Poongatru Puthithanathu
By GA Prabha
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsEn Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Peiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Poongatru Puthithanathu
Related ebooks
Idhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Muthal Vasantham! Rating: 0 out of 5 stars0 ratingsPanneril Nanaintha Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Vasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Nee Irukkum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Pookkal Malarum Rating: 5 out of 5 stars5/5Thulli Sellum Megam Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Anbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsOonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Manamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Venpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Muzhuthum Unathu Vaasam...! Rating: 5 out of 5 stars5/5Kann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratingsElla Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5Thendral Vanthu Ennai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsAagaya gangai Rating: 5 out of 5 stars5/5Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Vaa... Pon Mayile Rating: 5 out of 5 stars5/5
Reviews for Poongatru Puthithanathu
0 ratings0 reviews
Book preview
Poongatru Puthithanathu - GA Prabha
http://www.pustaka.co.in
பூங்காற்று புதிதானது
Poongatru Puthithanathu
Author:
ஜி.ஏ.பிரபா
GA Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
நம்பிக்கை மட்டுமே இறைசக்தியின் பலத்துடன் நம்மை வழிநடத்தும்
ஓம் நமோ நாராயணா
சுவாசம் சன்னமாக மேல் எழும்பியது. மூச்சை உள்ளே இழுத்து ஒரு நிமிஷம் நிறுத்தி பின் வெளியேற்ற புத்துணர்ச்சி, இதய, நுரையீரல்களுக்குள் புத்துணர்ச்சியுடன், குளிர்ச்சியாய் நிரம்பியது.
பாரதி கண்மூடி அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தினாள். வெளிப்புறம் அமைதியாக இருந்ததால், மனதை குவிக்க முடிகிறது. அதிகாலை அஞ்சரை என்பது அவளுக்கே உரித்தான நேரம். சிந்தனைகளை நெறிப்படுத்த, நடந்தவைகளை அசை போட்டு, அதில் உள்ள தவறுகளைத் திருத்தி, இன்றைக்கு செய்ய வேண்டியவற்றை திட்டம் போடவும், அமைதியான கால நேரம் உதவியாக இருக்கும்.
ராத்திரி படுக்கும்போது ஓம் நமச்சிவாயா சொல்லு. காலை எந்திரிக்கும்போது ஓம் நமோ நாராயணா சொல்லு
-அண்ணி கீதா.
ஒரு மாதமாக தியானம் செய்ய பழக்குகிறாள். மனதை ஒரு முகப்படுத்துவது சிரமமாக இருந்தது ஆரம்பத்தில். இப்போது சிறிது, சிறிதாக பழகிவிட்டது. ஒரு ஐந்து நிமிடம் நெற்றிப் பொட்டில் தீபம் நிறுத்தி, மனதை அங்கேயே நிறுத்த முடிகிறது.
கிளாஸுக்குப் போ என்றிருக்கிறாள் கீதா.
ஆனால் பாரதிக்கு இஷ்டமில்லை.
கல்லூரி விட்டதும் ஓடி வரத்தான் விருப்பம்.
வீட்டில் அண்ணா கீதா, அண்ணன் ரகு, அவர் மகள் ஹன்சிகா என்று சூழ இருப்பதில்தான் சந்தோஷம். இது தெய்வம் ஆசீர்வதித்த குடும்பம், சந்தோஷமும், குதுாகலமும் மட்டுமே நிறைந்து இருக்கிறது.
இங்கும் சின்னச் சின்ன கோபதாபங்கள், வேதனைகள், துக்கங்கள் இருக்கிறது. மறக்க முடியாததாய் பெற்றோர்களின் மரணம் இருக்கிறது.
ஆனால் ‘எதுவும் கடந்து போகும்' என்ற உணர்வுடன் எந்த நேரமும் மனதை ஆனந்தமாக வை என்ற அண்ணா, அம்மா இல்லாத குறை தீர்க்கும் கீதா
குட்டி தேவதையாய் சுற்றும் ஏழு வயசு ஹன்சிகா.
வாழ்க்கையும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
பாரதி, கண்களை தேய்த்துவிட்டு, கட்டிலை விட்டு இறங்கினாள். சின்ன இரவு விடிவிளக்கு ஒளியை சிந்திக்கொண்டு இருந்தது. அதை அணைத்துவிட்டு வெளியில் வந்தாள்.
ஹாலில் மிக உயரமாக ஷீரடி பாபா படம்.
அவர் எதிரில் கண்மூடி நின்றாள்.
பின் பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டு, பல் தேய்த்து வந்தாள். அண்ணாவின் அறை சாற்றியிருந்தது. கிச்சனில் வெந்நீர் போட்டு ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.
வாசல் கதவை திறந்து வெளியில் வந்து சீட் அவுட்டில் நின்றாள். கீழே ரோடு அமைதியாக இருந்தது. எதிர் பெட்டிக்கடை திறக்கவில்லை. நேர் எதிரே மலைக்கோட்டை, உச்சிப்பிள்ளையார் கோவில் குழல் விளக்கு பரவசத்தை தந்தது.
அதைப் பார்க்கும் போதெல்லாம் சிலிர்ப்பு.
யுகம் யுகமாய் பார்க்கும் உணர்வு.
ஏதோ கடந்த ஜென்மத்துக்கு போன மாதிரி.
ஜென்ம, ஜென்மமாய் இதனுடன் தொடர்போ? பார்த்துக் கொண்டே நின்றாள்.
மெல்ல பொழுது விடிய ஆரம்பித்தது.
தங்கத் தகடாய் சூரியன் எழும்பியது.
"சூரியனே! உலகின் ஜீவனே!
உயிரினங்களின் சக்தியே!
ஒப்பிலா தேவனே!
உனக்கு நமஸ்காரம்"
கண்குவித்து, பிரார்த்தனை செய்தாள்.
அபார்ட்மெண்ட் விழிக்க ஆரம்பித்திருந்தது
வாட்ச்மேன் வீசி, வீசி தண்ணீரை வீசிக்கொட்டினார்.
சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு பஸ் திரும்பி லால்குடி ரோட்டில் திரும்பியது. சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து கரூர் சாலையில் அபார்ட்மெண்ட், மங்களம் என்று அதற்குப் பெயர்.
மொத்தமாய் பத்து வீடுகள். முதல் தளம், இரண்டாம் தளம். என்று அஞ்சு, அஞ்சு, வீடுகள். கீழ்தளத்தில் பார்க்கிங் ஏரியா மற்றும் வாட்ச்மேன் ரூம்.
முதல் தளத்தில் பாரதி வீடு
சீட் அவுட்டில் அமர்ந்தால், சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, வசந்தபவன் வரை தெரியும். காலாற நடந்தால் மலைக் கோட்டை, காவேரி பாலம், அதில் நின்னு ஸ்ரீரங்கம், டி.கே.கோவில் கோபுரத்தை ரசித்தால் நேரம் போவது தெரியாது.
காவிரிதான் மணலாகக் கிடக்கிறது.
ஈரம் வற்றிப்போன மனிதர்களின் அடையாளமாய்.
எழுந்துட்டியா?
- கீதா குரல், காஃபியை நீட்டினாள்.
அஞ்சரைக்கு. தூக்கம் வரலை அண்ணி
ஏன்?
சாயந்திரம் மாமா வரேன்னாரே. என்ன சொல்லப் போறார்? எதை பிடுங்கப் போறார்ன்னு பயமா இருக்கு
பயப்படறதுனால எதுவும் நடக்காம இருக்கப் போறதா?
- கீதா சிரித்தாள். காஃபியை குடி.
பால்காரர் கிட்ட காஃபியை காட்டணும் அண்ணி
ஏன்
பால் ஓவர் தண்ணி
காவிரில தண்ணி இல்லைன்றார்
நான் கேட்கறேன் எத்தனை டி.எம்.சி. தண்ணி ஊத்தி பாலைக் கலந்திங்கன்னு
அவர் அஞ்சா நெஞ்சன்
அண்ணி கூறியது போல கோனார் ஏங் கண்ணு, காவிரியில் தண்ணி விடமாட்டேங்கறான், நான் எங்க கலக்கறது
குடிக்கவே முடியலைங்க
ஏங்கண்ணு காப்பி குடிக்கிறதா முக்கியம்? படி. நாங்க எல்லாம் அந்த காலத்துல காபி, சோறுன்னு இல்லாம சிம்னி விளக்குல படிச்சோம்.
இப்ப மட்டும் நாங்க எப்படி படிக்கிறோம்? சிம்னி விளக்குதான்
-பாரதி.
சரி கண்ணு. நம்ம தமிழ்நாட்டுல பவர்கட் இல்லைன்னு ஆகட்டும் தண்ணி இல்லா பால் ஊத்தறேன்
ஓ! அப்போ, இப்போதைக்கு நல்ல பால் இல்லை
- ரகு எழுந்து வந்தான். 'போ தம்பி' என்று கோனார் இறங்கிப் போனார்.
பாரதி குளித்து ரெடியானாள்.
"பாரதி காலேஜ் முடிஞ்சதும் வெயிட்