Kaadhalenum Theeviniley
()
About this ebook
Read more from Yandamoori Veerendranath
Dharmayutham Rating: 5 out of 5 stars5/5Agnip Pravesam Rating: 0 out of 5 stars0 ratingsCasanova - 99 Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Kadhalan Rating: 5 out of 5 stars5/5Professional Killer Rating: 3 out of 5 stars3/5Thalapathi Rating: 0 out of 5 stars0 ratingsBest Of Yandamoori Veerendranath Rating: 5 out of 5 stars5/5Thulasidhalam Rating: 3 out of 5 stars3/5Panimalai Rating: 4 out of 5 stars4/5Saagara Sangamam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhalenum Theeviniley
Related ebooks
Kannai Nambathey Rating: 3 out of 5 stars3/5En Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsKadambavana Kaadhal Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsShimla Ramya Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Kaakithap Poo Theen Rating: 5 out of 5 stars5/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsKai Niraiya Vairam Rating: 0 out of 5 stars0 ratingsThittamitta Thiruppam Rating: 5 out of 5 stars5/5Vikrama... Vikrama... - Part 2 Rating: 5 out of 5 stars5/5Marupadi Thaa! Rating: 4 out of 5 stars4/523-vathu Jannal Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Mel Aanai Rating: 3 out of 5 stars3/5Kaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsThik… Thik… Thilaka Rating: 5 out of 5 stars5/5Oru Athikaalai Kolai Rating: 0 out of 5 stars0 ratingsThangap Paravai Rating: 5 out of 5 stars5/5Unnai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsArjunan Ambu Rating: 5 out of 5 stars5/5Konjam Kadhal Vendum Rating: 4 out of 5 stars4/5Adhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsEndrendrum Un Ethiri Rating: 4 out of 5 stars4/5Kaiyil Piditha Minnal Rating: 0 out of 5 stars0 ratingsOru Poo Malarnthapothu Rating: 5 out of 5 stars5/5Naalai Yaaro? Rating: 5 out of 5 stars5/5Azhagiya Theeye! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kaadhalenum Theeviniley
0 ratings0 reviews
Book preview
Kaadhalenum Theeviniley - Yandamoori Veerendranath
http://www.pustaka.co.in
காதலெனும் தீவினிலே
Kathalenum Theeviniley
Author:
எண்டமூரி வீரேந்திரநாத்
Yandamoori Veerendranath
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
காதல் எனும் தீவினிலே
1
சுற்றிலும் வாய்க்கால்... நடுவில் அந்த ஊர் அமைந்திருந்தது. பெரிய வேப்ப மரம் ஒன்று, ஊருக்குள் காலடி எடுத்து வைப்பவர்களைக் குசலம் விசாரிப்பது போல் இலைகளைச் சலசலவென்று சத்தப்படுத்திக் கொண்டிருந்தது. வாய்க்கால் ஓரமாய் நெடிந்துயர்ந்து வளர்ந்த தென்னை மரங்கள் அணி வகுத்து நிற்பது போல் வரிசையாக இருந்தன.
மாலை நேரத்து இளஞ்சிவப்பு வர்ணம் ஆகாயத்தில் பரவியிருந்தது. மேய்ச்சலை முடித்துக்கொண்டு பசுக்கள் மந்தையாக ஊருக்குள் திரும்பி வந்து கொண்டிருந்தன. அவற்றின் குளம்புகளால் எழும்பிய கோதூளி உயரே கிளம்பி எதிரில் இருப்பவர்களைக் காண முடியாமல் செய்து கொண்டிருந்தது.
சரியாக அதே நேரத்திற்கு ஒரு மாட்டு வண்டி அந்த ஊருக்குள் நுழைந்தது. மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஓசையும், குளம்புகளின் சத்தமும் லயம் தப்பாமல் மாறி மாறி ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தன.
வண்டியினுள் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் முழங்கால் மீது முகவாயை ஊன்றிக்கொண்டு, வேகமாய் பின்னால் போய்க் கொண்டிருந்த மரங்களை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். வண்டியின் குலுக்கல்களுக்கு ஏற்றாற்போல் அவள் காதில் அணிந்திருந்தி ஜிமிக்கி அழகாக ஆடிக் கொண்டிருந்தது. இயற்கையின் எழிலில் மயங்கிப் போனவளாய் இந்த உலகின் நினைப்பே இல்லாதது போல் அந்தப் பெண் தென்பட்டாள். அந்த அகலமான கண்களில் லேசான பயமும் கலந்திருந்தது.
அவள் உடலின் வெண்மையைக் கண்டு பாற்கடல் பொறாமைப்பட்டது. இதழ்களின் சிவப்பை பார்த்துக் கோவைப்பழம் வெட்கி தலை குனிந்தது. அடர்ந்த கேசத்தைக் கண்டு அமாவாசை இருளானது தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டது.
***
அவளை உருவாக்கியபோது பிரம்மா, தன்னுடைய படைப்பின் அழகை கண்டு தானே வியப்பு அடைந்து விட்டார். அவள் பருவ வயதை அடைந்த பிறகு எப்படி தோற்றம் தரப் போகிறாள் என்பதை அறிய தன்னுடைய ஞான திருஷ்டியை பயன்படுத்தினார். அவரால் பிரமிப்பை அடக்க முடியவில்லை.
ஆஹா... என்னே இந்தப் பெண்ணன் அழகு... மானை போன்ற விழிகள்... மாதுளை முத்துக்களோ என நினைக்கத் தோன்றும் அந்தப் பற்கள்... மேரு மலையை நினைவுப்படுத்தும் அந்த...
பிரம்மா வார்த்தைகளை முடிக்கும் முன் பக்கத்திலேயே அமர்ந்திருந்த சரஸ்வதி, தன் கையில் இருந்த வீணையால் அவருடைய நான்காவது தலை மீது ஓங்கி அடித்தாள்.
மறுநாள் பிரம்மாவைப் பார்க்க வந்த நாரதர் அவர் தலையில் கட்டுப்போட்டிருந்ததைப் பார்த்து என்ன ஆயிற்று என்று குசலம் விசாரித்தார்.
என்னவென்று சொல்லட்டும் நாரதா...
பிரம்மாவின் குரல் தீனமான ஒலித்தது. அபுரூபமான ஒரு அழகியைப் படைத்து விட்ட மகிழ்ச்சியில் ஏதோ ஒரு வார்த்தையை சொல்லி விட்டேன் என்றே வைத்துக் கொள். அதற்காக சரஸ்வதி என் தலைமீது இப்படித்தான் அடிக்க வேண்டுமா?
அப்படி என்னதான் சொல்லி விட்டீர்கள்?
மானை போன்ற விழிகள்... மாதுளை முத்துகளை நினைவூட்டும் பற்கள்... என்று அந்த அழகியை வர்ணித்தேன்.
அதற்குத் தலைமீது அடிக்க வேண்டிய அவசியம் இல்லையே?
நாரதர் அப்பாவியைப் போல் கேட்டார்.
இனி மேலும் தாங்க முடியாதவள் போல் சரஸ்வதி இடை புகுந்தாள்.
வர்ணனையை அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் நான் ஏன் அவரை அடிக்கப் போகிறேன்?
என்றாள்.
ஏதோ வாய் தவறி கொஞ்சம் எல்லையை மீறி விட்டால் மட்டும்... கணவன் என்ற மதிப்பையும் மறந்து நீ இப்படி நடந்து கொள்ளலாமா?
வயது ஆக ஆக அழகான பெண்களைப் படைக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு அதிகமாகி வருகிறது.
வாக்தேவியும் குரலை உயர்த்தினாள்.
என்னையே குற்றம் காணுகிறாயா! நீ இந்த அளவுக்கு பொறாமை கொள்ளும் அந்தப் பெண், பருவம் அடைந்த பிறகு இந்த உலகமே வியக்கும் அளவுக்கு பேரழகியாக மாறுவாள் என்று அவளுக்கு வரம் அளிக்கிறேன்.
பிரம்மா ஆவேசமாய் மொழிந்தார்.
அது மட்டும் உண்மையாகி விட்டால், அவளுடைய அழகை கொஞ்சம்கூட மதிக்க தெரியாதவன் அவளுக்கு கணவனாக வருவான் என்றும், திருமணம் ஆனது முதல் அவள் வாழ்க்கை புதை குழியாக மாறிவிடுமென்றும் நான் அவளுக்கு சாபம் கொடுக்கிறேன்.
சரஸ்வதி தேவியால் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அதுவரை அவ்விருவரின் வாத பிரதிவாதங்களைப் பார்வையாளராக கேட்டுக் கொண்டிருந்த நாரதர் திடுக்கிட்டார். அபசாரம்... அபசாரம். உங்க இருவருக்கு நடுவில் ஏற்பட்ட ரகளைக்கு அப்பாவியான ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பலியாக்கலாமா? அது பாவம் இல்லையா... தந்தையே!
பிரம்மா வருத்தத்துடன் புன்முறுவல் பூத்தார். பாரத நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது நாரதா. இதில் புதிதாக நான் செய்துவிட்ட அபசாரம் என்ன இருக்கப் போகிறது?
முன் பிறவியில் செய்த பாவத்தின் விளைவை, இந்த பிறவியில் அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண் அப்படி இல்லையே? நீங்களே சாபம் கொடுத்து அவளுடைய வாழ்க்கையை நாசமாக்கி விட்டீர்களே?
வேண்டுகோள் விடுப்பதுபோல் சொன்னார் நாரதர்.
முன்பின் யோசிக்காமல் தான் நடந்து கொண்டதை எண்ணி சரஸ்வதி தேவியும் வருத்தப்பட்டாள்.
நாரதா... கொடுத்த சாபத்தை என்னால் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது. இந்த நிலையில் நீதான் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும்.
சரஸ்வதி நாரதரை வேண்டினாள்.
உங்களுக்கு யோசனை சொல்லும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை. இருந்தாலும் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஒரு தீர்வைச் சொல்கிறேன். தனஞ்சய மகாராஜாவின் கதை தாங்கள் அறிந்தது தானே. ஒருமுறை அவருக்கு ஏழரை நாட்டு சனி பிடித்துக் கொண்டபோது, அஷ்ட லஷ்மிகள் ஒவ்வொருவராக அவரிடம் வந்து தாங்கள் அவரைவிட்டுப் போகவேண்டிய தருணம் வந்து விட்டது என்றும், விடை கொடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்களாம். தனலஷ்மி, தான்யலஷ்மி மற்றும் எல்லா லஷ்மிகளும் அவரைவிட்டு போய் விட்டார்களாம். கடைசியாக தைரிய லஷ்மி அவரிடம் விடைபெற வந்த போது,
தாயே! நீ மட்டும் என்னைவிட்டுப்போகாதே.... என்று வேண்டிக் கொண்டாராம். தைரியலஷ்மி இருக்கும் இடத்தில் மற்ற லஷ்மிகளும் குடி இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அந்த ராஜா அந்த விதமாக ஏழரை நாட்டு சனியின் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொண்டாராம். ஆகவே அந்த பெண்ணுக்கும் எப்போது தைரியலஷ்மி துணையிருக்கும் விதமாக வரம் தந்து அருள் புரியுங்கள் தாயே...
சரஸ்வதி தேவியால் நாரதர் சொன்னதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் கொடுத்த சாபத்திலிந்து அவளுக்கு விமோசனம் எப்படி ஏற்படும் நாரதா?
தைரியலஷ்மி அவளுக்கு துணையாக இருப்பாள். அது போறாதா?
நாரதர் எதிர்க் கேள்வி கேட்டார்.
தைரியலஷ்மி துணையாய் இருப்பதால் அவளால் தனியாக வாழமுடியுமே தவிர மகிழ்ச்சியாக எப்படி இருக்க முடியும்? தன்னை நேசிப்பவர்கள் இல்லாமல் வாழ்வதும் ஒரு வாழ்க்கையா?
நாரதர் இருகரங்களையும் கூப்பி வணங்கினார்.
ஞான சரஸ்வதியே... தாங்களே சொல்லுங்கள். ஒரு பெண் மகிழ்ச்சியாக வாழ்கிறாளா இல்லையா என்று முடிவு செய்வது கணவன் மட்டும்தானா? கணவனின் துணை இல்லாத பெண்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாதா?
பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மாவைப் பொறுத்து தான் பாரதநாட்டுப் பெண்களின் குடும்ப வாழ்க்கை அமைகிறது என்று சற்று முன் திருவாளர் பிரம்மா அவர்கள் கூறியதை மறந்துவிட்டாயா நாரதா?
சரஸ்வதியின் குரல் நாடகப் பாணியில் ஒலித்தது.
நாரதர் சொன்னார்: கணவன் துன்புறுத்தி ஹிம்சித்து வந்தாலும் போக்கு இடம் இல்லாமல் நடை பிணமாக பாரதநாட்டுப் பெண்கள் வாழ்ந்து வந்தது உண்மைதான். ஆனால் சமீப காலத்தில் சமுதாயத்தில் பெண் உரிமை இயக்கங்கள் தோன்றியுள்ளன. பெண் வாதத்தைப் பலப்படுத்தி இலக்கியம் படைக்கும் எழுதத்தாளர்கள் உருவாகியுள்ளார்கள்.
கல் ஆனாலும் கணவன் - புல் ஆனாலும் புருஷன் என்ற பழமொழியை எதிர்த்துப் போர் முழக்கம் எழுப்பியிருக் கிறார்கள். தாலி கட்டியவன் சரியில்லை என்றால் சுய சம்பாதனையை ஏற்படுத்திக் கொண்டு அந்த நரகத்திலிருந்து வெளியேறி அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக சில பெண்கள் விவாகரத்து பெற்றுக் கொண்டு நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? வேதனைகள் இல்லாமல் இருந்தாலே மகிழ்ச்சியாக இருப்பதாக அர்த்தம் ஆகிவிடுமா என்ன?
சரஸ்வதி தேவி யோசனையில் ஆழ்ந்து போனாள். நிஜம்தான். கணவனால் கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்கள் அந்த நரகத்திலிருந்து வெளியேறி பிறகு வெறுமே வாழ வழி ஏற்படுத்திக் கொண்டால் போதுமா? ஒரு துணை இல்லாமல் மகிழ்ச்சியாக எப்படி இருக்க முடியும்?
சரஸ்வதி எண்ணங்களை படித்துவிட்டவர் போல் பிரம்மா சொன்னார்.
தேவீ... ஒரு ஆணோ பெண்ணோ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் முதலில் தன்னை தான் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு மற்றவரிடம் அன்பு செலுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அன்பு எனும் ஊற்று அவர்கள் இதயத்தில் சுரக்க வேண்டும்
கணவர் சொன்ன விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் போல் சரஸ்வதி குழப்பத்துடன் பார்த்து விட்டு, சுவாமீ... காதல் என்றால் என்ன?
என்று கேட்டாள்.
சாட்சாத் வாக்தேவியான உனக்கே பதவிளக்கம் தேவைப்படுகிறதா தேவீ?
பிரம்மா புன்முறுவலுடன் எதிர்க்கேள்வி கேட்டார்.
பரிகாசம் செய்தது போதும். காதலிப்பவன் இல்லாமல் போவதற்கும், அன்பு செலுத்த தெரியும் இதயம் இருப்பதற்கும் வித்தியாசம் என்ன?
காதல் என்றால் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. அது ஆண் பெண் சங்மத்தில் மட்டுமே ஏற்படும் உணர்ச்சி இல்லை
அதை கேட்ட பிறகு சரஸ்வதி மேலும் குழம்பிப் போய் விட்டாள்.
சதுர்முகநாதன் ஆகிய தாங்களுக்கு இருக்கும் ஞானம் ஒரே ஒரு தலையுடன் இருக்கும் எனக்கு எப்படி இருக்கும் சுவாமி? தயவு செய்து எளிமையான முறையில் விளக்கினால் புரிந்து கொள்கிறேன்.
வேண்டுகோள் விடுத்தாள்.
இந்தக் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லப் போகிறது. நான் கொடுத்த வரமும், நீ கொடுத்த சாபமும் தலையெழுத்தாகப் பெற்றுக்கொண்டு பூமியில் பிறக்கப் போகும் இந்தப் குழந்தை ‘வேத சம்ஹிதா’ என்ற பெயருடன் வளர்ந்து, மூர்க்கன் ஒருவனுக்கு மனைவியான பிறகும் எப்படி தன்னுடைய வாழ்கையை...
நாராயணா... நாராயணா...
மீதி கதையைக் சொல்ல வேண்டாம் என்பது போல் நாரதர் உதட்டின் மீது விரலை வைத்து எச்சரித்தார்.
பிரம்மாவும் புன்முறுவலுடன் ‘தலைகளை’ அசைத்து விட்டு கையில் இருந்த பொம்மையை மெதுவாக பூலோகத்திற்கு நழுவச் செய்தார்.
***
அந்த வேத சம்ஹிதாதான் தற்போது மாட்டு வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தாள். வண்டி கிராமத்திற்குள் நுழைந்தது.
மாலை வெய்யிலின் சூரிய கிரணங்கள் அவளுடைய முகத்தில் நாட்டியமாடிக் கொண்டிருந்தன வீடு திரும்பும் பசுக்களின் கூட்டத்தின் ஊடே வழியை ஏற்படுத்திக் கொண்டு மாட்டு வண்டி முன்னோக்கி போய்க் கொண்டிருந்தது.
ஊருக்குள் புதிதாக யாரோ வருவதை கவனித்த வழிப் போக்கன் ஒருவன் கண்களை இடுக்கி அவளையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு அந்த இடத்திலேயே நின்று விட்டான்.
வண்டி வேப்ப மரத்தைத் தாண்டி நின்றது.
எங்கே போகணும் அம்மா?
வண்டிக்காரன் மாடுகளை அதட்டிக்கொண்டே கேட்டான்.
அவள் ஒரு நிமிடம் யோசித்து விட்டு வண்டியை பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்குப் போகவிடு
என்றாள்.
எதிரே வந்த இரண்டு மூன்று பேரிடம் வண்டிக்காரன் பஞ்சாயத்து தலைவர் வீடு எங்கே என்று விசாரித்தான்.
வண்டிக்காரன்