Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manamagale Marumagale Vaaa
Manamagale Marumagale Vaaa
Manamagale Marumagale Vaaa
Ebook125 pages1 hour

Manamagale Marumagale Vaaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466374
Manamagale Marumagale Vaaa

Read more from Parimala Rajendran

Related to Manamagale Marumagale Vaaa

Related ebooks

Reviews for Manamagale Marumagale Vaaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manamagale Marumagale Vaaa - Parimala Rajendran

    19

    1

    ஓம் பாலாரூபிணி வித்மஹே

    பரமேஸ்வரி தீமஹி

    தன்னோ கஞ்யா ப்ரேசோதயாத்

    அம்மன் முன் நெய் தீபமேற்றி பயபக்தியோடு ஸ்லோகம் சொல்லி கையெடுத்து கும்பிட்டாள் கமலா. அம்மா தாயே என் வாழ்க்கையில் தேவையான வசதிகளை கொடுத்திருக்கே. எந்த குறையுமில்லை. எந்த கவலையெல்லாம் என் மகள் வாழ்க்கை நல்லவிதமாக அமையறங்கிறதுதான். உன் அருள் வேணும் தாயே...

    கற்பூரம் ஏற்றி, கால்வலியை பொருட்படுத்தாமல் மண்டியிட்டு விழுந்து கும்பிட்டவள். சாமிரூமைவிட்டு வெளியே வந்தாள்.

    எதிரில் ப்ரக்யா. அழகின் அழகு தேவதையாக... என் மகள் ஒரு பேரழகி என்ற பெருமிதம் மனதில் தோன்றினாலும், அதை வெளிக்காட்டாமல் முகத்தில் இறுக்கத்தை கொண்டு வந்து...

    இரண்டு நாளாக நானும், அப்பாவும் உன் பதிலுக்கு காத்திருக்கோம் தெரியும்தானே... என்ன முடிவெடுத்திருக்கே...

    சிம்பிள்... எனக்கு இப்ப கல்யாணம் தேவையில்லைமா... ஏதோ ஒரு ஜாதகம், போட்டோவை பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லி, பெண் பார்த்த அடுத்த நிமிஷம் கல்யாண தேதி பார்த்து, யாரு? என்ன? என்ன பழக்கவழக்கம்? அவர் குணங்கள் எதுவும் தெரியாமல் தாலி கட்டி... குடித்தனம் நடத்த நான் தயாராகயில்லை...

    கோபம் வர அடக்கியவளாய் மகளை பார்க்கிறாள்.

    குனிந்த தலை நிமிராமல் எங்க வீட்டில் பார்த்த உன் அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப குணநலன்களில் என்ன குறைஞ்சு போயிட்டோம். ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டு சந்தோஷமாக வாழலையா... அதுதான் தாம்பத்யம்...

    அது அந்த காலம்மா... இப்படி ஒத்துவராமல் வீட்டில் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு சேர்ந்து வாழ இஷ்டமில்லாமல் டைவர்ஸ் வாங்கறவங்கதான் அதிகம். அதனால் என் கல்யாணம் என் மனசுக்கு பிடிச்சவரோடுதான் நடக்கணும். நீயும், அப்பாவும் கை காட்டறவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு, புதியவரோடு என் வாழ்க்கையை இணைச்சுக்க விரும்பலை. என்னுடன் பழகி, என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவரைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்...

    இதுக்கென்ன அர்த்தம்...

    புரியலையா... என் கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜ் ஆக இருக்காது. லவ் மேரேஜ் ஆகத்தான் இருக்கும். இன்னும் என் மனசுக்கு பிடிச்சவரை நான் பார்க்கலை. பார்த்து. பழகி ஒரு வருஷம், ஆறு மாசம் கழிச்சுதான் என் கல்யாணம். அதனால் பொறுமையாக இரு. இப்ப போய் எனக்கு டிபன் எடுத்து வை. நான் வேலைக்கு கிளம்பணும்.

    ஹாலில் உட்கார்ந்து பேப்பரில் முகத்தை நுழைத்து இவர்கள் பேசுவதை கேட்டபடி இருக்கும் கணவரை பார்க்கிறாள்.

    பார்த்தீங்களா... என்ன பேச்சு பேசறா. அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்ததன் பலனை அனுபவிக்கிறோம்.

    சரி சரி புலம்பாமல் அவளுக்கு வேண்டியதை செய்து கொடு

    கிச்சனுக்குள் நுழைகிறாள்.

    ப்ரக்யா இங்கே வாம்மா...

    அப்பா, ப்ளீஸ் அம்மாகிட்டே சொன்னதுதான் உங்களுக்கும். என்னை கொஞ்சம் ஃபீரியாக விடுங்கப்பா. கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்...

    மகளை பார்த்தபடி செய்தித்தாளை மடித்து டீபாயில் வைக்கிறார் சம்பத்.

    உங்கம்மா சொன்னது உண்மைதான்மா. கல்யாணத்துக்கு முன்னால என் முகத்தை கூட அவ சரியாக பார்க்கலை. சாதாரண குமாஸ்தாவாக இருந்தேன். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவன்மா. என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்ததே உன் அம்மாதான். என் மனசு புரிஞ்சு நடந்துக்கிட்டா. கல்யாணமாகி அஞ்சு வருஷம் எங்களுக்கு குழந்தை பிறக்கலை. நான் மனசு வருந்தும் போதெல்லாம், நம்பிக்கையோடு எனக்கு ஆறுதல் சொல்லி... நிச்சயம் நமக்கு குழந்தை பாக்கியம் இருக்குங்க... பார்த்துட்டே இருங்க... மடியிலிருந்து இறக்காமல் குழந்தையை கொஞ்சத்தான் போறோம்னு சொல்லுவா.

    அவ நம்பிக்கை பலித்தது. நீ பிறந்தே... வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவித்து வாழ்ந்தோம். இதோ இப்ப ரிடையர் ஆகி வீட்டில் இருக்கேன். என் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாசல், கார்ன்னு சௌகரியமாக இருக்கேன். வாழ்க்கை நாம் ஒத்துக்கிற விதத்தில்தான்மா இருக்கு. எங்க ஒரே மகள் உன் வாழ்க்கை நல்லபடியாக அமையணும்னு நானும் அம்மாவும் விரும்பறோம்மா...

    சரிப்பா... உங்க விருப்பப்படி அமையும். அதுக்காக அம்மாவ போல. நீங்க கொண்டு வர மாப்பிள்ளைக்கு கண்ணை மூடி கழுத்தை நீட்ட நான் தயாராக இல்லைப்பா...

    எங்க மேல் நம்பிக்கையில்லையா ப்ரக்யா. தப்பானவனை தேர்ந்தெடுத்துடுவோம்னு நினைக்கிறியா...

    ப்ளீஸ்பா... என்னை புரிஞ்சுக்குங்க. ப்ளஸ் டூ முடிச்சேன். பி.இ. சேரச் சொன்னீங்க. எனக்கு இஷ்டமில்லை. நூற்றுக்கணக்கில் எஞ்ஜீனியரிங் காலேஜ். தடுக்கி விழுந்தா எல்லாரும் பி.இ. சேர்ந்துடறாங்க. எனக்கு அதில் இஷ்டமில்லை. பி.காம். முடிச்சுட்டு சி.ஏ. சேர்ந்து படிக்கிறேன்னு சொன்னேன். என் விருப்பத்தை புரிஞ்சு சம்மதிச்சீங்க. இதோ இப்ப பெரிய ஆடிட்டர்கிட்ட அசிஸ்டெண்டா இருக்கேன். கை நிறைய சம்பளம்... என் பிரண்டு சுதா பி.இ. முடிச்சுட்டு ஒரு பிரைவேட் கம்பெனில எட்டாயிரம் ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்திருக்கா... அதைபோலதான்பா இதுவும். நான் எடுக்கற முடிவு நல்லதாகதான் இருக்கும். எனக்கு நல்ல வாழ்க்கை அமையும். என் கணவரை தேர்ந்தெடுக்கிற உரிமையை என்கிட்டே கொடுத்துடுங்கப்பா...

    மகளை உறுத்து பார்க்கிறார்.

    சரிம்மா உன் இஷ்டம். ஆனா உனக்கு கல்யாண வயசு வந்தாச்சு. அடுத்த வருஷம் உனக்கு கல்யாணம் நடக்கணும்...

    நடக்கும்பா. கவலைப்படாதீங்க. இப்ப நான் போய் சாப்பிட்டு கிளம்பலாமா? அனுமதி கேட்கும் மகளை பார்த்து சிரித்தவர்.

    இப்படி சின்னச்சின்ன விஷயத்துக்குதான் எங்க அனுமதி உனக்கு தேவைப்படுது. போம்மா... அம்மா டிபன் வச்சிருப்பா...

    முந்தானையில் கையை துடைத்தபடி வந்த கமலா, சோபாவில் உட்காருகிறாள்.

    வேலைக்காரி வந்துட்டா. அதான் துணிமணி, பாத்திரங்களை எடுத்து போட்டுட்டு வந்தேன். உங்களுக்கு கொஞ்சம் காபி தரட்டுமா...

    பத்து நிமிஷம் உட்காரு. அப்புறம் போடலாம். ஏன் முகம் என்னவோ போல் இருக்கு. காலையில் உன் மகள் பேசிட்டு போனதையே நினைச்சுட்டு இருக்கியா...

    ஆமாங்க. செல்லம் கொடுத்து கெடுத்துட்டோமோன்னு தோணுது. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்ககூட விடமாட்டேங்கிறா... இவ ஒருத்தனை பார்த்து. பழகி, காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிப்பாளாம். பெத்தவங்க இதை கேட்டு வாய்திறக்காமல் இருக்க வேண்டியிருக்கு. ஆத்திரம் வர சொல்கிறாள்.

    இங்கே பாரு கமலா. நீ ஆத்திரப்படறதிலோ, கோபப்படறதிலோ அர்த்தமில்லை. உன் மகள் படிக்காதவள் இல்லை. அவளுக்கு பொறுப்பும், தகுதியும் இருக்கு. அவ வாழ்க்கையை அவளே தீர்மானிச்சிக்கிறேன்னு சொல்றா... அவ்வளவுதானே...

    "எவ்வளவு நல்ல இடம். பையன் அமெரிக்காவில் எம்.எஸ். படிச்சுட்டு வந்திருக்காரு. இங்கே பெரிய கம்பெனியில் ஜி.எம். இந்த சின்ன வயசில் எத்தனை பெரிய பதவி. குடும்பமும் கௌரவமான குடும்பம். இரண்டு தங்கைகள். அப்பா உங்களை போல கவர்ன்மெண்ட் வேலை பார்த்து ரிடையர்ட் ஆகி இப்ப இறந்துட்டாரு. சொந்த வீடு. வசதியான குடும்பம். மாப்பிள்ளை பார்க்க களையாகத்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1