Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pakkathil Paruva Nila
Pakkathil Paruva Nila
Pakkathil Paruva Nila
Ebook101 pages44 minutes

Pakkathil Paruva Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மன்மதபுரி ஜமீன் - அங்கே பிறந்த ஒரு வாரிசு கூட ஒழுக்கம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தார்கள்.

முருகபூபதியும் அப்படித்தான் வளர்ந்தான். தன் கண்ணில்படும் பெண்களையெல்லாம் தன் ஆசைக்கு இரையாக்கிக் கொண்டிருந்தான்.

இவனை அடக்க முயல்பவர்களை, திருப்பியடிக்காமல் விடமாட்டான். அதனாலேயே இவனை கண்டு அனைவரும் பயந்தனர்.

அவனுக்கு திருமணம் செய்துவைத்தால் திருந்திவிடுவான் என்று எண்ணி அவன் தாயார் திருமண ஏற்பாடுகளை செய்கிறார்.

திருமணத்திற்கு பின் அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? பல திருப்பங்களுடன் வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580100607870
Pakkathil Paruva Nila

Read more from Devibala

Related to Pakkathil Paruva Nila

Related ebooks

Reviews for Pakkathil Paruva Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pakkathil Paruva Nila - Devibala

    https://www.pustaka.co.in

    பக்கத்தில் பருவ நிலா

    Pakkathil Paruva Nila

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தான் முருகபூபதி. அவனது ஆறடி அழகிய பிம்பம் வசீகரமாகக் கண் சிமிட்டியது. வட்ட முகத்தில், கனமாக, நெய் தடவி வளர்க்கப்பட்ட அடர் மீசை, ஆண்மைக்கு கட்டியம் சொன்னது. கண்களில் நிரந்தர வலை. பட்டு ஜிப்பாவின் திறந்த மார்புப் பகுதியில் ரோமக்காடு. உள்ளே சிக்கிக்கொண்ட புலிநகம் கோர்த்த தங்கச் சங்கிலி. இடுப்பில் ஒரு மாதிரி பஞ்சகச்சம் போல மடிப்பு மடிப்பாக ஆந்திரக்கட்டு. வளைந்த ஷூக்கள். வயது முப்பதுக்கு அருகில்.

    மன்னாரு!

    ஓடிவந்தான் உதவியாளன்.

    கூப்பிட்டீங்களா சின்னதுரை

    குதிரை ரெடியாடா?

    இருக்குங்க!

    மன்னாரை அணுகி, பளாரென அறைந்தான். மன்னார் சக்கர வட்டமாகச் சுழன்று, பின் நிலை பெற்று, திகிலுடன் விழித்தான்.

    என்னடா ஒத்த வார்த்தைல பதில்...?

    .....

    வா என்னோட!

    வாசலுக்கு நடக்கத் தொடங்கினான்.

    'மன்மதபுரி' என்று அந்த ஜமீனுக்கு யார் பேர் வைத்தார்களோ தெரியவில்லை. அங்கே பிறந்து வந்த ஒரு ஆண் வாரிசு கூட ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தார்கள்.

    முருகபூபதியின் அப்பா ரங்கதுரையும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஒரு நாள் பட்டென இதயம் துடிப்பைவிட, தனது நாற்பத்தி மூன்றாவது வயதில் முப்பத்திநாலு வயது மனைவி வேதவல்லியையும், பத்து வயது முருகபூபதியையும் விட்டுப் பிரிந்தார்.

    மதுரைக்குக் கிழக்கே எழுபது கிலோமீட்டர் தொலைவில் இன்றைக்கும் செல்வாக்குடன் இருப்பது மன்மதபுரி ஜமீன்.

    வேதவல்லி, முருகபூபதியை நல்ல பாதையில் கொண்டு வந்து விடவேண்டும் என்று ஒரு வைராக்கியத்துடன் வளர்க்கத் தொடங்கியது நிஜம்தான்.

    ஆனால் கிடைத்தது தோல்விதான்.

    வேதவல்லிக்கு படிப்பு இல்லை. போதிய வெளியுலக ஞானமும் இல்லை.

    பூபதி என்ற இளங்குதிரை, வாலிபத்தைத் தொட்டதும், பரம்பரை ரத்தம் உடம்பில் ஊற, கண் மண் தெரியாமல் ஓடத் தொடங்கிவிட்டது.

    பரம்பரையில் மற்ற ஆண்களை மிஞ்சும் அளவு காமுகனாக இருந்தான் பூபதி.

    குதிரையோடு பூபதி, ஜமீனை விட்டு வெளியே வந்துவிட்டால், வயதுப் பெண்கள் யாரும் பெரும்பாலும் அந்தப் பிரதேசத்தில் வெளியே வருவதில்லை.

    தவறி வந்துவிட்டால்...

    பூபதியின் பார்வையில் சிக்கிவிட்டால்...

    அதே நாளிரவு தென்னந்தோப்பு பங்களாவில் பூபதியின் பஞ்சணையில் அவள் இருப்பாள். அவள் எந்தக் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் பூபதிக்குக் கவலையில்லை.

    இதனால் அந்தப் பிரதேசம் முழுக்க பரபரப்பும், கலவரமும் கணிசமாகக் குடியிருந்தது.

    எதிர்க்கும் சக்தி படைத்த ஆண்கள் ஏனோ மன்மதபுரியில் பிறக்காமல் போனது துரதிர்ஷ்டம்.

    இதோ பூபதி புறப்பட்டுவிட்டான்.

    மன்னாரு.

    சொல்லுங்க சின்னதுரை.

    ஒரு வாரமா நான் பட்டினிடா.

    நான் சாப்பாடு கொண்டு வரட்டுமா சின்னதுரை?

    மன்னாரு?

    என்ன துரை?

    உனக்கு ஏண்டா ஆண்டவன் மூளையைப் படைக்க மறந்து போனான்? நான் வயித்துப் பசியைச் சொல்லலைடா மன்னாரு. தோப்பு பங்களால என் படுக்கை பரிதவிக்குதுடா மன்னாரு.

    வாசலை பூபதி அணுகும் சமயம்,

    சின்னதுரை.

    திரும்பினான்.

    வேதவல்லி எதிரே வந்தாள்.

    என்ன?

    நாளைக்கு உங்கப்பாவோட திதிப்பா.

    அதுக்கு

    என்ன கேள்வி ராஜா இது? அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் செஞ்சாச்சு. நீ, இன்னிக்கும், நாளைக்கும் கொஞ்சம் சுத்த பத்தமா...

    விருட்டென்று திரும்பினான் பூபதி.

    நானும் கேக்கறேன்! செத்த மனுஷனுக்கு தெவசம் பண்ண, இருக்கறவன் சாகணுமா?

    துரை.

    பேசாதே! திதியை நீயே நடத்து. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை.

    பதிலை எதிர்பாராமல் வாசலை நெருங்கி விட்டான்.

    'பளிச்'சென தாவி குதிரை மேல் ஏறிவிட்டான். குதிரை பிடரியை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.

    வேதவல்லி லேசாகக் கோடிட்ட கண்ணீருடன் உள்ளே வந்தாள்.

    அம்மா.

    நெடுநாள் வேலைக்காரன் ஆறுமுகம்.

    இப்படி சொல்லிட்டுப் போறாரே சின்னதுரை?

    இந்தப் பரம்பரைல வந்த ஆண்கள் செஞ்ச பாவம் ஆறுமுகம். இங்கே மனைவியா வாழ வந்து, தாயான பெண்கள் அதைவிடப் பாவிகள்.

    அம்மா.

    என்ன ஆறுமுகம்?

    நான் ஒண்ணு சொல்லட்டுமா?

    சொல்லுங்க.

    "சின்னதுரைக்கு முப்பது வயசாச்சு. ஒரு நல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1