Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penn Ondru Kandean
Penn Ondru Kandean
Penn Ondru Kandean
Ebook121 pages58 minutes

Penn Ondru Kandean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கை என்பது மலர்வனம் ஆக எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இன்ப துன்பம் நிறைந்தது தான் வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டாலும் சிலருக்கு துன்பமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது தொடராக வரும் பல இன்னல்களை இக்கதையின் கதாநாயகி மன தைரியத்துடன் எப்படி வென்றால் என்பதை அன்பும் காதலும் கலந்து படிப்பவர்களின் உள்ளத்தை தொடும் வகையில் வழங்கியுள்ளேன். படியுங்கள் ரசியுங்கள்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580137806182
Penn Ondru Kandean

Read more from Parimala Rajendran

Related to Penn Ondru Kandean

Related ebooks

Reviews for Penn Ondru Kandean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penn Ondru Kandean - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    பெண் ஒன்று கண்டேன்

    Penn Ondru Kandean

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ரத்னா தோட்டத்தில் மலர்ந்திருந்த ரோஜா மலர்களின் அருகில் மலரோடு மலராக நின்றாள்.

    வீடு கல்யாண களை கட்டியிருந்தது.

    கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது.

    ரத்னாவின் அழகான சங்கு கழுத்தில் புது மஞ்சள் கயிறு மின்னப் போகிறது.

    ரகுவரன், ரோஷினியின் ஒரே செல்ல மகள் ரத்னா. பி.இ. பட்டதாரி. அழகில் குறை சொல்ல முடியாதவள். உயரத்திற்கேற்ற அழகான உடல்வாகு.

    ரத்னாவை பார்த்தவுடனேயே பானுமதி, ஜெயராம் தம்பதிக்கு பிடித்துவிட்டது. மகனின் உயரத்திற்கு சரியாக பொருந்துவாள். ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும்.

    ரகுவரனும் எந்த குறையுமில்லாமல் தன் மகளுக்கு சீர் செய்யப் போவதாக பெருமையுடன் சொல்ல, மனம் பூரிக்க சம்மதம் சொன்னாள் பானுமதி.

    பெற்றவர்கள் முகத்தில் தெரிந்த அந்த அளவு சந்தோஷம் மகன் ராஜாவின் முகத்தில் தென்படவில்லை.

    அளந்தே பேசினான். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னான்.

    அவன் சுபாவமே அப்படிதான்!

    பானுமதி சொன்னாள்.

    என்னங்க. மாப்பிள்ளை பார்க்க லட்சணமாக தான் இருக்காரு. இருந்தாலும் கலகலன்னு பேசலை கவனிச்சீங்களா.

    அதனாலென்ன ரோஷினி, அவர் கூச்சசுபாவம் போலிருக்கு. அவங்கம்மா சொன்னத கவனிக்கலையா.

    இருக்கட்டுமே. அதுக்காக கட்டிக்கப்போறவள் கிட்டே ஒரு வார்த்தை பேசணும்ங்கிற எண்ணம் கூடவா இருக்காது.

    "உனக்கு எதிலும் சந்தேகம். நல்ல இடம். ஏதாவது சொல்லி கலைச்சுடாதே. பையன் சொந்தமாக பிசினஸ் பண்றான். இந்த சின்ன வயசிலேயே ஆட்டோ மொபைல் கம்பெனி வச்சு முன்னேறனும்ங்கிற எண்ணத்தோடு உழைக்கிறான். ஒரே பிள்ளை, சொந்தமா வீடு, நிலம்னு இருக்கு. அப்பா கவர்மெண்ட்டில் வேலை பார்த்து ரிடையர்ட் ஆனவர். கிராமத்தில் இருக்காங்க...

    பையன் சேலத்தில் தனிக்குடித்தனம் இருக்கப் போறான். எவ்வளவு ப்ளஸ் இருக்கு. யோசிச்சுப் பாரு."

    மத்தபடி எனக்கும் பிடிச்சுதான் இருக்கு. இருந்தாலும் பையனின் குணம் முக்கியம் இல்லையா. நம்ப ரத்னா கலகலப்பாக பழகிறவள், அவளுக்கு போய்...

    சரி சரி... ரத்னாவின் அபிப்ராயம் கேட்டியா...

    அவ எதுவும் சொல்லலைங்க. பையனை பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தையில் சொல்லிட்டா...

    அப்புறம் என்ன ரோஷினி. நிம்மதியா இரு. நம்ப மகளே அவரை கொஞ்சம், கொஞ்சமா மாத்திடுவா...

    ***

    கல்யாணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு சாப்பிட்டு மொட்டை மாடியில் காற்றாட நின்ற ரத்னாவின் செல்போன் மெல்ல சங்கீதம் பாடியது.

    ஹலோ... யார் பேசறது.

    நான்... நான் ராஜா பேசறேன்... ரத்னா.

    நிறுத்தி நிதானமாக பேச,

    ரத்னாவின் உடலில் ஜிவ்வென்று புது ரத்தம் பாய்ந்தது. இவ்வளவு நாள் ஒரு வார்த்தை கூட பேசாதவன். முதன் முதலாக அவளிடம் பேசுகிறான்

    சொல்லுங்க... நல்லா... இருக்கீங்களா.

    "என் மேல் உனக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கலாம். பெண் பார்க்க வந்தபோது உன்கிட்டே ஒரு வார்த்தை பேசலை. எனக்குள் சின்னதாக ஒரு தயக்கம் இருந்தது நிஜம்.

    ஆனா... உண்மையை சொல்லணும்னா... உன்னை பார்த்த அடுத்த நிமிஷம் நீ என் மனசில் நிறைஞ்சுட்டே...

    இப்பயெல்லாம் ஒவ்வொரு நிமிஷமும் என் மனதில் உன்னோடு பேசிட்டு தான் இருக்கேன் ரத்னா...

    யார்கிட்டேயும் அவ்வளவு சகஜமாக பழக மாட்டேன்... ஆனா என் உறவுகளை ஆழமாக நேசிப்பேன். உன்கிட்டே பேசும்போது, என்கிட்டே இப்ப எந்த தயக்கமும் இல்லை... ஏதோ எனக்கு உரிமையான ஒன்றை, அன்போடும், பாசத்தோடும் கையில் ஏந்தும் சுகம் மட்டுமே மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு.

    என்ன ரத்னா உன்கிட்டே எந்த பதிலும் இல்லை."

    "நானும் உண்மையை சொல்றேன். உங்களை பார்த்தேன்... பிடிச்சுது. குறை சொல்ற மாதிரி உங்ககிட்டே எதுவும் இருப்பதாக தெரியலை. ஆனா அதேசமயம் என்கிட்டே நீங்க தனிமையில் எதுவும் பேசலைங்கிற சின்ன வருத்தம் இருந்துச்சு.

    உங்க கூச்ச சுபாவம் உங்களை தடுக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா இப்ப தொடர்ச்சியாக எந்த தடுமாற்றமும் இல்லாமல், உங்க மனசில் இருப்பதை வெளிப்படையாக பேசினிங்க இல்லையா... இது அந்த வருத்தத்தை போக்கிடுச்சு."

    கல்யாணமானதும் உன்கிட்டே கூடை, கூடையாக பேச இப்பவே தயாராகிட்டேன் தெரியுமா ரத்னா.

    இது போதுங்க... இந்த அன்பு நிலைச்சிருந்தா அதுவே சந்தோஷம்.

    "அப்புறம் இன்னொரு விஷயம் ரத்னா. இனி கல்யாணம் வரைக்கும் நான் உன்னை போனில் கூப்பிட மாட்டேன்.

    இந்த இடைவெளி நமக்குள் அன்பை அதிகரிக்கும்னு நம்பறேன். கல்யாணத்துக்கு பிறகு ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கிட்டா போதும். நான் சொல்றது உனக்கு உடன்பாடு தானே."

    "இன்னும் ஒரு மாசம்... கல்யாண வேலைகள் நிறைய இருக்கு. அம்மாவுக்கு என் உதவி தேவைப்படும்...

    நீங்க சொன்னதில் எனக்கும் சம்மதம் தான். கல்யாணத்துக்கு பிறகு வட்டியும், முதலுமாக பேசிக்கிட்டா போச்சு."

    கலகலவென சிரிக்கும் ரத்னாவின் சிரிப்பு அவனை மயக்குகிறது.

    ***

    ரத்னா... தோட்டத்தில் என்ன பண்றே... உள்ளே வாம்மா, தோசை ஆறுது பாரு... வந்து சாப்பிடு.

    ரோஷினி மகளை அழைக்க.

    அவ கல்யாணப் பொண்ணு, எப்படி பசிக்கும். கல்யாண கனவில் மிதக்கிறா... எனக்கு சாப்பாடு வை... ரோஷினி. கல்யாணத்திற்காக பத்து நாள் முன்பே வந்து காத்திருக்கும் ரகுவரனின் அத்தை பாக்கியம் சொல்கிறாள்.

    வாசலில் கார் வந்து நிற்க,

    பானுமதியும், ஜெயராமும் இறங்குகிறார்கள்.

    என்னங்க சம்பந்தி வர்றாங்க போலிருக்கு. வாசலுக்கு அவர்களை வரவேற்க விரைகிறார் ரகுவரன்.

    "வாங்க... வாங்க... வரேன்னு போன் பண்ணலையே... கல்யாண காரியங்கள் நல்லபடியாக நடந்துட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1