Professional Killer
3/5
()
About this ebook
Read more from Yandamoori Veerendranath
Dharmayutham Rating: 5 out of 5 stars5/5Agnip Pravesam Rating: 0 out of 5 stars0 ratingsCasanova - 99 Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theeviniley Rating: 0 out of 5 stars0 ratingsThalapathi Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Kadhalan Rating: 5 out of 5 stars5/5Best Of Yandamoori Veerendranath Rating: 5 out of 5 stars5/5Thulasidhalam Rating: 3 out of 5 stars3/5Panimalai Rating: 4 out of 5 stars4/5Saagara Sangamam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Professional Killer
Related ebooks
Naan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Nooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsAabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsVidiyatha Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsYezham Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Moondravathu Kan! Rating: 5 out of 5 stars5/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratingsThik... Thik... Thik... Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaga Pogirargal Rating: 0 out of 5 stars0 ratingsPallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsOru Mul Oru Malar Rating: 1 out of 5 stars1/5Thangap Paravai Rating: 5 out of 5 stars5/5Yathirai Gnanam Rating: 0 out of 5 stars0 ratingsKaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsMayavan Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Kaiyil Piditha Minnal Rating: 0 out of 5 stars0 ratingsEnge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsMurintha Ambugal Rating: 0 out of 5 stars0 ratingsSowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malar Rating: 5 out of 5 stars5/5Marakka Muyandrean... Mudiyavillai! Rating: 5 out of 5 stars5/5Bathran Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Professional Killer
1 rating0 reviews
Book preview
Professional Killer - Yandamoori Veerendranath
http://www.pustaka.co.in
ப்ரொஃபஷனல் கில்லர்
Professional Killer
Author:
எண்டமுரி வீரேந்திரநாத்
தமிழில்: சுசீலா கனகதுர்கா
Yandamoori Veerendranath
In Tamil: Susheela Kanakadurga
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
இன்னும் அறுபது நாட்களில் இந்தியாவின் பிரதம மந்திரியைக் கொல்வதற்குத் திட்டம் போட்டு விட்டேன்
மெதுவாய் சொன்னான் அவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து.
அங்கே அவனைத்தவிர மேலும் மூன்று பேர்கள் இருந்தார்கள். அவன் பேசியதைக் கேட்டு அவர்கள் எந்த ஆச்சரியமும் படவில்லை. மேற்கொண்டு அவன் சொல்லப் போவதைக் கேட்கத் தயாராய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் பாகிஸ்தான் மிலிடெரி இன்டெலிஜென்ஸ் டைரக்டர் அப்பாஸ்.
அவர்கள் மூவரும்... ராணுவ ஜெனரல் குலாம்கான். அட்மிரல் சலீம்கான், ஏர்மார்ஷல் இந்த்தியாஸ். பாகிஸ்தான் அதிகார வர்க்கத்தில் சர்க்கிள்-4 என்று அழைப்பார்கள் அவர்களை, பாகிஸ்தானில் அரசாங்கத் தலைவராய் யார் இருந்தாலும், மறைமுகமாய் அரசாங்கத்தை நடத்தி வருபவர்கள் இம்மூவரும் தான்.
சரியாய் மூன்று மாதங்களுக்கு முன்னால் இந்தியப் பிரதமரைக் கொல்வதற்குத் திட்டம் போடத் தொடங்கினார்கள். அவ்வாறு செய்வது இன்றியமையாததாயிருந்தது அவர்களுக்கு. செய்யாவிட்டால் தம் அதிகாரத்திற்கே உலை வைக்கப்பட்டுவிடும் சூழ்நிலை உருவாகியிருந்தது.
அந்தச் சூழ்நிலையை உருவாக்கியது... இந்தியப் பிரதமர் சம்பத்ராம். இதுவரை இருந்து வந்த இந்தியப் பிரதமர்கள் எல்லோரையும் காட்டிலும் மிகச் சாமர்த்தியசாலி அவர். இமயமலைப் பிரதேசத்தில் ஆதிவாசி குடும்பத்தில் பிறந்தவர் அவர். இந்திய நாட்டிற்குப் பிரதமரானது ஒரு அற்புதமான விஷயம். அந்த அற்புதந்தான் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ஒரு தீயக் கனவாய் மாறிவிட்டது.
ஆறு மாதங்களுக்கு முன்னால் இந்தியப் பிரதமராய் பதவி ஏற்றுக் கொண்ட அவர், இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே பாகிஸ்தானை எச்சரித்தார்... காஷ்மீரிலும் பஞ்சாபிலும் பிரிவினைக் கிளர்ச்சியைத் தூண்டிவிடுவதை நிறுத்தாமல் போனால் யுத்தத்திற்கு சித்தமாகும்படியாய்! அதற்குப் பிறகு சரியாய் ஒருமாதம் ஓடி மறைவதற்குள்ளாகவே பாகிஸ்தான் நிர்வாகத்தினருக்குப் புரிந்து போய் விட்டது. அது வெறும் எச்சரிக்கை - மட்டுமே இல்லை என்றும், அவர் சொன்னபடியே செய்துகாட்டி விடுவார் என்றும்! அதனால் இந்திய எல்லை ராஜ்ஜியங்களில் தாம் தொடர்ந்து கொண்டிருந்த பிரிவினைக் கிளர்ச்சி வேலைகளுக்குத் தற்காலிகமாய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருந்தது.
ஆனால் இப்படியே அதிக நாள் தொடர்ந்து கொண்டிருக்கமுடியாது. இந்தியாவோடு யுத்தபயம் இல்லாவிடில் பாகிஸ்தானில் மிலிடெரி ஆதிக்கம் குறைந்து போய்விடும். குறைந்த அடுத்த நிமிஷமே சர்க்கிள் 4-ன் கதை முடிந்து போய்விடும்.
அவ்வாறு நிகழாமல் இருக்க வேண்டுமானால் இந்தியப் பிரதமர் சம்பத்ராம் இருக்கக்கூடாது. அது சாதாரணமாய் நடக்கச் சந்தர்ப்பம் கிடையாது. அளவுக்கு மீறிய மக்கள் பாதுகாப்பு உள்ள தலைவர் அவர். இனி எஞ்சியுள்ள வழி... கொலை. அதனால் தான்... அந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது சர்க்கிள்-4.
சம்பத்ராமைக் கொல்வதற்கு மிக ரகசியமாய் திட்டம் தீட்டியிருக்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும்கூட அதிலிருந்து அவரால் தப்பித்துக் கொண்டு விடமுடியாது" மெதுவாய் சொன்னான் அப்பாஸ். யாரும் பதில் பேசவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏர்கண்டிஷனரின் ஓசையைத் தவிர அவ்வறையில் எந்த சப்தமும் இல்லை.
அந்த நிசப்தத்தைப் பிளந்துக் கொண்டு மெதுவாய் கேட்டது அப்பாஸின் குரல்...
சம்பத்ராமைக் கொல்வதற்கு மூன்று ப்ரொபஷனல் கொலையாளிகளை நியமித்திருக்கிறேன். அவர்களில் யாருக்குமே ஒருத்தரை மற்றவருக்குத் தெரியாது. அவங்க அவங்க வழியில் அவங்கவங்க நடந்துப்பாங்க. அதனால்... மூவருள் யாரோ ஒருத்தர் மூலமாய் சம்பத்ராமின் மரணம் உறுதி. ஆனால்... ஒரு நிமிஷம் நிறுத்தினான் அவன். சட்டென்று எல்லோருடைய கண்களும் பொருள் பொதியப் பார்த்தன அவனை என்னவென்று
அவர்களின் கண்களில் தென்பட்ட கேள்விக்குறியை கவனித்துவிட்டு அவன் சொன்னான் அவங்களில் ரெண்டு கொலையாளிங்க ஐந்து கோடி ரூபாய்க்கு ஒப்புக் கொண்டாங்க. ஆனால் மூன்றாமவன் மட்டும்... இருபது கோடி ரூபாய்கள் கேட்டான்.
இருபது கோடியா?
திக்பிரம்மை அடைந்து போனான் மிலிடெரிஜெனரல் குலாம்கான்.
ஆம் என்று தலையாட்டினான் அப்பாஸ். கொஞ்ச நேரம் நிசப்தம் சூழ்ந்து கொண்டிருந்தது அவர்களுக்கிடையே! அவ்வளவு தொகைகளை ஒரு கொலையாளி கேட்டது அவர்களால் சற்றும் ஊகித்துப் பார்த்திருக்க முடியாத விஷயம்.
அவன் சிறப்புதான் என்ன?
கேட்டார் ஏர்மார்ஷல் இந்த்தியாஸ்.
திரும்பவும் ஒரு வினாடி நிசப்தம்.
அவன் எப்படி இருப்பான் என்று இதுவரை யாருக்குமே தெரியாது. தப்பித்தவறி யாருக்காவது தெரிந்து விட்டால், அப்புறமாய் அவங்க உயிரோடிருக்க முடியாது.
பின்னே அவன் யார் என்று தெரியாமலேயே...
தெரியாது என்று சொன்னால் அவன் நிஜஉருவம் யாருக்கும் தெரியாது. நம் கண்ணுக்கு முன்னால் தென்படும் உருவத்திற்குப் பின்னால் மற்றொரு உருவம் இருக்கும், வெனிஜுலியன் கில்லர் கார்லோனுக்குச் சமமான கொலையாளி அவன். கடந்த பத்தாண்டுகளில் ஆசியாவில் நடந்த பிரபலமான கொலைகள் பலவற்றில் அவன் கை உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் அவன் ஆபரேஷன் ஃபெயில் ஆனது கிடையாது.
அப்படியிருக்கும்போது மீதி இருவரும் எதற்கு?
கேட்டார் அட்மிரல் சலீம்கான்.
சில சமயங்களில் மனிதன் எவ்வளவு சாமர்த்தியசாலியாய் இருந்தாலும், சூழ்நிலை அனுகூலமாய் இல்லாமல் போய் விட்டால் தோல்விதான் ஏற்படும். அப்படி ஒருக்கால் நிகழ்ந்தாலும் நாம் நினைத்தது நடப்பதற்காக எஞ்சிய இருவரையும் கூட நியமித்திருக்கிறேன். தமக்கு வேண்டியது எந்தச் சூழ்நிலையிலும் இந்தியப் பிரதமர் கொலையாவது.
திரும்பவும் நிசப்தம் ஏற்பட்டது அங்கே.
அது சரி, அந்த மூன்றாவது கொலையாளியின் பெயர் என்ன?
சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டான் குலாம் கான்.
பகதூர்
இன்னும் இருபத்தி நான்கு மணிநேரத்தில் அவன் இங்கே வரப்போகிறான் அந்த ‘ப்ரொஃபஷனல் கில்லர்.'
2
கராச்சி,
ஹோட்டல் நைட்ஃப்ளவர்
ரூம் நம்பர் 307.
டிரெஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் உட்கார்ந்திருந்தான் அவன். அவனுக்கெதிரே சின்ன மேக்கப்கிட் இருந்தது. கன்னத்தின் மீது கேசங்களுக்கு வெள்ளை சாயத்தைப் பூசிக்கொண்டே கண்ணாடியில் தென்பட்ட தன் உருவத்தைப் பரிசோதித்துக் கொண்டான்.
ஐம்பது வயது ஆள் ஒருத்தனின் உருவம் தென்பட்டது அதில் கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மெதுவாய் கண்ணாடியைவிட்டு நகர்ந்தான். எவ்வளவுகிட்டே இருந்து பார்த்தாலும் அவன் மேக்கப்பண்ணிக் கொண்டிருந்தது யாருக்குமே தெரிய அவகாசம் இல்லை. அவ்வளவு கச்சிதமாய் இருந்தது அவன் மேக்கப். உண்மையில் அவன் வயது முப்பத்தேழுதான்.
அவன் தான் பகதூர்!
ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய கொலைகாரன். பதிமூன்றாவது வயதில் முதல் முதலாய் கொலையைச் செய்தான். அதன் மூலம் - ஆயிரம் ரூபாய்களை சம்பாதித்துக் கொண்டான். சிறுவயதிலேயே தாய் தந்தையர் இறந்துவிடவே, வயிற்றுப்பாட்டிற்காக வாழ்க்கையில் இருந்த கசப்புக்களையெல்லாம் ருசி கண்டு அவன் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது.
அவன் கண்ணோட்டத்தில் எதிராளியைக் கொல்வது கொலை பண்ணுவதாகாது. தான் எடுத்துக்கொண்ட ஒரு வேலையை முடிப்பது அவ்வளவே. அதனால் தான் அக்காரியத்தை முழுவதுமாய் பண்ணி முடிப்பதற்கு அவ்வளவு ரகசியமாய் திட்டங்களைப் போட்டுக் கொள்வான். எந்தச் சின்ன விஷயமும் அவன் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது. தன்னோடு ஒப்பந்தம் பண்ணிக் கொண்ட ஆளுக்குத் தான் யார் என்று தெரியாமலிருக்க ஜாக்கிரதைகளை மேற்கொள்வான். ஒவ்வொரு ஆபரேஷனுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்துக் கொள்வான் அவன். அதனால் அவன் எந்தப் பெயருடன் திரிந்து கொண்டிருக்கிறான் என்றுகூட யாருக்குமே தெரியாது. பிரதமர் சம்பத்ராமைக் கொல்வதற்காகப் பண்ணும் ஆபரேனுக்கு அவன் வைத்துக் கொண்ட கோட் பெயர்... பகதூர்"
முப்பத்தைந்து ஆண்டுகளாய் ஒரு கொலையாளியாய் வாழ்ந்து வந்து கொண்டிருந்த அவன், இப்பொழுது அத்தொழிலிலிருந்து விலகி, தன் எஞ்சிய வாழ்நாட்களை அமைதியாய் கழிக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டிருந்தான். ஏனெனில் அவனுக்குத் தெரியும். தன் தொழிலில் என்றாவது ஒரு நாள் மரணம் எதிர்பாராமல் வந்து சூழ்ந்து கொண்டுவிடும் என்று. ஆனால் எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்குப் பணம் வேண்டும். சம்பத்ராமைக் கொலை செய்தால் அந்தப் பணம் கிடைக்கும்.
சரியாய் அடுத்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம் கராச்சியின் ஊரெல்லையில் இருந்த ஒரு வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தான் அவன்.
அவனுக்காக அங்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அப்பாஸ்.
ஒரு வினாடி அவனை வியப்போடு பார்த்தன அப்பாஸின் கண்கள். இவன் தானா பகதூர்? என்ற உணர்ச்சி அக்கண்களில், தனக்கெதிரே நின்றுக் கொண்டிருந்த ஐம்பது வயது ஆளை பகதூர் என்று சொன்னால் அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் நம்பித்தீரவேண்டும். பச்சோந்தியைப் போல தன் வேஷங்களை மாற்றிக் கொள்வது பகதூரின் தனிச்சிறப்பாயிற்றே!
சரியாய் இருபது நாட்களுக்குள் சம்பத்ராமைக் கொலை செய்ய வேண்டும்
என்றான் அப்பாஸ் பகதூரைப் பார்த்து
அந்த விஷயத்தை முன்பே சொல்லிட்டீங்க.
கோடி ரூபாய்கள் இன்றைக்கே சுவிஸ் பாங்கில் உங்கள் அகௌண்ட்டில் போடப்பட்டு விட்டது. ஆனால்... மீதிப்பணம் விஷயமாய் ஒரு சின்ன கண்டிஷன் இருக்கிறது.
பகதூர் ஒன்றும் பேசவில்லை. அவன் கண்களில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. கண்ணாடிக் கண்களைப்