Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thenralaga Nee Varuvaayaa
Thenralaga Nee Varuvaayaa
Thenralaga Nee Varuvaayaa
Ebook109 pages1 hour

Thenralaga Nee Varuvaayaa

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466060
Thenralaga Nee Varuvaayaa

Read more from Parimala Rajendran

Related to Thenralaga Nee Varuvaayaa

Related ebooks

Reviews for Thenralaga Nee Varuvaayaa

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thenralaga Nee Varuvaayaa - Parimala Rajendran

    15

    1

    ஆபீஸ் கட்டிடத்தை விட்டு கீழே இறங்கி வந்தாள் அனுராதா,

    மழை பெய்து சகதிகாடாக இருந்தது. நிமிர்ந்து பார்த்தாள் கருமேகங்கள் இன்னும் கலையாமல் மழை வருவேன் என பயமுறுத்திக் கொண்டிருந்தது.

    மழையின் வேகம் குறைந்து, ஒன்றிரண்டு தூரல் மட்டுமே விழுந்ததால்,

    மழையை பொருட்படுத்தாமல் ஸ்கூட்டரிலும் பைக்கிலும் ஜெர்கின், மழைகோட்டு அணிந்தபடி மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். இதில் எப்படி வண்டியில் போவது... பள்ளம் எது... மேடு எது என தெரியாமல்... யோசனையுடன் நின்றால் அனுராதா

    ‘‘ஏய் அனு... என்ன கிளம்பலையா..."

    அருகில் வந்தாள் ரேவதி

    இந்த மழையில் வெள்ளமாக தண்ணி ஓடுது. எப்படி ஸ்கூட்டியில் வீட்டுக்கு போறதுன்னு யோசனையா இருக்கு.

    "அட பயந்தாங்கொள்ளி, அதுக்குன்னு இப்படியா இருக்கிறது. அங்கே பாரு எவ்வளவு பேர் போறாங்க.

    நம்ப மதுவை பாரு ஜான்சி ராணி மாதிரி பைக்கில், போறா... நீ இந்த ஸ்கூட்டியில் போறதுக்கு யோசிக்கிறே, அனு வானத்தையே பார்க்க,

    சரி, வழக்கம் போல் செக்யூரிட்டிகிட்டே சொல்லிட்டு வண்டியை ஆபீசில் வச்சுடு என்னோடு வா.

    உன்னை வீட்டில் விட்டுட்டு போறேன்,

    உனக்கு எதுக்கு சிரமம் ரேவதி, நீ தி.நகர் போக வேண்டியவ... எனக்காக வேளச்சேரி வரைக்கும் வரணும்.

    பரவாயில்லை வா. போகலாம். இந்த மழையில் ஷேர் - ஆட்டோ, பஸ்ஸெல்லாம் கதைக்கு ஆகாது.

    ரேவதி தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, பின்னால் ஏறினாள் அனுராதா.

    கூட்ட நெரிசலில், ஒடும் தண்ணீரை பொருட்படுத்தாமல் வண்டியை வேகமாக ஒட்டியபடி ரேவதி போக... எனக்கு மட்டும் ஏன் இந்த தேவையில்லாத பயம் எல்லாம் அம்மாவால் தான்...

    அனு அங்கே போகாதே, மொட்டை மாடியில் எட்டி பார்க்காதே... இருட்டில் போகாதே. சின்ன வயதிலிருந்தே. பயத்தை உண்டாக்கி விட்டாள்.

    அம்மா வளர்ப்பில், வளர்ந்ததால் தான் நீ எதுக்கெடுத்தாலும் பயப்படறே அனு.

    ஒரு முறை ரேவதி கிண்டலாக சொன்னது, உண்மைதான்... அப்பா என்றொரு ஜீவனை அவள் இதுவரை பார்த்தது இல்லை. எல்லாமே அம்மா தான். பாசத்தை, அன்பை, துக்கத்தை பங்கு போட்டுக் கொள்ள அவளுக்கான ஒரே துணை அம்மா தான். ஏன்... இப்போது எனக்காக என் பரத் இருக்கிறானே... ஆறடி உயரத்தில், கம்பீரமாக காட்சி தரும் பரத் அவள் கண்முன், சிரிக்கிறான். காதல் என்று வந்துவிட்டால் தைரியமும் தானாக வந்து விடும் போலிருக்கிறது.

    அம்மாவிடம் அவள் இதுவரை எதையுமே மறைத்ததில்லை. காதலை மட்டும் மனசுக்குள் பூட்டி வைத்து...

    அதற்கான நேரம் வரும்போது சொல்வாள்... அம்மாவின் ஆசியுடன் தானே கல்யாணம் நடக்க வேண்டும்.

    என்ன அனு எதுவுமே பேசாம வர்றே...

    "இந்த மழையிலே நீ வண்டி ஒட்டற அழகை ரசிக்கிறேன்.’’

    "பொய் சொல்லாதே. இந்த மழை நாளில், லேசான துறலில் நனைந்தபடி... பைக்கை பரத் ஒட்ட, அவன் தோளில் தொற்றிக் கொண்டு, போனால் எப்படி இருக்கும்னுதானே கற்பனை செய்துட்டு வர்றே.’’ ரேவதி வாய்விட்டு சிரிக்க,

    நீ உதை வாங்க போற, டிராபிக்கை பார்த்து ஓட்டு.

    என் காதலை உன்கிட்டே சொன்னதே தப்பா போச்சு அனு செல்லமாக கோபிக்க,

    நீயாகவா சொன்னே... நான் தானே நீ உருகி, உருகி போனில் பேசறதையும், சிரிக்கிறதையும் பார்த்து கண்டுபிடிச்சேன். தப்பிக்க முடியாம உண்மையை சொல்லிட்டே,

    ஆமாம். உன் காதலை உங்கம்மா காதில் போட்டுட்டியா... கார் ஹார்ன் சப்தத்தில் காதில் சரியாக விழாமல்.

    ‘‘என்ன சொன்னே"

    அனு கேட்க

    திரும்ப சொல்கிறாள்.

    ‘‘அம்மா கிட்டேயா. ஐயையையோ... ஏண்டி இப்பவே பீதியை கிளப்பற."

    "அவங்ககிட்டே மெதுவா சொல்லலாம். அவங்க கல்யாணம் பேச்சை ஆரம்பிக்கும்போது பார்ப்போம்.’’

    ரேவதி சாலையில் கவனமாக, அனு மெளனமாகிறாள்.

    "உள்ளே வந்துட்டு போ ரேவதி. டீ சாப்பிட்டு போகலாம்."

    இல்லை அனு மழை பெரிசா வந்தாலும் வந்துடும் நான் கிளம்பறேன். காலையில் ரெடியா இரு. நானே வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்.

    ரேவதி கிளம்பி போக, கேட்டை திறந்து உள்ளே வருகிறாள்.

    அனு... மழையில் நனைஞ்சுட்டியா... வண்டியிலா வந்தே...

    பரபரப்புடன் சாரதா அவளை நோக்கி வர,

    இல்லம்மா, என் ஸ்கூட்டி ஆபீசில் இருக்கு. ரேவதியோடு வந்தேன்.

    நல்ல காரியம் பண்ணினே. இந்த மழையில் வண்டியை ஓட்டிட்டு வர்றது கஷ்டம், பயந்துட்டே இருந்தேன். சரி உள்ளே வந்து டிரஸ்ஸை மாத்து இஞ்சி தட்டி போட்டு சூடா டீ போட்டுட்டு வரேன்... தூறலில் நினைஞ்சிருக்கே... சளி பிடிக்காமல் இருக்கணும்.

    கிச்சனில் நுழைய,

    ஹாலை ஒட்டிய ரூமில் யாரோ படுத்திருப்பதை பார்த்தவள்,

    யாரும்மா அது... படுத்திருக்கிறது.

    அம்மாவை பின் தொடர்கிறாள்.

    சுந்தரி பாட்டி... வந்திருக்காங்க அனு அவங்க பையனும், மருமகளும் டூர் போறாங்களாம். ஒரு வாரம் இங்கே தான் இருப்பாங்க.

    ‘‘மதியம் வந்தாங்க வந்தத்திலிருந்து ஒரே பேச்சு இப்ப தான் தலையை சாய்ந்தாங்க."

    அம்மாவின் தூரத்து சொந்தம் இந்த வாரம் நன்றாக பொழுது போகும். ஏதாவது பழைய கதைகளை பேசிக் கொண்டிருப்பாள்.

    அனுராதா என்று முழுபெயரையும் அழைத்து பேசுவாள்.

    உங்கம்மா தைரியசாலிடி... அவளை மாதிரி நீ வரணும்.

    "உங்கப்பாவையே வேண்டாம்னு தூக்கியெறிஞ்சவ தனி ஆளா உன்னை வளர்த்து, ஆளாக்கிட்டாளே...’’

    சாமர்த்தியாசலிடி...

    அம்மாவுக்கு பாட்டி கொடுக்கும் சர்டிபிகேட்,

    ‘‘ஏன் பாட்டி... அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சனை எதனால் பிரிந்து விட்டார்கள்.’’

    பாட்டியிடம் கேட்க தோணும்... வார்த்தைகள் மனதிற்குள் மரணிக்கும்

    "இங்கே பாரு

    Enjoying the preview?
    Page 1 of 1