Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cheraman Vanchi
Cheraman Vanchi
Cheraman Vanchi
Ebook95 pages32 minutes

Cheraman Vanchi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது என்னுடைய மூன்றாவது வரலாறு சார்ந்த குறுநாவல். இம்முறை சேரர்களை கற்பனையில் சிறையெடுத்தேன். இந்த" சேரமான் வஞ்சி" குறுநாவலும், "செம்புலப் பெயல் நீராய்" என்னும் சரித்திரச் சிறுகதையும், ஸ்ரீ அனந்த நாராயணன் சிறுகதைப்போட்டியிலும் குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றவை. இத்துடன் "வீரம் வெளைஞ்ச மண்ணு", "மந்திரோபதேசம்", "வெற்றிச் செல்வி" சிறுகதைகளும் கூட உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துமென நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateMay 2, 2023
ISBN6580135409817
Cheraman Vanchi

Read more from J. Chellam Zarina

Related to Cheraman Vanchi

Related ebooks

Related categories

Reviews for Cheraman Vanchi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cheraman Vanchi - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சேரமான் வஞ்சி

    (சிறுகதைகள்)

    Cheraman Vanchi

    (Sirukathaigal)

    Author:

    ஜெ. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சேரமான் வஞ்சி

    விடுகதை விரித்த விந்தை

    மாதவிக்கொடி வீட்டில்...

    பாண்டியனின் அறைகூவல்

    ஜோடிப் புறாக்கள்

    2. செம்புலப் பெயல் நீராய்...!

    3. மந்திரோபதேசம்!

    4. வீரம் வெளஞ்ச மண்ணு!

    5. வெற்றிச் செல்வி

    1. சேரமான் வஞ்சி

    உள்ளங்கவர் கள்வன்!

    அந்தப்புரத்தையொட்டி அமையப்பட்ட உபவனம் அது. வானோங்கி வளர்ந்த விருட்சங்கள் நிழற்குடை கவிழ்த்தும் பூப்பாவாடை விரித்தும் நறுமணம் வீசி அந்த மாலை நேரத்தையே மயங்க வைத்துக் கொண்டிருந்தது. அதைக் குலைப்பது போல் பெண்களின் சலங்கையொத்த சிரிப்பொலியும் அவர்கள் வேகமாய் குதிப்பதினாலும் அங்குமிங்கும் ஓடுவதினாலும் அவர்தம் சிலம்பொலியின் கலகல ஓசையும் வளைக்கரங்களின் குலுக்கலினால் உண்டான வளையோசையும் கலகலவென இருந்தது அந்த இடம்.

    இளவரசி நற்சோணை தோழியரை விளையாட்டைத் தொடரும்படிக் கூறிவிட்டு அங்கிருந்த செய் பொய்கையின் கரைமீதமர்ந்தாள். மலர்ந்த தாமரைகளோடு அதனோடு ஊடல் கொண்டு முகங்குவிந்து கொண்ட சில அல்லிகளுமிருந்தன.

    இளவரசி நற்சோணை ஏதோ ஆழ்ந்த யோசனையிலிருந்தாள். அவளின் கன்னிமனம் எதையெதையோ யோசித்தபடி ஆறு திங்களுக்கு முன்னே தமிழ்ப்புலவர் முறிஞ்சியூர் முடிநாகனாரின் குடிலில் வைத்து கண்ட கம்பீர வதனம் நெஞ்சத்தில் எழுந்து அவளின் நெஞ்சகத்தைப் பெருமூச்செறிய வைத்தது. கண்ட நாள்முதலாய் தன்னை இன்பமாய் இம்சிக்கும் அந்த கட்டிளங்காளையின் மீது சினமும் அன்பும் ஒரே சமயத்தில் எழ திக்கு முக்காடினாள் பேதை.

    இளவரசியாரே!

    என்னடி நன்முல்லை! சற்று நேரம் என்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டாயா.

    அதில்லையம்மா! தங்கள் முறை மாப்பிள்ளை குணசேகர பாண்டியருடன் தங்கள் மாமனும் மாமியும் கூட குடும்ப சகிதமாய் அரண்மனை ஏகியுள்ளனர். மகாராணி தங்களை உடனே அழைத்து வரும்படி கட்டளையிட்டுள்ளார் அம்மா.

    ப்ச்! இது வேறா!? ஏனடி நன்முல்லை இந்த விஜயம் எதற்காக.

    தெரியவில்லையம்மா. ஒருவேளை தங்களின் திருமணப் பேச்சாகவும் இருக்கலாம்.

    என்ன?

    ஆம் இளவரசி! தங்களுக்கும் திருமண வயது வந்துவிட்டதல்லவா. அதனால் பெண் கேட்டு...

    போதும் நிறுத்தடி நன்முல்லை. வரவர உன் அதிகப் பிரசங்கித்தனம் எல்லை மீறுகிறது.

    அதே சமயம்,

    பெண்கள் நடுவே சலசலப்பும் வாதப்பிரதிவாதங்களின் ஒலியும் யாரோ ஒரு ஆண்மகனின் ஓங்கியொலிக்கும் குரலும் கேட்க இளவரசி நன்முல்லையை நோக்கினாள். அவளும் சப்தம் கேட்கிற திசையில் வேகமாக நகர்ந்தாள். நற்சோணையும் நிதானமாக எழுந்து பாதங்களை அழுத்தமாக வைத்து அவ்விடம் நோக்கி விழிகளைப் பாய்ச்சினாள்.

    பின்னாலேயே கைகளை பிசைந்தபடி பெண்கள் ஓடிவர சீறிவரும் காளையென வீறு நடைபோட்டு வந்து கொண்டிருந்தான் குணசேகர பாண்டியன்...

    நன்முல்லை முன்னால் வந்து,

    இளவரசே இது சரியில்லை. இது அந்தப்புரப் பகுதியைச் சேர்ந்தது. ஆண்கள் யாரும் பிரவேசிக்கக் கூடாது.

    பெண்ணே! இது எனக்கு உரிமையான இடம். உங்கள் தலைவி நற்சோணை என் மனைவியாகப் போகிறவள்.

    போகிறவர்தானே! இன்னும் ஆகவில்லையே! அதற்கு முன்னே இப்படியோர் அடாத செயல் புரியலாகது.

    ஏய் யார் நீ? யாரோடு பேசிக் கொண்டிருக்கிறாய் தெரியுமா?

    அவளுக்கும் தெரியும் இங்கிருக்கிற அனைவருக்கும் தெரியும். ஒரு மூடனிடம் பேசிக் கொண்டிருக்கிறோமென்று.

    நற்சோணை குரல் ஒலித்ததுமே பெண்கள் அமைதியானதுடன் இரண்டடி பின்னால் தள்ளி நின்றனர்.

    நற்சோணை! வரம்பு மீறுகிறாய்.

    தங்களை விடவா?

    உன்னை ஆவலோடு காண ஓடோடி வந்த எனக்கு தக்க மரியாதை செய்து விட்டாய்.

    அத்து மீறியது தாங்கள்.

    உன்னைக் காண வந்தது குற்றமா.

    அது குற்றமில்லை அதையொட்டி நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் கண்டனத்துக்குரியது.

    என்ன.

    நாளை நாடாளப் போகும் இளவரசர் நடந்து கொள்ளும் முறைமையா இது? நான் தங்களின் உறவுப் பெண்ணாக இருந்தாலும் என் அனுமதியின்றி என் அந்தப்புரத்துக்குள் வந்தது மாபெருங் குற்றம். அரசரான என் தந்தையே முன்னமே அறிவித்துவிட்டு பிறகுதான் வருவார். தாங்களோ...

    அதில்லை நற்சோணை! உன்னைப் பார்க்கும் ஆவலைத் தாள மாட்டாது சற்றே மதிமயங்கிப் போய் விட்டேன்.

    "என் கோபம் இன்னும் மீறிப்போகாமல் உடனே இடத்தை விட்டகலுங்கள். உங்கள் மீது

    Enjoying the preview?
    Page 1 of 1