Yaarum Sollatha Kathaigal
By Padman
()
About this ebook
கதைகள், அதுவும் தேவதைக் கதைகள் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளைப் பிரியம். பெரியவர்களுக்கும் கூடத்தான். நாம் நினைத்ததையும், நிஜத்தில் நடக்க இயலாத அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டும் மந்திர வலிமை உள்ளவை ஆயிற்றே, தேவதைகள்! யாருக்குத்தான் பிடிக்காது? கூடவே, அதே மந்திர சக்தியால் நம்மை அச்சுறுத்தும் சூன்யக்காரிகளும், பூதங்களும் அப்பப்பா!
படிக்கும்போது மூளையின் நியூரான்கள் தூண்டப்படுகின்றன, கற்பனைத் திறன் விரிவடைகிறது என்கிறது அறிவியல் ஆய்வு. அத்துடன், படிப்பவர்களின் ரசனையும், படைப்பாற்றலும்கூட அதிகரிக்கிறது. ஆகையால், நல்ல புத்தகங்களை தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிமுகப்படுத்தி வைத்து அவர்கள் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும். விவரம் தெரிந்தவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் " யாரும் சொல்லாத தேவதைக் கதைகள்" என்ற இந்த நூல், உங்கள் குழந்தைகளுக்கு உற்ற நண்பனாக விளங்கும் என்பது உறுதி.
வாருங்கள் மூளையின் நியூரான்கள் தூண்டலாமா.....Related to Yaarum Sollatha Kathaigal
Related ebooks
Mansatti Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Oruthi Kattilil Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naanavena? Rating: 4 out of 5 stars4/5Vanathil Oru Maan Rating: 4 out of 5 stars4/5Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal Rating: 5 out of 5 stars5/5Maarupadum Konangal Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPoiyil Pootha Nijam Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsSpatikam Rating: 0 out of 5 stars0 ratingsPakkathil Paruva Nila Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Vedhalam Sonna Kadhai Rating: 0 out of 5 stars0 ratingsசிந்தனை சிறுகதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsKutram Puthu Vitham Rating: 5 out of 5 stars5/5Appaavi Varikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Pattikkattu Krishnan Rating: 0 out of 5 stars0 ratingsPasithalum Puli... Rating: 0 out of 5 stars0 ratingsEn Selvam, En Raja! Rating: 0 out of 5 stars0 ratingsAabathu August 10! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Theendiya Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Yaarum Sollatha Kathaigal
0 ratings0 reviews
Book preview
Yaarum Sollatha Kathaigal - Padman
https://www.pustaka.co.in
யாரும் சொல்லாத கதைகள்
Yaarum Sollatha Kathaigal
Author:
பத்மன்
Padman
For more books
http://www.pustaka.co.in/home/author//padman
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
பயத்தை தேடிய பாமரன்
அப்படின்னான் வீரன்.
புத்திசாலி சிறுமி
மூன்று நூற்பாளிகள்
ஓநாயும் ஏழு ஆட்டுக் குட்டிகளும்
ஏழு வராகன்
உயிர்காப்பான் தோழன்
கொலையும் செய்வாள் பத்தினி
முன்னுரை
(கேட்டதால் கிடைத்தது)
கதைகள், அதுவும் தேவதைக் கதைகள் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளைப் பிரியம். பெரியவர்களுக்கும் கூடத்தான். நாம் நினைத்ததையும், நிஜத்தில் நடக்க இயலாத அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டும் மந்திர வலிமை உள்ளவை ஆயிற்றே, தேவதைகள்! யாருக்குத்தான் பிடிக்காது? கூடவே, அதே மந்திர சக்தியால் நம்மை அச்சுறுத்தும் சூன்யக்காரிகளும், பூதங்களும் அப்பப்பா!
பயமும் பிரமிப்பும் கலந்து கிடக்கும் தேவதைக் கதைகளை பக்கத்தை விட்டு கண்ணை அகற்றாமல் புத்தகத்தை படித்து முடித்த பிறகுதான் மற்ற வேலையைப் பார்ப்பார்கள் குழந்தைகள். இது எங்களைப் போன்றவர்கள் குழந்தையாக இருந்த காலம். இப்போதோ டிஸ்னி டி.வி-களும், சுட்டி டி.வி-களும் வந்துவிட்டன. ஹோம் ஒர்க்கும், படிக்க வேண்டிய பாடங்களும் வேறு அதிகம். கதைப் புத்தகம் படிக்க ஏது நேரம்? என்று கேட்கலாம். ஆனால் ஆச்சர்யம்! என்னதான் போட்டிகள் வந்தாலும் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறையவில்லை. இதற்கு, போட்டி போட்டுக்கொண்டு விற்கும் நூல்களே சாட்சி.
படிக்கும்போது மூளையின் நியூரான்கள் தூண்டப்படுகின்றன, கற்பனைத் திறன் விரிவடைகிறது என்கிறது அறிவியல் ஆய்வு. அத்துடன், படிப்பவர்களின் ரசனையும், படைப்பாற்றலும்கூட அதிகரிக்கிறது. ஆகையால், நல்ல புத்தகங்களை தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிமுகப்படுத்தி வைத்து அவர்கள் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும். விவரம் தெரிந்தவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் Ôயாரும் சொல்லாத தேவதைக் கதைகள்Õ என்ற இந்த நூல், உங்கள் குழந்தைகளுக்கு உற்ற நண்பனாக விளங்கும் என்பது உறுதி.
சின்ட்ரெல்லா, ஸ்நோ ஒயிட், தூங்கும் இளவரசி, தவளை இளவரசன் போன்ற தேவதைக் கதைகள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் பலருக்கும் அதிகம் தெரியாத, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அற்புதமான கதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலில் தேவதைக் கதைகள் மட்டுமல்ல, நாடோடிக் கதைகள் என்ற வகையிலான கதைகளும் இடம் பெற்றுள்ளன. இதேபோல் சிறு குழந்தைகளுக்கான கதைகளும் உள்ளன, சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கான கதைகளும் உள்ளன. ஓநாயும் ஏழு ஆட்டுக்குட்டிகளும், ஏழு வராகன் போன்றவை முதல் ரகத்தையும், உயிர்காப்பான் தோழன், கொலையும் செய்வாள் பத்தினி போன்றவை இரண்டாவது ரகத்தையும் சேர்ந்தவை.
நம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி மற்றும் ஒழுக்கம் முதலிய நல்ல பண்புகளை வலுக்கட்டாயமாக போதிக்காமல், போகிற போக்கில் குழந்தைகளின் மனத்தில் ஆழப் பதிய வைக்கும் திறன் வாய்ந்தவை இதுபோன்ற குழந்தைக் கதைகள். இந்தக் கதைத் தொகுப்பிலும் அத்தகு தகுதி வாய்ந்த கதைகள் இருக்கின்றன.
இந்தக் குழந்தைக் கதைகளை நான் எழுதத் தொடங்கியது எனது குழந்தைகளால்தான். குறிப்பாக நான்காவது படிக்கும் எனது மகள் மஹதா தினந்தோறும் கதை சொல்லச் சொல்லி நச்சரிப்பாள். ஏற்கெனவே சொன்ன கதையை எப்போதாது திரும்பச் சொன்னால் இது எனக்குத் தெரியும் என்று வேறு புதுக் கதை கேட்பாள். எட்டாவது படிக்கும் எனது மகன் நவீன்குமாரும் அவளோட45678sa சேர்ந்துகொள்வான். இதனால் எனது சரக்கு தீர்ந்துபோய் புதிய தேடல் தொடங்கியது.
அவ்வாறு நான் மீண்டும் குழந்தைகளுக்கான தேவதைக் கதைகள், நாடோடிக் கதைகள், சிறுவர் கதைகளைத் தேடிப் பிடித்து படித்தபோது பல மேலைநாட்டுக் கதைகள்