Therodi Ointha Theru
()
About this ebook
"தேரோடி ஓய்ந்த தெரு". குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, ஆன்மீகக் கதை என்று பல்வேறு வகை கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் "தேரோடி ஓய்ந்த தெரு" என்னும் ஆன்மீகக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், சமூக வாழ்வில் இறைவன் எந்த ரூபத்திலும் வந்து மக்களைக் காப்பான் என்னும் தத்துவத்தை இக்கதையின் மூலமாகக் கூறியுள்ளேன். இப்பூவுலகின் ஒவ்வொரு அசைவும் அவனாலேயே நிகழ்த்தப்படுகின்றது என்பதை எல்லோரும் உணர முடியும் விதமாய் ஒரு நாயைக் கொண்டு எடுத்துரைத்துள்ளேன். இதே வகையில்தான் "ஒரு அயர்ன் பாக்ஸும் குலதெய்வமும்" கதையிலும் குல தெய்வத்தின் பெருமையைக் கூறியுள்ளேன்.
Read more from Mukil Dinakaran
Thanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Saathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Anbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsPoochuduthe En Vaalibam! Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Sumanthu Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsSaami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsIni Ellam Sugame! Rating: 3 out of 5 stars3/5Irandaam Manaiviyagiya Naan... Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Pooparikkum Devathaiyum Neethan Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratings
Related to Therodi Ointha Theru
Related ebooks
Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsValar Sirai Maatram Rating: 0 out of 5 stars0 ratingsTerror, Death, Devil Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vettai Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Theerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsAattru Manal Pathaiyil Rating: 0 out of 5 stars0 ratingsஎல்லைக் கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Kiligalai Parakka Vidungal Rating: 0 out of 5 stars0 ratingsKarunaagapura Giraamam Rating: 0 out of 5 stars0 ratingsகருநாகபுர கிராமம் Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 5 out of 5 stars5/5Ippadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsTamil Selvi Rating: 0 out of 5 stars0 ratingsUrugi Odum Mezhugugal Rating: 5 out of 5 stars5/5Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsMeeravin Kannan Meeravidamey! Rating: 0 out of 5 stars0 ratingsKolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Thoda Mudiyatha Uyarangal Rating: 0 out of 5 stars0 ratingsSumai Thaangi Rating: 0 out of 5 stars0 ratingsEn Swasa Kaattre... Rating: 0 out of 5 stars0 ratingsKaathiru, Kaadhalikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsOru Roja Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Ninaivennum Sannathiyil? Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsவானமடி நீ எனக்கு... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Therodi Ointha Theru
0 ratings0 reviews
Book preview
Therodi Ointha Theru - Mukil Dinakaran
https://www.pustaka.co.in
தேரோடி ஓய்ந்த தெரு
(சிறுகதை தொகுப்பு)
Therodi Ointha Theru
(Sirukathai Thoguppu)
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
தேரோடி ஓய்ந்த தெரு
நம்பிக்கை என்னும் சோப்பு
கண்ணீர் சொல்லும் நன்றி
கடவுள் வருவார்
சில நிஜங்கள்
ஒரு அயர்ன் பாக்ஸும் குலதெய்வமும்
இன்னும் இருக்கு மனிதாபிமானம்
இந்த சந்தோஷமாவது நிலைக்கட்டும்
மாற்றம் தந்த திறனாளி
காதல் நம்பிக்கை
இரட்டை வடம் சங்கிலி
நியதிகளின் நேர்கோட்டில்
எல்லாம் உங்களுக்காக
அம்மா பழைய டைப்
அன்புச் சங்கிலி
இதுவும் ஆக்ஸிடென்ட் தான்
மண்ணின் மைந்தர்கள்
முள்ளை உள்ளே வைத்தாய்
முந்திச் செல்லும் சந்ததிகள்
என்னுரை
இணைய தளத்தில் வெளியாகும் என்னுடைய 8-வது சிறுகதைத் தொகுப்பு தேரோடி ஓய்ந்த தெரு.
குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, ஆன்மீகக் கதை என்று பல்வேறு வகை கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் தேரோடி ஓய்ந்த தெரு
என்னும் ஆன்மீகக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், சமூக வாழ்வில் இறைவன் எந்த ரூபத்திலும் வந்து மக்களைக் காப்பான் என்னும் தத்துவத்தை இக்கதையின் மூலமாகக் கூறியுள்ளேன். இப்பூவுலகின் ஒவ்வொரு அசைவும் அவனாலேயே நிகழ்த்தப்படுகின்றது என்பதை எல்லோரும் உணர முடியும் விதமாய் ஒரு நாயைக் கொண்டு எடுத்துரைத்துள்ளேன். இதே வகையில்தான் ஒரு அயர்ன் பாக்ஸும் குலதெய்வமும்
கதையிலும் குலதெய்வத்தின் பெருமையைக் கூறியுள்ளேன்.
ஒரு சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் கதைகள் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தோ, படிப்பினையோ எடுத்துரைக்கப்படுமானால் அத்தொகுப்பு முழுமையான வரவேற்பை நிச்சயம் பெறும். அதே நேரம் அவ்வாறு எடுத்துரைக்கப்படும் கருத்து பூடகமாகவோ, கடின வார்த்தைகள் மூலமாகவோ, எடுத்துரைக்கப்படும் போது அவை பாமர மக்களைச் சென்றடைவதில் சிறு தள்ளாட்டம் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்கும் எண்ணத்திலேயே இத்தொகுப்பின் எல்லாக் கதைகளும் சாதாரண வழக்கு மொழியிலேயே புனையப்பட்டுள்ளன.
முதியோர் இல்லத்தின் இன்னொரு பரிமாணத்தை, சில நிஜங்கள்
என்னும் கதை மூலமாகவும், கணவன் மனைவி உறவில் சந்தேகம் என்னும் விஷச்செடி எந்தக் காலத்திலும் துளிர் விடக் கூடாதென்பதை நம்பிக்கை என்னும் சோப்பு
கதையின் வாயிலாகவும்,
நிதானமாய் வாசியுங்கள். நிச்சயம் நெகிழ்வூட்டும்.
வணக்கம்.
இவண்,
முகில் தினகரன்
கோயமுத்தூர்
95977 08460
தேரோடி ஓய்ந்த தெரு
மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியவன், சாக்கடைக் குழிக்கு அருகே அந்த ஏரியா மக்கள் கும்பலாய் நின்று எதையோ ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க, பைக்கை ஸ்டாண்ட் போட்டபடியே மைதிலியிடம் கேட்டேன். எல்லோரும் என்ன பார்த்திட்டிருக்காங்க?
அதுவா...? இங்க சுத்திக்கிட்டிருந்ததே வெள்ளை நாய்... அது அந்த டிச்சுக்குள்ளார குட்டிகளைப் போட்டு வெச்சிருக்கு...
அவ்வளவுதானே?
சாதாரணமாய்ச் சொல்லி விட்டு நான் திரும்ப ஏழு குட்டிங்க... எல்லாமே பால் வெள்ளை நிறத்தில் சும்மா பளீர்ன்னு மின்னுதுங்க
என்றாள் மைதிலி.
அப்படியா?
எனக்குள்ளும் ஆர்வம் விளைய, நானும் அந்த கும்பலை நோக்கி நடந்தேன். மைதிலி சொன்னது சத்தியமான உண்மை. குட்டிகளின் அழகு கண்ணைப் பறித்தது. மனதைக் கொள்ளை கொண்டது. அட இந்த நாய்தான் ஆகட்டும், வேற ஏதாவதொரு பாதுகாப்பான இடத்துல குட்டி போட்டிருக்கக் கூடாதா...? இப்படியா வந்து டிச்சுக்குள்ளார போட்டு வைக்கும்?
யாரோ ஒருவன் சொல்ல,
அதனாலென்ன...? இந்த டிச்சுல என்ன சாக்கடைத் தண்ணியா ஓடுது...? இதுக்கு மேலே வீடுகளே இல்லாததால் இந்த டிச்சுக்கு சாக்கடைத் தண்ணி இப்போதைக்கு வர வாய்ப்பேயில்லை...! ஈரம் துளிக்கூட இல்லாமல் எப்பவும் வறண்டே கிடப்பதால்தான் வெவரமா இந்த நாய் இந்த டிச்சுக் குழிக்குள்ளார குட்டிகளைப் போட்டிருக்கு
என்றான் இன்னொரு அறிவு ஜீவி. ஆனால். அவன் சொன்னது ஒருவகையில் உண்மைதான். என் வீட்டிற்கு இடப்புறம் வீடுகள் எதுவும் இன்னமும் கட்டப் படாமல் காலி இடமாகவே இருப்பதால்... அந்த காலி இடங்களைக் கடந்து வரும் சாக்கடைக் குழிகள் ஈரம் காணாமல் வறண்டேயிருக்கும்.
பலர் தன் குட்டிகளை வேடிக்கை பார்ப்பதில் அந்த தாய் நாய்க்குப் பெருமை. வாலை ஆட்டிக் கொண்டே குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டு கிடந்தது. குட்டிகள் முண்டியடித்துக் கொண்டு பாலருந்துவதை... கூட்டம் ரசித்து மகிழ்ந்தது. கூட்டத்திலிருந்த கல்லூரி மாணவியொருத்தி தன் மொபைல் போனில் அந்தக் காட்சியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள். நாளை முகநூலில் பதிவிட்டு நிறைய லைக்குகளை அள்ள வேண்டும் என்பது அவள் ஆசை. அட தேவுடா... இப்படியும் சிலதுக...
யாராச்சும் எடுத்திட்டுப் போய் வளர்த்துங்கப்பா
அந்த மளிகைக்கடை பால்ராஜ் சொல்ல, யாரும் முன் வரவில்லை. அழகை ரசிக்கும் கண்கள் இருந்தும் அதுகளை வளர்க்கும் உள்ளம் இல்லை. சிறிது நேரத்தில், ஒவ்வொருவராய்க் கலைந்து போக, நானும் திரும்பினேன்.
நடு நிசி. தாய் நாயின் ஹீனக் குரல் என்னை உசுப்பி விட திடுக்கிட்டுக் கண் விழித்தேன். அது ஒரு கதறலாக ஒலித்தது. மெல்ல எழுந்து படுக்கையிலேயே அமர்ந்து பக்கத்திலிருந்த மைதிலியை எழுப்பினேன். என்னங்க... என்னாச்சு?
பதட்டமாய்க் கேட்டாள் அவள். ஸ்ஸ்ஸ்ஸ்
என்று என் வாய் மீது விரலை வைத்து அவளை அமைதி காக்க வைத்தேன். அவளும் தன் வாயை உள்ளங்கையால் பொத்திக் கொண்டு காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு தாய் நாயின் கதறலைக் கேட்டாள்.
பின்னர் புருவங்களை மட்டும் உயர்த்தி என்ன?
என்று கேட்டாள். இப்போது அந்த தாய் நாயின் கதறல் என் வீட்டு வாசலில் ஒலிக்க எழுந்து போய் போர்ட்டிகோ லைட்டைப் போட்டுக் கொண்டு வாசற் கதவைத் திறந்தேன். வெளியே பேய் மழை. ஓ... மழைல குட்டிக நனையுதுன்னுதான் கத்துதா?
என்று நான் சொல்ல மைதிலி என்னை முந்திக் கொண்டு சென்று சாக்கடைக் குழியைப் பார்த்தாள். சாக்கடை நிறைந்து வேகமாய் ஓடிக்கொண்டிருந்த மழை நீரில் ஏழு குட்டிகளும் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
அய்யய்யோ... குட்டிக தண்ணீல அடிச்சிட்டுப் போகுதுக
கத்தினாள் மைதிலி. அப்போது அக்கம்பக்கத்து வீடுகளில் லைட் போடப்பட எல்லோரும் வெளியே வந்தனர்.
மாலையில் அந்த சாக்கடைக்குள் கிடந்த ஏழு குட்டிகளையும் ரசித்துப் பார்த்த கண்கள் தற்போது பரிதாபமாய்ப் பார்த்தன. த்சொ... த்சொ
அங்கலாய்ப்பு ஒலிகள் ஆங்காங்கே ஒலிக்க. அய்யய்யோ... யாராச்சும் குட்டிகளைக் காப்பாத்துங்களேன்
மூன்றாம் வீட்டுக்காரன் கூவினான்.
அப்ப டிச்சுக்குள்ளார இறங்குங்க... காப்பாத்துங்க
என்றான் இன்னொருத்தன்.
நான் இப்ப சரக்கு போதைல இருக்கேன்... இல்லேன்னா இன்னேரம் இறங்கி எல்லாக் குட்டிகளையும் எடுத்து வெளிய போட்டிருப்பேன்!
உண்மையிலேயே அவர் பேச்சில் குழறல் இருந்தது.
அந்த தாய் நாய் எல்லோர் முகத்தையும் பார்த்துப் பார்த்துக் கத்தியது. யோவ்... சும்மா பார்த்திட்டே நிக்கறீங்களே... யாராவது காப்பாத்துங்கய்யா என்னோட குட்டிகளை
என்று அது கெஞ்சுவது போலிருந்தது அந்தக் கத்தல். ஆனாலும் வாலாட்டல் இருந்து கொண்டேயிருந்தது. உண்மையிலேயே யாருமே இறங்கிக் காப்பாற்ற முடியாத நிலையில்தான் இருந்தது அந்த சாக்கடைப் பள்ளம். இறங்கினால் இறங்கியவரே வழுக்கி விழுந்து விடும் அபாயமும் இருந்தது. மழையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க சாக்கடையில் தண்ணீரின் அளவும் அதிகரித்தது. அதன் வேகமும் அதற்குத் தகுந்தாற்போல் முழு வீச்சாக, குட்டிகளை வேகமாக இழுத்துச் சென்றது.
தாய் நாய் அடித்துச் செல்லும் தன் குட்டிகளைத் துரத்திக் கொண்டே டிச்சின் ஓரத்தில் ஓடியது. ஓடும்போது அது கதறிய கதறல் என் கண்களில் கண்ணீரையே வரவழைத்து விட்டது. வானம் வேறு அவ்வப்போது மின்னல்களையும் இடிகளையும் அனுப்பிக் கொண்டேயிருந்தது.
இறைவா... இத்தனை பேர் இருந்தும் அந்தக் குட்டிகளைக் காப்பாற்றவே முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி எங்க எல்லோரையும் பாவிகளாகி விட்டாயே... இறைவா... இது நியாயமா?
என் மனம் அரற்றியது. என்னைப் போலவே அனைவருமே தங்களால் எதுவும் செய்ய முடியாமல் போனதை நினைத்து வருந்தியபடியே தத்தம் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்.
நான் மட்டும் போகாமல் அந்த தாய் நாய் என்னதான் செய்கிறது பார்ப்போம்? என்கிற எண்ணத்தில் அதன் பின்னால் சென்றேன். அந்தச் சிறிய சாக்கடை ஒரு கட்டத்தில் மெயின் தெருவிலிருக்கும் பெரிய சாக்கடையில் இணைந்து விட குட்டிகள் மொத்தமும் அந்த பெரிய சாக்கடையில் விழுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போயின. நீண்ட நேரம் அங்கே நின்று ஊளையிடுவது போல் கத்திய தாய் நாய் மெல்லத் திரும்பி என்னை ஒரு பரிதாப பார்வை பார்க்க என் மனம் கனத்துப் போனது. ச்சே... நானெல்லாம் என்ன மனிதப் பிறவி?
என்னை நானே திட்டிக்கொண்டு வீடு