Kannethiril Thondrum Kanavu!
()
About this ebook
மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். ஒன்றை அடையும் போது அதை விட பெரிது கண்டால் மனது அலைபாயும். அதை அடைய நினைக்கும். அதனால் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படப் போவதில்லை. நம் கதையின் கதாநாயகி இத்தகைய மனநிலையில், அவள் காதலில் ஏற்படும் சிக்கல், அவள் காதல் கைக்கூடியதா என்பதை…
கண்ணெதிரில் தோன்றும் கனவு என்ற நாவலில், காதலுடன் கலந்து எழுதியுள்ளேன். படிப்பவர்களின் மனதில் இத்தகைய மனநிலை தவறு என்ற எண்ணத்தை நிச்சயம் உண்டாக்கும். இந்த கதை உங்கள் மனதை கவரும் என்ற நம்பிக்கையுடன்.
- பரிமளா ராஜேந்திரன்
Read more from Parimala Rajendran
Maalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsEn Pon Vaanam Nee Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavu Nee Thaanadi..! Rating: 3 out of 5 stars3/5Verena Nee Irunthai! Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkum Poo Maalai Rating: 0 out of 5 stars0 ratingsThaimai Marappathillai! Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Varame Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsRaagam Thedum Pallavi Rating: 0 out of 5 stars0 ratingsKaayam Patta Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsAnbaal Vellalaam! Rating: 0 out of 5 stars0 ratingsTyagathin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsUnarvugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsThendralaga Nee Varuvaya Rating: 0 out of 5 stars0 ratingsKaalathai Vendravan Nee Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Malarkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsThodarum Iniya Uravu Rating: 0 out of 5 stars0 ratingsManame Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsKadavul Thantha Vazhvu! Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Pookkal Malarattum Rating: 0 out of 5 stars0 ratingsEngiruthalum Vazhga Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhkai Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Pookkum! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kannethiril Thondrum Kanavu!
Related ebooks
Kangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhkai Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsManame Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsSwarangal Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal... Kanavugaley...! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Deivam Rating: 0 out of 5 stars0 ratingsOsaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Nenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsNesamey Narumana Pookkalaai...! Rating: 0 out of 5 stars0 ratingsNee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5En Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsKuliratha Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Mella Vilagum Irul Rating: 0 out of 5 stars0 ratingsMaamiyaar Veettu Seethanam Rating: 0 out of 5 stars0 ratingsKaththirukka Neramillai Karuna Rating: 0 out of 5 stars0 ratingsUravukkendru Virintha Ullam Rating: 1 out of 5 stars1/5Thodarum Iniya Uravu Rating: 0 out of 5 stars0 ratingsOru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kannethiril Thondrum Kanavu!
0 ratings0 reviews
Book preview
Kannethiril Thondrum Kanavu! - Parimala Rajendran
http://www.pustaka.co.in
கண்ணெதிரில் தோன்றும் கனவு!
Kannethiril Thondrum Kanavu!
Author:
பரிமளா ராஜேந்திரன்
Parimala Rajendran
For more books
http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
கனவுலகில் மிதந்தபடி தூக்கம் வராமல் புரண்டபடி இருந்தான் சிவசந்திரன். காதல் எவ்வளவு அற்புதமானதென்று அதை கடந்து வந்தவர்களுக்குதான் தெரியும். சிவசந்திரன் மனதில் பதித்த காதல். அழகிய படபடக்கும் பட்டாம்பூச்சி இமைகளை விரித்து மருண்ட பார்வையுடன் வசீகரிக்கும் சிரிப்புடன் அவனை பார்த்தாளே... அன்று விழுந்தவன் தான். ஏழு வருடமாக பூஜாவை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறான்.
காலேஜ் படிப்புடன், அழகாக வளர்ந்தது அவர்கள் காதல், என்னமோ தெரியலை சிவா... உங்க அருகில் இருக்கும் போது பாதுகாப்பை உணர்கிறேன். நீங்க பக்கத்தில் இருந்தால் இமயமலை உச்சியில் கூட, உங்க விரல் பிடித்து என்னால் நிற்க முடியும்னு தோணுது.
அவளுக்கு எல்லாம் சிவா தான் என்பதை புன்னகை பூக்கள் அவள் மனம் குளிர சொல்வாள் பூஜா.
சிவசந்திரனின் அம்மா, அப்பா அவன் பத்து வயதாக இருக்கும் போது இறந்துவிட்டார்கள். அவளுடைய அக்கா அனுராதா உறவினர்களின் முயற்சியில் திருமணமாகி சென்ற போது, தம்பியை தன்னுடன் அழைத்து சென்றாள்.
அனும்மா உன் தம்பி தான் நம் முதல் குழந்தை. ஒரு தந்தை, ஸ்தானத்தில் இருந்து அவனை நான் நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவேன் என்னை நம்பு
-கை பிடித்த புதுமனைவியிடம் பிரபாகர் சொன்னபோது,
அந்த கடவுளே தன் எதிரில் நிற்பது போல பூரித்து போனாள் அனுராதா.
வளைந்த காதலுடன் சாய்ந்து நடக்கும் கணவனின் நடை, அவளுக்கு கம்பீரமாக தோன்றியது. அவள் மனதில் இருந்த சிறு குறையும் அந்த நிமிடமே காணாமல் போனது.
சொன்னது போல சிவசந்திரனுக்கு அப்பாவாக, நல்லதொரு தோழனாக அன்பு காட்டினான் பிரபாகர்.
மகள் சிந்துஜா பிறந்தபோது, இரட்டிப்பு சந்தோஷப்பட்டான். அனு நமக்கு ஏற்கனவே மகன் இருக்கான், கடவுள் நமக்கு மகளையும் கொடுத்துட்டாரு. ஒரு ஆண், ஒரு பெண் போதுமே... என்ன சொல்ற
கணவன் கேட்டபோது அப்படியே அவனை தன் தோளில் சாய்த்து நெற்றியில் முத்தமிட்டாள் அனு.
சிந்துஜாவிற்கும், சிவசந்திரனுக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம்... ஸ்கூல் விட்டு வந்ததும், சிந்துவை தூக்கி கொஞ்சுவது அவளோடு விளையாடுவது, இது தான் அவனது பொழுது போக்கு. அவளுக்கு ஏதாவது என்றால் ஒடிந்து போய்விடுவான்.
தளிர்நடை பழகும் வயதில், அனுவின் அஜாக்ரதையில் சிந்து கீழே விழுந்து தலையில் அடிபட்ட போது அக்காதான் காரணம் என்று இரண்டு நாட்கள் அவளுடன் பேசவில்லை.
மாமா... அக்காவை கண்டிச்சு வைங்க. டி.வி. பார்த்துக்கிட்டு சிந்துவை சரியா கவனிக்க மாட்டேங்கிறா...
ச்சு சிவா... அக்காவை குறை சொல்ல முடியுமா. இந்தக் குடும்பத்துக்காக உழைப்பவள். சிந்து இப்ப தானே நடக்க ஆரம்பிச்சிருக்கா... தடுமாறி விழுந்து சகஜம். என்ன தலையில் கொஞ்சம் அடிபட்டுடுச்சு. டாக்டர் கிட்டே காண்பிச்சுட்டோம் இல்லையா... இரண்டு நாளில் சரியாயிடும் நீ ஸ்கூலுக்கு கிளம்பு...
இல்லை மாமா, சிந்துவுக்கு குணமாகிறவரை வீட்டில் தான் இருப்பேன்
ஸாரி சிவா. நா உன் தங்கையை கவனமாக பார்த்துப்பேன். நீ ஸ்கூலுக்கு போ... அப்புறம் படிப்பு கெட்டுடும்
தம்பியை சமாதானம் பண்ணி அனுப்புவாள் அனு.
பிரபாகர் சொந்தமாக மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வந்தான்.
அதில் வரும் வருமானம் குடும்பம் நடத்த போதுமானதாக இருந்தாலும், நாளை பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் தேவைப்படும் என்று ரியல் எஸ்டேட் பிஸினஸும் செய்து வந்தான்.
சிவசந்திரன் என்ஜினீயரிங் முடித்து ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு சேர சிந்துஜா எட்டாவது படித்தாள்.
அன்பான ஆர்பாட்டமில்லாத குடும்பமாக இருக்க, படித்து முடித்தவுடன் அக்கா, மாமாவிடம் பூஜாவை காதலிப்பதை மறைக்காமல் சொன்னான்.
பார்த்தீங்களா, ஒன்றுமே தெரியாத பாப்பா போல் முகத்தை வச்சுக்கிட்டு, படிக்கிற வயசிலேயே தனக்கான ஒருத்தியை தேர்ந்தெடுத்து காதலிக்க ஆரம்பிச்சிருக்கான்
சிவா மனசை ஒருத்தி ஆக்கிரமிச்சிருக்கா... நிச்சயம் அவள் நம்மை போல ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக தான் இருக்கணும். என்ன சிவா நான் சொல்றது சரிதானே?
"நூற்றுக்கு நூறு சரி மாமா. நம்மை போல நடுத்தரமான குடும்பம். அப்பா டீச்சராக இருந்து ரிடையர்ட் ஆனவர். பூஜா அவருக்கு ஒரே பெண். நிச்சயம் நீங்களும் அக்காவும் சம்மதிப்பீங்கங்கிற தைரியத்தில் விரும்பிட்டேன்.
கல்யாணம் இப்ப வேண்டாம். சிந்து ஸ்கூல் படிப்பை முடிச்சு காலேஜில் சேரட்டும். ஆனா இனி அவளோடு பழகுவது உங்க முழு சம்மதத்தோடு இருக்கணும்னு நினைக்கிறேன் மாமா..."
அதெல்லாம் முடியாது இதுக்கு அம்மா, அப்பா சம்மதம் சொன்னாலும், நான் சம்மதிக்க மாட்டேன். எனக்கு வரப்போற அண்ணியை நான் தான் பார்த்து ஓகே சொல்லணும். புரியுதா சிவா. அதனால நான் அவங்களை சந்திக்க ஏற்பாடு பண்ணு
பெரிய மனித தோரணையில் அங்கு வந்த சிந்து மிரட்ட,
சரிங்க மகாராணி, நாளைக்கே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். இந்த அண்ணனை மனசில் வச்சு, நல்ல பதிலாக சொல்லுங்க.
பிரபாவும், அனுவும் வாய்விட்டு சிரித்தார்கள்.
பூஜாவுடன் பேசி சிரித்து பொழுது போக தன் கையால் சமைத்து பரிமாறினாள் அனு.
ரொம்ப சந்தோஷமாக இருக்கு அண்ணி. இந்த அன்பான குடும்பத்துக்கு மருமகளாக போறேன்னு, மனசுக்கு நிறைவாக இருக்கு
சொல்கிறாள் பூஜா.
அவளருகில் வந்து அன்போடு அவள் கேசத்தை வருடியவளாய்,
"பூஜா... சிவசந்திரன் என் தம்பிதான். இருந்தாலும் அவனை நானும் அவரும் எங்க மகனாக தான் நினைக்கிறோம். அம்மா, அப்பா இறந்தப்ப பரிதவிச்சு நின்றவன், மனசார எங்களை பெத்தவங்களாக ஏத்துக்கிட்டான். அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்கறவன் சிவா, நீ அவனுக்கு எல்லாருமாக இருக்கணும் பூஜா. கஷ்ட நஷ்டத்தில் தான் உனக்கு