Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesamey Narumana Pookkalaai...!
Nesamey Narumana Pookkalaai...!
Nesamey Narumana Pookkalaai...!
Ebook67 pages55 minutes

Nesamey Narumana Pookkalaai...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாயைப்பிரிந்த சேய் தந்தைப் பறவையின் ரெக்கையின் கீழே வளர்கிறது. விதி கொண்டு போய் இழந்து போய் விட்டோமென்ற உறவுகளிடையே சிக்க வைக்கிறது. அந்த சிறு பெண்பறவை எப்படி மீள்கிறது... உறவை சேர்கிறது... தன் துணையை அடைகிறது என்பதே நேசமே நறுமணப் பூக்களாய் உங்கள் கண் முன்னே விரிகிறது...

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580135407986
Nesamey Narumana Pookkalaai...!

Read more from J. Chellam Zarina

Related to Nesamey Narumana Pookkalaai...!

Related ebooks

Reviews for Nesamey Narumana Pookkalaai...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesamey Narumana Pookkalaai...! - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நேசமே நறுமணப் பூக்களாய்...!

    Nesamey Narumana Pookkalaai...!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பூ 1

    பூ 2

    பூ 3

    பூ 4

    பூ 5

    பூ 6

    பூ 7

    பூ 1

    ‘யாரிவள்?’

    சுலோச்சனா தேவி தங்கச் சங்கிலியில் கோர்த்திருந்த தங்கப் பிரேமிட்ட கண்ணாடி வழியே கண்ணை இடுக்கிக் கொண்டு புதியவளைப் பார்த்துவிட்டு கௌரியைப் பார்க்க,

    அத்தை! சர்வஜித்தின் பெர்ஸனல் செக்ரட்டரி. காலையில் உங்க பேரனுடன்தான் வந்தாள்.

    ஒரு நிமிடம் இதயம் நின்றுபோய் பிறகு இயங்கியது.

    காபிக் கொட்டை கலர் ஷிபான் ஸாரியில் பொன்ஜரிகைப் பூக்கள் மின்ன நீண்ட கூந்தலை இரண்டிழை எடுத்து கிளிப்பில் அடக்கியிருந்தாள். அதே காபி கலரில் வளையலும், கழுத்தில் மூன்று முத்துச்சரமும் ஒற்றை முத்துக் காதணியுமாக ஒரு தேவதை போல இறங்கி வந்தாள் அந்தப் பெண்.

    ஹாய்! குட்மார்னிங் எவ்ரிபடி! கிராண்மா… ஐ லவ் யூ… என்று வந்த சர்வஜித், சுலோச்சனா தேவியைக் கட்டிக் கொண்டான். அந்த அணைப்பிலும்கூட அந்தப் பெண்ணின்மீதிருந்த பார்வையை எடுக்கவில்லை சுலோச்சனா தேவி. அவர் பார்வை போன திக்கை பார்த்தவன்,

    வா! வா இந்திரா…

    "பாட்டி! இவங்க இந்திரசேனா. என் செக்ரட்டரி. இங்கே திருவிழாவுக்கு வந்தேயாகனும்னு நீங்க பிடிவாதம் பிடிக்கவே, இங்கேயிருந்து வேலை செய்யலாம்னு இவங்களையும் கையோடு அழைச்சு வந்திட்டேன்.

    பை தி பை… இந்திரா! இவங்க என் பாட்டி சுலோச்சனா தேவி வெற்றிவேல். இந்தக் குடும்பத்தின் ஆணிவேர்.

    இவங்க என் பெரியப்பா ரகோத்தமன், பெரியம்மா கௌரி.

    இவர் என் அப்பா ரகுவரன், இவங்க என் அம்மா மைதிலி.

    இவர் என் பெரிய மாமா வல்லபன், இவங்க பெரியத்தை சந்திரமதி. இவங்கள்ளாம்…"

    போதும் போதும் நாங்களே இன்ட்ரோ பண்ணிப்போம் என்று ஹோவென்று கூச்சலிட, பாட்டியின் ஷ் என்ற அதட்டலில் அடங்கியது.

    சரிசரி டிபனை சாப்பிடுங்க.

    இந்திராவுக்கு சங்கோஜமாக இருந்தது. அவளருகிலிருந்த கண்மணி, சர்வஜித்தின் தங்கை, பார்த்துப்பார்த்து பரிமாறினாள்.

    சுலோச்சனா தேவிக்கு முதல் பார்வையிலேயே இந்திரசேனாவைப் பிடிக்கவில்லை. இவள் வரவு தன் குடும்பத்திற்கு நல்லதில்லை என்று முதியவரின் உள்ளுணர்வு சொன்னது.

    உன் பேர் என்னம்மா?

    இந்திரசேனா.

    அப்பா, அம்மா என்ன செய்றாங்கம்மா?

    எனக்கு ரெண்டுபேருமே இல்லைங்க. அப்பா போயி ரெண்டு வருஷமாச்சுங்க.

    ஓ! அதான் இப்படி இவ்ளோ தைரியமா ஒரு ஆண்பிள்ளையோடு தனியா வந்திருக்கிறே! பெத்தவ இருந்திருந்தா பண்பாட்டை கத்துக் கொடுத்திருப்பா.

    சட்டென்று ஒரு விரும்பத்தகாத அமைதி கவிழ்ந்தது. சர்வஜித் முகம் சிவந்தது.

    ரகோத்தமனிலிருந்து பிள்ளைகள்வரை முகம் சுளிக்க பார்த்தனர்.

    "பண்பாட்டோடு தன்னம்பிக்கையையும், மற்றவர்களோடு எத்தனை நாகரிகமா பழகனும்ங்கிறதையும் சொல்லிக் கொடுத்தே வளர்த்திருக்கிறாங்க பாட்டியம்மா! ஏன், உங்க பேரனோடு வந்ததில்

    Enjoying the preview?
    Page 1 of 1