Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Odu... Olinthukol!
Odu... Olinthukol!
Odu... Olinthukol!
Ebook114 pages41 minutes

Odu... Olinthukol!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603384
Odu... Olinthukol!

Read more from Devibala

Related to Odu... Olinthukol!

Related ebooks

Reviews for Odu... Olinthukol!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Odu... Olinthukol! - Devibala

    http://www.pustaka.co.in

    ஓடு... ஒளிந்துகொள்!

    Odu… Olinthukol!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அரை நாள் லீவு போட்டுட்டு வர்றியா இந்திரா? சினிமாவுக்குப் போகலாம் இந்திரா நிமிர்ந்து பாராமல் அந்தக் கடிதத்தை டைப் அடிப்பதில் தீவிரமாக இருந்தாள்.

    இந்திரா உன்னைத்தான்!

    என்ன ராகினி?

    போச்சுடா! எந்த உலகத்துல இருக்கே நீ?

    இது கான்ஃபிடன்ஷியல் லெட்டர். தள்ளி நின்னுபேசு!

    யம்மாடீ! உனக்கு மட்டும் தனியா இன்னொரு சம்பளம் தர்றாங்களா? எதுக்காக இப்படி உழைக்கற?

    ஆபீஸ்னு வந்துட்டா மற்ற சிந்தனைகள் எதுக்கு? நான் எங்கேயும் வரமாட்டேன்னு தெரியுமில்ல? இடத்தைக் காலி பண்ணு!

    ராகினி எரிச்சலுடன் விலகினாள்.

    சரியான சன்யாசினி! வயசுக்கேத்த ஆசைகள் ஓண்ணு கூடவா இருக்காது?

    நீ ஏண்டீ அவகிட்டப் போய் பேச்சு தர்றே? பத்மா அவளைக் கண்டித்தாள்.

    எனக்கு ஒண்ணு புரியாத பத்மா!

    என்னது?

    இந்திரா யாருமில்லாத அனாதை. ஹாஸ்டல்ல இருந்துட்டு வர்றா. மாசம் ரெண்டாயிரத்து நானூறு ரூபா சம்பளம். அதுல பாதி கூட செலவாகாது. மிச்சம் பணத்தை என்ன செய்யறா?"

    நமக்குத் தேவையா? கேட்டா தரப் போறாளா?

    யாரையும் ‘லவ்’ பண்றதில்லை. ஆபீஸ் விட்டா நேரா ஹாஸ்டல்! இவ ரூம் மேட் சரோஜினி பக்கத்து பில்டிங்ல சேல்ஸ் கேர்ள் வேலை பாக்கறா. ரூம்லேயும் யார் கூடவும் கலந்துக்க மாட்டாளாம் இந்திரா. புத்தகங்கள் படிச்சிட்டு தனியா இருப்பாளாம்!

    சரோஜினி பேசிப் பார்த்தாளா?

    ம்! சலிச்சிட்டா இந்திராவைப் பார்க்க யாரும் வர்றதில்லையாம். இவளும் போக மாட்டாளாம்!

    சரி விடு! நம்ம வேலையை பார்த்துட்டுப் போகலாம். மூணு பேர் லீவு எழுதி வச்சிருக்கோம். கிடைக்குமா?

    அபீஸ் பாய் வந்தான்.

    பத்மா, ராகினி, மல்லிகா மூணு பேரையும் எம்.டி. வரச் சொல்றார்! மூவரும் நடுக்கத்துடன் நுழைந்தார்கள்.

    எம்.டி. வாசுதேவன் ஐம்பதைக் கடந்தார். சிரிப்பைத் தொலைத்தவர்களின் வரிசையில் பிரதமருக்கு அண்ணன். எப்போதும் சிடு மூஞ்சி... யாரையும் தப்பித் தவறிக் கூட நல்ல வார்த்தை சொல்லாத வாய்.

    மூணு பேரும் லீவு எழுதி வச்சிருக்கீங்க!

    ஆமாம் சார்

    எதுக்கு?

    எங்க ஸ்நேகிதியோட குழந்தைக்கு உடம்பு சரியில்லை. பாக்கப் போறோம்!"

    ஒரே சமயத்துல மூணு பேரும் போகணும்?

    கொஞ்ச தூரத்துல இருக்கு வீடு! தனியாப் போக பயம்!

    மல்லிகா உனக்குமா பயம்? மகேஷ் கூட ராத்திரி எட்டு மணி வரைக்கும் பீச்ல இருக்கே. அப்ப பயம் வரலியா?

    மல்லிகா முகம் வெளிறியது.

    பத்மா! நீ ஷெரடான் பார்க்ல ராத்திரி டிஸ்கோ டான்ஸ் ஆடறியே வாரத்துக்கு மூணு நாள். உனக்குமா பயம்?

    பத்மா செத்தே போனாள்.

    ராகினி நீ எப்படி? நாலு பேர் முன்னால பேச முடியாத அளவுக்கு காரியங்களெல்லாம் நீ பண்றே!

    ...........!

    யாருக்கும் லீவு கிடைக்காது. எல்லாரும் வாங்கற சம்பளத்துக்குக் கொஞ்சமாவது வேலை செய்ங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரே சின்சியர் ஊழியர் இந்த ஆபீஸ்ல இந்திரா மட்டும் தான்.

    அவ அனாதை சார்

    ஷட்டப்!

    சார்!

    ஒரு நல்ல பெண்ணை விமர்சிக்க உங்கள்ள யாருக்கும் தகுதியில்லை கோ அவுட்!

    மூவரும் முகம் கறுத்து வெளிப்பட்டார்கள்.

    ஆபீசில் மன்மதன் என்றழைக்கப்படும் அனில் ஒயிலாக நடந்து வந்தான்.

    இந்தா ராகினி! நீங்க கேட்ட மூனு டிக்கெட்!

    கிழிச்சிடு அனில். கிழவன் போக விடலை!

    நீங்க ஆபீசுக்கே வராம மட்டம் போட்டுட்டு போன்ல லீவு சொல்லியிருக்கணும். சிரிப்பா வருது எனக்கு!

    உனக்கு வரும்பா. நீ ரெப்! ஊர் சுத்தற வேலை. வெளில உன் சொந்த வேலைகளை ஆபீஸ் செலவுல முடிச்சிப்பே!

    உன்னை மாதிரி சாதிக்க எங்களால முடியுமாப்பா? அவன் மேல் சற்று காம வசப்பட்ட ரேகா சிணுங்கினாள்.

    மதிய உணவு இடைவேளை.

    சகல பேரும் கான்பரன்ஸ் அறைக்கு சாப்பிடப் போக, இந்திரா மட்டும் தன் இருக்கையில் உட்கார்ந்தே டிபன் பாக்னஸப் பிரித்தாள்.

    ஹாஸ்டலில் மதிய உணவும் கட்டித் தருவார்கள்.

    உள்ளே காரசாரமாக எம்.டியின் வழுக்கைத் தலையை உருட்டத் தொடங்கினார்கள்.

    அந்தக் கிழவன் இந்திராவுக்கு மட்டும் தான் மரியாதை தர்றான்!

    ஏன்? ஜொள் விடறானா?

    ச்சி! அவன் அந்த மாதிரி ஆள் இல்லை! இவதானே மாடு மாதிரி உழைக்கறா. அதனால!

    கிழவன் கிட்ட இந்திராவை டோஸ் வாங்க வைக்கணும். அனில் ஏதாவது ஒரு ஐடியா குடுப்பா!

    நமக்கு ஐடியா வராது. அயோக்யன் வர்றான் பாரு! அவன் தான் ஐடியா மாஸ்டர்!

    அயோக்யன் என்றழைக்கப்படும் அவன் ‘ஒரு மாதிரி’ சிரித்த படி அந்தக் கூட்டத்தில் நுழைந்தான்.

    வித்யா! நீ இன்னிக்கு பீரா போடலையா?

    கொல்லுவேன் உன்னை!

    ஆம்பளை ஜட்டியும் பனியனும் விக்கற கடைக்கு கலைவாணி ஸ்டோராம். ஜோக் மாமா இது!

    ஏன்? பீரா விக்கலையா நாயுடு ஹால்ல? பேர்ல என்னடா இருக்கு மச்சி?

    கலை கட்டிவிட்டது.

    அயோக்யன் வாக்கியத்துக்கு நாலு கெட்ட வார்த்தைகள் வீதம் முழக்கிக் கொண்டிருந்தான்.

    போகட்டும்! புள்ளைங்க எல்லாம் ஆசைப் படுது!

    "எதுக்கு?

    Enjoying the preview?
    Page 1 of 1