Yezham Sakthi
()
About this ebook
திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தங்கள் மகள் உமாவுக்கு வயிற்றில் புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டு கலங்கி நிற்கின்றனர் ராமசாமி சகுந்தலா தம்பதியினர்.
தான் தெய்வமாய்க் கருதி வழிபடும் குரு சம்பங்கிநாதரால் மட்டுமே உமாவை குணப்படுத்த இயலும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் குடும்ப நண்பர் நாராயணசாமி.
இதற்கிடையில் சுடுகாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடிக்காட்சிகளாக படமெடுக்கச் செல்கிறது நான்கு நண்பர்கள் கொண்ட குழு.
இவர்களுக்கிடையே எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறது? குரு சம்பங்கிநாதர் உமாவை குணப்படுத்தினாரா?
அஷ்டமா சித்துக்களில் ஒன்றான கூடுவிட்டு கூடு பாயும் கலை உண்மைதானா? என்பதை ஆச்சர்யமூட்டும் விளக்கங்களுடன் எடுத்துரைக்கிறார் கதையாசிரியர்.
Read more from Indira Soundarajan
Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Sivam Rating: 4 out of 5 stars4/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5
Related to Yezham Sakthi
Related ebooks
Nooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsMahadeva Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Mudhal Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Koottirkkul Puhuntha Uyir Rating: 5 out of 5 stars5/5Uyirin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsVaira Bommai Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsNooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Ore Oru Vaarthai Rating: 5 out of 5 stars5/5Kaatraai Varuven Rating: 5 out of 5 stars5/5Naaga Padai Rating: 5 out of 5 stars5/5En Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malarum Neram Rating: 4 out of 5 stars4/5Thoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5En Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsAathma Rating: 5 out of 5 stars5/5Ganthimathiyin Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Enge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsAaram Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsKai Niraiya Vairam Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsYathirai Gnanam Rating: 0 out of 5 stars0 ratingsPallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsMayavanam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Yezham Sakthi
0 ratings0 reviews
Book preview
Yezham Sakthi - Indira Soundarajan
http://www.pustaka.co.in
ஏழாம் சக்தி!
Yezham Sakthi!
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
1
'அஷ்டமா சித்து வரிசையில் பிராகாமியம் என்னும் கூடுவிட்டு கூடு பாயும் சக்தி ஒரு விந்தையான ஒன்றாகும்.
கூடு விட்டு கூடு பாய்தல் என்றாலே பளிச்சென்று நம் ஞாபகத்திற்கு வரும் ஒரு நபர் விக்கிரமாதித்தன் தான். விக்கிரமாதித்தன் கதை ஒரு புனை கதை. அது உண்மை கிடையாது என்று கூறும் சிலரும் உண்டு. இல்லை... அவன் காடாறு மாதமும் நாடாறு மாதமும் ஆண்டது உண்மை. அவன் ஒரு அதிசய அரசன்... அவனது சாகாஸங்கள் உணமையானவை என்பாரும் உண்டு.
எது எப்படியோ?
விக்கிரமாதித்தன் அஷ்டமா சித்துக்களில் ஒன்றான பிராகாமியம் என்னும் கூடுவிட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவன் என்றே வைத்துக் கொண்டு, அவனைப் பார்க்கும்போது அவன் நிறைய சிந்திக்க வைக்கிறான்.
இந்த வித்தையை ஒரு மந்திர சித்துவாக அவன் பெற்றானா...? இல்லை பயிற்சியினால் அடைந்திருப்பானா என்றெல்லாம் கேள்விகள் எழும்புகின்றன. விக்ரமாதித்தன் கதையை முழுவதுமாக அறிந்தவர்கள், அவன் அதை அன்னை காளியை யாசித்தே பெற்றான் என்பர். இல்லையில்லை அதெல்லாம் இடைச்செருகள்கள்... விக்கிரமாதித்தன் அதை ஒரு பாடம் போலத்தான் கற்றியிருக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து உண்டு.
மொத்தத்தில் கூடுவிட்டு கூடுபாயும் ஒரு சித்தி நமக்குள் பல சிந்தனைகளை தோற்றுவிப்பது மட்டும் நிச்சயம்.
இறந்த ஒரு உடலைத்தான் கூடு என்கிறோம். அது இயங்கிக் கொண்டிருந்தவரை அதில் உயிர் என்று ஒன்று இருந்தது. இதை ஆன்மா, பிராணன், ஜீவன் என்று பல பெயர்களில் விளித்தாலும் பொருள் ஒன்றுதான். இதுதான் உடலை அதனுள் இருந்தவரை ஆட்டி வைத்தது. இது விலகிய நிலையில். உடல் அப்படியே செயலற்றுப் போய் விடுகிறது.
உண்மையில் உயிர் பிரிந்து விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்ய, சுவாசம் அற்றுப் போவதைத்தான் கணக்கில் கொள்கிறோம். சுவாசம் அற்ற உடனேயே வெப்பமும் விலகி மற்ற பஞ்சபூதக் கலவைகளான நீர், நிலமாகிய சதை, ஆகாயமாகிய மனம் என்று எல்லாமே செயலற்றுப் போய் விடுகிறது. உருமாறவும் தொடங்கி விடுகிறது.
அப்படி என்றால் உடம்பை விட்டுப் பிரிந்த காற்றுதான் உயிராக இருந்ததா? இதுதான் இன்னொரு உடலில் நுழைந்து அந்த உடம்பின் இயக்கத்தை துரிதப்படுத்துகிறதா? கேள்விகள் எழுகின்றன...
***
ஜெட் ஏர்வேஸின் அந்த சிறிய விமானத்தில் இருந்து அவர்கள் நான்குபேரும் உதிர்ந்தார்கள்.
இடம்: மதுரை விமான நிலையம்.
நேரம்: காலை 8.15.
வெளியே வந்தவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது. அவர்கள் தங்களுக்கென வைத்துக் கொண்டிருக்கும் பொதுவான பெயரான 'மிஸ்டிக் ஃப்ரண்ட்ஸ்' என்னும் பெயர் எழுதப்பட்ட வாடகைக்கார்.
உற்சாகமாக ஏறி அமர்ந்தார்கள். காரும் அவர்கள் முன் ஏற்பாட்டின்படி புக் செய்யப்பட்டிருந்த, பசுமலை தாஜ் ஹோட்டல் நோக்கி ஓடத் தொடங்கியது. நால்வரில் டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்தபடி சிகரெட் பிடிக்கத் தொடங்கியிருக்கும் ஜெகதீஷ்... ஒரு சுங்க இலாகா அதிகாரியின் மகன் செல்வாக்கான குடும்பத்து பிள்ளை. பின் வரிசையில் இடது கதவு ஓரம் அமர்ந்திருப்பவன் பிருத்வி! பிரபல சினிமா நடிகை தீபிகாவின் தம்பி. தீபிகாதான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கவர்ச்சி நடிகை. மார்புக்கு மட்டுமே ஐம்பது லட்சம். இன்ஷ்யூர் செய்து வைத்திருப்பவள். அப்படியானால் சம்பாத்யம் எவ்வளவு இருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை. அக்காவின் சம்பாத்யத்தை தம்பி பிருத்வி, பீர் குடித்தே அழித்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுதுகூட அவன் கையில் ஒரு பீர் பாட்டில்தான் இருக்கிறது.
நெக்ஸ்ட் ரகுவீர். சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்கிற ஆசையில், உடம்பை பார்த்துப் பார்த்து வளர்த்து வைத்திருப்பவன் ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் நடிப்போடு, காமிராவுக்கும் சேர்த்து படித்திருப்பவன்.
அதென்னவோ தெரியவில்லை.
நடிக்க சான்ஸே வரவில்லை.
காமிராவுக்குதான் வேலை வந்திருக்கிறது. அவன் மடிமேல் ஒரு மினி மூவி கேமரா!
வலது ஓரமாக வித்யாசமாக பீடி பிடித்தபடி அமர்ந்திருக்கும் கண்ணன். ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டர். டெல்லியில் தரப்படும் விருதுகளுக்கென்றே சிந்திப்பவன்... சின்னதாய் ஆட்டுத்தாடி வைத்து பின்னால் ஐயர் போல குடுமி வளர்த்திருப்பான். (எழுத்தாளர்னாலே இப்படி வித்யாசமா கோணல் மாணலாத்தான் இருக்கணுமா என்ன?) நான்கு பேரும் அதி தீவிர சிந்தனையில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளவேயில்லை. ஏதோ நான்கு சண்டைக்காரர்கள், வேறு வழியில்லாமல் ஒன்றாக அமர்ந்து வந்து கொண்டிருக்கிறார் போல் இருந்தது. அது அந்த கால்டாக்சி டிரைவர் மாணிக்கத்தையே உறுத்திற்றோ என்னவோ... மெல்ல வாய் திறந்தான்.
சாருங்கல்லாம் மெட்ராஸ்ல இருந்து வர்றீங்களோ?
நால்வரில் ஒருவர்கூட அவன் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. வெளியிலேயே பார்த்துக் கொண்டு வந்தார்கள்.
என்ன சார்... கேக்கறேன். எதுவும் பேச மாட்டேங்கிறீங்களே...
சன்னமாக வருந்தினான்.
போனால் போகிறதென்று அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெகதீஷ் வாயைத் திறந்தான்.
ஏம்ப்பா... ஏரோப்ளேன்ல வந்தாலே மெட்ராஸ்ல இருந்துதான் வரணுமா?
இல்ல சார்... அந்த ஃபிளைட் மெட்ராஸ்ல இருந்து வர்ற ஃப்ளைட்தானே சார்? அதான் அப்படி கேட்டேன்.
அப்ப நீ தெரிஞ்சுகிட்டே கேட்டுருக்கே... அப்படித்தானே?
என்ன சார் நீங்க. மெட்ராஸா இருந்தா மெட்ராஸ்னு சொல்லுங்க. இல்லாட்டி... இல்லேன்னு சொல்லிட்டு போங்க. கோர்ட்ல மடக்கற மாதிரி மடக்கறீங்களே சார்...
ஆமா... மெட்ராஸ்னு ஒரு ஊரே இல்லையே... நீ எதை வெச்சு கேட்டே
டிரைவர் விக்கித்துப்