Kanneer Varaintha Oviyam
()
About this ebook
பத்திரிக்கை ரிப்போர்ட்டரான அனிதா, ஜெயில் கைதிகளில் பெண் கைதிகளைச் சந்தித்து அவர்களிடம் ஒரு நேர் காணல் நிகழ்த்தி அதை தன் பத்திரிக்கையில் வெளியிட வேண்டி ஜெயிலுக்குள் வருகிறாள்.
ஜோதிமணி என்னும் கொலைக் குற்றவாளியை சந்தித்துப் பேசும் போது, ஒரு அதிர்ச்சியான விஷயம் வெளியே வருகிறது. “நான் கொலையே செய்யலைங்க...கொலை செய்தது...என் புருஷன்...” என்கிறாள்.
கோர்ட்டில் தான்தான் கொலை செய்ததாய், அவள் ஒப்புக் கொண்டதைக் குறிப்பிட்டுக் கேட்டாள் அனிதா. “நான் உள்ளார வந்திட்டா... எந்தப் பிரச்சினையுமில்லைங்க...என் புருஷன் வந்தா... ரெண்டு பெண் குழந்தைகளையும் வெச்சிட்டு...நான் தனியா பொழைக்க முடியாது பாருங்க?... அதான் ரெண்டு குழந்தைகளையும் அவர் கைல ஒப்படைச்சிட்டு...நான் இங்க வந்திட்டேன்” என்றவள் ஒரு வேண்டுகோளையும் வைக்கிறாள்,
“வெளிய இருக்கற என் புருஷன் என் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்?னு தெரியலை...அதைப் போய்ப் பார்த்திட்டு, எனக்கு வந்து தகவல் சொல்ல முடியுங்களா?” அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவள் சொன்ன ஊருக்குச் சென்று அவள் கணவனைப் பார்த்த அனிதா அதிர்ச்சியடைகிறாள்.
அவளை அதிர வைத்தது என்ன? ஜோதி மணியின் கணவர் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கின்றாரா...? போன்ற கேள்விகளுக்கான விடையை நாவலின் அழகான எழுதியுள்ளார் கதாசிரியர். விறுவிறுப்பாகச் செல்லும் இந்த நாவல் நிச்சயம் வாசகர்களைக் கவரும்.
Read more from Mukil Dinakaran
Thanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Athu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Pooparikkum Devathaiyum Neethan Rating: 0 out of 5 stars0 ratingsIrandaam Manaiviyagiya Naan... Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsPoochuduthe En Vaalibam! Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMannithu Vidu... Magane...! Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratingsNetru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsPetraalthan Magala? Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Sumanthu Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsSaami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsOru Panthu... Aaru Run... Oru Aavi Rating: 0 out of 5 stars0 ratingsIthuve Iruthi Aagattum...! Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Purakkal Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalukku Illai Thooram Rating: 0 out of 5 stars0 ratingsEndha Moongil Pullankuzhal? Rating: 0 out of 5 stars0 ratingsAntha Violet Kangal Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsUyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanneer Varaintha Oviyam
Related ebooks
Pathungi Vaa Bharath! Rating: 0 out of 5 stars0 ratingsValarpirai Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsThedathey Tholayathey! Rating: 5 out of 5 stars5/5Sila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsPenney Anitha Rating: 2 out of 5 stars2/5Vilaikku Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsManithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5Unnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Makeup Punnagai Rating: 5 out of 5 stars5/5மற்றொரு மகாபாரதம் Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Maanuda Thooral Rating: 0 out of 5 stars0 ratingsAntharathil Sundari Rating: 0 out of 5 stars0 ratingsOdu... Olinthukol! Rating: 0 out of 5 stars0 ratingsNattupura Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsKathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5Kaadhal Brahma Rating: 4 out of 5 stars4/5Rosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Sollil Varuvathu Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Ninaivu! Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Oru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsTholainthu Pona Thozhikku... Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vilayadu Rating: 5 out of 5 stars5/5Vidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Kondralum Kuttramillai Rating: 5 out of 5 stars5/5Nilaiyattra Oviyam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanneer Varaintha Oviyam
0 ratings0 reviews
Book preview
Kanneer Varaintha Oviyam - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
கண்ணீர் வரைந்த ஓவியம்
Kanneer Varaintha Oviyam
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 1
கோவை மத்திய சிறைச்சாலை.
உள்ளே கைதியாக இருக்கும் தங்கள் உறவு மனிதர்களைக் காண, அனுமதி கேட்டு, வெளியே காத்திருந்தது பெண்கள் கூட்டம். எல்லோர் முகத்திலும் சோக ரேகைகள். ஒன்றிரண்டு முகத்தில் மட்டும் கோப ரேகைகள்.
பாழாப் போன கோபத்தை அடக்கு... அடக்கு
ன்னு கரடியாக் கத்தினேன்... காதிலேயே வாங்கிக்காம... இப்பக் கொலையைப் பண்ணிட்டு வந்து உள்ளார கெடக்கான் என் மகன்...! ஹூம்... இவன் என்னைக் காப்பாத்துவான்னு நான் நெனச்சேன்... கடைசில இவனைத் தூக்கிலிருந்து காப்பாத்த நான் படாத பாடு பட்டுட்டிருக்கேன்...!
தன் சோக கதையை இன்னொருத்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஒரு கிழவி.
கட்சிக்காக சிறை புகுந்துள்ள தொண்டனைக் கண்டு போக வந்திருந்த, உள்ளூர் அரசியல்வாதியும் தன் ஜால்ராக்கள் புடைசூழ, காத்திருந்தார்.
ப்ச்... எத்தனை மணிக்குப்பா உள்ளார விடுவானுக...? எனக்கு பதினொன்றரை மணிக்கு ஒரு மீட்டிங் வேற இருக்கு!
தன் புலம்பலை சன்னமாக வெளியிட்டார் அரசியல்வாதி.
தனது ஸ்கூட்டியில் நிதானமாய் வந்திறங்கிய அனிதா, பார்க்கிங் ஏரியா வரை அதை தள்ளிச் சென்று, ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். கண்டபடி கலைந்திருந்த துப்பட்டாவை சரியாகப் போட்டு, சைடில் ஒரு முடி போட்டுக் கொண்டாள்.
காத்திருந்த அரசியல் ஆசாமிகளையும், பெண்களையும் ஓரப் பார்வையால் அளந்து கொண்டே சிறையின் பெரிய கேட் அருகே சென்றாள்.
இருபத்து இரண்டு வயதைத் தாண்டி, ஒரு வாரத்திற்கு முன், இருபத்து மூன்றை எட்டிப் பிடித்துள்ள அனிதா, பார்வைக்குத்தான் தீபத்தின் சுடர். சீண்டினால் தீப்பந்தத்தின் அனல். அன்பைக் காட்டினால் அனிச்சமலர்க் கொத்து, ஆவேசம் காட்டினால் அக்கினிக் கொழுந்து. சமூகத்தில், தமக்கென்று ஒரு நல்ல பெயரையும், நிலையான இடத்தையும், லாபகரமான சர்க்குலேஷன் எண்ணிக்கையும் கொண்டுள்ள திசைகள்
வாரப் பத்திரிக்கையின் சீனியர் ரிப்போர்ட்டர். தன் எழுதுகோலில் புதுச் சிந்தனையை மையாக ஊற்றி, புதுமைகளை எழுத்தில் காட்டும் வித்தகி.
அவள் அந்த பெரிய கேட்டை நெருங்கும் முன்பே, அங்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் அவளுடன் பேசத் தயாராயினர். சிலர் தொப்பியைக் கழற்றி சரியாக அணிந்து கொள்ள, சிலர் தொப்பையை எக்கி இளமை காட்டிக் கொண்டனர்.
ஆனால் அவர்கள் யாருக்குமே, என்னம்மா...? யாரம்மா நீ...? யாரைப் பார்க்கணும்மா?
என்று கேள்வி கேட்கின்ற சந்தர்ப்பத்தையே தராமல், அவர்களிடம் வந்ததுமே, முதல் வேலையாய் தன் பத்திரிக்கை எடிட்டர் தன்னிடம் கொடுத்தனுப்பியிருந்த ஒப்புதல் கடிதத்தை எடுத்து நீட்டினாள்.
அவள் விரல் நகங்களில் பூசப்பட்டிருந்த நகப்பூச்சின் நேர்த்தியை ரசித்தவாறே அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்த ஒரு சீனியர் காவலர், ஒரு நிமிஷம் இரும்மா...! ஜெயில் சூப்பரிண்டெண்ட் கிட்டப் பேசிடறேன்!
என்று சொல்லி விட்டு, இண்டர்காமில் சில நிமிடங்கள் பேசி விட்டு, இவளிடம் திரும்பி வந்தார்.
சூப்பரிண்டெண்ட் உள்ளார வரச் சொல்லிட்டாரும்மா...! உள்ளார போனதும் லெப்ட் சைடுல ஸ்டெப்ஸ் இருக்கும் அதுல ஏறிப் போனீங்கன்னா... ஃபர்ஸ்ட் புளோரிலேயே சூப்பரிண்டெண்ட் ரூம் இருக்கும்...! அங்க வெளிய ஒரு காவலர் இருப்பார்... அவர்கிட்ட பர்மிஸன் வாங்கிட்டு அப்புறமா ரூமுக்குள்ளார போம்மா!
சொல்லி விட்டு, கங்காருவின் பெரிய வயிற்றிலிருக்கும் குட்டிப் பை போல், அந்த பெரிய இரும்பு கேட்டின் வயிற்றிலிருந்த குட்டி கேட்டை திறந்து விட்டார் அவர்.
தன் வாழ்க்கையில் முதல் முறையாக பாதங்களை சிறை மண்ணில் பதித்தாள் அனிதா. தன் பத்திரிக்கையில் விரைவில் தான் துவங்க இருக்கும் ஒரு புதிய... வித்தியாசமான... தொடருக்காகத்தான் அவள் சிறை மண்ணைத் தொட்டிருக்கின்றாள். நடப்புச் சமூகத்தில் பெண்ணியம் பற்றியும், பெண் சுதந்திரம், பற்றியும் பெரிதாய்ப் பேசப்பட்டு... எழுதப்பட்டு வந்தாலும், யதார்த்தத்தில் இன்னும் முழுமையான விழிப்புணர்வு பெண் சமுதாயம் அடையவில்லை...! என்பதுதான் அனிதாவின் ஆணித்தரமான வாதம். அந்த வாதம் அவளுக்குள் நிரந்தரமாய் அமர்ந்து கொண்டு நித்தமும் பிறாண்டிக் கொண்டே இருந்ததன் விளைவுதான், திசைகள்
பத்திரிக்கையில் அவள் எழுதப் போகும் பெண் கைதிகள்
பற்றிய நிஜத் தொடர்.
கேட்டின் உட் பகுதியில் பெரிய நோட்டுடன் அமர்ந்திருந்த ஒரு காவல்துறை அதிகாரி, இவளிடம் சில விபரங்களைக் கேட்டு, அதை அந்த நோட்டில் பதித்துக் கொண்டு, பக்கத்திலிருந்த லேடி கான்ஸ்டபிளைப் பார்க்க, அவள் வந்து அனிதாவைத் தொட்டுச் சோதனை செய்த பிறகு, தலையாட்டினாள்.
அந்த பேக்கை இங்க குடுத்திட்டு போயிடும்மா!
என்று அந்த அதிகாரி சொல்ல,
தாராளமா?
என்றபடி அதைத் தந்தவள், இந்த ரைட்டிங் பேடையும்... பேனாவையும் கொண்டு போகலாமா?
அந்தா வேண்டுமென்றே கேட்டாள்.
அவள் சீரியஸாய்க் கேட்பதாய் நினைத்துக் கொண்டு, ம்ம்... அதெல்லாம் கொண்டு போகலாம்மா!
என்றார் அந்த போலீஸ் அதிகாரி அப்பாவியாய்...
லேடி கான்ஸ்டபிள் மட்டும் புரிந்து கொண்டு சத்தமில்லாமல் புன்னகைத்தாள்.
இடப்புறமிருந்த படிகளில் ஏறி, சூப்பரிண்டெண்ட் அறையை அடைந்த அனிதா, ஐ யாம் ஃப்ரம்
திசைகள் மேகஸைன்... சூப்பரிண்டெண்டைப் பார்க்கணும்!
சொல்லி விட்டு, தன்னிடமிருந்த கடிதத்தை அறைக்கு வெளியேயிருந்த காவலரிடம் காட்டினாள்.
அதை வாங்கிக் கொண்டு, இங்கியே நில்லும்மா!
என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்ற அந்தக் காவலர் இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்து, அய்யா கூப்பிடறார்
என்று சொல்ல, கதவைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் சென்றாள் அனிதா.
பெரிய்ய்ய்ய டேபிளுக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த ஜெயில் சூப்பரிண்டெண்ட் தெலுங்குப் பட ஹீரோ போலிருந்தார். அனிதாவைப் பார்த்து உட்காரும்மா!
என்று சொல்லி எதிரே இருந்த சேரைக் காட்டினார். அவர் பார்வை எதிர் சுவரில் பிரம்மாண்ட சைஸ் திரையில் தெரிந்து கொண்டிருந்த சி.சி.டி.வி. காமிராவின் பிம்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அனிதாவும் அமைதியாய் அந்த அறையை பார்வையால் அளக்க ஆரம்பித்தாள். அவரது மேசை மீது ஒரு மைக் இருக்க, ஓ... இது வழியாய்த்தான் கைதிகளுக்கு அறிவிப்புக் குடுப்பார் போலிருக்கு...! அப்ப சிறையின் எல்லாப்பக்கமும் ஸ்பீக்கர் இருக்கும் போல!
என்று நினைத்துக் கொண்டாள்.
சட்டென்று பார்வையை நகர்த்தி அனிதாவைக் கூர்ந்து பார்த்தவர், நிதானமாய் அனிதாவின் எடிட்டர் கொடுத்தனுப்பியிருந்த கடிதத்தை வாசித்தார்.
உன் பேர் அனிதாவா?
அப்படித்தானே அந்த லெட்டர்ல போட்டிருக்கு...? அப்புறமென்ன கேள்வி வேண்டியிருக்கு?
என்று சொல்ல நினைத்தவள் அடக்கிக் கொண்டு, யெஸ் சார்!
என்றாள் பவ்யமாய்.
ஏம்மா... பார்த்தா சின்னப் பொண்ணா இருக்கே...? நீ எப்படிம்மா பெண் கைதிகளை... அதுவும் கொலைக் கைதிகளை நேரில் சந்திச்சுப் பேசுவே...? பார்த்தாலே பயந்து ஓடிட மாட்டியா?
என்று வாய் விட்டுக் கேட்டு விட்டு, சும்மா... சும்மா... தமாஷுக்குச் சொன்னேன்!
என்று உடனே மாறினார்.
அவர் அப்படிச் சொன்ன பிறகு, அந்தக் கமெண்ட்டுக்கு பதில் சொல்ல விரும்பாத அனிதா, வெறுமனே புன்னகைத்து வைத்தாள்.
என்ன மாதிரி ஆர்ட்டிகிள்ம்மா எழுதப் போறே...?
தன் டை அடித்த மீசையைத் தடவிக் கொண்டே கேட்டார் ஜெயில் சூப்பரிண்டெண்ட்.
அதாவது சார்...! கொலைக் கேஸ்ல தண்டனையடைந்து சிறையில் இருக்கற பெண் கைதிகளை நேரில் சந்திச்சு...
அவங்க ஏன் கொலை பண்ணினாங்க...? என்ன மாதிரியான் சூழல் அவங்களை கொலை செய்யத் தூண்டியது...? இப்ப அவங்களோட மனநிலை என்ன...? ஜெயில் வாழ்க்கை அவங்களோட மனநிலையைக் கொஞ்சமாவது மாற்றியிருக்கின்றதா? என்பதையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு... அதை அப்படியே எங்க பத்திரிக்கைல தொடரா எழுதப் போறேன் சார்!
ஆர்வத்துடன் சொன்னாள் அனிதா.
"அது செரிம்மா... இதனால என்ன லாபம்...? யாருக்கு லாபம்...? ஒரு வேளை