Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbil Vilaintha Paasamalare
Anbil Vilaintha Paasamalare
Anbil Vilaintha Paasamalare
Ebook92 pages1 hour

Anbil Vilaintha Paasamalare

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465971
Anbil Vilaintha Paasamalare

Read more from Parimala Rajendran

Related to Anbil Vilaintha Paasamalare

Related ebooks

Reviews for Anbil Vilaintha Paasamalare

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbil Vilaintha Paasamalare - Parimala Rajendran

    22

    1

    அந்த பெரிய பங்களாவின் போர்ட்டிகோவில் இன்னோவா கார் நிற்க, டிக்கியில் பெட்டிகளை எடுத்து வைத்த டிரைவர். வண்டி கிளம்ப தயாராக இருக்க, காரின் அருகில் பவ்யமாக கையை கட்டி நின்றான்.

    தூய வெண்ணிற வேட்டி, சட்டையில், டி.வி. விளம்பரத்தில் வரும் பெரியமனிதர் போன்ற கம்பீரமான தோற்றத்துடன், பேரனை தோளில் சுமந்தபடி வாசலுக்கு வந்தார் சிவநேசன்.

    என்னப்பா பெட்டியெல்லாம் காரில் வச்சுட்டியா

    வச்சுட்டேன் ஐயா.

    இதோ அஞ்சு நிமிஷம் கிளம்ப வேண்டியதுதான்.

    சங்கமித்ரா. இன்னும் உள்ளே என்னம்மா செய்யறே. லேட்டாகுது பாரு. திவாகர் கிளம்பிட்டானா"

    கிளம்பிட்டாரு மாமா. ரகுவுக்கு பால் எடுத்துட்டு இருக்கேன். இதோ வந்துட்டேன்.

    உள்ளிருந்து குரல் கொடுத்தாள் சங்கமித்ரா.

    மித்ரா... நீ சால்வை எடுத்துக்கிட்டியா...மலையில் குளிரும்

    எடுத்து வச்சுட்டேன்ங்க... நீங்க வாசலுக்கு போங்க நான் இதோ வந்துட்டேன். மாமா லேட்டாகுதுன்னு சொல்லிட்டிருக்காரு

    பாலை பாட்டிலில் ஊற்றி கூடையில் வைத்தாள். இன்னொரு முறை கூடையில் இருப்பவற்றை சரிபார்த்தாள். வெந்நீர் ஊற்றிய பிளாஸ்க், பால்பவுடர், டம்ளர், டபரா... டவல், ம்... எல்லாம் சரியாக இருக்கிறது.

    வள்ளி, இதை கொண்டு போய் டிரைவர் கிட்டே கொடுத்து, சீட் டிக்கடியில் வைக்க சொல்லு

    வேலைக்காரியிடம் கொடுத்து அனுப்பியவள். புடவையை சரி செய்துக் கொண்டு வெளியே வந்தாள்.

    சங்கமித்ராவை பார்த்ததும், தாத்தாவிடம் இருந்த இரண்டு வயது ரகு,

    அம்மா

    அவளை நோக்கி கைகளை நீட்ட,

    நீ தாத்தாகிட்டேயே இருடா செல்லம்

    கார் கதவை டிரைவர் திறந்துவிட, ஏறிக் கொண்டவர்கள் திருப்பதியை நோக்கி பயணமாகிறார்கள்.

    பனி மேகங்கள் மலையின் மேல் தவழ்ந்து செல்ல, மரம், செடி, கொடிகளுடன் பசுமை நிறைந்து காணப்படும் அந்த மலை பாதையில் கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

    சங்கமித்ராவின் மடியில் தலையும், திவாகரின் மடியில் காலையும் நீட்டி, அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான் ரகு.

    "இவ்வளவு நேரம் முழிச்சுட்டிருந்தான். மலையேறும் போது வேடிக்கை பார்க்காம தூங்கறான் பாரு.

    அதோ குரங்கெல்லாம் கூட்டமா உட்கார்ந்திருக்கு எழுப்பட்டுமா..."

    "வேண்டாம்மா... துங்கறவனை எழுப்பாதே... இவ்வளவு நேரம் காருக்குள் ஆட்டம் தான் போட்டுகிட்டு இருந்தான். இப்ப தான் தூங்கறான்.

    ரகு ரொம்ப துறுதுறுன்னு இருக்கான். குழந்தைங்க இப்படி தான் இருக்கணும்."

    பேரனை பற்றி பெருமையாக சொல்ல, அவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் எதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான் திவாகர்.

    என்னங்க, நானும், மாமாவும் பேசிட்டு இருக்கோம். நீங்க ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துட்டீங்க...

    இன்னைக்கு ஜெர்மன் ஆர்டர், எக்ஸ்போர்ட் பண்ணனும்... அதெல்லாம் ஒழுங்கா டெலிவரி பண்ணிட்டாங்களான்னு யோசிச்சேன்

    திவாகர், பிஸினஸ் டென்சன் வேண்டாம்பா. நிம்மதியா போய் பெருமாளை கும்பிட்டு வருவோம். முதன்முதலாக உன் மகன் ரகு வோட மலைக்கு போற... அந்த நிம்மதியும், திருப்தியும் மட்டும் உன் மனசில் இருக்கட்டும்...

    சொல்லும் அப்பாவை பார்க்கிறான்.

    நீங்க, நிம்மதியா சந்தோஷமாக மலைக்கு போறிங்களாப்பா

    "ஆமாம்பா... முழு திருப்தியோடு, மனசு நிறைஞ்சு... அந்த பெருமாளை பார்க்க போறேன்.

    "என் பேரனுடைய பிஞ்சு பாதங்களை முத்தமிடற போது கிடைக்கிற திருப்தி... அவன் மழலையில் தாத்தா, தாத்தான்னு கூப்பிடும் போது, என் மனசு அடைகிற மகிழ்ச்சி... இதுக்கு தானே இவ்வளவு நாள் காத்திருந்தேன்.

    பேரனுக்காக ஒரு வருஷமாக காத்திருந்த என்கையில், என் பேரனை கொடுத்த பெருமாளுக்கு நன்றி சொல்ல வேண்டாமா...

    அதான் மன திருப்தியோடு கிளம்பிட்டேன்..."

    நீங்க மன நிம்மதியோட, சந்தோஷமாக இருக்கீங்க இல்லையா...எனக்கு அது போதும்பா...

    சொல்லும் மகனை அன்போடு பார்க்கிறார் சிவநேசன்...

    கல்யாண உற்சவ டிக்கட் வங்கியிருந்ததால், நிம்மதியாக உட்கார்ந்து, பெருமாளின் கல்யாண உற்சவத்தை கண் குளிர தரிசனம் பண்ணி, மூவரையும் திருப்பதியுடன் கையெடுத்து கும்பிட்டு, லட்டு பிரசாதங்களையும் வாங்கி கொண்டு கோவிலை விட்டு வெளியே வருகிறார்கள்.

    ரகுவின் வாயில் லட்டை கொஞ்சம் எடுத்து ஊட்டிய சிவநேசன்.

    அந்த பெருமாளின் ஆசியால... நீ என்னைக்கும் உங்க அப்பா, அம்மாவின் மனசுபோல நடந்து, அவங்களோடு நூறு வயசுக்கு சந்தோஷமாக வாழணும் ரகு...

    அவன் தலையில் கை வைத்து, கோபுரத்தை நோக்கி கண் கலங்க பார்த்தபடி சொல்கிறார்...

    உங்க ஆசீர்வாதமும், அந்த பெருமாளின் அருளும் எங்களுக்கு பரிபூரணமாக கிடைப்பதால், நாங்க நல்லாவே இருப்போம். நீங்க கவலைப்படாதீங்க மாமா

    தாத்தா... எனக்கு... பொம்மை வேணும்

    கடையில் தொங்கும் விளையாட்டு பொருட்களை பார்த்து கை நீட்ட,

    என் ராஜாவுக்கு இல்லாததா... வா... தாத்தா வாங்கிதரேன் நீங்க இப்படி படிக்கட்டில் உட்கார்ந்திருங்க... நான் ரகுவோடு கடை தெரு பக்கம் போய்ட்டு வரேன்"

    "மாமாவுக்கு, பேரன் மேலே கொள்ளை பிரியம்.

    Enjoying the preview?
    Page 1 of 1