Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yetho Mogam Yetho Thaagam
Yetho Mogam Yetho Thaagam
Yetho Mogam Yetho Thaagam
Ebook90 pages31 minutes

Yetho Mogam Yetho Thaagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாரிணியும் ராகினியும் சகோதரிகள்.தாரிணியின் கணவன் ஒரு பேராசைப் பிடித்தவன். கருவுற்ற தாரிணியின் கருவை கலைத்து அவளை வேலைக்கு அனுப்புகிறான்.பல கசப்பு அனுபவங்களுக்குப் பிறகு தாரிணி அவனைப் பிரிந்து தன் தங்கையுடன் தனித்து வாழும் நிலையில் ராகினிக்கு காதல் அரும்புகிறது.சுரேஷ் என்பவரைக் காதலிக்க அவளுடன் பணிபுரியும் சிதம்பரமும் அவளை விரும்ப ஒரு நாள் ராகினி கர்ப்பமான செய்தி வருகிறது.
இந்தக் கொடுமையின் காரண கர்த்தா யார் ?
தாரணியால் கண்டு பிடிக்க முடிந்ததா?
பல முடிச்சுக்களுடன் நாவல் பயணிக்கிறது.
காதலும் த்ரில்லரும் இணைந்த நாவல்..படியுங்கள்..பாராட்டுவீர்கள்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100805662
Yetho Mogam Yetho Thaagam

Read more from Vimala Ramani

Related to Yetho Mogam Yetho Thaagam

Related ebooks

Reviews for Yetho Mogam Yetho Thaagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yetho Mogam Yetho Thaagam - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    ஏதோ மோகம் ஏதோ தாகம்

    Yetho Mogam Yetho Thaagam

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    சுதர்சனம் தாரிணியிடம் விஷமம் பண்ணினான்.

    உம் தாரிணி செல்லமாகச் சிணுங்கினாள்.

    இரு... இரு... உன்னை ஓவியமா வரையறேன் என்றவன் அவள் புருவத்தில் தன் ஆள்காட்டி விரலால் கோடு போட்டு மூக்கைத் தொட்டு கன்னத்தை ரவுண்ட் அடித்து வாயைத் தடவி...

    (நடுநடுவே உம்... உம் என்று ஹம்மிங் கேட்டுக் கொண்டே இருந்தது) கழுத்துக்குத் தாவி... கீழே...

    ச்சீய்

    தாரிணி அவன் கைகளை தட்டிவிட்டாள்.

    எங்கேயோ ‘பொன்மேனி உருகுதே’ கேட்டுக் கொண்டே இருந்தது.

    நீ ஆனாலும் ரொம்ப மோசம்... படம் வரைய விட மாட்டேங்கறியே!

    ரொம்ப அழகு தான்

    ரொம்ப அழகா இருக்கறதால தான் எல்லாத்தையுமே வரையலாம்னு பாத்தேன்

    நீங்க வரையவும் வேண்டாம்... பாக்கவும் வேண்டாம்

    தாரிணி புடவையை சரி பண்ணிக் கொண்டாள்.

    ஏய்... எங்கே போறே...?

    உக்கும்... நான் இங்கே உங்க பக்கத்துலே உட்காந்தா அடுப்படி வேலையை யார் கவனிப்பா?

    உன் தங்கச்சி ராகினி கவனிச்சுப்பா?

    பாவங்க... அவ குழந்தை

    அவளா குழத்தை?

    பேசியபடி சுதர்சன் அவள் இடையைப் பற்றி அவளைத் தன் பக்கமாக இழுத்து... முரட்டுத்தனமாக அழுத்தி...

    உம்... என்னங்க... விடுங்க ப்ளீஸ் - இவைகளை எல்லாம் அவன் லட்சியம் பண்ணவே இல்லை

    தாரிணிக்கு வியர்த்து விட்டது...

    ‘சட்'டென்று விழிப்பு வந்தது!

    கனவா? அத்தனையும் கனவா?

    பனிக்காற்றிலே லலலா லலலா - என்று ‘பொன் மேனியை' ஜானகியின் குரல் அப்போது தான் ‘போகஸ்’ பண்ணி முடித்துக் கொண்டிருந்தது.

    அடுத்து... ‘வாழ்வே மாயம்' படத்தில் எஸ்.பி. பால சுப்ரமண்யம் என்று வானொலியில் அறிவிப்பாளரின் குரல் ஒலித்தது.

    ராகினி டிரான்சிஸ்டர் கேட்டுக் கொண்டிருக்கிறாள்!

    பிற்பகல் வேளை... நீங்கள் கேட்டவை!

    இதைக் கேட்டுக் கொண்டேவா தூங்கிப் போனேன்?

    என் கனவிலா சுதர்சனம் வந்து அத்தனை அமர்க்களம் பண்ணினார்?

    கன்னங்கள் வலித்தன.

    உதடுகள் துடித்தன.

    உடம்பெல்லாம் ஏதோ ஒரு உணர்வு பரவி சிலிர்த்தது.

    சுதர்சனத்தை தாரிணியால் மறக்க முடியவில்லையா?

    இத்தனை ஆன பின்னும்...?

    அவன் அவளை உதறித் தள்ளிய பின்னும்...?

    ஏமாற்றி அவளைத் திருப்பியனுப்பிய பின்னும்...?

    சுதர்சனம்... என்ன இருந்தாலும் என் கணவர்!

    ஒரு ஆணுக்கு ஒரு பெண் போகப் பொருளாக இருக்கலாம்.

    ஆனால் பெண்ணுக்கு ஒரு ஆண் பாதுகாப்புக் கவசம்!

    இதை ஏன் சுதர்சனம் புரிந்து கொள்ளவே இல்லை?

    காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு, திருமண பரபரப்புகளும் ஆசைகளும் தீர்த்து போகுமுன் அவன் ஆசை தீர்ந்து போய்விட்டதா?

    தாரிணி யோசித்தாள்.

    இத்துடன் நீங்கள் கேட்டவை முடிவடைந்தது!

    ராகினி டிரான்சிஸ்டரை மூடிவிட்டாள்.

    தாரிணியின் மனம் திறந்தது.

    நீங்கள் கேட்டவை! சுதர்சனம் கேட்டவை முடிவடையாமல் தொடர்ந்தது...?

    அது ஒரு பெரிய கதை!

    2

    ராகினி பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தாள்.

    ஆபீஸ்க்கு லேட்டாகி விட்டது.

    எதிர்த்தாற் போல் இருந்த பெட்டிக் கடையில் ‘சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்' - என்ற விளம்பரத்தைப் பார்த்தபடி புகைக்கும் இளவட்டங்கள்!

    பட்டுக் கோட்டை அம்மாளு

    ஒருவன் விசில் அடித்தான்.

    ராகினிக்கு இப்போது இது பழகி விட்டது.

    பஸ்ஸில் ஏறும் போதும் சரி. இறங்கும் போதும் சரி. ஒரு பெண் கூட இருந்து விட்டால் இவர்களுக்குத் தான் எத்தனை கொண்டாட்டம்!

    உரசியபடி, இடித்தபடி... இடிபாடுகளிடையே புதை பொருள் ஆராய்ச்சி பண்ணும் ஆராய்ச்சியாளர்கள் இந்த இளைய சமுதாயத்தின் சிலர்!

    என்னடா மாப்ளே... கலர் எப்படி?

    எங்க கண்ணு போறே?

    Enjoying the preview?
    Page 1 of 1