Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarvai Ondre Poothume
Paarvai Ondre Poothume
Paarvai Ondre Poothume
Ebook117 pages40 minutes

Paarvai Ondre Poothume

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல திறமைகளைக் கொண்ட வாசு பெண்வேடமிட்டு மேடையின் நடிப்பைக்கண்டு தன் பாராட்டின் அடையாளமாக பெண் என நினைத்து முத்தமிடுகிறாள் ரஞ்சனி. பின் கல்லூரியின் கேளியும் கிண்டலுக்கும் ஆளாகி பின் காதலிலும் விழுகிறார்கள். ரஞ்சனிக்கு வாசுவின் மிமிக்கிரி என்றாள் கொள்ளைப் பிரியம்.
ரஞ்சனியின் அக்கா கற்பகத்தின் கல்யாணத்திற்கு கிளம்பும்போது தன் காதலையும் அப்பாவிடம் தெரிவித்துவிட முடிவு செய்கிறாள். அப்பாவின் உடல்நிலை அறிந்து கல்யாணத்திற்கு முதல்நாள் தன் மாமாவிடம் தன் காதலையும் வாசு உங்கள் தூரத்து சொந்தம்தான் எனவும் தெரிவிக்கிறாள்.
கல்யாண மாப்பிள்ளையான கந்தவேல் வாசுவை சந்தித்து திரும்பும்போது கந்தவேலுக்கு லாரியில் மோதி ஆக்ஸிடெண்ட் ஆகிறது தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்து மருத்துவமணையில் இருக்கிறார்.
ஆனால் குறித்த நேரத்தில் திருமணமும் நடக்கிறது
கற்பகத்தின் வாழ்க்கைதுணை யார்? ரஞ்சனி வாசுவின் காதலுக்கு பச்சை கொடி வருமா? வாசு கந்தவேல் சந்திப்பில் என்ன நடந்தது?
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106170
Paarvai Ondre Poothume

Read more from R. Sumathi

Related to Paarvai Ondre Poothume

Related ebooks

Reviews for Paarvai Ondre Poothume

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarvai Ondre Poothume - R. Sumathi

    http://www.pustaka.co.in

    பார்வை ஒன்றே போதுமே

    Paarvai Ondre Poothume

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ரஞ்சனி சிரமமாய் கண்களைத் திறந்தாள். கசக்கினாள்.

    இயல்பாய் பார்வை சுவரில் படிந்திருந்த கடிகாரத்தின் மீது படிந்தது.

    சரியாய் மணி ஐந்து. போர்வையை உதறிவிட்டு எழுந்தாள்.

    பக்கத்துக் கட்டிலில் மாயா ஒயிலாய் படுத்திருந்தாள். தலையணை நழுவி தரையில் கிடந்தது. இரவு உடை முழங்கால் வரை ஏறிக் கால்கள் கவர்ச்சி காட்டின.

    அவிழ்ந்து இடைவரை பரவி அடர்ந்து கலைந்து கிடந்த கூந்தலை மொத்தமாய் சுருட்டி கொண்டையாக்கிக் கொண்டு, ரஞ்சனி சன்னல் அருகே வந்தாள்.

    சென்னை நகரம் விடியலுக்குரிய வேலைகளில் இறங்கியிருந்தது கம்பிகளின் வழியே தெரிந்தது.

    தேநீர்க் கடைகளில் காலை சுறுசுறுப்பு சூடாக இருந்தது. அந்த மகளிர் விடுதியை ஒட்டியிருந்த மாரியம்மன் கோவிலில் பூஜை மணி அடிக்கும் ஓசையும், கூடவே ஒலிக்கும் மந்திரமும் அவள் காதில் வந்து விழுந்தன. அந்த ஓசை காலை வேளையில் இனிமையாக இருந்தது.

    சன்னலைவிட்டு வந்தாள். தூங்கிக்கொண்டிருந்த மாயாவின் முதுகைத் தட்டினாள் :

    ஏய்... மாயா எழுந்திரிடி...

    மாயா புரண்டு படுத்தாள். கண்களைத் திறக்காமலே போடி என முனகினாள்.

    ரஞ்சனி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

    வராண்டாவில் கையில் பல் துலக்கும் தூரிகையைப் பிடித்தபடி காலை வணக்கம் சொல்லிவிட்டு இரவு உடையுடன் கடந்தன பக்கத்து அறைப் பாவைகள்,

    ரஞ்சனி கட்டை சுவரோரம் வந்து நின்றாள். கீழே பார்த்தான்.

    கீழே உதிர்ந்திருந்த இரவுப் பூக்கள் பனியில் மண்ணில் அழுத்திக் கிடந்தன. கைக்கெட்டும் தொலைவில் தூங்குமூஞ்சி மரத்தின் பூக்கள் பூனைக்குட்டியின் முடியாய் மலர்ந்திருந்தன.

    எட்டிப் பறித்தாள், கொத்துப் பூவை.தூரிகையின் முலையைப் போல் அதன் மென்மையை கன்னத்தில் உரசி மகிழ்ந்தான். விரலால் மெல்ல வருடினாள். தொட்டால் கசங்கிவிடுமோ, விரலோடு வந்துவிடுமோ என பயந்தாள்.

    கீழே, மனித வாழ்க்கையின் தத்துவத்தை தினம் தினம் சொல்லும் ஓலைகளையும், மலர்களையும் கூட்டித் தள்ளிக்கொண்டிருந்தாள், ஆயா.

    சற்றே நிமிர்ந்து பார்க்கக் காப்பாளரின் அறை தெரிந்தது. அவர் காலங்கார்த்தாலே யாரையோ மிரட்டும் ஒலி கேட்டது.

    ரஞ்சனி மீண்டும் அறைக்குள் வந்தபோது மாயா இன்னும் உறங்கிக்கொண்டிருந்தாள்.

    ஏய்... மாயா... எழுத்திரிடி அவளை உலுக்கினாள்.

    மாயா சுத்தமாய்க் கண்களைத் திறந்து சத்தம் போட்டாள்.

    ஏண்டி என் உயிரை வாங்கறே... காலையிலகாட்டியும் என் வாயால சாபம் வாங்காதே... தூரப் போடி... என கத்திவிட்டு, அப்படியே குப்புறப் படுத்துக்கொண்டாள்.

    விலகிப்போன பற்பசையும் தூரிகையும் ரஞ்சனி எடுத்துக்கொண்டு. பெட்டியிலிருந்து உள்பாவடையையும், துண்டையும் எடுத்துக்கொண்டு, மீண்டும் மாயாவைப் பார்த்தாள். சரியான தூங்குமூஞ்சி! இராத்திரியெல்லாம் வெட்டிமுறிச்ச மாதிரி. என்று முணுமுணுத்தவாறே அவளைக் கடந்தாள்.

    அவளின் உடை எதிலோ மாட்டிக்கொண்டு மேற்கொண்டு நடக்கவிடாமல் தடுத்தது. திரும்பினாள். மாயா, காலை நீட்டி கால் விரல்களால் அவளின் உடையைப் பிடித்து இழுத்தாள்.

    ச்சை... விடுடீ... என உதறினாள், ரஞ்சனி. உதறிவிட்டு அடுத்த அடி எடுத்து வைத்தவளை தாவி அணைத்தாள், மாயா.

    என்ன கேட்டே? இராத்திரியெல்லாம் வெட்டி முறிச்சியான்னு தானே.

    ஆமா, கேட்டேன். என்ன வெட்டி முறிச்சே? என்றாள், ரஞ்சனி. இராத்திரி நானாவது பன்னிரண்டு மணி வரைக்கும் படித்தேன். நீ என்ன செஞ்சே? எட்டு மணிக்கெல்லாம் நல்ல குறட்டை."

    ஆமா, தூங்கிட்டேன். ஆனால் படிக்கலைன்னு யார் சொன்னா? நான் படித்தேன்.

    இதைக் கேட்ட ரஞ்சனி கலகலவென சிரித்தாள்.

    தூக்கத்திலேயே படிச்சியா?

    ஆமா. தூங்கிக்கிட்டே படித்தேன். என்ன பாடம் படித்தேன்னு கேட்குறியா? காதல் பாடம்.

    ச்சை...! கன்றாவி! காலையிலக் காட்டியும் தொடங்கிட்டியா?

    மாயாவின் கைகளை விலக்கினாள், ரஞ்சனி.

    யார் பாடம் சொல்லிக் கொடுத்தாங்கன்னு கேட்க மாட்டியா? செல்லமாய் சிணுங்கினாள், மாயா.

    அவதியாய் நெளிந்தாள் ரஞ்சனி. ஆளை விடமாட்டாயே... உம்... யார் பாடம் சொல்லிக் கொடுத்தா? அதையும் சொல்லிவிடு அலட்சியமாய்க் கேட்டாள்.

    வாசு... வாசுதேவன்.

    மறுகணம் ரஞ்சனியின் முகம் கோபக்கனல் வீசியது.

    மாயா... காலையிலக் காட்டியும் ஏன் என்னைப்படுத்தி எடுக்கிற. விடு... என எரிந்து விழுந்தாள்.

    அவளிடமிருந்து விலகிக்கொண்ட மாயா சோம்பல் முறித்தவாறே –

    நீ நம்பலை இல்லே? வாசு என் கனவில் வந்து இராத்திரி பூரா எனக்குக் காதல் பாடம் நடத்தினதை நீ நம்பலைதானே. நம்பமாட்டே. எப்படி நம்புவே? அவன்தான் உன் கனவில் வந்து உனக்கு காதல் பாடம் நடத்தியிருப்பானே மாயா கண்ணை சிமிட்டினாள்.

    ரஞ்சனிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நிறுத்து! என்ன உளர்றே.

    யேய்... யேய்... நடிக்காதே! எங்க உன் மனசைத் தொட்டு சொல்லு. இராத்திரி வாசு உன் கனவில் வரலை?

    மாயா அவள் மார்பில் கைவைக்க, ரஞ்சனி தட்டிவிட்டாள்.

    அவள், மிக அருகே நெருங்கி முகத்துக்கு நேரே அப்படிக் கேட்டதும் ஒரு கணம் தடுமாறினாள், ரஞ்சனி.

    Enjoying the preview?
    Page 1 of 1