Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saagara Sangamam
Saagara Sangamam
Saagara Sangamam
Ebook317 pages2 hours

Saagara Sangamam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Yandamoori Veerendranath, is a famous Telugu novelist. He had written many social, fiction, super natural thriller stories and novels. Hailing from Andhra Pradesh state in India, he influenced younger generations with his socially relevant writings. In his writings he addresses many of the important social problems in India like poverty, prejudices, and superstitions, and encourages people to be socially responsible. He successfully bridges the idealistic and the popular styles of literature.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580101100041
Saagara Sangamam

Read more from Yandamoori Veerendranath

Related to Saagara Sangamam

Related ebooks

Reviews for Saagara Sangamam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saagara Sangamam - Yandamoori Veerendranath

    http://www.pustaka.co.in

    சாகர சங்கமம்

    Sagara Sangamam

    Author:

    எண்டமூரி வீரேந்திரநாத்

    Yandamoori Veerendranath

    For more books

    http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    தரளா பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரின் வீட்டுப் படுக்கை அறையில் இரவு இரண்டரை மணிக்கு போன் மணி ஒலித்தது. எம்.டி. இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டுப் போனை வைத்துவிட்டார். மறுமுனையில் சொல்லப்பட்ட வார்த்தைகள் முதலில் அவருக்குப் புரியவில்லை. போனை வைத்துவிட்ட பிறகும்கூட அவருக்கு விஷயம் முற்றிலுமாக விளங்கவில்லை என்று அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

    அவசர அவசரமாக எழுந்து தயாராகி, எங்கே கிளம்பிட்டீங்க? என்று கேட்டுக் கொண்டிருந்த மனைவிக்குக் கூட சரியாக பதில் சொல்லாமல் காரை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய தூக்கம் இப்பொழுது முற்றிலுமாக கலைந்து விட்டது.

    போனில் கேட்ட செய்தியே அவர் மனதில் திரைப்படமாக ஓடிக் கொண்டிருந்தது.

    நான்தான் சார் வெங்கடாசலபதி பேசுகிறேன்.

    யாரு?

    டூ டவுன் காவல் நிலையத்திலிருந்து வெங்கடாசலபதி எஸ். ஐ.

    ஓ... நீயா! என்ன விஷயம்?

    நேற்று இரவு இன்ஸ்பெக்டர் அய்யா விபசார விடுதியின் மீது ரெயிடிங் செய்தார் இல்லையா?

    யாரு? சத்யநாராயணன்தானே?

    ஆமாம்.

    அந்த மாதிரி ரெயிடிங் போகப் போவதாக நேற்று மாலையில் பேச்சு வாக்கில் சொன்னான். அது சரி. இந்த நள்ளிரவு வேளையில் எனக்கு போன் செய்ய வேண்டிய காரணம்?

    அதில் பிடிபட்ட ஒரு பெண், உங்களைத் தன்னுடைய தந்தைன்னு சொன்னாள் சார்.

    அவர் கை ரிசீவரை அழுத்தமாகப் பற்றிக் கொண்டது. வ்வாட்! நம்ப முடியாதவர் போல் கத்தி விட்டார். உனக்கு மூளை பிசகி விட்டதா என்ன?

    உண்மைதான் சார். உண்மை!

    இதுதான் இந்த கதையின் தொடக்கம்.

    தரளா சொன்ன கதை

    வணக்கம். என் பெயர் தரளா. பி.ஏ. பாஸாகி இருக்கிறேன்.

    திருமணம் ஆகும் வரையில் என்னை எல்லோரும் ‘பிடிவாதக்காரி, குறும்புக்காரி’ என்று சொல்லி வந்தார்கள். திருமணமாகி இரு குழந்தைகள் பிறந்த பிறகு அந்தப் பெயர்கள் நன்றாக இல்லை என்று ‘திமிர் பிடித்தவள், முன்கோபி’ என்ற பட்டப் பெயர்களைச் சூட்டினார்கள். அதுவரையில் திருமணமாகி விட்டால் குடும்பப் பெயர் ஒன்றுதான் மாறும் என்று நினைத்தேன். பட்டப் பெயர்களும் மாறிவிடும் என்று பிறகுதான் புரிந்தது.

    நீங்களே சொல்லுங்கள். இந்த உலகில் எந்தப் பட்டப் பெயரும் இல்லாமல் யாரவது இருக்கிறார்களா?

    உங்கள் பக்கத்து வீட்டுக்காரி யாரோடும் பழகாமல் தன் வேலையைத் தான் செய்துகொண்டு போனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவளை சாது என்றும், கடமையே கண்ணாக இருக்கிறாள் என்றும் சொல்வீர்களா? இல்லை, ‘ரிசர்வ்ட்’, யாருடனும் கலகலப்பாக பழக மாட்டாள்’ என்று பட்டம் தருவீர்களா? நான் என்னவோ இரண்டாவதைத்தான் நினைக்கிறேன். உங்களுடைய எண்ணம் இதற்கு நேர்மாறாக இருந்தால் உங்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.

    மனிதர்கள் செய்யும் எந்தக் காரியத்தையும் இரண்டு விதமாகபுரிந்துகொள்ளலாம். தன்னுடைய எதிரி மேலே வருவதற்காக ஒருவன் கை கொடுத்தான் என்று வைத்துக் கொள்வோம். எதிரியை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காகக் கை கொடுத்திருக்கிறான் என்று நினைக்கலாம். அல்லது எதிரியை மன்னித்து விடக் கூடிய அளவுக்கு நல்ல குணம் படைத்தவன் என்றும் நினைக்கலாம். ஆனால் மக்கள் கண்டிப்பாக இருளை நோக்கி விரலை சுட்டிக் காட்டுவதற்குத்தான் முயற்சிப்பார்கள். அதனால்தான் மக்களை நான் என்றுமே பொருட்படுத்த மாட்டேன்.

    நான் எப்போதும் முட்டாள்தனமாக வாதம் புரிவேன் என்றும், நான் பிடித்ததற்கு மூன்றே கால்கள் என்று சாதிப்பேன் என்றும் நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. நான் பிடித்தது முயல்தானா அல்லது முக்காலியா என்றுகூடப் பார்க்காமல் நீங்கள் இந்த முடிவுக்கு வந்தால் அது உங்களுடைய தவறுதானே! அதனால்தான் எனக்கு உங்கள் புத்திசாதுரியத்தின் மீதும், உங்கள் பகுத்தறிவின் மீதும், அவ்வளவு ஏன்? உங்கள் மீதும் கொஞ்சம் கூட மதிப்பு இல்லை.

    உங்களுக்கு என்றால் எங்க கிராமத்து மக்கள், என்னுடைய அப்பா, எங்கள் வீட்டு வேலைக்காரர்கள், என்னுடைய வகுப்புத் தோழிகள் மற்றும் பலர்.

    எப்பொழுது நான் உங்களுக்கு மதிப்பு கொடுப்பதை நிறுத்தி விட்டேனோ, அப்பொழுது நீங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து எனக்குத் தரப் போகும் பட்டப் பெயர், அடங்காப்பிடாரி. அதான் சொன்னேனே, இந்த மக்கள் எப்பொழுதும் தங்களுடைய செயல்களைப் பலப்படுத்திக் கொள்வதற்கு சில வார்த்தைகளை முன் கூட்டியே தயாராக வைத்திருப்பார்கள் என்று.

    ஆனந்தனைக் காதலித்த புதிதில் அந்த விஷயத்தைத் தந்தையிடம் சொன்னபோது அவர் சிரித்தார்.

    சின்னப் பெண் நீ. உனக்குக் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமாவது தெரியுமா? என்று கேட்டார்.

    ஏன் தெரியாது? ரோமியோ- ஜூலியட் பாடம் எங்களுக்கு இருந்தது. காதல் என்றால் ஒருவருக்காக இன்னொருவர் செத்துப்போவது என்று எங்கள் லெக்சரர் சொல்லித் தந்தார். அது நினைவுக்கு வந்தது.

    அன்று இரவே காவேரியில் குதித்துவிட்டேன்.

    அதுசரி, காவேரியைப் பற்றி நான் உங்களிடம் ஒன்றுமே சொல்லவில்லையே? எங்கள் கிராமத்தையொட்டி காவேரி ஆறு ஓடிக் கொண்டிருந்தது. தாழ்ந்த நிலையில் தென்னை மரங்கள், எந்த நிமிடமும் விழுந்து விடும் போல் தென்பட்டுக் கொண்டிருந்தன. இருமருங்கிலும் நாணற் புதர்கள் உயரமாக வளர்ந்திருந்தன. மழை வந்தால் கிராமமே சேற்றுக் குளமாகி விடும்.

    அது சரி, நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? என் பாய் பிரெண்ட் விஷயமாக நான் காவேரியில் குதித்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லையா? அம்மாடி! இருபது வருடங்களுக்கு முந்தி நடந்த நிகழ்ச்சி அது.

    அன்றைக்கு ரொம்பவும் ரகளையாகி விட்டது.

    நான் அப்பாவுடன் வாதாடினேன். காதல் என்றால் என்னவென்று தெரியுமா? என்று கேட்டது நீங்கள்தானே. அதைச் சொல்லத்தான் காவேரியில் குதித்தேன். நான் செத்துப் போயிருந்தால் ஊர் மக்கள் காலங்காலத்திற்கும் ஜூலியட் போல் என்னைப்பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள் இல்லையா? என்றேன்.

    சிலர் என் முன்னிலையிலேயே சிரித்தார்கள். வேறு சிலர் பயந்து தொலைவில் போய் சிரித்துக் கொண்டார்கள். எல்லாம் எனக்குத் தெரிந்துதான் இருந்தது.

    பாவம்! அப்பாவைப் பார்த்தால் இரக்கமாக இருந்தது. அந்தக் கிராமத்தில் அப்பாவின் பேச்சுக்கு எதிர்பேச்சு இருந்தது இல்லை. அவ்வளவு பெரியவர் என் பாய்பிரண்டிடம் போய் கைகளைப் பிடித்துக் கொண்டு வேண்டுகோள் விடுத்தாராம். எனக்குப் பிற்பாடு தெரிந்தது. அந்த விதமாக என் திருமணம் முடிந்தது.

    ஆக மொத்தம் காவேரியில் குதித்து காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிட்டாள் என்று எல்லோரும் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டார்கள். எனக்கு வேண்டியது நீ சுகமாக இருப்பதுதான். இனி ஒரு போதும் இதுபோன்ற காரியங்களைச் செய்யாதே கண்ணீர் நிறைந்த கண்களுடன் அப்பா என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.

    உனக்காகக் காவேரியில்கூட விழத் துணிந்துவிட்ட மனைவி கிடைத்திருக்கிறாள். நீ அதிர்ஷ்டசாலியப்பா என்று என் கணவரை அவருடைய நண்பர்கள் பாராட்டினார்கள்.

    எல்லோருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், நான் காவேரியை நோக்கிப் போகும்போது வெளியே வராண்டாவில் படுத்துக் கொண்டிருந்த வேலைக்காரனைத் தூக்கம் முழுவதும் கலைந்துபோகும் விதமாக கல்லால் அடித்துவிட்டு ஓடினேன் என்றும், திருடன் என்று நினைத்துக் கொண்டு அவன் என் பின்னாடியே வந்திருக்கிறான் என்றும், காவேரியிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு எல்லோரும் அவனைப் பாராட்டிய போது, அந்த ரகளையில் அசல் விஷயத்தை ‘ரொம்ப கன்வீனியன்டாக’ மறந்து விட்டான் என்றும்.

    அதைவிட முக்கியமான விஷயம், எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். இந்த விஷயம் பிருந்தாவைத் தவிர அங்கிருந்த யாருக்கும் தெரியாது. அவள் மட்டும் உள்ளூர சிரித்துக் கொண்டே என் தற்கொலை நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்தவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.

    பிருந்தாவைப் பற்றி உங்களிடம் சொல்லவே இல்லையே. அவள் ஒரு பைத்தியக்காரி. எப்பொழுதும் ஏதாவது வரைந்துகொண்டே இருப்பாள். வசந்த கால நதியினிலே என்ற பாட்டை முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள், எனக்கென்னவோ, சந்தையிலே கோழியே என்பது போல் கேட்டுக் கொண்டிருக்கும். இருந்தாலும் கூட நாங்கள் இருவரும் நல்ல சிநேகிதிகள். எனக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், உடனுக்குடன் அவளை மன்னித்துக் கொண்டே வந்ததால் அது சாத்தியமாயிற்று. அவளை எல்லோரும் நல்ல பெண் என்று பாராட்டும்போது எனக்குச் சிரிப்புத்தான் வரும். சிறிய கோட்டிற்குப் பக்கத்தில் இருந்தால்தானே பெரிய கோட்டின் மதிப்பு தெரியும்!

    அவளுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்று நான் சில வழிமுறைகளைக் கடைபிடித்தேன்.

    தோட்டத்தில் திருட்டுத்தனமாக மாங்காய் பறிக்கப் போனால் வேண்டாம் என்று எச்சரிப்பாள். தோட்டக்காரன் வந்து விட்டால் காய்களைப் புடைவைத் தலைப்பில் மூட்டைக் கட்டிக் கொண்டு ஓட்டம் பிடிப்பேன். நடுவில் அவன் பிடித்துவிட்டாலும், சின்னமா! நீங்களா? என்று சொல்லிவிட்டு விட்டு விடுவான். அது வேறு விஷயம். ஒருக்கால் தப்பித்துக் கொண்டு விட்டால் மட்டும் சிநேகிதிகள் எல்லோரும் அந்தக் காய்களுக்காக நான், நீ என்று போட்டி போடுவார்கள். வேண்டாமென்று எச்சரித்த பிருந்தாநல்லபெண் என்ற பட்டப் பெயரைத் தட்டிச் சென்று விடுவாள். காய் வேண்டுமென்றால் மட்டும் நான் வேண்டும். அதான் சொன்னேனே, மக்களின் போக்கு எனக்கு என்றுமே புரிந்தது இல்லை.

    என் கணவரின் பெயர் ஆனந்தன்.

    அவருக்காக்த்தான் நான் காவேரியில் குதித்தேன். நான் செய்தது ரொம்ப நல்ல காரியம். காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடியும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். எனக்கு நல்ல கணவர் கிடைத்துவிட்டார். ஆனந்தன் உண்மையிலேயே ரொம்ப நல்லவர். ஒரே ஒருமுறை என் கன்னத்தில் அடித்திருக்கிறார். அவ்வளவுதான்.

    திருமணமான புதிதில் எந்தக் கணவன் மனைவிக்கும் ஒத்துப் போவது கொஞ்சம் கஷ்டமாகத்தானே இருக்கும்? இந்த இடைஞ்சல் எல்லாக் குடும்பங்களிலுமே இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ‘என்னுடன்’ என்பதால் அது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனாலும் இந்த நிலைமை ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை. திருமணம் ஆன முதல் ஒன்பது மாதங்கள். அதற்குப் பிறகு பாலும் தேனும் போல் ஒன்றறக் கலந்து விட்டோம்.

    எங்கள் அன்பின் சின்னங்கள் இரண்டு. சாஹிதி மற்றும் கவிதா. சொல்ல மறந்து விட்டேன். என் கணவருக்கும் கவிதைகளில் ஈடுபாடு அதிகம். அதனால்தான் இரு மகள்களுக்கும் அந்தப் பெயர்களைச் சூட்டினார்.

    நம்மில் எத்தனைபேர் தம் வாழ்க்கையில் ஒரு தடவையாவது கணவர் கையால் கன்னத்தில் அடி வாங்கியிருப்பார்கள்? இந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது ஊகம் இருக்கிறதா? இப்பொழுது புதிதாகத் திருமணமான தம்பதிகளைப் பற்றியல்ல நான் சொன்னது.

    இந்தக் காலத்துக் கணவன்மார்கள் தங்களுடைய மனைவியை வெல்லக்கட்டியைப் போல் பார்த்துக் கொள்கிறார்கள். நான் சொல்வது இருபது வருடங்களுக்கு முந்தைய கதை. அப்பொழுதெல்லாம் குடும்பங்களில் அவ்வளவாக சுமுகம் இருந்தது இல்லை. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் திருமணமாகி ஒன்பது மாதங்கள் முடிந்த பிறகு எங்கள் இருவருக்கும் இடையில் எந்த விதமான கருத்து வேற்றுமையும் ஏற்பட்டது இல்லை.

    இந்த ஒன்பது மாதங்களில் அவர் ஒரே ஒருமுறை என் கன்னம் அதிரும் அளவுக்கு அடித்தார். அதுகூட எப்பொழுது தெரியுமா? எங்கள் முதலிரவுக்குப் பிறகு, அடுத்த நாள் காலையில் எட்டுமணிக்கு.

    யாருக்குமே இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டிருக்காது இல்லையா? அப்பொழுது என்னவோ அழுகை வந்தது. ஆனால இப்போ, இத்தனை வருடங்களுக்குப் பிறகு நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. இப்பொழுதும் என் மகள்கள் இருவரிடமும் அந்த விஷயத்தைச் சொல்லிச் சிரிக்க வைப்பேன். முதல் இரவு விஷயம் மட்டும் சொல்ல மாட்டேன். என்னை அடித்த விஷயம் மட்டும் சொல்லி அவரை அழ வைத்துக் கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் மட்டும் அவர் முகம் சிவந்துவிடும். கொஞ்சநேரம் உம்மென்று இருப்பார். பிறகு திரும்பவும் பழையபடி மாறி விடுவார்.

    இந்த எழுத்தாளர்கள் எல்லோரும் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டே எழுதித் தள்ளுவார்கள் போலும். முக்கியமாக முதலிரவை அவர்கள் வருணித்த விதத்தைப் பார்க்க வேண்டுமே.

    விடியற்காலை நான்கு மணிக்கே மணமகள் எழுந்துகொண்டு போய் எந்தப் பாட்டியின் பக்கத்திலோ வெட்கத்தோடு முடங்கிப் படுத்துக் கொள்வாளாம். நானோ அந்த அறையிலேயே நன்றாகத் தூங்கினேன். என்னை எழுப்பும் தைரியம் வீட்டில் யாருக்கும் இல்லை. எட்டுமணிக்கு ஏதோ பெரிய ஓசை கேட்டு விழிப்பு வந்தது. அவர் கட்டிலில் தொங்கவிட்டிருந்த மல்லிகைக் சரங்களைப் பிய்த்தெறிந்து கொண்டிருந்தார். விடிந்து ரொம்ப நேரம் கழித்து எழுந்துகொண்டதால் கோபமாக இருக்கிறார் போலும் என்று நினைத்துக் கொண்டேன். என்னங்க? என்ன ஆச்சு? என்று கேட்டேன். அதே வேகத்தில் திரும்பி என் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.

    அதுதான் முதலும்.... கடைசியும்.

    அதற்குப் பிறகு ஒரு நாளும் நான் ஐந்து மணி அடித்தப் பிறகு தூங்கியதில்லை. என்னிடம் இருக்கும் நல்ல குணங்களில் இதுவும் ஒன்று. எனக்கு விருப்பமானவர்கள் எது சொன்னாலும், அதைக் கேட்டு அவர்களுக்குப் பிடித்த விதத்தில் நடந்து கொள்வது. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் வருத்தம் ஏற்பட்டது. அவர் இப்படி அடிக்காமல் கொஞ்சம் நயமாகச் சொல்லியிருந்தாலும் அவர் பேச்சைக் கேட்டிருப்பேன்.

    ஏதோ வாழ்க்கையே நாசமாகி விட்டதுபோல் மல்லிகைப் பூச்சரங்களைப் பிய்த்தெறிந்து, கேசத்தை கலைத்துக் கொண்டு, தாமதமாக எழுந்திருக்கும் மனைவியிடம் தன் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டியதில்லையே.

    ஆனாலும் அதுவும் ஒரு விதத்தில் நல்லதற்குத்தான்.

    உங்களுக்குத் திருமணமாகி விட்டதா? ஆகியிருந்தால் உங்கள் கணவரின் கையாலேயோஃ மனைவியின் கையாலேயோ கன்னத்தில் ஒரு முறை அறை வாங்கிப் பாருங்கள். தவறு யாருடையதாக இருந்தாலும் அடித்தவர்கள் என்பதால் உங்களைக் கெஞ்ச வேண்டிய பொறுப்பு அவர்களையே சேரும். நாம் கொஞ்சம் பிடியைத் தளர்த்தாமல் இருந்தால், அவர்கள் கெஞ்சக் கெஞ்ச இன்னும் சந்தோஷமாக இருக்கும்.

    அவரிடமிருந்து நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன். சற்று நேரத்தில் அவரே இறங்கி வந்தார்.

    என் குணங்களில் நிறைய பேருக்குப் பிடிக்காத குணம் ஒன்று உண்டு. தவறு செய்தவர்களை மன்னிக்க முடியாமல் போவது. அதற்குப் பிறகு அவர்கள் தவறு செய்து விட்டதாக ஒப்புக் கொண்டாலும் சரி, என்னால் மன்னிக்க முடியாது. இது உண்மையிலேயே கெட்ட குணம் என்று சொல்வீர்களா? ஏனோ எனக்கு அப்படித் தோன்றவில்லை. தவறு செய்வதே ஒரு தவறு. அதை ஒப்புக்கொள்வதால் அதன் பாதிப்போ, பாவமோ, விளைவோ குறைந்து விடாது இல்லையா?

    எங்கள் வீட்டில் வேலைக்காரச் சிறுமி ஒருத்தி இருந்தாள். ஒரு நாள் ஐந்து ரூபாயைத் திருடிவிட்டாள். மிரட்டிக் கேட்ட போது எடுத்தேன் என்று ஒப்புக்கொண்டு விட்டாள். நீங்களாக இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? இனிமேல் அந்தச் சிறுமியின் கைக்குப் பணம் அகப்படாதவாறு கவனமாக இருந்திருப்பீர்கள். அல்லது அவள் குணம் தெரிந்துவிட்டதால் வேலையை விட்டு நீக்கியிருப்பீர்கள்.

    நான் அவ்வாறு செய்யவில்லை.

    இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் என் கணவரின் நண்பர். மூன்று நாட்கள் லாக்கபில் அடைத்து வைக்கச் சொல்லிவிட்டேன். பிறகு வேலையை விட்டு நீங்கிவிட்டேன்.

    அதற்குப் பிறகு எங்கள் வீட்டில் நூறு ரூபாய் நோட்டு ஒன்று தொலைந்து விட்டது. எடுத்தது எங்கள் பெரிய மகள் சாஹிதி.

    இப்பொழுது நீங்க என்ன செய்வீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் அருமை மகள் உங்களிடம் சொல்லாமல் பர்ஸிலிருந்து நூறு ரூபாயைத் திருடிவிட்டால் நீங்க என்ன செய்வீர்கள்?

    என் உத்தேசத்தின்படி சிலர் திட்டுவார்கள். ரொம்பவும் செல்லம் கொடுப்பவர்களாக இருந்தால், தப்பும்மா. அப்படி செய்யக் கூடாது என்று கண்டிப்பார்கள். கொஞ்சம் கோபக்காரர்களாக இருந்தால் நன்றாக அடிப்பார்கள். நான் இந்த மூன்றையும் செய்யவில்லை.

    சாஹிதியை நிற்கச் சொன்னேன்.

    இதோ பார். தவறு செய்து விட்டேன் என்று ஒப்புக்கொண்டு விட்டாலும், நான் சும்மா விட்டுவிட மாட்டேன் என்று உனக்குத் தெரியும்.. தெரியாமல் செய்துவிட்டேன். புத்தி வந்துவிட்டது என்று நீ சொன்னாலும் சரி, தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வண்டும். நான் செய்யக் கூடிய உதவி என்னவென்றால், என்ன தண்டனை வேண்டுமென்று நீயே தேர்ந்தெடுத்துக் கொள்.

    அவள் பதில் பேசவில்லை.

    அடிக்கட்டுமா? என்று கேட்டேன்.

    அவள் தலை அசைத்தது போல் இருந்தது.

    எங்கள் வீட்டுக் கொல்லையில் கொய்யா மரம் ஒன்று இருந்தது. அதன் கிளையை ஒடித்துக் கொண்டு வந்து உள்ளங்கையை விரிக்கச் சொல்லி இரண்டு கைகளிலும் மாறி மாறி விளாசினேன். கடைசி அடி விழும்போது அவர் வந்து விட்டார். மகளைப் பிடித்து அப்பால் இழுத்துக்கொண்டே, நீ மனுஷிதானா அல்லது ராட்சசியா? என்று கத்தினார்.

    அதற்குள் அவள் கைகள் சிவந்து கொப்பளித்து விட்டன.

    கையிலிருந்த குச்சியை வீசியெறிந்துவிட்டு, ராட்சசி இல்லை, மனுஷிதான். உங்கள் மகளை மனுஷியாக மாற்ற வேண்டும் என்றுதான் முயற்சி செய்கிறேன் என்றேன். அவர் சாஹிதியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து போய் விட்டார்.

    அன்று இரவு அவரை நிற்க வைத்து கேட்டேன். என்னை ராட்சசி என்றீர்கள். ஆனால் சொல்லுங்கள். நம் மகள் ஒரு திருடியாக மாறுவது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பதிமூன்று வயதில் அவள் திருட்டுத்தனம் செய்தால், அது எவ்வளவு தலைகுனிவு? இந்த விஷயம் வெளியே பரவினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தீங்களா?"

    அவர் தலையைத் திருப்பிக் கொண்டார்.

    பார்த்தீங்களா! நீங்க சொல்ல மாட்டீங்க. உங்களால் சொல்லவும் முடியாது. நீங்களும் செய்ய மாட்டீங்க. என்னையும் செய்யவிட மாட்டீங்க.

    நீ அடித்தால் அவள் விட்டு விடுவாளா?

    குறைந்தபட்சம் இன்னொரு தடவை செய்யும்போது பயமாவது இருக்கும்.

    நயமாக எடுத்துச் சொல்லியிருந்தால் அவள் கேட்டிருப்பாள்.

    மனிதர்களின் நல்லதனத்தின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை எனக்கு இல்லை. ஏளனமாகச் சொன்னேன்.

    செய்கிற ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை இருந்துதான் தீரணும் என்றால் இந்த உலகத்தில் மனிதர்கள் அத்தனை பேரும் என்றோ நசிந்து போயிருப்பார்கள். விரக்தி கலந்த குரலில் சொன்னார்.

    சினிமா வசனம் போதும். நிறுத்திக் கொள்ளுங்கள்.

    அதற்குள் பக்கத்து அறையிலிருந்து முனகல் சத்தம் கேட்டது. அங்கே போனேன். சாஹிதி தூக்கத்தில் முனகிக் கொண்டிருந்தாள்.

    தலையை வருடிக் கொடுக்கப் போனவள்,

    Enjoying the preview?
    Page 1 of 1