Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chidambara Ragasiyam
Chidambara Ragasiyam
Chidambara Ragasiyam
Ebook354 pages3 hours

Chidambara Ragasiyam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580100704481
Chidambara Ragasiyam

Read more from Indira Soundarajan

Related to Chidambara Ragasiyam

Related ebooks

Related categories

Reviews for Chidambara Ragasiyam

Rating: 4.25 out of 5 stars
4.5/5

8 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chidambara Ragasiyam - Indira Soundarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிதம்பர ரகசியம்

    Chidambara Ragasiyam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    1

    "அடிமுடி அறியா ரகசியம் நான்;

    அடியவர் பிடியினில் அதிசயம் நான்."

    நெடுநாட்களுக்குப் பின்… அதாவது, மிகச் சரியாக 13 ஆண்டுகளுக்கு பிறகு ராஜேந்திரன் தன் சொந்த கிராமமான மகேந்திர மங்கலத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோரமாக தொட்டியம் என்கிற ஊருக்கு முன்பாக இருக்கிறது மகேந்திர மங்கலம்.

    ஒரு காலத்தில் மிகப் பசுமையான ஊர்.

    தென்னை, நெல், கரும்பு, வாழை என்று பணப் பயிர் செழித்துக் குலுங்கும் பூமி. எல்லாம் காவேரித்தாயின் கருணை. இப்போது காவேரிக்கே கருணை காட்டப்பட வேண்டிய நிலையில் இருப்பதால், பழைய பசுமையெல்லாம் இல்லை. அதில் கடந்த சில வருடங்களில் காவிரித்தாய் ‘பாலைவனத்தாய்’ ஆகிவிட்டாள். அவள் மேனி மேல் கிடந்த மணலை எல்லாமும்கூட ஒரு கூட்டம் திருடிக்கொண்டு போய்விட்டது. அதனால், ஊரே வறண்டு, காய்ந்து கிடக்கிறது.

    ஒரு மாதம் மழை பெய்தால்கூட ஊருக்கு பழைய பசுமை வராது. அப்படியொரு வறட்சி. அதனாலேயே… ‘ஊரில் இருக்கும் அந்த இரண்டரை ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டால் என்ன?’ என்கிற ஒரு எண்ணம் ராஜேந்திரனுக்கு தோன்றிவிட்டது - கூடவே ஒரு வீடும் உண்டு. அது இப்போது கந்தசாமி என்கிற குத்தகைத்தாரர் வசம் உள்ளது.

    விளைவதில் மூன்றில் ஒரு பங்கும், வருடம் பத்தாயிரம் ரூபாயும் தர வேண்டும். இது 15 வருடங்களுக்கு முன்பு ராஜேந்திரனின் அப்பாவான திருஞான சம்பந்தம், அவர் உயிரோடு இருந்தபோது செய்திருந்த ஏற்பாடு. அவர் காலமாகவும்… பணமும் வரவில்லை. ஒரு பங்குவிளை பொருளும் வரவில்லை. கேட்டால், ‘ஆற்றில் தண்ணீர் வராத நிலையில், விவசாயம் எப்படி செய்வது?’ என்று குத்தகைக்காரன் பஞ்சப் பாட்டுப்

    பாடுகிறான்.

    ‘நேரில் போனாலன்றி காரியம் ஆகாது’ என்பது ராஜேந்திரனுக்கு தெரிந்துவிட்டது. அதுதான் கிளம்பிவிட்டான். ராஜேந்திரன் ஒரு டாக்டர், ‘எம்.பி.பி.எஸ்.’, ‘எம்.டி.’ என்று முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தின் மருத்துவ ஆலோசகராகவும், மாலை நேரங்களில் தன் வீட்டிலேயே ஒரு பகுதியை ‘கிளினிக்’கையும் வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறான். திருமணமாகி, ஆறு வயதில் ஆஷா என்கிற பெயரில் அழகான பெண் குழந்தை. தெய்வானை எனும் பெயரில் அழகான மனைவி… இதுதான் ராஜேந்திரன் குடும்பம்.

    சென்னையின் சாபக்கேடுகளில் ஒன்றான நெருக்கடியான பகுதியில் ஒரு ‘அபார்ட்மென்ட்’டின் ஒரு பகுதியை மட்டும் வீடு என்கிற பெயரில் சொந்தமாக்கிக் கொண்டு வாழ்ந்து வரும் ஒரு மருத்துவன். டிரைவரான சுலைமான், காரை ‘ஸ்டார்ட்’ செய்திட… கிளம்பிவிட்டது அவன் பயணம்.

    புறப்படும் சமயம் வானம் மேக மூட்டமாய் காட்சி தந்தது. என்ன… வழியில் மழை பிடிச்சிக்குமா? என்று ராஜேந்திரன் கேட்கவும் சுலைமான் சிரித்துவிட்டான்.

    என்னடா சிரிக்கறே?

    சிரிக்காம என்ன சார் பண்ண? இப்படி தினமும் வானம் கோட்டை கட்டுது. புல்லுக்குக் கூட நாலு தூறல் விழ மாட்டேங்குது. காத்து வந்து கலைச்சி விட்டுறுது.

    இது நடக்கறதுதானே?

    இப்பல்லாம் இதான் சார் நடக்குது. ரெண்டு வருஷம் முந்தி, வெள்ளம் வந்ததே. அப்பபெஞ்ச மாதிரி ஒரு மழையெல்லாம் இனி கனவுலகூட சாத்தியம் இல்ல

    ஏன் அப்படி சொல்றே?

    வேற எப்படி சார் சொல்ல…? திரும்பின பக்கமெல்லாம் லஞ்சம். தாலிச் சங்கிலி பறிப்புன்னு ஊரே கெட்டுக் கிடக்கும்போது… மழை எங்க இருந்து கொட்டும்?

    சுலைமான் தர்ம நியாயங்களில் நம்பிக்கை கொண்டவன் என்பது அவனது பேச்சில் தெரிந்தது.

    அவன் சொல்றதுதான் சரி… மழையெல்லாம் வராது. நாம் அவ்வளவு புண்ணியமெல்லாம் பண்ணல என்றபடியே காரின் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டாள் தெய்வானை. அவளைத் தொடர்ந்து கையில் ‘டேப்லெட்’ சகிதம் ஏறினாள் ஆஷா. அதில் ‘கம்ப்யூட்டர் கேம்’. ஆஷாவின் கவனம் எல்லாம் அதன் மேலேயே இருந்தது. ஒரு எந்திர பொம்மை போல் நடந்து கொண்டாள்.

    சரி சரி… நாலு நாளைக்கு தேவையான துணிமணியை எடுத்துகிட்டேதானே? ராஜேந்திரன் கேட்டான்.

    எடுத்துக்கிட்டேங்க… ஆமா, நாலு நாளா அங்கே தங்கப் போறோம்?

    பின்ன?

    ஐயோ… இன்னிக்கு போயிட்டு நாளைக்கு ராத்திரி வந்துடலாம்னு சொன்னீங்க?

    இல்ல தெய்வானை… கூட ரெண்டு நாள் இருந்து, எப்படியாவது இடத்தை வித்துட்டு போயிடுங்கிறான் என் நண்பன் ராமச்சந்திரன்.

    அப்ப இடத்தை வாங்க ‘பார்ட்டி’ங்க தயாரா இருக்காங்களா?

    அவனுக்கு ‘ரியல் எஸ்டேட்’தானே தொழிலு. ஒரு உரக் கம்பெனிக்காரங்களுக்கு காவிரிப்பாசன நிலம்தான் தேவைப்படுதாம். ‘நல்ல விலை கிடைக்கும்’ன்னும் சொன்னான்.

    நல்ல விலைன்னா?

    ஏக்கருக்கு அம்பது லட்சம்…

    ராஜேந்திரன் சொல்ல… வாயைப் பிளந்தாள் தெய்வானை. அப்படியே, அப்ப ஒரு கோடிகிட்ட நமக்கு வரப் போகுதுங்களா? என்று கேட்டாள்.

    சிதம்பர ரகசியம் என்ன பெரிய கோடி… இப்ப கோடிக்கெல்லாம் மதிப்பே இல்லை. ஐநூறு, ரெண்டாயிரம் எல்லாம் சில்லரையாயிடுச்சு. லட்சம், பத்து லட்சம்… இதுக்கு கொஞ்சம் மேல ஒரு கோடிதான் இப்ப குறைஞ்ச மதிப்பு. நூறு கோடிக்கு மேல! வெச்சிருக்கறவன் தான் இப்ப பணக்காரன்… தெய்வானை. அஞ்சாறு கோடி ரூபாய்களை இப்ப ஊருக்கு பல பேர் வெச்சிருங்காங்க.

    என்றபடியே ராஜேந்திரன் ஏறிட… காரும் புறப்பட்டது. முன்னதாக சுலைமானிடம், ‘கிளினிக்ல நான்கு நாட்கள் விடுமுறைங்கற போர்டை மாட்டிட்டேதானே?’ என்று கேட்க மாட்டிட்டேன் சார்… என்றபடி காரை வீதியில் இறக்கினான்.

    காரும் மகேந்திர மங்கலம் நோக்கி ஓடத் தொடங்கியது.

    ***

    அந்த நாளைய வீட்டின் கதவை அவ்வளவு சுலபத்தில் திறக்க முடியவில்லை. சாவித் துவாரத்தில், குளவிக்கூடு இருந்து. சாவி ‘நரநர’ வென்று சப்தமிட்டது.

    திறந்தே ரொம்ப காலமாச்சு போல… என்றபடியே கதவை நெட்டித் திறந்தான் கந்தசாமி. அவனைத் தொடர்ந்து ஒட்டடைக்குச்சி, விளக்குமாறோடு உள்ளே நுழைந்தாள் அங்கம்மாள்.

    பாத்து… கொஞ்சம்கூட தூசு தும்பு இருக்கக்கூடாது. டாக்டர் அய்யா கேட்டப்ப… வீடு புழக்கத்துலதான் இருக்கு. பூட்டியெல்லாம் வைக்கலேன்னு சொல்லிட்டேன்.

    என்றபடியே கந்தசாமி தன் பங்குக்கு நூலாம்படைகளை விலக்கத் தொடங்கினான். சுவரில் பெரிய பெரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள். ஒன்றில் மகாத்மா காந்தியோடு காட்சி தந்தபடி இருந்தார் ராஜேந்திரனின் அப்பாவான திருஞான சம்பந்தம். அந்தப் படத்தை உற்றுப் பார்த்தான்.

    என்ன அப்படி பார்க்கறே என்று தரையை கூட்டியபடியே கேட்டாள் அங்கம்மாள்.

    பெரியவரைப் பார்க்கறேன். கூடவே பாரு… மகாத்மா காந்தி.

    அப்ப காந்தி நம்ம ஊருக்கு வந்துருக்காரா?

    அப்படித்தான் இருக்கணும். இல்லாட்டி எப்படி இந்தப் போட்டோ வரும்?

    அவ்வளவு பெரிசா நம்ப ஊரு?

    அதுசரி… காஞ்சிப் பெரியவரே நம்ப ஊர்லதான் பாடம் படிச்சாராம். அது தெரியுமா உனக்கு?

    அப்படியா?

    பொறவு…! நம்ப ஊருக்கு பெரிய சரித்திரம் இருந்திருக்குல்ல…?

    சரித்திரமா?

    சரித்திரம் தெரியாதா உனக்கு? தஞ்சாவூர் கோவிலை கட்டின ராஜராஜசோழன் கூட நம்ப ஊர்லதான் வித்தை கத்துக்கிட்டானாம். அதாவது தெரியுமா?

    இதெல்லாம்தான் சரித்திரமா?

    பொறவு? நம்ப ஊரை என்னன்னு நினைச்சே?

    அதெல்லாம் சரி! இப்ப தண்ணிக்கு செத்து… ஒண்ணுமில்லாமத்தானே கிடக்கோம்?

    ‘அதனால நம்ம ஊருக்கு இருக்கிற மதிப்பு குறைஞ்சிடாது. சரி… இந்த ஊருக்குன்னு ஒரு மழை லிங்கம் இருந்திருக்கு. அது தெரியுமா உனக்கு?’

    இருவரும் கைக்கு கை… வாய்க்குவாய் என்று வேலை பார்த்தபடியே பேசினார்கள். அங்கம்மாள் விக்கித்தவளாக, ‘மழை லிங்கமா…?’ என்று கேட்டாள்.

    ஆமா…! காவிரி ஆத்துக்கு நடுவுல ஒரு கல்மண்டபம். ஆனா, அதுக்கு கூரை கிடையாது. அதன் நடுவுல ஒரு லிங்கம். அது பேர்தான் மழை லிங்கம். அதுல 108 குடம் தண்ணியை விட்டு சுத்தி வந்தா… மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்கறது ஐதிகம்.

    கந்தசாமி… ஊருக்குள் சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை மிக உற்சாகமாக சொன்னான். அங்கம்மாள், குப்பையை குவித்தபடியே அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

    என்ன பார்க்கறே?

    இல்ல… இப்ப அப்படியொரு மண்டபமும் இல்ல. லிங்கமும் இல்ல! நீ எதை வெச்சு கதை அளக்கறேன்னு தெரியலியே! என்றாள்.

    அளக்கறேனா…? கோட்டிப்புள்ள… அம்புட்டும் சத்தியம்!

    அப்ப எங்க அது?

    அது மட்டுமா… ஊருக்குள்ள ஒரு சிவன் கோவில் இருந்து, அதுவுமில்ல இப்ப காணாம போயிடுச்சு!

    காணாம போக அது என்ன தங்கமா… வைரமாய்யா… கட்டிடம்யா! அது எப்படிய்யா போகும்?

    அதெல்லாம் தெரியாது. ஆனா, கோவில் இருந்திருக்கு. மழை லிங்கமும் இருந்திருக்கு.

    அப்ப அது எங்கே போச்சு?

    புதைஞ்சு போச்சுங்கறாங்க சிலர்… களவு போச்சுன்னு சொல்லுறாங்க சில பேர்… ஊருக்குள்ளேயே எங்கையோ இருக்குன்னும் சொல்றாங்க. ஆனா, எங்கன்னுதான் தெரியல?

    போகட்டும் போ… நாம் நம்ம வேலையைப் பார்ப்போம்.

    ஆமா… டாக்டர் குடும்பம் எப்ப வருது?

    எப்பவா…? வந்துகிட்டே இருக்காங்க! மளமளன்னு வேலையைப் பாரு. அவர் வந்து நிக்கறதுக்கு முன்னால நாம குப்பைகளை வாரி எரியணும்.

    கந்தசாமி கூடுதல் வேகத்துக்கு மாறினான். அப்படியே ஒவ்வொரு அறையாகச் சென்றவன்… ஓர் அறையின் மேல் பாகம் உள்ள ‘சேந்தி’ எனப்படும் ‘பரண்’ பகுதியை பார்த்தான். அதன்மேல் கும்மிருட்டு. ‘டார்ச் லைட்’டை அடித்துக்கொண்டு ஒரு ஏணி மேல் ஏறி… பரண் மேல் வெளிச்சம் பாய்ச்சியவன் அரண்டு போனான். அவன் பார்த்த நொடியில் ஐந்து தலை நாகம். எதிரே படம் விரித்தபடி நின்றிருந்தது.

    ‘ஈஸ்வரா…’ என்ற குரலோடு, அப்படியே ஏணியை தள்ளியபடி கீழே விழுந்தான். சப்தம் கேட்டு அங்கம்மாள் ஓடி வந்தாள். விழுந்து கிடப்பவனைப் பார்த்து பதைத்து, தொட்டு எழுப்ப முயன்றாள். அவனும் தட்டுத் தடுமாறி எழுந்தவனாக, ஓடு அங்கம்மா… ஓடு மேல பாம்பு… அதுவும் அஞ்சு தலையோட… என்றிட அங்கம்மாளும் வெலவெலத்துப் போய் பார்த்தாள்.

    அந்த ஐந்து தலை நாகம், ‘பரண்’ முகப்புக்கு வந்து அவளைப் பார்த்தது. அங்கம்மாளின் விழிகள் இரண்டும் தெரித்துவிட்டன!

    அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம். டாக்டர் ராஜேந்திரன், மகள் ஆஷா… மனைவி தெய்வானையோடு காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தான்!

    2

    ‘உருவம் இல்லா அருவம் நான்; உலகின் இரண்டு துருவமும் நான்!"

    காரில் இருந்து ராஜேந்திரன் இறங்க… கந்தசாமியும், அங்கம்மாளும் புறமுதுகு தெரிக்க ஓடிவந்து அவன் மேல் விழுந்து அப்படியே வீதியில் சிதறினர். ‘டேப்’பைவிட்டு விலகவே விலகாத ஆஷாகூட விதிர்ப்போடு பார்த்திட… ராஜேந்திரன், கந்தசாமியைப் பார்த்து என்னாச்சு கந்தசாமி… எதுக்கு இந்த ஓட்டம் என்றான்.

    அய்யா… அய்யா… என்று கந்தசாமி மூச்செறிந்தான்.

    நீ இருந்து சொல்லிட்டு வா… நான் போறேன் என்று பிய்த்துக் கொண்டாள் அங்கம்மாள்.

    ‘தெய்வானைக்கு தொடக்கமே ஏதோ ஒரு பெரிய வில்லங்கம்’ என்பது தெரிந்துவிட்டது.

    அய்யா… உள்ள… உள்ள… பாம்புய்யா?

    ஃப்பூ… பாம்புக்கா இந்தப் பயம்! ஆள் இல்லாத வீடு. பாம்பு, தேள் இருக்கத்தானே செய்யும்?

    அய்யா… இது சாதாரண பாம்பு இல்ல… அஞ்சுதலை நாகம்!

    அஞ்சு தலை நாகமா?

    ஆமாம்ய்யா… நான் கதைகள்லதான் படிச்சிருக்கேன். இப்ப கண்ணால பார்த்துட்டேன்.

    உளறாத…! ஏதாவது போட்டோ… கீட்டோ பார்த்தியா?

    கேட்டபடியே ‘சூட்கேஸை’ காரின் டிக்கியில் இருந்து இறக்கினான். அதை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல வேண்டிய கந்தசாமியோ தயங்கி நின்றான்.

    எடுய்யா… வேடிக்கை பார்க்கறே?

    இல்லய்யா… உள்ள போக வேணாம். பயமா இருக்குய்யா.

    இதோ பாரு… இது 2017! பனைமரம் அளவு ‘அனகோண்டா’ பாம்புகூட உண்டு. ஆனா, அஞ்சு தலை நாகமெல்லாம் இதுவரை இந்த உலகம் பார்க்கவே பார்க்காத ஒண்ணு. ஆமா… இவ்வளவு நாள் வீட்டை நீ பார்த்துக்கவே இல்லையா… இன்னிக்குத்தான் திறந்தியா?

    அ… அது வந்துய்யா

    நீ தடுமாறுவதுல இருந்தே நல்லா தெரியுது… என்றபடியே ராஜேந்திரன் தைரியமாக உள்ளே நுழையத் தொடங்கினான். ஆனால் கந்தசாமி அந்த இடத்தைவிட்டு நகராமல் நின்றான். அவன் முகத்தில் பயம் தாண்டவமாடிற்று. அது தெய்வானையைக் கூட சற்று சிந்திக்க வைத்தது.

    என்னங்க… கொஞ்சம் பார்த்துப் போங்க என்றாள்.

    நம்ம வீடு தெய்வானை. இங்க எனக்கென்ன பயம்? நான் துள்ளி விளையாடின வீடு என்றபடியே அதனுள் நுழைந்தான்.

    டிரைவராக வந்த சுலைமானுக்கு வரும் வழியிலேயே வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் செங்கல்பட்டோடு கழண்டு கொண்டான். அதன்பின் ராஜேந்திரனே காரை ஓட்டும்படி ஆகிவிட்டது. ‘இப்போது அவன் இருந்தால், இந்தப் பதற்றமான சூழலில் மிகவே உதவியாக இருந்திருக்கும்.’

    சுலைமானை நினைத்து வருத்தப்பட்டாள் தெய்வானை! அந்த வீட்டுக்குள்ளே தரை எல்லாம் ஒரே குப்பை அள்ளிக் கொட்டுவதற்குள்தான் பரண் மேல் பார்க்கக்கூடாததைப் பார்க்கும்படி ஆகிவிட்டது. ராஜேந்திரனும் வீட்டை உற்றுப் பார்த்தபடியே நடந்தான்.

    அந்த நாளைய ‘ரெட் ஆக்சைட்’ பூசின சிமெண்டு தரை. உள்ளே வட்ட வட்டமாய் அமைந்த தூண்கள். நடுவில் முற்றம் - அதில் பெய்யும் மழைநீர் ஓடி வெளியே செல்ல வடிவமைக்கப்பட்ட சல்லடை சுவரில் அந்த நாளைய படங்கள்!

    அவனைத் தொடர்ந்து தெய்வானையும் உள்ளே வர… வேறு வழியின்றி கந்தசாமியும் பின்தொடர்ந்தான். ராஜேந்திரன் மிகச் சரியாக பரணுக்குக் கீழ் நின்ற நிலையில் திரும்பிப் பார்க்க கந்தசாமி தெரியவும், எங்கய்யா பாம்பைப் பார்த்தே? என்று கேட்டான்.

    உங்க… உங்க தலைக்கு மேல பரண்ல…

    இதுலயா?

    ஆ… ஆமா…

    ம்… ‘டார்ச் லைட்’ இருக்கா?

    இ… இருக்குய்யா… என்று அதை தேடுவது போல் பார்க்க… அது ஓர் மூலையில் கிடந்தது. போய் எடுத்து வந்து தந்தான். அதை கையில் வாங்கி ‘ஆன்’ செய்தபடி, ஏணியை வைத்து ஏறத் தொடங்கினான் ராஜேந்திரன்.

    பார்த்துங்க… என்று படபடத்தாள் தெய்வானை.

    பயப்படாதே தெய்வா! எவ்வளவு பாம்பை கையில பிடிச்சு தலையை கத்தி வீசி எறிஞ்சிருப்போம் தெரியுமா? - என்றபடியே டார்ச் லைட் வெளிச்சம் பாய்ச்சி, உள் பாகத்தைப் பார்த்தான். சிறியதாய் ஒரு மரப்பெட்டி கண்ணில்பட்டது. அதன் முகப்பில் ஐந்து தலை நாகம் படம் விரித்து நிற்பது போல செதுக்கப்பட்டிருந்தது. அதை உற்றுப் பார்த்த நொடி… பெரிதாய் ஏணி மேல் நின்றபடியே சிரித்துவிட்டான் ராஜேந்திரன்.

    சிரித்தபடியே திரும்பி கீழே பார்த்தவன், மரப்பெட்டியில அஞ்சு தலை பாம்பை செதுக்கி இருக்காங்கய்யா. அதைப் பார்த்து நீயும் பயந்த… என்னையும் பயமுறுத்திட்டியே? என்றபடி இறங்கி டார்ச் லைட்டை அவன் கையில் தந்து, ஏறிப் பாரு என்றான் மிரட்டலாக…

    கந்தசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. சீறிக்கொண்டு பாய்ந்து வந்ததே? அந்தக் காட்சியை ஒரு விநாடி மனதுக்குள் எண்ணிப் பார்த்தான்.

    என்ன முழிக்கிறே… ஏறிப் பாரு

    ராஜேந்திரன் மறுபடி அதட்டவும் ஏறிப் பார்த்தான். பெட்டிதான்! அந்த நொடியே புசுக்கென்று ஆகிவிட்டது கந்தசாமிக்கு.

    இதுவா நம்மை அந்தப் பாடு படுத்தியது?

    அசடு வழிய திரும்பிப் பார்த்தான்.

    ஆமாங்கய்யா… பெட்டிதான்.

    அதை அப்படியே கீழே இறக்கு. என்ன இருக்குன்னு பார்க்கிறேன். அப்புறம் கிச்சனை சுத்தம் பண்ணிட்டியா? அங்க அடுப்பு பத்த வைக்க முடியுமா?

    பண்ணலாங்க… அம்மா சமையலே செய்யலாம். ‘கியாஸ்’ அடுப்பு. பாத்திரம் எல்லாம் தயாரா இருக்கு. கொல்லையில் தொட்டியில் தண்ணிய தேக்கணும். போய் சமையல் சாமான் வாங்கிட்டு வரணும். அவ்வளவுதாங்க.

    போகட்டும்! முசிறி ராமய்யர் ஓட்டல் இருக்குதானே?

    இல்லீங்க… அய்யரும் நம்ம குடும்பத்தைப் போலவே பட்டணம் பக்கம் போயிட்டாருங்க.

    அட… அய்யர் கடை அரிசி உப்புமா பத்தி தெய்வானைகிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன்.

    அதனால என்னங்க… பெரிய பெரிய ஓட்டல் எல்லாம் வந்திருச்சிங்க.

    சரி! சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா. அப்படியே சமையல் ஐட்டங்களையும் வாங்கிட்டு வந்துடு - என்று இரண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டவும்… கந்தசாமியும் வாங்கிக்கொண்டு புறப்பட்டான். போகும்போது ஆஷாவை ஒரு பார்வை பார்த்தான். அவள் பார்வை, ‘டேப்’பில் ஒரு கேம் மேல் இருந்தது.

    அய்யா… வந்ததுல இருந்து பார்க்கிறேங்க. பாப்பா இந்த ‘டிவி’ பெட்டியும் கையுமாவே இருக்கு. இப்பல்லாம் கையில பிடிச்சிக்கிட்டே டிவி பார்க்கலாமுங்களா?

    இல்ல… அது ‘டி.வி’ இல்ல… ‘டேப்’ - உனக்கு சொன்னா புரியாது. நீ போயிட்டு வா. நாங்க இந்தக் குப்பையை அள்ளி போட்டுட்டு, கொஞ்சம் ஓய்வு எடுக்கறோம் - என்ற கணவனை சோம்பல் முறித்தபடி பார்த்தாள் தெய்வானை.

    என்ன தெய்வா…

    டயர்டா இருக்கா?

    பின்ன? ஏழு மணி நேரம் உக்காந்து வந்திருக்கோம். இந்த கார் ஏ.சி.ல ஆக்சிஜனும் சரியா இருக்காது… கேக்கணுமா?

    "அலுத்துக்காதே… நீ ஒரிஜினல் மாமியார் வீட்டுக்கு வந்துருக்கே! போய் முதல்ல பூஜை அறையில் விளக்கை

    ஏத்து?"

    விளக்கு ஏத்துறதா… நாம் என்ன இங்க வாழவா வந்திருக்கோம்! புதுசு புதுசா சொல்றீங்க?

    நம்மளோட வீடு தெய்வா… விலைக்கு வித்து பணம் கைக்கு வரும்வரை நம்ம சொந்தம்தானே? இருக்கற வரை அந்த உணர்வை அனுபவிப்போம்

    அவனிடம் சொந்த ஊர் பாசம் கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதை ரசித்தபடியே தெய்வாவும் அந்த வீட்டு மருமகளாக தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கினாள்.

    ***

    அலாதியாக வைக்கோல் கிடக்கும் தெருவுக்குள் சைக்கிளை சர்க்கசில் கரடி ஓட்டுவது போல் ஓட்டிக்கொண்டு கந்தசாமி போவதைப் பார்த்து அங்கம்மாள் ஒரு இடத்தில் குறுக்கிட்டாள்.

    யோவ்… நில்லுய்யா…

    என்ன அங்கம்மா?

    என்னய்யா தூங்கி எழுந்திருச்சவனாட்டம் தெம்பா வண்டிய ஓட்டிக்கிட்டுப் போறே… பாம்பு பயம் போயிடுச்சா?

    அதுவா… அது பிரமை புள்ள? உண்மையில் அங்க அஞ்சு தலை பாம்போடு மரப்பெட்டிதான் இருந்திருக்கு. அதை நான்தான் பார்த்து பாம்புன்னு பயந்துட்டேன்.

    பிரமையா… அப்ப நான் பார்த்தேனே! அது…?

    நான் சொல்லவும்தானே நீயும் பார்த்தே! அப்ப அதுவும் பிரமைதான்.

    இல்லய்யா… இப்ப நினைச்சாலும் வயித்தைக் கலக்குது. நீ என்னன்னா சர்வ சாதாரணமா பிரமைங்கறே?

    உள்ளே பரண் மேல ஏறி பார்த்துட்டுதானே சொல்றேன். டாக்டரும் தைரியமா அங்கே தங்கத் தொடங்கிட்டாரு. சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வான்னாரு. அதான் வந்தேன்.

    நெசமாவா சொல்லுறே.

    அட போ புள்ள… ரூபா நோட்டைப் பாரு. டாக்டர் அய்யாதான் தந்தாரு. நீயும் போய் ஒத்தாசை பண்ற வழியைப் பாரு…

    கந்தசாமி சொன்னாலும், அங்கம்மாளிடம் சிறு தயக்கம்?

    என்ன இம்புட்டு சொல்லியும் நம்ப முடியலையா?

    இல்ல… பார்த்தது எப்படி பொய்யாச்சுன்னுதான் யோசிக்கிறேன்.

    பொய்தான்… அஞ்சு தலை பாம்பு நம்ம ஊர்ல இருந்திருந்தா ஒருத்தர் கண்ணுல கூடவா பட்டிருக்காது?

    அப்ப நான் போகட்டா…?

    போ… போனாதான் பேசினபடி கூலி தருவேன்… பாத்துக்க.

    யோவ்! என் வயித்துல அடிச்சிடாதேய்யா… நான் போறேன் - அங்கம்மாள் அப்போதே புறப்பட்டாள்.

    ***

    பெட்ரூமில் அந்த நாளைய வாட்ரோப் ஷெல்ப்பில், துணிமணி சூட்கேஸை வைத்துவிட்டு, சோப்பு - துண்டுடன் கொல்லைப்புறம் சென்ற தெய்வானை, ஆஷாவையும் அழைத்துக்கொண்டு போய் முகம் கழுவச் சொன்னாள். சென்னையில் பிளாஸ்டிக் டப்பிலும், பக்கெட்டிலும் தண்ணீரைப் பார்த்திருந்த ஆஷாவுக்கு கொல்லைப்புறமும் அங்குள்ள சிமெண்டுத்

    Enjoying the preview?
    Page 1 of 1