Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meeravin Kannan Meeravidamey!
Meeravin Kannan Meeravidamey!
Meeravin Kannan Meeravidamey!
Ebook105 pages37 minutes

Meeravin Kannan Meeravidamey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமுதாயம் என்றிருந்தால் நல்லதும் கெட்டதும் நடப்பது சகஜம்தான். அதை சாதாரண மக்களாகிய நாம் இழுத்து நம் மூளையில் பதியம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யதேச்சையாக நடந்த ஒரு விஷயத்தை தன் வாழ்க்கையோடு இழுத்துப் போட்டுக் கொண்டு கதாநாயகிபடும் அவஸ்தைதான் இந்த நாவல். வாருங்கள் வாசித்து அறிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateSep 11, 2023
ISBN6580137109466
Meeravin Kannan Meeravidamey!

Read more from R. Sumathi

Related authors

Related to Meeravin Kannan Meeravidamey!

Related ebooks

Reviews for Meeravin Kannan Meeravidamey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meeravin Kannan Meeravidamey! - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மீராவின் கண்ணன் மீராவிடமே!

    Meeravin Kannan Meeravidamey!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அலாரம் அடிப்பதற்கு முன்பே விழிப்பு வந்துவிட்டது மதுவிற்கு. பக்கத்திலிருந்த அலாரம் க்ளாக்கைப் பார்த்தாள். ஐந்தாவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ‘அலாரம் அடிக்கட்டும் எழலாம்’ என்று நினைத்தவாறே மறுபடி கண்களை மூடிக் கொண்டாள்.

    இமைகளை அவள் மூடிய அதே நிமிடம் ‘ங்... கா... ங்கா...’ என்ற அந்த சத்தம் கேட்டது. பூனை கத்துவதைப் போல் முதலில் கவனத்தை ஈர்க்காத அந்த சத்தம் போகப் போக பெரிதானபோது...

    அது பிறந்த குழந்தையின் சத்தம் என புரிந்தது.

    மிக அருகே தெளிவாகக் கேட்டது. ‘ங்... கா... ங்கா... ங்கா...’ ‘புரண்டு படுத்தாள்.

    ‘யாருடைய குழந்தை இப்படி அழுகிறது?’

    அக்கம் பக்கத்தை நினைத்துப் பார்த்தாள். அக்கம் பக்கம் யார் வீட்டிலும் கைக்குழந்தை இல்லை.

    பக்கத்து வீடு வக்கீல் வீடு. பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிறார்கள். எதிர்வீடு டீச்சர் வீடு. அங்கே ஆறாவது ஏழாவது படிக்கும் பிள்ளைகள், யாராவது விருந்தினர் வந்திருப்பாரோ...? அவர்களுடைய குழந்தையாக இருக்கலாம்.

    அழும் குழந்தையின் குரலோடு சேர்ந்து அதை ஆறுதல்படுத்தும் குரல் கேட்கவில்லை. ‘இப்படி குழந்தையை அழவிட்டுவிட்டு அம்மாக்காரி என்ன செய்கிறாள்? தூங்குகிறாளோ? அம்மா தூங்கினாலும் வீட்டில் யாருமே இல்லையா?’

    அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அழுகுரல் அதிகமானது. அவளால் படுக்க முடியவில்லை அதற்கு மேல் எழுந்துவிட்டாள்.

    பக்கத்தில் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் முகுந்தனைப் பார்த்தாள்.

    ‘காதை கிழிக்கும் அந்த சத்தம் இந்த மனிதனை எதுவும் பண்ணவில்லை பார். உலகமே இடிந்து விழுந்தாலும் உணராமல் உறங்கிக் கொண்டிருக்கும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன’ என நினைத்தபோது அந்த ஜென்மங்களில் ஒருத்தியாக அந்த குழந்தையின் தாய் இருப்பாளோ என்று தோன்றியது.

    அவளால் அந்த பச்சிளம் குழந்தையின் அழுகையை பொறுக்க முடியவில்லை.

    வேகமாக சென்று அந்த குழந்தையின் தாயை பளார் பளார் என அறைய வேண்டும் போலிருந்தது.

    அறையைவிட்டு வெளியே வந்தாள். இப்பொழுது குழந்தையின் அழுகுரல் மிக அருகில் கேட்டது.

    அந்த வீட்டுக்குள்ளேயே ஒலிப்பதைப் போலிருந்தது.

    ‘என்ன இது? வீட்டிற்குள்ளேயே குழந்தை அழும் குரல் கேட்கிறது?’ முதன்முறையாக மெல்லிய அதிர்வோடு கூடத்தில் வந்து நின்றாள். வாசல்கதவை ஒட்டி... கதவிற்கு வெளிப்புறமிருந்து வந்தது. ‘கதவிற்கு மறுபுறம் குழந்தை அழுகிறது. என் வீட்டு வாசலில் குழந்தை சத்தம்.

    இத்தனை விடிகாலையில் குழந்தையை அழவிட்டு இங்கே யார் உட்கார்ந்திருப்பது?’

    அவசரமாக கதவைத் திறந்தவள் பெரிதாக அதிர்ந்தாள். அப்பொழுதுதான் பிறந்த குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு செக்கச் சிவந்த ரோஜாவாக... இன்னும் முகம் சிவக்க ‘வீர்... வீர்ரென’ கத்திக் கொண்டிருந்தது. பார்த்ததுமே ஏனோ உடம்பு முழுவதும் நடுக்கம் உண்டானது. ‘வெட... வெடவென’ கைகள் நடுங்கின.

    ‘குழந்தை... கடவுளே! இப்பொழுதுதான் பிறந்த குழந்தை. யார் கொண்டு வந்து போட்டது.’ மேற்கொண்டு எதுவுமே யோசிக்க முடியாமல், தடதடவென உள்ளே ஓடினாள்.

    என்னங்க... என்னங்க...

    சர்ரென முகுந்தனின் மேலிருந்த போர்வையை இழுத்து எறிந்தாள். அவளுடைய வித்தியாசமான அலறலில் திடுக்கிட்டு விழித்தவன் போர்வைபோன இடம் தெரியாமல் வெறும் உள்ளாடையுடன் கிடப்பதைக் கண்டு,

    ச்சீ... வெக்கம் கெட்டவளே... அறிவில்லை உனக்கு? என்று கத்தினான்.

    என்னங்க... எழுந்திரிங்க...

    ஏன் இப்படி அலறுறே? மணி ஆறாயிடுச்சா?

    என்னங்க வாசல்ல வந்து பாருங்க.

    என்ன வாசல்ல என்றவன் வீரிட்டு அழும் குழந்தையின் குரலைக் கேட்டு முகம் மாறினான்.

    என்ன நம்ம வீட்ல குழந்தை சத்தம் கேட்குது? யாராவது வந்திருக்காங்களா?

    அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க? நம்ம வீட்டு வாசல்ல இப்பத்தான் பிறந்த மாதிரி ஒரு குழந்தை கிடக்கு.

    என்னது? குழந்தை கிடக்கா? என்ன சொல்ற நீ? அவசரமாக எழுந்து நழுவிக் கிடந்த லுங்கியைக் கட்டிக்கொண்டு முன்னே ஓடும் அவன் பின்னால் ஓடினாள். வாசலில் காலையும் கையையும் உதைத்துக் கொண்டு அழும் குழந்தையைப் பார்த்து அதிர்ந்தான்.

    என்னது? பிறந்த குழந்தையை ஏதோ பால் பாக்கெட்டை வீட்டு வாசல்ல போட்டுட்டு போறமாதிரி யாரோ போட்டுட்டு போயிருக்காங்க...

    என்னங்க... எனக்கு கைகாலெல்லாம் நடுங்குது வியர்த்துக் கொட்டியது மதுவிற்கு.

    என்னங்க... நான் பக்கத்து வீட்டு அக்காவைக் கூட்டிட்டு வர்றேன்.

    மது பக்கத்து வீட்டிற்கு ஓடினாள். அழைப்பு மணியில் கைவைத்து பலமுறை அழுத்தினாள்.

    கதவு திறந்து தூக்கக்கலக்கத்துடன் தென்பட்டவளிடம் "அக்கா... அக்கா அங்க வந்து பாரேன். என்வீட்டுவாசல்ல ஒரு குழந்தை

    Enjoying the preview?
    Page 1 of 1