லியும் வேணாம். தோசையும் வேணாம். மழைக்கு இதமா சூடா பஜ்ஜி செய்றியா? பத்து பஜ்ஜி சாப்ட்டா டின்னர் ஓவர் என்றார் சதாசிவம்.

    பத்து பஜ்ஜி? கொலஸ்ட்ரால் குறைக்கச் சொல்லி டாக்டர் சொன்னார்ல?

    94 கேஜி இருக்கார். முதல்ல அவரைக் குறைக்கச் சொல்லு!

    அதுவும் இல்லாம கடலை மாவும் காலி.

    மது... தீபக்கும் அரசியலுக்கு வரப்போறானா?

    தெரில... ஆனா மூணு வருஷத்துக்கு படம் கமிட் பண்ணிருக்கார்.

    அரசியலுக்கு வந்துட்டவங்களும் கமிட் பண்ணிருக்காங்களே?

    மது மொபைலுடன் பால்கனி வந்தாள். கொஞ்ச நேரம் மழை பார்த்தாள். தெரு விளக்கின் அடியில் அட்சதை தூவியதைப் போன்ற ஆரஞ்சு மழைத் துளிகளின் பயணம் அழகாய் இருந்தது.

    நீரைச் சிதறடித்து ஓடிய ஆட்டோவில் கறுப்பு வெள்ளையில் கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரில் கால்வாசி மடங்கி தொங்கியது. உபர் டாக்ஸி ஒன்று ஊர்வலமாக விலாசம் தேடியது.

    வாட்ஸ் ஆப் ஒலி கேட்டு, பார்த்தாள்.

    காஃபி ஷாப்பில் இருக்கிறேன். வர முடியுமா? என்றது செய்தி.

    இனி பேச ஒன்றுமில்லை என்று பதில் அனுப்பினாள்.

    எனக்கு இருக்கிறது.

    எனக்கு இல்லை.

    மூளையை ஒதுக்கி வை. மனதைக் கேட்டுச் சொல்

    இது மனதின் பதில்தான்.

    இத்தனை பிடிவாதம் அதிகம்

    விமர்சனத்திற்கு நன்றி.

    வர முடியுமா, முடியாதா?

    உத்தரவா? கோரிக்கையா?

    காதலின் கெஞ்சல்

    வெட்கமாய் இல்லை?

    உன்னிடம் அவசியமில்லை.

    மழை பெய்கிறதே.

    கடைக்குள் பெய்யாது.

    குடை தேட வேண்டும்.

    தேடு

    ஒரு சாக்கும் தேட வேண்டும்

    ஒரு ஜர்னலிஸ்ட்டுக்குக் கஷ்டமா?

    வந்து தொலைக்கிறேன்.

    சாக்லேட் காஃபி ஆர்டர் செய்கிறேன்

    தேவையில்லை. வை.

    ஹாலுக்கு வந்து குடை எடுத்தபடி டாடி பாவம்மா... எப்பவோ கேக்கறார். செஞ்சி குடேன். நான் போய் கடலை மாவு வாங்கிட்டு வந்துடறேன் என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் அமுதா.

    ஜன்னலை மூடுடின்னாவே அலுத்துக்குவே!

    அவ என் பொண்ணுடி நீ வாங்கிட்டு வாடா தங்கம்.

    மதுமிதா சாலையில் லெக்கின்ஸ் முனைகள் நனைய பார்த்து பார்த்து கால் வைத்து வீதியில் நடந்தாள். குடை எல்லையை மீறி மேனியெங்கும் சாரல் ஈரம் செய்தது.

    ***

    நிமிர்ந்து பார்க்கலாம். தப்பில்ல. அப்படி ஒண்ணும் கேவலமான முகம் இல்லை

    நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் மதுமிதா.

    பிரௌன் நிற ஜெர்கின் அணிந்திருந்தான். நான்கு நாள் ஷேவ் செய்யாத முள் தாடி. ஓலைக் கூரை போட்டது போல மீசை மேலுதட்டின் பாதியை மறைத்தது. தலையில் ஒரு பக்கமாக பிரௌன் நிறத்தில் கலரிங் செய்திருந்தான்.

    எதுக்கு வரச் சொன்னே? நான் உடனே போகணும்.

    அப்ப போ. எத்தனாம் தேதி உன் ஊடல் முடியும்னு சொல்லு. அன்னிக்கு மீட் பண்ணலாம்.

    ரஞ்சித்... திஸ் ஈஸ் நாட் ஃபேர்! அதையே நான் சொல்லிருந்தா உன் பதில் என்னவா இருக்கும்.

    கை குலுக்கி ஆல் தி பெஸ்ட் சொல்லிருப்பேன்.

    சும்மா!

    இருவருக்கும் சாக்லேட் காஃபி வந்தது.

    நான்தான் வேணாம்னு சொன்னனே.

    தடுமாறிய பேரரை, நீங்க வெச்சிட்டுப் போங்க என்று அனுப்பி, புறப்படற வரைக்கும் நீ சாப்புடலைன்னா குப்பைல கொட்டிடறேன். எதுக்கு அவன் முன்னாடி...? ஓவர் சீன்ப்பா!

    நான்? யாரு... நான் சீன் போடறனா? போடா!

    அந்த போடா கொஞ்சம் அதிக டெஸிபலில் வந்ததால் தூர மேஜையின் இன்னொரு ஜோடி ஒரு விநாடி மட்டும் திரும்பிப் பார்த்தது.

    சூழ்நிலையைப் புரிஞ்சிக்க மது! வாங்கிப் போட்ட லேண்ட்ல குட்டியா ஒரு வீடு கட்டணும். இது அம்மாவோட கனவு!

    லண்டன் போய் சம்பாரிச்சா தான் கட்டமுடியுமா?

    உனக்கே தெரியும். இது ரொம்ப நல்ல ஆஃபர்!

    மூணு வருஷம்டா முட்டாள்! நடுவுலவர முடியாது!

    என் காசுல வரலாம்.

    அம்மாவுக்குதான் கனவு இருக்குமா? எனக்கு இருக்காதா?

    அதை சொல்லிதான் தெரிஞ்சிக்கணுமா?

    மூணு வருஷம் ரஞ்சித்! என்ன வேணா நடக்கலாம்!

    என்ன நடக்கும்? சொல்லேன்.

    அப்பா எனக்கு மாப்பிள்ளை பாக்கலாம். ஏற்கெனவே அம்மா தொணப்ப ஆரம்பிச்சிட்டாங்க.

    உங்கப்பா எவ்வளவு ஃபிரெண்ட்லின்னு எனக்குத் தெரியும்.

    அது ஒரு பக்க முகம். எவ்வளவு ஸ்ட்ரிக்ட்னு உனக்குத் தெரியாது

    அப்பா பேச்சை எதெதுல நீ கேப்பேன்னும் எனக்குத் தெரியும்.

    கல்யாணம் பண்ணி என்னையும் கூட்டிட்டுப் போய்த் தொலையேன்.

    மது... அங்க வாழ்க்கை ரொம்ப காஸ்ட்லிடா! யு நோ தட்!

    மூணு வருஷத்துல ஒரு வேளை...

    ஒரு வேளை?

    சரி... விடு. அந்தப் பாய்ண்ட் வேணாம்

    அதென்ன பாய்ண்ட்? தொண்டை வரைக்கும் வந்துடுச்சில்ல... தேக்கிவைக்க வேணாம். கேட்ரு.

    விட்ருன்னு சொல்லிட்டேன்ல?

    நான் உன்னை டிட்ச் பண்ணிட்டா? அதானே உன் பயம்.

    நியாயமான பயம்தான் என்றாள் முனகலாக.

    அந்த துரோகத்தை இங்கயே செய்ய முடியாதா? என் ஆஃபீஸ்ல ஃபேஷன் ஷோல கேட் வாக் போற தகுதியோட பத்துக்கு மேல அழகிங்க இருக்காங்க. தாரிகா எனக்கு ப்ரொப்போஸ் செஞ்சதைகூட நான் உங்கிட்ட மறைச்சதில்ல

    தெரியுமே. தாரிகா பேரைச் சொல்றப்பவே கண்ல மின்னலடிக்குதே.

    ஐ லைக் திஸ் பொறாமை

    பொஸசிவ்னெஸ்டா முண்டம்!

    ஓக்கே. கம் டு தி கிளைமாக்ஸ்... நான் என்ன செஞ்சா ஒரு பர்யஸண்ட் சந்தேகம்கூட இல்லாம என்னை நம்புவே?

    கல்யாணம் செஞ்சிக்கலாம். ரகசியமா. ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்ல. மூணு வருஷம் மூச்சு விட வேணாம். இன்க்ளுடிங் அவர் பேரண்ட்ஸ்.

    அலை பாயுதே ஒரு சினிமா மது

    நிஜத்துலேர்ந்துதான் சினிமா. அதுக்கு முன்னாடியே பல உதாரணம் என்னால சொல்ல முடியும்

    ஆர் யூ சீரியஸ் மது!

    வேற எப்படி சொன்னா இதை சீரியஸ்னு நீ நம்புவே?

    என்னை அவமானப்படுத்தற மாதிரி இருக்கு

    மூணு வருஷத்துல நானும் மாறலாமே. இது நமக்கான கமிட்மென்ட்னு நினைச்சுக்கயேன்

    ஸில்லியா இருக்கு

    எனக்கு சரியாப்படுது. ரெண்டு நாள் போதுமா! மல்லாக்கப் படுத்துயோசி. அப்பறம் கன்ஃபர்மா பதில் சொல்லு

    என் பதில் நோவா இருந்தா?

    என் பதில் ஒன்ஸ் ஃபார் ஆல் குட்பையா இருக்கும். கடலை மாவு வாங்கணும். கடை மூடிடுவாங்க. வர்றேன்.

    மது... காஃபி

    பதில் சொல்லாமல் எழுந்து கண்ணாடிக் கதவு தள்ளி, குடை விரித்து மழையில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தவளை யோசனையுடன் பார்த்தபடி இருந்தான் ரஞ்சித்.

    *****

    2

    நீலாங்கரை பங்களாவில் காத்திருந்த ஹாலின் ஜன்னல் வழியாக அழுக்கு நீலத்தில் கடல் தெரிந்தது. பதினைந்து வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பறந்து பறந்து உழைத்ததின் விளைவுகளில் ஒன்றாக இரண்டு சுவர்கள் முழுக்க நெருக்கியடித்த ஷில்டுகள் மத்தியில் ஃபிலிம்ஃபேர் கறுப்பு அழகிகள் ஒயிலாக நின்றார்கள்.

    ஒலித்த போனில் ஓம்பிரகாஷ் பேசினார்.

    போய்ட்டியா மது?

    அங்கதான் இருக்கேன். ஜிம்ல இருக்காராம். வந்துடுவார்ன்னாங்க. என்றாள் மதுமிதா.

    பாபுஜி?

    என்னோடதான் இருக்கார்.

    பத்து நிமிஷம் முன்னாடி ட்விட்டர்ல ஸ்டெர்லைட் விவகாரம் பத்தி ஒரு கமெண்ட் போட்ருக்கார். பாத்தியா?

    இல்லையே சார்.

    அதுக்குதான் கூப்ட்டேன். பாத்துடு. வைரலாயிட்டிருக்கு இது. இந்தக் கமெண்ட் பத்தியும் கேட்ரு

    டன் சார்

    மொபைல் டேட்டா ஆன் செய்து தீபக்கின் ட்விட்டர் பக்கம் வந்தாள். சால்ட் அண்ட் பெப்பர் தலையுடன் கழுத்தில் நிக்கான் டி 3400 டி -எஸ் எல் ஆர் கேமிரா மாட்டியிருந்த பாபுஜியும் எட்டிப் பார்க்க... பொதுவாகப் பிடித்துப் படித்தாள்.

    எந்த ஆரோக்கிய பாதிப்பும் மக்களுக்கு இந்த நிறுவனம் ஏற்படுத்தவில்லை என்றால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அதிபர் தூத்துக்குடியில் ஆறுமாதம் வசிக்கத் தயாரா?

    பாபுஜி தாடி மீசைக்குள் சிரித்தது கன்னங்களின் உப்பல் மூலமாகவே அறிய முடிந்தது.

    என்ன பாபுஜி?

    இப்படி ஏசி ரூம் மீடியா போராளிகளை நினைச்சிக்கிட்டேன்.

    தீபக் அப்படில்ல சார். சமூக அக்கறை இருக்கு. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல கலந்துக்கிட்டார். பெண்களுக்கு நடமாடும் கழிப்பறை அனுப்பிவெச்சார்.

    தூத்துக்குடியைப் பின்புலமா வெச்சு செய்யப்பட்டக் கதையை அப்படியே கூர்க் பின்னணியில எதுக்கு மாத்தச் சொன்னார்னு கேளு. நேர்மையா பதில் சொல்றாரான்னு பார்க்கலாம் பாபுஜி சொல்லும்போது ட்ராக்சூட், ஈரமான டிர்ட்டுடன் தீபக் வந்து,

    ஹாய் மதுமிதா... எப்படி இருக்கிங்க? பாபுஜி சார்... தாடி வள்ளுவர் தாடி அளவுக்குப் போயிடுச்சே. என்றபடி பீன்ஸ் பேகில் அமர்ந்தான், காபி, டீ குடுத்தாங்களா?

    சாப்ட்டோம் சார். தேங்க் யூ. நீங்க வேணும்னா குளிச்சிட்டு வரலாம். வெய்ட் பண்றோம்

    பரவால்ல... கேளுங்க

    அதுக்கில்ல சார். கவர் பேஜ் மேட்டர். டயர்டா இருக்கிங்க. ஸ்டில்ஸ் நல்லா வராது என்றார் பாபுஜி.

    ஏற்கெனவே காக்க வெச்சிட்டேன். பேட்டி மட்டும் இப்ப முடிச்சிடலாம். ஃபோட்டோ செஷன் நாளைக்கு வெச்சிக்கலாம் என்று தீபக்

    Enjoying the preview?
    Page 1 of 1