Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theeyai Theendiya Thendral
Theeyai Theendiya Thendral
Theeyai Theendiya Thendral
Ebook152 pages35 minutes

Theeyai Theendiya Thendral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரம்யா அழகான ஒரு இளம் பெண். அவளிடம் ஒரு இளைஞன் தன்னுடைய காதலை தெரிவிக்கிறான். அவள் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை அவனுடன் பகிர்ந்து கொள்கிறாள். ரம்யா புதிய காதலை ஏற்பாளா? அல்லது தன்னுடைய பழைய வாழ்க்கைக்கே திரும்புவாளா? என்பதை உணர்ச்சிபூர்வமான இந்த நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106145
Theeyai Theendiya Thendral

Read more from R. Sumathi

Related to Theeyai Theendiya Thendral

Related ebooks

Reviews for Theeyai Theendiya Thendral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theeyai Theendiya Thendral - R. Sumathi

    http://www.pustaka.co.in

    தீயைத் தீண்டிய தென்றல்

    Theeyai Theendiya Thendral

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    முன்னுரை

    ரம்யா அழகான ஒரு இளம் பெண். அவளிடம் ஒரு இளைஞன் தன்னுடைய காதலை தெரிவிக்கிறான். அவள் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை அவனுடன் பகிர்ந்து கொள்கிறாள். ரம்யா புதிய காதலை ஏற்பாளா? அல்லது தன்னுடைய பழைய வாழ்க்கைக்கே திரும்புவாளா? என்பதை உணர்ச்சிபூர்வமான இந்த நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    *****

    அத்தியாயம் 1

    விடியல்!

    அது, பொழுதின் பிரசவம்.

    மனிதப் பிறப்பு அழுகையில் தொடங்குகிறது!

    இயற்கையின் பிறப்பு ஆனந்தத்தில் தொடங்குகிறது!!

    அங்கே அம்மாவின் அலறல்.

    இங்கோ குருவிகளின் இன்னிசை.

    திறந்திருந்த ஜன்னல் வழியே புலரும் பொழுதை ரசித்த வண்ணம் படுக்கையில் அமர்ந்திருந்தாள், ரம்யா.

    ரம்யமான அழகு, பொழுது விடியும் கோலத்தில் மட்டும் இல்லை. அந்தக் கோதையின் கோலத்திலும்தான்.

    கலைந்த துகில். அலைந்த முகில் கூந்தல். வளைந்த புருவம். நேர்த்தியான சிலையாய் உருவம். எழில்கொஞ்சும் கண்கள். இலைக்கொழுந்தின் பளபளப்பாய் இதழ்கள். பற்களின் வெண்மை சிரிப்பு. குறு மலைக்குன்றுகளாய் மார்பு. அதில் உருண்டு புரளும் சங்கிலி. அவை அழகின் அணிவகுப்பு.

    விலை உயர்ந்த ஓவியம் போல் உட்கார்ந்திருந்தாள்.

    ரோஜாவை பிரித்துப் பார்ப்பதைப் போல் தன் உள்ளங் கைகளை விரித்துப் பார்த்தாள். பார்த்துக்கொண்டே இருந்தாள்.

    உள்ளுக்குள் சிலிர்த்தது. மேனி வியர்த்தது.

    என்னம்மா... காலையிலே உள்ளங்கையை விரிச்சு பார்த்துக்கிட்டிருக்கே? ஜோசியக் கலை ஏதாவது படிக்கிறியா? என்றபடியே அறைக்குள் நுழைந்தார், ஆதிகேசவன். அவளின் அப்பா.

    ரம்யா நிமிர்ந்தாள். சிரித்தபடியே படுக்கையிலிருந்து இறங்கினாள். விரிந்துகிடந்த கூந்தலை குறுக்கினாள், கொண்டையாக.

    அப்பாவின் அருகே வந்தாள்.

    அப்பா.... கைரேகையைப் பார்த்து, தலையெழுத்தை சொல்றாங்களே... அது தப்புப்பா! கையில இருக்கிற ரேகை ஒருத்தனை உயர்த்தாது. ரேகையே இல்லாத கைதான் ஒருத்தனை உயர்த்தும்.

    ஆதிகேசவன் சிரித்தார்.

    என்னம்மா நீ? ரேகை இல்லாத கை எப்படி ஒருத்தனோட தலையெழுத்தை நிர்ணயிக்கும்னு சொல்றே?

    நான் சொல்லலையே... கீதை சொல்லுது.

    புரிகிற மாதிரி சொல்லும்மா.

    காலையில எழுந்ததும் ஒவ்வொருத்தரும் தன் உள்ளங்கையைப் பார்க்கணும். பார்க்கும்போது உள்ளங்கையில் ரேகை தெரியக்கூடாது. தெரிஞ்சா, அது அழிகிறவரை உழைக்கணும். அப்படி உறுதி எடுத்துக்கிட்டு உழைக்க உழைக்க உள்ளங்கை ரேகை அழிஞ்சுபோகும். அப்படி அழிஞ்சு போன உள்ளங்கை உள்ளவன் கண்டிப்பா உயரத்துல இருப்பான்.

    மகளை ஆச்சரியமாகப் பார்த்தார்.

    எவ்வளவு பெரிய தத்துவம்! கைரேகையை வச்சுக்கிட்டு எதிர்காலத்தைத் தேடி ஜோசியக்காரங்க பின்னாடி சுத்துகிற குருட்டு நம்பிக்கையை கீதை எவ்வளவு அழகா திருத்துது. இளைஞர்கள் இதை தெரிஞ்சுக்கணும்.

    இன்னைக்கு முதன்முதலா வேலையில சேரப்போறேன். நான் நிறைய உழைக்கணும். பெரிய ஆளா ஆகணும். என் சொந்தக்காலில் நிக்கணும். அதனால்தான், எழுந்ததுமே இந்த அற்புதக் கருத்தை நினைச்சுப் பார்த்தேன். மனசுக்குள் தன்னம்பிக்கை பொங்குது.

    மகளை ஆதரவாக அவளுடைய தோளில் தட்டிக் கொடுத்தார்.

    உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும்மா. போய் குளிச்சிட்டு கிளம்பு என்றார்.

    ரம்யா குளியலறை நோக்கி போனாள்.

    ஆதிகேசவன் சமையலறைக்குள் நுழைந்தார். மனைவி அர்ச்சனா சமையலில் ஈடுபட்டிருந்தாள்.

    அர்ச்சனா, சமையல் தயாரா?

    என்னங்க நீங்க? இப்பத்தான் காப்பிக்கே பால் காய்ச்சி இருக்கேன். அதுக்குள்ள சமையல் ஆயிட்டான்னு கேட்கிறீங்க? என்றாள், சிரித்தபடி.

    இன்னிக்கு ரம்யா முதன்முதலா வேலைக்குப் போறா. சீக்கிரம் சமையலை முடி. முதல்நாளே தாமதமா போனா தப்பு.

    சரிங்க.

    நான் வேணா உனக்கு உதவி பண்ணட்டுமா?

    ஐய்யோ... வேண்டாம் சாமி. பொண்ணு முதல்முதலா வேலைக்குப் போறா. ஆபீசில் போய் நல்லபடியா வேலை பார்க்கணும்.

    சரி... நான் பிள்ளையார் கோவிலுக்குப் போய் ரம்யா பேரில் அர்ச்சனை பண்ணிட்டு வர்றேன் என நகர்ந்தார்.

    ரம்யா குளித்துவிட்டு வந்தாள்.

    அம்மா சூடாக காப்பி கொடுத்தாள். மணக்கும் காப்பியை பருகியபடியே...

    அப்பா எங்கேம்மா? என்றாள்.

    அப்பா உன் பேருக்கு அர்ச்சனை பண்ண போயிருக்கார். சரி, என்ன சாப்பாடு பண்ண?

    பொங்கல் பண்ணும்மா.

    சரி.

    காப்பி தம்ளரை கழுவி வைத்துவிட்டு, தன் அறைக்குள் நுழைந்தாள். எளிமையாக அலங்காரம் செய்து கொண்டாள்.

    ரோஜா நிற பருத்தி சுடிதாரை அணிந்தாள். கூந்தலை உயர்த்திக் கட்டினாள்.

    சாப்பிட்டு முடித்து, அம்மா கொடுத்த 'டிபன் பாக்சை' வாங்கிக்கொண்டு கிளம்பியபோது, அர்ச்சனை செய்த தட்டோடு அப்பா வந்தார்.

    இந்தாம்மா... விபூதி - குங்குமம் எடுத்துக்க. உன் பெயருக்கு அர்ச்சனை செய்துட்டு வர்றேன்.

    அர்ச்சனைத் தட்டை அவளிடம் நீட்டினார். அவள் விபூதி - குங்குமம் எடுத்துக்கொண்டாள்.

    அப்பா - அம்மா, நான் வர்றேன்.

    சரிம்மா! வேலை உத்தரவை எடுத்துக்கிட்டியா?

    எடுத்துக்கிட்டேன்ப்பா.

    சரிம்மா. பத்திரமா போயிட்டு வா.

    சரிப்பா, வர்றேன்.

    தெருமுனைக்கு வந்து, பேருந்து ஏறினாள்.

    பேருந்தில் கூட்டம் அதிகமிருந்தது. ஆண்கள் இடித்து விடாதவாறு பெண்கள் பக்கமாக ஒதுங்கி நின்றாள்.

    சரியாய் ஐந்து நிமிடம் கழித்து நடத்துநர் இடித்துப் புடைத்துக்கொண்டு அவளிடம் வந்தார்.

    டிக்கெட்... டிக்கெட்...

    அவசரமாக பையைத் திறந்து, கையை விட்டவள் அதிர்ந்தாள். பர்சை காணவில்லை.

    *****

    அத்தியாயம் 2

    திக்கென்றது.

    பை முழுவதும் துழாவினாள். 'யாராவது பையில் பிளேடு போட்டுவிட்டார்களோ?'

    அப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1