En Idhayam Enbathu Neeyaga
By GA Prabha
()
About this ebook
உறவுகள் நமக்குத் தீங்கு செய்தாலும், அதையும் மறந்து, நம் அன்பை அவர்கள் மீது செலுத்தத் தவறக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து எழுதப் பட்ட கதை. பெற்றோரை இழந்து தாய்மாமாவின் ஆதரவில் வரும் பல்லவிக்கு அவரின் மாமா பெண் சுகன்யாவே துரோகம் செய்கிறாள்.
அதை தடுத்து வலம்பர உலகில் ஜெயித்து, சுகன்யாவுக்கும் நல்லதே செய்கிறாள் பல்லவி. நாம் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் இந்தப் பிரபஞ்சம் நமக்கு நல்லதே செய்யும் என்பதே மாறாத உண்மை. அந்த நம்பிக்கையுடன் நடந்தவர்கள் ஜெயித்த கதை.
Read more from Ga Prabha
Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsKandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Peiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Idhayam Enbathu Neeyaga
Related ebooks
Ullamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsPennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNeerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Poo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5Mattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsAagaya gangai Rating: 5 out of 5 stars5/5Pulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Poongatru Puthithanathu Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Ponmayiley! Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsOsaiyilla Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsIvala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thodarkirathu Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vaasam Purappadum Penney Rating: 4 out of 5 stars4/5Kaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsPichipoove Mella Vanthu Killi Po Rating: 4 out of 5 stars4/5Kanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Mugavari Neeyanal... Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vellai Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsPalaar Rating: 0 out of 5 stars0 ratingsYaayum Ngyaayum Yaaraagiyaro... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiyil Oru Poo Rating: 5 out of 5 stars5/5Unnai Vaazhthi Paadukirean! Rating: 5 out of 5 stars5/5Antha Vanam Enthan Vasam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Idhayam Enbathu Neeyaga
0 ratings0 reviews
Book preview
En Idhayam Enbathu Neeyaga - GA Prabha
https://www.pustaka.co.in
என் இதயம் என்பது நீயாக
En Idhayam Enbathu Neeyaga
Author:
ஜி.ஏ.பிரபா
GA Prabha
For more books
https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
என்னுரை
இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.
புஸ்தகா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வாசிப்பதில் ஆர்வம் உடையவர்களுக்கு புஸ்தகா அளவற்ற பரிசுகளை அள்ளி வழங்குகிறது. காலத்தால் அழிக்க முடியாதபடி, அனைத்து நூல்களையும் டிஜிடல் செய்வதன் மூலம் எழுத்தாளர்களுக்கு இறவாத் தன்மையையும், புகழையும் தந்து விடுகிறது. டிஜிடல் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் எழுத்துக்கள்.
இதைத் திறம்பட, நேர்மையாகவும், சிரத்தையாகவும் செய்து வரும் திரு ராஜேஷ் அவர்களுக்கும், அவருடைய குழுவினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
என் இதயம் என்பது நீயாக என்ற இந்த நாவலும் பெண்மனியில் வெளியானது. உறவுகள் நமக்குத் தீங்கு செய்தாலும், அதையும் மறந்து, நம் அன்பை அவர்கள் மீது செலுத்தத் தவறக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. பெற்றோரை இழந்து தாய்மாமாவின் ஆதரவில் வரும் பல்லவிக்கு அவரின் மாமா பெண் சுகன்யாவே துரோகம் செய்கிறாள்.
அதை தடுத்து வலம்பர உலகில் ஜெயித்து, சுகன்யாவுக்கும் நல்லதே செய்கிறாள் பல்லவி. நாம் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் இந்தப் பிரபஞ்சம் நமக்கு நல்லதே செய்யும் என்பதே மாறாத உண்மை. அந்த நம்பிக்கையுடன் நடந்தவர்கள் ஜெயித்த கதை.
வழக்கம் போல் இந்நாவலையும், என்னை இப்பூமிக்குக் கொண்டு வந்த என் பெற்றோர்களுக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வை உணர்த்தி, வழிகாட்டிய என் குரு மகான்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.
தொடர்ந்து சிறப்பான நாவலை எழுத, எனக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கும் பெண்மணி நாவல் நிறுவனத்திற்கும், ஈ புத்தகமாக சிறப்பாக என் நாவல்களைப் பதிப்பிக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
படியுங்கள். படித்து உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் தர வேண்டுகிறேன்.
ஸ்ரீ மகாபெரியவா, சாய்ராம் கருணையால் அனைவரும் நலமோடு வளமோடு வாழ வேண்டுகிறேன்.
நன்றி,
அன்புடன்,
ஜி.ஏ. பிரபா.
Mobile – 9486572227
1
பளிச், பளிச் என்று நட்சந்திரங்கள் மின்னியது.
ஒளியை வாரி இறைத்தபடி அதிவேக எஸ்பிரஸ் ஒன்று கடந்து சென்றது. ரயில் பாதையின் அருகில் இருந்த விளக்குக் கம்பங்கள். அவ்வப்போது கடந்து செல்லும் ஊர்களில் உறங்கும் தெருக்களும் ரயில் பெட்டிக்குள் வெளிச்சத்தை வீசிச் சென்றது.
விடியும் நேரம். ஜன்னலுக்கு வெளியே, பாதி நிலா கூடவே வந்தது. அருகில் ஒளிரும் விடிவெள்ளியும், பல்லவிக்குள் இனம் புரியாத பயம், வேதனையுடன், எதிர்காலம் குறித்த ஒரு மகிழ்ச்சியையும் தந்தது.
நீ எப்படி நினைக்கிறாயோ, அப்படியே ஆவாய்.
தாத்தாவின் குரல்.
நம்பிக்கையோடு இரு. தைரியமாக இரு. எதுவும் உன் கையில்.
என்று அடிக்கடிக் கூறுவார். தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்பதே அவர் கற்றுத் தந்தது.
பல்லவி அந்த அதிகாலை இருட்டை, ஊடுருவும் வெளிச்சத்தை ரசித்தபடி ஜன்னலுக்கு வெளியே கடந்து போகும், கட்டிடங்களை, தெருக்களை, பால் கேனுடன் போகும் வண்டிகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
வண்டிக்குள் பயணிகள் இழுத்துப் போர்த்தியபடி அரைத் தூக்கத்தில் இருந்தார்கள். நல்லவேளை பல்லவிக்கு அப்பர் பெர்த் சீட் இல்லை. எனவே சீட்டில் பாதி சாய்ந்தபடி இரவு முழுக்கத் தூங்காமல் வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
ஒவ்வொன்றிலும் ரசிக்க எதோ ஒன்று இருக்கு என்பாள் பல்லவி. இந்த மாதிரியான ரயில் பயணங்களில் இருளில் தூரத்தில் கரும் பூதமாய்த் தெரியும் மரங்கள், வயல்வெளிகளில் ஒளிரும் பல்பு வெளிச்சம், ஆள் இன்றி ஊரடங்கி, தெரு விளக்கின் வெளிச்சத்தில் உறங்கும் கிராமத்துத் தெருக்கள், ஆளில்லா ரயில்வே ஸ்டேஷனில் கிடக்கும் சிமென்ட் பெஞ்சுகள் என்று பார்ப்பது பிடிக்கும். அதுவும் மழை இருந்தால் கொள்ளை ஆனந்தம்.
சின்னச் சின்ன மழைத் துளிகள் சேர்த்து வைப்போமா
என்று மழைப் பாடல்களாய் முணுமுணுப்பாள். இப்போதும் கோவையில் நேற்று இரவு ரயில் ஏறும்போது லேசான தூறல்.
பெரிய மழைன்னா ஜன்னல் கதவைச் சாத்தச் சொல்வாங்களோ?
என்று கவலைப்பட்டவளை கனிவுடன் பார்த்தார் குருநாதன்.
அவள் வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் கவலைப் பட இருக்கும்போது, இவளுக்கு இந்தக் கவலை. லேசாகச் சிரிப்பு வந்தது.
மழை நின்னுடும்
என்றார். அதேபோல் ஈரோடு வரும்போது மழை இல்லை. குருநாதன் மேலே ஏறிப் படுத்து விட்டார். பல்லவி மட்டும் விழித்திருந்தாள்.
தூங்காதது கூட நல்லதுதான். இனி தனக்குத் தூக்கம் வருமா என்று தெரியாது. தாத்தா வீட்டில் தனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கிறது என்ற தைரியம். நிம்மதியாகத் தூங்கினாள். இனி...?
பல்லவியின் ஏழாவது வயதில் அவளின் பெற்றோர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து விட, அம்மாவின் அப்பா வீட்டில்தான் வளர்ந்தாள் பல்லவி. தாத்தாதான் படிக்க வைத்து வளர்த்தது. பாட்டி சென்ற வருஷம் மறைந்து விட, ஒரு மில்லில் வேலை பார்த்த தாத்தா தான் இதுவரை உயிரை இழுத்துப் பிடித்து வாழ்ந்திருந்தார்.
அவரும் இருபது நாளுக்கு முன் மறைந்து விட்டார். அவளுடைய தாய் மாமா குருநாதன் தான் வந்து எல்லாக் காரியமும் செய்தார். அப்பாவின் தம்பி மூர்த்தியும் வந்திருந்தார்... பல்லவி எங்கே போவாள் என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை.
நான் கூட்டிட்டுப் போறேன்
என்றார் குருநாதன். பல்லவியின் தாய் மாமா. பல்லவியின் படிப்புக்கு அவர்தான் உதவி செய்தார். ஆனால் தாத்தா அவரிடம் அதிகம் பல்லவிக்காக உதவி கேட்டதில்லை. முடிந்த வரை வீட்டு புரோக்கர் தொழிலின் வருமானம், மில் வேலை என்று சமாளித்தார்.
காசு, காசுன்னா, உன் மேல வெறுப்பு வந்துடும்
என்பார்.
தங்கை போன பிறகு தாய்மாமன் தானே சகலமும். நான் சென்னை கூட்டிட்டுப் போறேன்
என்றார்.
அத்தைகிட்ட பர்மிஷன் கேட்க வேண்டாமா?
பல்லவி தயங்கினாள்.
"நல்ல விஷயத்துக்கு அவ எப்பவுமே தடங்கல் சொல்ல