Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marupadi Thaa!
Marupadi Thaa!
Marupadi Thaa!
Ebook92 pages56 minutes

Marupadi Thaa!

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

நாடகத்தில் நடிக்கும் மரியகீதா, தப்பான பழக்கவழக்கத்தினால் தடம் மாறி, யாரோ அவளைக் கொலை செய்கிறார்கள்.
கீதாவை உயிருக்கு உயிராய் காதலிக்கும் மதன் அந்த கொலை வழக்கில் மாட்டிக்கொள்கிறான்.
சாட்சி சொல்ல வர மறுக்கும் கீதா, அவனைக் காப்பாற்றத் துடிக்கும் நண்பன் ரவி வக்கீல் கோபாலகிருஷ்ணன் உதவியை நாடுகிறான்.
விடுதலை ஆன மதனின் செயல் என்ன?
மரியகீதாவைக் கொன்றவர் யார்?
மறுபடி தா...! வில்
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100906619
Marupadi Thaa!

Read more from Pattukottai Prabakar

Related to Marupadi Thaa!

Related ebooks

Related categories

Reviews for Marupadi Thaa!

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marupadi Thaa! - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    மறுபடி தா!

    Marupadi Thaa!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    கதைச்சுருக்கம்:

     நாடகத்தில் நடிக்கும் மரியகீதா, தப்பான பழக்கவழக்கத்தினால் தடம் மாறி, யாரோ அவளைக் கொலை செய்கிறார்கள்.

    கீதாவை உயிருக்கு உயிராய் காதலிக்கும் மதன் அந்த கொலை வழக்கில் மாட்டிக்கொள்கிறான்.

    சாட்சி சொல்ல வர மறுக்கும் கீதா, அவனைக் காப்பாற்றத் துடிக்கும் நண்பன் ரவி வக்கீல் கோபாலகிருஷ்ணன் உதவியை நாடுகிறான்.

    விடுதலை ஆன மதனின் செயல் என்ன?

    மரியகீதாவைக் கொன்றவர் யார்?

    மறுபடி தா....! வில்

    1

    என்ன மதன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?

    காரியம் முடிஞ்சிடிச்சி ரவி. இந்தா இந்த வாட்ச் ஒண்ணுதான் என்கிட்டே இருக்கிறதிலேயே மதிப்பான பொருள். அப்புறம்... அலமாரில மூணாவது தட்டிலே நியூஸ் பேப்பருக்கடியிலே நாற்பது ரூபா வச்சிருக்கேன். நீயே எடுத்துக்கோ, இரு. போறதுக்கு முன்னாடி ஒரு தடவை இந்த ரூமை நல்லா பார்த்துக்கறேன்.

    டேய்! இருடா. என்ன பேசறே? எங்கே போறே?

    ஸ்டேஷனுக்குப் போறேன் ரவி. போலீஸ் ஸ்டேஷன்

    எதுக்கு?

    சரண்டர்...

    என்னடா உளர்றே? சரண்டர் ஆகிறதுக்கு... நீ என்ன தப்பு செஞ்சே?

    கொலை... இப்பதான்... நாற்பது நிமிஷத்துக்கு முன்னாடி.

    மதன். இங்கே பாரு. என்னை நேராப் பாரு. எங்கே, சொல்லு.

    ஆமாம் ரவி. விளையாட்டில்லை. கீதாவைக் கொலை செஞ்சிட்டு நேரா வர்றேன். ரத்தக் கத்தி பார்க்கிறியா?

    மைகாட்! நீ நிஜமாத்தான் சொல்றியா?

    இருநூறு சதவீதம் நிஜம். இதோ பார்த்தியா கத்தி. இதுதான் கீதாவோட ரத்தம். ஒரே ஒரு தடவைதான் குத்தினேன் ரவி. உடனே சாஞ்சுட்டா. கத்தியை கர்சீப்ல சுத்திக்கிட்டு புறப்பட்டு வந்துட்டேன். இப்ப நேரா போலீஸ் ஸ்டேஷன் போயி...

    முட்டாள்! எதுக்காகடா நீ சரண்டர் ஆகணும்?

    ஆமாம் ரவி. நான் தீர்மானிச்சுட்டேன். இந்தக் குற்றம் வாழ்க்கைப் பூரா என்னை வதைக்கும். ஒவ்வொரு நிமிஷமும் நெருடும்.

    மதன், நீ செஞ்சது குற்றம் இல்லை. களையெடுப்பு, 'காதல்'னு ஒண்ணை உனக்குத் தப்புத்தப்பா அர்த்தம் கற்பிச்ச ஒரு திமிர் பிடிச்ச சுயநலக்காரியைத்தான் நீ இந்த சமூகத்திலிருந்து விலக்கியிருக்கே. கரைஞ்சு போனது தென்றல் இல்லை; நச்சுக் காத்து. நீ மண் அள்ளிப் போட்டு மூடினது குடிதண்ணிக் கிணறு இல்லை. கொசு மிதக்கிற சாக்கடையை. சொல்லப் போனா, நீ செஞ்சக் காரியத்துக்காகக் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கோ, கவலையை விடு.

    இல்லை ரவி, நான் போலீஸ்கிட்டே...

    அறிவு கெட்டத்தனமா பேசாதே. உனக்கு வாழ்க்கை இனிமேதாண்டா ஆரம்பம். இப்பவே கருகிப் போறேன்னு சொல்லாதே. நீ செஞ்சது சட்டத்துக்குத்தான் குற்றம். எனக்கு நியாயமாப்படுது. இங்கே பாரு... முதல் காரியமா இந்த கர்சீப்பை எரிச்சுடு.

    ரவி, நான் என்ன சொல்றேன்னா...

    எதுவும் சொல்லாதே. இந்தக் கத்தியைக் கொண்டு போய் கூவத்திலே வீசிடு. நீயும், கீதாவும் காதலிச்சதுக்கு எந்தவிதமான சாட்சியும் இல்லையே?

    இல்லை

    உன் லெட்டர் எதுவும் அவ வீட்ல இருக்கா?

    இல்லை, எல்லாத்தையும் எரிச்சுட்டா.

    உன் போட்டோ எதுவும் கொடுத்திருக்கியா?

    இல்லை

    உங்க ரெண்டு பேரையும் சேர்த்து யாராவது பார்த்திருக்காங்களா?

    எவ்வளவோ ஆயிரம் பேர் பார்த்திருக்காங்க.

    அதில்லை, உனக்கோ, கீதாவுக்கோ அறிமுகம் ஆனவங்க யாராவது...

    இல்லை

    இப்போ நீங்க ரெண்டு பேரும் கடற்கரைக்குப் போனது யாருக்காவது தெரியுமா?

    தெரியும்.

    யாருக்கு?

    உனக்கு.

    என்னைத் தவிர?

    வேற யாருக்கும் தெரியாது.

    "விடு, கவலையை விடு மதன். இந்த சம்பவத்தை உடனே மறந்திடு, நான் சொன்னபடி கத்தியையும், கர்சீப்பையும் டிஸ்போஸ் செஞ்சிடு, மதன்... ஏய், மதன்... என் முகத்தைப் பாருடா. எதுக்காக இப்போ கண்

    Enjoying the preview?
    Page 1 of 1