Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nanneri Kathaigal Part - 1
Nanneri Kathaigal Part - 1
Nanneri Kathaigal Part - 1
Ebook69 pages25 minutes

Nanneri Kathaigal Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்கு கதை கேட்பது முகவும் பிடித்தமான விஷயம். அப்படி தாங்கள் கேட்ட கதைகளை அவர்கள் செயல்முறை படுத்தும் விதமும் அழகோ அழகு. நாம் அவர்களுக்கு கதை கூறும்பொழுதே நல்ல விஷயங்களையும் சேர்த்து கூறினால் இன்னமும் சுவாரஸ்சியம் அதிகமாகிறது, குழந்தைகளும் கதையோடு ஒன்றிவிடுவார்கள். இதுபோலவே இந்நூலின் ஆசிரியரும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களை புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் நன்னெறிகளை விளக்கும் தொகுப்பே இந்நூல்...

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580120808415
Nanneri Kathaigal Part - 1

Related to Nanneri Kathaigal Part - 1

Related ebooks

Reviews for Nanneri Kathaigal Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nanneri Kathaigal Part - 1 - Thenammai Lakshmanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நன்னெறிக் கதைகள் பாகம் – 1

    Nanneri Kathaigal Part – 1

    Author:

    தேனம்மை லெக்ஷ்மணன்

    Thenammai Lakshmanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thenammai-lakshmanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன்

    2. கணிகண்ணனுடன் சென்ற மணிவண்ணன்

    3. சமத்துவம் போதித்த சாதுவன்

    4. கடவுள் நாமம் காப்பாற்றும்

    5. சிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி

    6. அன்புப் பரிசு அரசாளும்

    7. வில்லை ஒடித்த விதுரர்

    8. பாசம் பெரிதெனப் போராடிய மேருமலை

    9. வேதங்களைக் காத்த கல்விக் கடவுள்

    10 மந்தரையின் வடிவில் வந்த விதி

    11. அகம்பாவம் தந்த அவமானம்

    12. எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்

    13. கர்ணன் செய்யாத தானம்

    1. மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன்

    இக்காலத்தில் ஒருவர் நோய் நொடியின்றி ஐம்பது, அறுபது ஆண்டுகள் முதல் நூறாண்டுகள் வரை எளிதில் வாழலாம். ஆனால் ஒரு மனிதன் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் மூவாயிரம் பாடல்களும் எழுதி இருக்கிறார். அவர் யாரென்று அறிய ஆவலாய் இருக்கிறீர்கள்தானே குழந்தைகளே! வாருங்கள் அவர் பற்றிச் சொல்லுகிறேன். திருவாடுதுறை என்னும் ஊரில் மூலன் என்றொரு ஆயர் இருந்தார். அவ்வூரின் அருகில் இருந்த சாத்தனூர் என்ற ஊரில் வாழ்ந்த குடும்பஸ்தர்களின் ஆநிரைகளை அதிகாலையில் வீடுதோறும் சென்று ஓட்டிக்கொண்டு பகல் பொழுதில் புல்வெளிகளிலும், காடுகளிலும், உழவு முடிந்த வயல்களிலும் மேய்த்து மாலையில் அதனதன் இல்லம் கொண்டு சேர்ப்பது அவர் பொறுப்பு.

    அப்படி மேய்த்துவரும்போது ஒருநாள் மாலையாகியது. ஆநிரைகள் வீடு திரும்ப வேண்டும். அவை தம் மேய்ப்பரைத் தேடிக் குரல் எழுப்புகின்றன. அந்தியோ மங்கி வருகின்றது. ஆனால் அவரைப் பாம்பு ஒன்று தீண்டியதால் மேய்ச்சல் நிலத்தில் விழுந்து கிடக்கிறார். ஆநிரைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தம் மேய்ப்பர் விழுந்து கிடப்பதைப் பார்த்து அவலக் குரல் எழுப்புகின்றன. சில மோந்து பார்க்கின்றன. ஒரு சிலவற்றின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகின்றது.

    அப்போது அங்கே வருகிறார் ஒரு சிவயோகி. அவர் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர். நந்திதேவரின் மாணவர். கயிலாயத்தில் இருந்து தம் நண்பரான அகத்தியரைக் காண அவர் தென்திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாடுதுறையைக் கடக்க நேரிட்டது. அங்கே பார்த்தால் ஆநிரைகள் ஒரு வயலோரம் கூட்டமாக நின்று கதறிக் கொண்டும் கண்ணீர் சொரிந்து கொண்டும் நின்றன.

    அவற்றை விலக்கிக் கொண்டு வந்து பார்த்தால் மூலன் என்ற மேய்ப்பர் விடம் தீண்டி இறந்து கிடந்தார். ஆநிரைகளின் துயரம் புரிந்தது சிவயோகிக்கு. அவர் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை அறிந்தவர். அந்த மேய்ப்பர் எழுந்து நடவாவிட்டால் அந்த ஆநிரைகள் தங்கள் கொட்டடிக்குப் போக மாட்டா என்றுணர்ந்த அவர் ஒரு உபாயம் செய்தார்.

    தன் உடலை ஒரு மரப்பொந்தில் ஒளித்து வைத்துவிட்டு தன் உயிரை மூலனின் உடலுக்குள் செலுத்தி உயிர் பெற்று எழுந்தார். மேய்ப்பர் மூலன் எழுந்ததும் பசுக்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1