Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athu Oru Varam!
Athu Oru Varam!
Athu Oru Varam!
Ebook133 pages50 minutes

Athu Oru Varam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராணுவத்திலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் தன் மாமன் மகன் திவாகரை உடனே செனு பார்க்கத் துடிக்கிறாள் ஜோதி. ஆனால், அவள் பெற்றோர்கள் அவளை “பொறுமையாய் இரு...இன்னிக்குத்தான் வந்திருக்கிறார்...இன்றே போய்ப் பார்க்கணுமா?” என்று சொல்லி அடக்கி வைக்கினர்.
பெற்றவர்கள் ஏதோ ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்த சமயத்தில் தனியே மாமன் வீடு செல்கிறாள். அவள் சென்ற நேரம் சரியான மழை. தெப்பலாய் நனைந்து சென்றவளைப் பார்த்த மாமன் மகன், மனம் தடுமாற, அவளும் ஒத்துழைக்க, இருவரும் தாலிக்கு முன்பே தாம்பத்யத்தில் ஈடுபடுகின்றனர்.
மறுநாள், வட நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணிக்காக உடனே கிளம்பி வரச் சொல்லி திவாகருக்கு தந்தி வருகின்றது. அரை மனதுடன் புறப்பட்டுச் செல்கிறான். நிவாரணப் பணியின் போது ஹெலிகாப்டர் வெடித்துத் சிதறியதில் உயிர் துறக்கிறான் திவாகர்.
அதே நேரம், அவன் வாரிசு ஜோதியின் வயிற்றில் உருவாகிறது.
மீதியை வாசித்து ரசியுங்கள்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130005103
Athu Oru Varam!

Read more from Mukil Dinakaran

Related to Athu Oru Varam!

Related ebooks

Reviews for Athu Oru Varam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athu Oru Varam! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    அது ஒரு வரம்!

    Athu Oru Varam!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    ஓம்! தத் புருஷாய வித்மஹே! வக்ர துண்டாய தீமஹி! நந்தோ தந்தி ப்ரசோத்யாத்

    சாமி படங்களுக்கு எதிரில் நின்று, கண்களை மூடியபடி, முணுமுணுப்பாய் கணேச காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்த ராஜமாணிக்கத்தின் வழிபாட்டைக் குலைக்கும் விதமாய் உரத்த குரலில் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் அவருடைய சகதர்மினி சீதாலட்சுமியும், அருமைப் புத்திரி ஜோதியும்.

    விநாயக மந்திரம் விரய மந்திரமாய்ப் போய்க் கொண்டிருக்க, நிதானமாய்க் கண் திறந்த ராஜமாணிக்கம், அவசர அவசரமாக தன் பூஜை காரியங்களை முடித்து விட்டு, அவர்களை நோக்கி வந்தார். அவர் முகத்தில் கோபம் பொங்கி நின்றது.

    ஏம்மா... இதென்ன வீடா? இல்லை... காய்கறி மார்க்கெட்டா? என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்? ஒரு மனுஷன் நிம்மதியா சாமி கூடக் கும்பிட முடியாதபடிக்கு இப்படிக் கத்திக் களேபரம் பண்ணறீங்களே... இது உங்களுக்கே நல்லா இருக்கா? ச்சை! எரிச்சலுடன் சொன்னார்.

    அப்பா சாமீ... நான் ஒண்ணும் கத்தலை... உங்க அருமை மகள்தான்... இன்னிக்கு இல்லை... நேத்திக்கு இருந்தே இப்படித்தான் தீபாவளிப் பட்டாசாட்டம் சும்மா... பட... படன்னு வெடிச்சுத் தள்ளிட்டிருக்கா! அதனால அவளைப் பார்த்துக் கேளுங்க உங்க கேள்வியை! என்றாள் சீதாலட்சுமி, முகத்தை பழிப்புக் காட்டிக் கொண்டே,

    அவள் சொன்னதும், மகள் ஜோதியின் பக்கம் திரும்பிய ராஜமாணிக்கம், என்னம்மா ஜோதி? என்ன பிரச்சினைடா உனக்கு? மென்மையான குரலில் அவள் தலையைத் தடவியவாறே, புன்னகையுடன் கேட்டார். தந்தையர்க்கு என்றுமே பெண் பிள்ளைகள்தானே செல்லப் பிள்ளைகள்.

    அது... வந்து... ப்பா... நீங்களும் அம்மாவும் இன்னிக்கும் மாமா வீட்டுக்கு போறீங்கல்ல? அப்ப உங்க கூட நானும் வர்றேன்னு சொன்னேன்... அவ்வளவுதான்! அதுக்குப் போயி என்னையத் திட்டோ திட்டுன்னு திட்டுது! ஏன் எங்க மாமா வீட்டுக்கு நான் வரக் கூடாதா? என்றாள் ஜோதி, முகத்தை வெகுளியாக வைத்துக் கொண்டு,

    மெல்ல முறுவலித்தார் ராஜமாணிக்கம். தன் மகள் எதற்காக தங்களுடன் அவள் மாமா வீட்டிற்கு வரத் துடிக்கிறாள், என்பதை அவர் நன்கறிவார். மிலிட்டரியிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் அவளுடைய மாமன் மகன் திவாகரைக் காண வேண்டுமென்கிற ஆசையில்தான் அவள் அடம் பிடிக்கிறாள்... சண்டையிடுகின்றாள், என்பதெல்லாம் அவருக்குப் புரியாததா என்ன? அவரும் அந்த இளமைக் காலங்களைக் கடந்து வந்தவர்தானே?. இருந்தாலும் தற்போது தங்களுடன் அவளைக் கூட்டிக் கொண்டு போக முடியாத சூழ்நிலையில் இருப்பதால்,

    த பாரும்மா... இன்னிக்கு நானும் அம்மாவும் மட்டும் போயிட்டு வந்திடறோம்! எப்படியும் இன்னும் அஞ்சாறு நாள்ல மறுபடியும் ஒரு தரம் போவோம்! அப்ப உன்னையும் எங்களோட கூட்டிக்கிட்டுப் போறோம்! என்ன... சரியா? அவளைச் சமாதானப் படுத்தும் விதமாய் ராஜமாணிக்கம் சொல்ல,

    ஏன்... நான் இப்பவே வந்தா என்னவாம்? விடாது கேட்டாள் ஜோதி. ஆசை மனது காரண காரியங்களை ஏற்றுக் கொள்ளாதல்லவா?

    அட... நேத்திக்குத்தான் அவரே வந்து இறங்கியிருக்கார்... இன்னும் பயணக் களைப்பு கூடத் தீராமல்... அதே அசதியோடதான் இருப்பார்! அதனால இப்பவே போய் அவரை தொந்தரவு படுத்துவானேன்? எப்படியும் ஒரு மாசம் இங்கதானே இருப்பார்?

    அப்படின்னா இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் மட்டும் போறீங்களே... அது மட்டும் தொந்தரவா இருக்காதா? விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு, சிறு பிள்ளையைப் போல் எதிர்க் கேள்வி கேட்ட மகளை, புன்னகையுடன் பார்த்த ராஜமாணிக்கம்,

    அம்மாடி... மாப்பிள்ளை வந்திருக்காருன்னு தகவல் கேள்விப்பட்டதும்... நாங்க பெரியவங்க உடனே போய் ஒரு பார்வை பார்த்து நலம் விசாரிச்சிட்டு வர்றதுதாம்மா முறை! நாங்களும் அங்க போய் ரொம்ப நேரம் இருக்க மாட்டோம், ஒரு சம்பிரதாயத்துக்காக... போனமா... வந்தமா... ன்னு உடனே திரும்பி வந்திடுவோம்மா! சும்மாவாகிலும் சொல்லி வைத்தார் ராஜமாணிக்கம். உண்மையில் அவர் எண்ணம் என்னவென்றால் இப்போது அவர் தன் மனைவியுடன் தங்கை நீலவேணி வீட்டிற்குச் செல்வதே திவாகர்-ஜோதி திருமணத்தைப் பற்றிய பேச்சைத் துவக்கத்தானே? அந்த நேரத்தில் ஜோதியும் தங்களும் இருந்தால் அது அவ்வளவு நன்றாக இருக்காது, என்பதால் அவளைத் தவிர்க்க நினைக்கின்றனர்.

    சரி... நானும் உங்களோடவே வந்திட்டு... அதே மாதிரி உங்களோடவே உடனே திரும்பி வந்துடறேனே! பிடிவாதம் பிடித்தாள் ஜோதி.

    தொடர்ந்து அவள் எதிர்வாதம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு கடுப்பாகிப் போன சீதாலட்சுமி, ஏண்டி... உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?... சில விஷயங்கள் நீ இருக்கும் போது அங்க பேச முடியாதுங்கறதினாலதான் நாங்க உன்னைத் தவிர்க்கறோம்! அது புரியாம சும்மா நையி... நையினு பேசிட்டேயிருக்கியே! பெரியவங்க ஒண்ணு சொல்றாங்கன்னா அதுல ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும்னு புரிஞ்சுக்க! என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள்.

    அப்படி என்ன பெரிய விஷயம்? என்கிட்ட சொல்லக் கூடாதபடிக்கு? தன் மாமன் மகனை தன் காண விடாதபடிக்கு தடுக்கும் தாயும், தந்தையும் அந்த நிமிடத்தில் ஜோதிக்கு பரம எதிரிகளாய்த் தெரிந்தனர். விட்டால் அவர்களை வெட்டிச் சாய்த்து விடுபவள் போல் நின்றாள்.

    அடப் பொசக் கெட்டவளே! நாங்க அப்படியே உன் கல்யாண விஷயத்தைப் பத்தியும் பேசி, அவங்க காதுல போட்டுட்டு வரத்தான் போறோம்! அப்படிப் பேசும் போது நீயும் எங்க கூட இருக்கறது... அத்தனை நல்லாயிருக்காதுடி... அதுக்காகத்தான் சொல்றோம்! சீதாலட்சுமி படீர் என்று போட்டுடைத்தாள்.

    அப்படியா? என்று தலையை நிதானமாக மேலும், கீழும் ஆட்டிய ஜோதி, தாய் சொல்வதில் உள்ள யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டு, அப்போதைக்கு அடங்கிப் போனாள். ஆனால், உள் மனத்தில் தன் மாமன் மகனைக் காண வேண்டுமென்கிற ஆவல் மட்டும் அடங்காமல், கொஞ்சம், கொஞ்சமாய் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

    தொடர்ந்து அவர்களும் விவாதம் செய்ய விரும்பாமல், அமைதியாய் அங்கிருந்து நகர்ந்து, வீட்டின் பின்புறமிருந்த கொய்யா மரத்தினடியில் சென்றமர்ந்து யோசித்தாள். என்ன செய்யலாம்? எனக்கு இன்னிக்கே மாமனைப் பார்த்தாகணுமே! .பேசாம சத்தமில்லாம அப்பாவும்... அம்மாவும் போகும் போது அவங்களுக்கே தெரியாம அவங்க பின்னாடியே போயிடலாமா? அங்க போயிட்ட பின்னாடி அவங்களால என்னைத் துரத்த முடியதல்லவா?

    "ம்ஹூம்... அது சரிப்பட்டு வராது! அப்புறம் அவ்வளவுதான்... வீட்டுக்குத் திரும்பியதும் சுத்தமா இனிமேலே மாமா

    Enjoying the preview?
    Page 1 of 1