Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagu Deivam
Azhagu Deivam
Azhagu Deivam
Ebook111 pages22 minutes

Azhagu Deivam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகு என்பது நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. எல்லா பெண்களும் ஊர்வசியாக மேனகையாக படைக்கப்படுவதில்லை.

அவர்களின் உண்மையான அழகு நடத்தையில் இருக்கிறது. தாய்மையுணர்வு, அன்பு, பாசத்தை வெளிப்படுத்துவதில் இருக்கிறது.

அழகு தெய்வம் என்ற இக்கதையின் கதாபாத்திரங்கள் மூலம் இக்கருத்தை சொல்லியிருக்கிறேன்.

வாசகர்கள் இக்கதையின் உண்மையை புரிந்து நிச்சயம் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580137806169
Azhagu Deivam

Read more from Parimala Rajendran

Related to Azhagu Deivam

Related ebooks

Reviews for Azhagu Deivam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagu Deivam - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    அழகு தெய்வம்

    Azhagu Deivam

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    லேசான தூறலுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது. ரோஜா செடியில் அன்று மலர்ந்த பூவில் மழைத்துளிகள் பட்டு தெறித்து விழும் காட்சியை பார்த்தபடி, கையில் பிளஸ்டூ கெமிஸ்ட்ரி புத்தகத்துடன் அமர்ந்திருக்கிறான் திவாகர்.

    உள்ளே லேசான விசும்பலுடன் அம்மா, பெரியம்மாவிடம் பேசுவது அவன் காதில் தெளிவாக விழுகிறது.

    என்ன வசுமதி மனதை தைரியமா வச்சுக்க, இப்படி சோர்ந்து போனா எப்படி?

    ஆத்திரமும் அகங்காரமுமாக பேசி, விரட்டி அடிச்சுட்டு இப்படி வருத்தப்பட்டா, அதுக்கு அர்த்தம் இல்லாம போயிடும் வசு

    புரியுதுக்கா... இருந்தாலும் பதினாறு வருஷம் அவருடன் வாழ்ந்தவளாச்சே. ஒவ்வொரு நிமிஷமும் அவருக்காக வாழ்ந்த என்னை இப்படி நம்பவச்சு ஏமாத்திட்டாரே... அதை என்னால் தாங்க முடியலையே...

    அவள் குரல் உடைந்து போகிறது.

    "வயசு நாற்பதாகப் போகுது... பிளஸ்டூ படிக்கிற தலைக்கு வளந்த பையன் இருக்கான்.

    இப்படி எதை பத்தியும் யோசிக்காம்... அந்த அலங்காரி பின்னாடி போயிட்டாரே...

    பொண்டாட்டி, பிள்ளை வேண்டாம்னு உதறிட்டு போக அந்த மனுஷனுக்கு எப்படி தான்... மனசு வந்ததோ... பாவி... அவன் நல்லாவே இருக்கமாட்டான்..."

    போகட்டும்கா... ஆனா அதுக்கு அவர் சொன்ன காரணம் இருக்கே... அதை நினைக்கும் போது... நெஞ்சு எரியுது

    எதிரில் இருந்த கண்ணாடியில் முகம் பார்க்கிறாள். மாநிறத்துக்கும் சற்றே குறைவான நிறம். மேற்பற்கள் வெளிவந்து, உதட்டுக்கு வெளியே லேசாக எட்டி பார்க்கிறது. மூக்கு சற்று வளைசலாக, இடுங்கிய கண்கள்... இது... இது தான் என் தோற்றம்.

    பதினாறு வருடங்கள் வாழ்ந்த பிறகு... என் முகம் அவலட்சணமாக அவருக்கு தெரிய... அழகை ஆராதிக்க போய்விட்டார்.

    கண்களில் கண்ணீர் வழிகிறது.

    "அழாதே வசு. உனக்கென்ன குறைச்சல்! ராஜாமாதிரி பையன் இருக்கான். ஸ்கூல் டீச்சராக இருக்கே... வருமானமும் இருக்கு. இனி உன் வாழ்க்கையில் எல்லாமே திவாகர்தான்னு... அவனுக்காக வாழ ஆரம்பி.

    நீ இப்படி உடைஞ்சு போனா... பிளஸ்டூ படிக்கிற பையன்... அவன் மனநிலை என்னாகும் யோசிச்சுபாரு...

    அவனுக்காவது உன் மனசை தேத்திக்கணும் வசு. சரி எழுந்து முகம் அலம்பு"

    திவாகர் வாசலில் படிச்சுட்டு இருக்கான்.

    உனக்கும், அவனுக்கும் காபி கலந்து எடுத்துட்டு வரேன்

    சங்கவி எழ,

    தாங்ஸ்கா...

    எதுக்கு?

    இந்த சமயத்தில் ஆறுதலாக என்கூட இருக்கிறதுக்கு

    என்னடி இது... நீ யாரு... என் தங்கை... உன் வாழ்க்கையில் இப்படியொரு சோதனை வந்ததை பார்த்துட்டு என்னால் எப்படி இருக்க முடியும். அதான் போட்டது போட்டபடி புறப்பட்டு வந்துட்டேன்

    ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தவர் அருணாசலம், பிறந்தது இரண்டும் பெண்களாகவே இருந்தாலும், எந்த குறையும் இல்லாமல் வளர்த்தார்.

    பெரியவள் சங்கவி, பாங்க் ஆபிசர் முத்துக்குமாரை திருமணம் செய்ய, வசுமதிக்கும், பில்டிங் காண்ட்ராக்டர் சிவராமனுக்கும் சிறப்பாக திருமணம் செய்தார்.

    மாப்பிள்ளை சிவா அப்படியே சினிமா நடிகர் ஜெமினிகணேசன் போல, சிவப்பா களையா இருக்காரு.

    பொண்ணு அதிர்ஷ்டம் பண்ணினவ.

    வசுமதியும் அப்படி தான் நினைத்தாள்.

    கணவனின் அழகில் கர்வப்பட்டாள்.

    சுருண்ட கேசம் முன் நெற்றியில் விழுவதை ரசித்தாள்.

    வாழ்க்கை வசந்தமானது. வேலைக்கு போகும் நேரம் போக, பொழுதும் சிவராமனின் அருகிலேயே இருக்க விரும்பினாள்.

    நீங்க ரொம்ப அழகு

    ம்... ம்...

    நான் உங்களுக்கு பொருத்தமானவள் தானே

    ம்... ம்...

    என்னங்க இது... எல்லாத்துக்கும் தலையாட்டலுடன் பதில் சொல்றீங்க... வாயை திறக்க கூடாதா?

    இப்ப என்ன... என் வாயாலே நீ ரொம்ப அழகு. எனக்கு பொருத்தமானவள்னு சொல்லணும்... அதானே...

    ஆமாம்

    அப்படியே வச்சுக்க. போய் சாப்பாடு ரெடி பண்ணு

    திவாகர் பிறக்க, வசுமதியின் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அதிகமானது.

    வழக்கமான சுவாரசியங்களுடன் வாழ்க்கை செல்ல, மனம் முழுவதும் கணவனை சுமந்து... வாழ்க்கை பாதையில் நடைபோட்டாள் வசுமதி.

    திவாகர் பத்தாவது படிக்கும் போது, அவளை பார்க்க வந்த அக்கா சங்கவி கேட்டாள்.

    வசு... உன் வீட்டுக்காரர் அடிக்கடி கோயமுத்தூர் போறாரே... என்ன விஷயம்?

    அங்கே ஒரு ஷாப்பிங் மால்... காண்ட்ராக்ட் எடுத்திருக்காருக்கா...

    சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே... அவரோட உறவுகாரங்க... ஒரு பெண்ணோட சினிமா தியேட்டரில், உன் புருஷனை பார்த்தாங்களாம்

    சிரிக்கிறாள் வசுமதி.

    என்னடி... இவ்வளவு பெரிய விஷயம் சொல்றேன். சிரிக்கிறே

    சிரிக்காம என்னக்கா பண்ண சொல்றே? அவர் என்னை தவிர, இன்னொருத்தியை ஏறெடுத்து கூட பார்க்கமாட்டாரு. தெரிஞ்சவங்களோடு சினிமா பார்க்க வந்திருப்பாரு அதை போய் பெரிசா சொல்றே?

    அக்கா அவளை வியப்புடன் பார்த்தாள்.

    "என்னக்கா அப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1