Anbil Ullathu Vazhkai
()
About this ebook
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Read more from Mukil Dinakaran
Uyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Mr And Mrs Pei Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Vechurikean Moochu! Rating: 0 out of 5 stars0 ratingsPaaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Theriyavillai Natchathirangal! Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsMannithu Vidu... Magane...! Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsKaatrin Viralgal! Rating: 0 out of 5 stars0 ratingsMalaiyum Avaney!... Mazhaiyum Avaney! Rating: 0 out of 5 stars0 ratingsPaathai Marantha Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vazhga! Rating: 0 out of 5 stars0 ratingsUllil Yeriyuthu Oru Kanal Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mattum Kadanthu Pogathu! Rating: 0 out of 5 stars0 ratingsManasu Valikkuthu Mathumitha! Rating: 0 out of 5 stars0 ratingsSoftware Kuttrangal! Rating: 0 out of 5 stars0 ratingsAnbenum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thedum Odangal Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Puthumai Penn Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsKutram Muthal Kutram Varai Rating: 0 out of 5 stars0 ratingsIni Ellam Sugame! Rating: 3 out of 5 stars3/5Uyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Anbil Ullathu Vazhkai
Related ebooks
Cylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsMannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Natchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsThoorigai Erigindra Poothu…! Rating: 0 out of 5 stars0 ratingsNovember Rathirigal Rating: 5 out of 5 stars5/5Kuliratha Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsNee Thaney En Pon Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Kaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Aah Aah! Rating: 0 out of 5 stars0 ratingsOru Deivam Thantha Veedu…! Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsOru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Malaiyum Avaney!... Mazhaiyum Avaney! Rating: 0 out of 5 stars0 ratingsManakkum Varai Pookadai Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Unakkena Thudikkum Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Naan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsDhanam Rating: 0 out of 5 stars0 ratingsSathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Thanthaiyumanaval Rating: 0 out of 5 stars0 ratingsVanna Poochchudava Vennila Rating: 0 out of 5 stars0 ratingsHello Mister Kaadhala! Rating: 0 out of 5 stars0 ratingsOru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Azhagana Thee Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Anbil Ullathu Vazhkai
0 ratings0 reviews
Book preview
Anbil Ullathu Vazhkai - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
அன்பில் உள்ளது வாழ்க்கை
Anbil Ullathu Vazhkai
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17
அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19
அத்தியாயம் – 20
அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22
அத்தியாயம் – 23
அத்தியாயம் – 24
அத்தியாயம் – 1
அன்றைய விடியல் மற்றவர்களுக்கு எப்படியோ தேவநாதனுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விடியல். அதை அவ்வாறு ஆக்கித் தந்த பெருமை கல்யாணத் தரகர் கண்ணுசாமியையே சாரும்.
அய்யா... நானும் ஒரு தடவை ரெண்டு தடவையல்ல... கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து தடவை நேரிலேயே போய்ப் பேசிட்டு வந்திருக்கேன்!... அப்போதெல்லாம் பிடி கொடுத்தே பேசாதவங்க திடீர்னு நேத்திக்கு அவங்களாகவே கூப்பிட்டு நம்ம சுலோச்சனாவை பொண்ணுப் பார்க்க வர்றோம்!னுட்டாங்க!...
வெற்றிலைக் காவிப்பல் மொத்தமும் தெரியும்படி சிரித்தார் தரகர் கண்ணுசாமி.
அப்படியா?... ரொம்பச் சந்தோஷம் தரகு!... எப்படியும் ரெண்டு மூணு நாளு கழிச்சுத்தானே வருவாங்க?... அதற்குள் வீட்டையெல்லாம் கொஞ்சம் ஒழுங்கு படுத்திடறோம்!
என்றார் தேவநாதன், பார்வையை அங்கிருந்த கச... கசப்பு
க்களின் மீது செலுத்தியவாறு.
அய்யய்ய... அதான் கிடையாது... நாளைக்குக் காத்தால வர்றேங்கறாங்க!
தரகர் வெடுக்
கென்று சொன்னார்.
அடப்பாவமே!
என்ற தேவநாதன் யோசனையுடன் மேவாயைத் தேய்க்க,
இடையில் புகுந்த அவர் மனைவி பார்வதி, அதனாலென்ன?... தாராளமா நாளைக்குக் காத்தாலேயே வரட்டும்!... க்ளீன் பண்ற வேலை ஒரு பெரிய விஷயமில்லை!... ஒரு மணி நேரம் போதும்... கச்சிதமாய்ப் பண்ணிடலாம்!
என்றாள். பாவம், கிட்டத்தட்ட முப்பது வயதை நெருங்கி விட்ட தன் மூத்த மகளை எப்படியாவது அனுப்பினால் போதும் என்பது அவள் நிலை. மூத்தவளுக்கே நீண்ட காலம் இழுத்துக் கொண்டிருந்தால் அடுத்து நிற்கும் சின்னவள் அர்ச்சனாவிற்கு எப்போது ஆரம்பிப்பது?... எப்போது முடிப்பது?... தொடர்ந்து மகன் வேறு இருக்கிறான் அவனுக்கும் காலாகாலத்தில் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிக்க வேண்டுமல்லவா?
சரி தரகு... மேலிடமே சொல்லியாச்சு... அப்புறமென்ன?... நாளைக்குக் காத்தாலேயே அவங்களை வரச்சொல்லிடு!
என்றார் தேவநாதன்.
அப்ப நான் கிள்ம்பறேனுங்கய்யா!... இப்பவே போய் அவங்களுக்கு தகவல் சொன்னாத்தான் அவங்களும் தயாராவாங்க!
என்றவாறே வாசல் வரை நடந்த தரகர் கண்ணுசாமி, நிதானமாய்த் திரும்பி வந்து, ஹி... ஹி...
என்று மீண்டும் தன் காவிப்பற்களைக் கண்காட்சியாக்க,
பார்வதி!... தரகர் கைல ஒரு இருநூறு ரூபாய் குடுத்தனுப்பும்மா!
என்றார் தேவநாதன்.
தலையாட்டியபடியே உள் அறைக்குள் சென்றவள், திரும்பி வரும் போது கையில் பர்ஸுடன் வந்தாள். அதிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து தரகரிடம் அவள் நீட்ட,
முக மலர்ச்சியுடன் வாங்கி, அதைத் தன் இரு கண்களிலும் ஒத்திக் கொண்டு, சட்டைப் பாக்கெட்டினுள் வைத்துக் கொண்டு வெளியேறினார் தரகர்...
தரகர் சென்றதும், கணவரிடம் வந்து நின்ற பார்வதி, த பாருங்க!... அர்ச்சனாவுக்கு இன்னிக்கு அரை நாள்தான் வேலையாம்!... அதே மாதிரி கைலாஷும் இன்னிக்கு எங்கேயும் வெளி வேலைக்குப் போகலையாம்!... அவங்க ரெண்டு பேரையும் வெச்சு க்ளீனிங் வேலையை நீங்க பாருங்க!... சமையல் வேலைகளையும்... பலகார வேலைகளையும் நான் பார்க்கறேன்!... ஆளுக்கொன்னா செஞ்சா சிரமமேயிருக்காது!
என்றாள்.
அப்போது உள் அறையிலிருந்து அலுவலகம் செல்லும் ஒப்பனையோடு வெளியே வந்த அர்ச்சனா வரும் போதே, என்னப்பா காலங்காத்தாலேயே தரகர் வந்திட்டுப் போறார்... ஏதாவது சந்தோஷமான சமாச்சாரமா?
குனிந்து இடுப்புப் பகுதியில் சேலையின் மடிப்புக்களை சரி செய்து கொண்டே கேட்டாள்.
அவர் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு வந்த பார்வதி, ஆமாம்டி... நாளைக்கு அக்காவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க!
என்றாள் சந்தோஷச் சிரிப்புடன்.
ஓ
என்றபடி நெற்றியைச் சுருக்கிய அர்ச்சனா, அடுத்த கேள்வியைக் கேட்க வாயெடுக்கும் முன்,
பார்வதியே முந்திக் கொண்டு சொன்னாள். அதாண்டி... அந்த பேங்க் ஆபீஸர் மாப்பிள்ளை!
அப்போது அறைக்குள்ளிருந்து, அர்ச்சனா... அர்ச்சனா!
என்று சுலோச்சனாவின் அழைப்புக் குரல் வர,
என்னக்கா?
கேட்டவாறே திரும்பவும் அறைக்குள் சென்றாள் அர்ச்சனா.
என்ன... அங்க ஒரே பேச்சும் சிரிப்புமா இருக்கு... ஏதாச்சும் விசேஷமா?
சுலோச்சனா தங்கையிடம் கேட்டாள்.
ஆமாம்... விசேஷம்தான்... எங்களுக்கில்லை!... உனக்கு!
சொல்லி விட்டுக் கண்ணடித்தாள் அர்ச்சனா.
புரிந்தும் புரியாதவளாய் சுலோச்சனா தங்கையை கூர்ந்து நோக்க,
இந்த மகாராணியைப் பெண் பார்க்க ஒரு மகாராசன் நாளைக்கு வரப் போறானாம்!
என்றவள் சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு, இல்லை... இல்லை... வரப் போறாராம்!
என்றாள்.
க்கும்... எனக்கு அது ஒண்ணுதான் குறைச்சல் இந்த ராசியில்லா ராணிக்கு!
சலித்துக் கொண்டாள் சுலோச்சனா.
ஏன்க்கா அப்படிச் சொல்றே?... உனக்கு என்ன குறைச்சல்?... அழகில்லையா?... அறிவில்லையா?
எதிர்க் கேள்வியை எழுப்பினாள் அர்ச்சனா.
ஒரு குறைச்சலும் இல்லாததினாலதான் இது வரைக்கும் பதினெட்டு மாப்பிள்ளைகள் வந்து பார்த்திட்டு பின்னங்கால் பிடரில அடிக்க ஓடிப் போனாங்களாக்கும்?
விரக்தியாய் சுலோச்சனா சொல்ல,
ப்ச்!... ஏன்க்கா எப்பவும் இப்படியொரு தாழ்வு மனப்பான்மையோட... விரக்தியாகவே பேசறே?...
அக்காவை நெருங்கி வந்து அவள் தோள்களைத் தொட்டவாறே கேட்டாள் அர்ச்சனா.
அடிப்போடி... என் கவலை எனக்கு!
அந்தக் கவலையை எல்லாம் தீர்க்கறதுக்குத்தான் நாளைக்கு அருமையான மாப்பிள்ளை ஒருத்தர் வர்றாரு!... வந்து உன்னைப் பார்த்ததும்
கட்டுனா இந்தப் பொண்ணைத்தான் கட்டுவேன்! னு அடம் பிடிக்கப் போறாரு
பீடிகை போட்டாள் அர்ச்சனா.
யாருடி அந்த அருமையான மாப்பிள்ளை...?... எந்த தேசத்து ராசா?
கிண்டலாய்க் கேட்டாள் சுலோச்சனா.
தேசத்து ராசா இல்லை... பேங்குக்கு ராசா!... ஆமாம்டி... உன்னைப் பெண் பார்க்க பேங்க் ஆபீசர் வர்றாரு!... நீ வேணா பாரு... இந்த தடவை இந்த வரன் நிச்சயம் சக்சஸ் ஆகத்தான் போகுது!... அக்கா கழுத்துல தாலி ஏறத்தான் போகுது!... அடுத்த வருஷம் ஒரு குட்டி பொறக்கத்தான் போகுது!
தமாஷாய் சொல்லி விட்டு அர்ச்சனா முக மலர்ச்சியோடு சிரிக்க,
அதற்கு நேர் மாறாக சுலோச்சனாவின் முகம் வருத்தத்தின் விருத்தமாய் மாறியிருந்தது.
அதைக் கூர்ந்து பார்த்த அர்ச்சனா, அக்கா... நீ ஏன் எப்பவும் இப்படியே இருக்கே?
தாள மாட்டாமல் கேட்டாள்.
அந்த தரகனுக்கும் வேற வேலை இல்லை!... இந்த அப்பாவுக்கும் வேற வேலை இல்லை!... அவன் சும்மாவாது யாரையாவது கூட்டிட்டு வந்து பெரிசா படம் காட்டுவான்!... இவரும் அவனை நம்பிக்கிட்டு... ஏக எதிர்பார்ப்புக்களோட தடபுடலா விருந்து வைப்பார்!... வந்தவங்க வயிறு முட்டத் தின்னுப்புட்டு... ஹி... ஹி... ஹி... ன்னுட்டு போயிடுவாங்க!... கடைசில எல்லாமே புஸ்வானமாப் போயிடும்!... நானும் பார்த்திட்டுத்தானே இருக்கேன்!
சேச்சே... அப்பாவைத் திட்டாதேக்கா!... அவர் அவரோட கடமையைத்தான் செய்யறார்!... அந்தக் கடவுள்தான் கண் திறக்கவே மாட்டேங்குறார்!... எல்லாத்துக்கும் ஒரு நேரம் வர வேண்டாமா?
சொல்லி விட்டு பெரிய மனுஷி போல் மேலே பார்த்துக் கும்பிட்டாள் அர்ச்சனா.
ஒருவேளை அந்தக் கடவுளுக்கு ஒன்றரைக் கண்ணாயிருக்குமோ?
சுலோச்சனா சோகத்திலும் நகைச்சுவையை வெளிப்படுத்தினாள்.
அப்போது,
ஏய்... அர்ச்சனா... உனக்கு வேலைக்குப் போக டைம் ஆகலையா?... அங்க நின்னு இன்னும் என்னடி அரட்டை அடிச்சுக்கிட்டிருக்கே?
அறைக்கு வெளியிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.
இதோ கிளம்பிட்டேன்மா!
சொல்லியவாறே வேக, வேகமாக வெளியே வந்து, வாசலுக்குச் சென்று செருப்பை தாறுமாறாய் மாட்டிக் கொண்டு, படிகளில் குதித்திறங்கி ஓடினாள்.
அவள் படிகளில் குதித்திறங்குவதையும், ஓட்டமாய் தெருவுக்குச் சென்றதையும், தன் வீட்டு வாசலிலிருந்து கவனித்த வீட்டு ஓனர் சம்பூர்ணம், முகத்தில் எரிச்சலுடன் தலையை மேலும், கீழும் ஆட்டினாள். அவள் வாய் சத்தமில்லாமல் அர்ச்சனாவைத் திட்டித் தீர்த்தது.
சம்பூர்ணம் தன்னைக் கவனிப்பதையும், தன்னுடைய செய்கைகளில் கோபப்பட்டு தலையை