Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Saranadainthen
Unnai Saranadainthen
Unnai Saranadainthen
Ebook99 pages48 minutes

Unnai Saranadainthen

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465896
Unnai Saranadainthen

Read more from Parimala Rajendran

Related to Unnai Saranadainthen

Related ebooks

Reviews for Unnai Saranadainthen

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Saranadainthen - Parimala Rajendran

    17

    1

    விடிந்தும் விடியாத காலை பொழுது. தூக்கம் கலைந்தது பத்மாவுக்கு. அருகில் வாசுதேவனிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி.

    போர்வையை விலக்கி எழுந்தாள். அரைமணி நேரத்தில் குளியல் முடித்து, துளசி மாடத்தை சுற்றி வந்து நமஸ்கரித்து கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து பாலை வைத்தாள்.

    இரண்டு டம்ளர்களில் காபி கலந்து எடுத்துக் கொண்டு பெட்ரூமை நோக்கி நடந்தாள். வாசுதேவன் எழுந்திருந்தார்.

    "குட்மார்னிங் பத்மா. குளிச்சாச்சா. உன்னை மாதிரி நானும் சுறுசுறுப்பாக மாறணும்னு பார்க்கிறேன். முடியலையே...

    மெல்லிய சிரிப்பு இதழ்களில் படர்ந்தது.

    காபியை ருசித்து குடித்தார்.

    என்னதான் சொல்லு, விடியற்காலை நேரம் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி, உன் கையால் போட்டு தருகிற டிகாஷன் காபியை ருசித்து குடிக்கும்போது தொண்டைக்கும், மனதுக்கும் ஒரு இதமான சூடு பரவுதே அது ஒரு தனி சுகம் பத்மா.

    நந்தினி தூங்கறாளா?

    ஆமாம். ராத்திரி டி.வி. பார்த்துட்டு லேட்டாகத்தான் படுத்தா.

    சரி, தூங்கி அவளாக எழுந்திருக்கட்டும் எழுப்பாதே.

    மகளைப் பற்றி நினைத்ததும், அவர் முகம் வாடியது.

    பத்மாவின் கைகள் அவர் தோளில்,

    "வருத்தப்படறீங்களா...’’

    கண்களில் கலக்கம்.

    இங்கே பாருங்க, எந்தப் பிரச்சினையும் வருத்தப்படறதால தீரப் போறதில்லை. நாம் முகம் சோர்ந்தா அப்புறம் நந்தினியும் வருத்தப்படுவா. ப்ளீஸ். புரிஞ்சுக்குங்க.

    அரைமனதாக தலையாட்டியவர்,

    சரி.. பத்மா... உன் வேலையைப் பாரு. நான் வாக்கிங் போயிட்டு வரேன்.

    காலேஜ் ப்ரபசர் வாசுதேவன். கணிசமான சம்பளம் ரகு, நந்தினி இரண்டு குழந்தைகள். அன்பும், அறிவும் ஒன்று சேர்ந்த மனைவி பத்மா.

    குழந்தைகள் பெரியவர்களாய் வளரும்வரை எந்த பிரச்சினையுமில்லாமல் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றது.

    பத்மா இல்லத்தரசி. கணவரின் வருவாயில் மிச்சப்படுத்தி, லோன் போட்டு அவர்களுக்காக சிறிய வீடு உருவானது.

    ரகு காலேஜில் காலடி எடுத்து வைக்க...

    நந்தினி பத்தாவதில் நுழைய பிரச்சினை ஆரம்பமானது.

    இந்த பழைய மொபட் வேண்டாம், புதுசா பல்சர் வேணும்.

    ரகு, குடும்ப நிலைமை புரிஞ்சு பேசறியா...

    என்னைக்கும் பஞ்ச பாட்டுதானா. உன் புருஷன்கிட்டே சொல்லி லோன் போட்டு வாங்கி தர வழியைப் பாரு.

    புரிந்துகொண்டார் வாசுதேவன்.

    வயசு புள்ளை ஆசைகளை கட்டுப்படுத்த தெரியலை வாங்கி தருவோம் பத்மா. நம்ப பிள்ளைக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறோம்.

    தகுதிக்கு மீறி ஆசைப்படறது தப்புங்க.

    "இப்ப பைக் வச்சுக்கறது சாதாரண விஷயம். என்னால் லோன் கட்டி சமாளிக்க முடியும். நீ சரின்னு மட்டும் சொல்லு பத்மா போதும்.’’

    வீட்டு வாசலில் புது பைக். வாசுதேவனின் பழைய பைக் விற்கப்பட்டு, அவர் ரகுவின் மொபட்டை எடுத்துக் கொள்ள...

    சினிமா ஹீரோவாக பைக்கில் வளைய வந்தான் ரகு.

    ப்ரெண்ட்ஸ் எல்லாம் பிக்னிக் போறோம். பைவ் தவுசண் வேணும். என்ன அப்படி வாயை பிளக்கிறே. பணம் தானே கேட்டேன்.

    இந்த மாசம் அப்பாவுக்கு முடியாமல் போய் ஆஸ்பத்திரி செலவு வேறு ஆகியிருக்கு ரகு. உனக்கு தெரியாததில்லை. பைக் லோன், வீட்டு லோன் எல்லாம் கட்டணும்.

    இப்ப என்ன சொல்ல வரே. நான் கேட்ட ஐயாயிரம் இல்லைன்னு சொல்ல வர்றியா?

    குரலை உயர்த்தி பேச... அங்கு வந்த வாசுதேவன்,

    எதுக்கு கோபப்படறே. பணம்தானே வேணும். எப்ப வேணும்னு சொல்லு தரேன்.

    பத்மா முறைப்பதை பார்க்காதபடி,

    எனக்கு காபி கொண்டு வா பத்மா.

    சோபாவில் அமர்கிறார்.

    மகன் செய்வது தவறு என்று தெரிந்தும், தட்டி கேட்க முடியாமல் ஒரு பாசமிக்க தந்தையாக மட்டுமே வாசுதேவனால் நடக்க முடிகிறது.

    என்னங்க... நாம் தப்பு செய்யறோம்னு தோணுது. தகுதிக்கு மீறி ஆசைப்படற பிள்ளைக்கிட்டே நம்ம நிலைமைய சொல்லணும். கொஞ்சமும் பெத்தவங்களை மதிக்கிறதில்லை. தான் நினைப்பது மட்டும் நடக்கணும்ங்கிறதில் பிடிவாதமாக இருக்கான்.

    என்ன செய்ய சொல்றே பத்மா. என்னால் அவனை கண்டிக்க முடியலை. அவன் கேட்டதை, கேட்டவுடன் தர முடியலையேன்னு தான் வருத்தமா இருக்கு.

    பிள்ளைங்க மேலே பாசம் இருக்க வேண்டியதுதான். ஆனா இதை மாதிரி கண்மூடித்தனமான பாசம் கூடாது.

    வாலிப வயசு பத்மா அப்படித்தான் இருக்கும். நம்ப பாசத்தையும், அன்பையும் புரிஞ்சுப்பான் பாரேன்.

    நம்பிக்கை இல்லாமல் பார்க்கிறாள். சுயநலமாய் இருக்கும் ரகுவை நினைத்து கவலைப்பட்டவளுக்கு இடியாய் இன்னொரு செய்தி.

    ஊரிலிருந்து வந்ததூரத்து சொந்தமான அத்தை.

    நந்தினிக்கு வயசு பதினாறு ஆச்சு. இன்னும் வயசுக்கு வரலை. டாக்டரை பார்த்தியா. ஆளும், உடம்பும் இருக்கிற வனப்புக்கு இத்தனை நேரம் புஷ்பவதி ஆகியிருக்கணும். என்ன கோளாறுன்னு முதலில் பாரு.

    பயந்தாள்.

    குடும்ப வாகாக கூட இருக்கலாம். எல்லாம் நார்மலாகத்தான் இருக்கு. இந்த டானிக், மருந்து, மாத்திரைகளை தவறாமல் கொடுங்க...

    அந்த நாளுக்காக காத்திருந்தாள் பத்மா. வயதும், அழகும் கூடியதே தவிர, அந்த நாள் வரவேயில்லை.

    படிப்பு முடிந்த கையோடு ரகு தன் காதலை சொல்ல, அதிர்கிறார்கள் வாசுதேவனும், பத்மாவும்.

    "தப்பில்லைப்பா. உன் காதலை நாங்க எதிர்க்கலை. இருந்தாலும் இன்னும் உன்

    Enjoying the preview?
    Page 1 of 1