Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthai Manal
Puthai Manal
Puthai Manal
Ebook80 pages29 minutes

Puthai Manal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு ஜானகி கருத்தரிக்க, வடக்கே துணை யாருமில்லாத காரணத்தால் அவள் கணவன் அவளைப் பிறந்த வீடு அனுப்ப , ஏற்கனவே ஜானகியின் கல்யாணக் கடன்களை அவன் அண்ணன் சுந்தரேசன் கஷ்டப்பட்டு அடைத்துக் கொண்டிருந்த நேரமது. சுந்தரேசனின் மனைவி காமுவிற்கு இது பிடிக்கவில்லை என்றாலும் வேறுவழியின்றி ஏற்ற அந்த நேரத்தில்
ஒரு பயங்கரச் செய்தி.....
ஜானகியின் கணவன் சாலை விபத்தில் இறந்த செய்தி வர காமு ஒரு திட்டம் தீட்டுகிறாள்.பிறந்த குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்ய, சுந்தரேசனின மகன் சிறுவன் வாசுவிற்கு விபரம் புரிய தன் அத்தையை காப்பாற்ற
வாசு முடிவு செய்கிறான்...
அவன் முடிவு என்ன?ஜானகிக்கு விபரம் தெரிந்ததா?
பிறந்த குழந்தை என்னவானது?அதிஷ்ர்ட்டத்தையும் ஜோதிடத்தையும் நம்பும் ஜானகிக்கு அந்த அதிர்ஷ்டம் கை கொடுத்ததா?
எல்லா கேள்விகளுக்கும் விடை நாவலில் சுவாரசியமாக
படியுங்கள்.......
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580100806238
Puthai Manal

Read more from Vimala Ramani

Related to Puthai Manal

Related ebooks

Reviews for Puthai Manal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthai Manal - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    புதை மணல்

    Puthai Manal

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    வலியெடுத்த பின்னும் தன் கால்களை உயரக் கட்டித் தொங்க விட்ட சோழ அரசி...

    பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் ஜானகி. அம்மா... அம்மா... - என்று அலறல் விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த லேபர் வார்டில். அவள் குரல் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

    ஜானகி நீ எத்தனை பொறுமைசாலி... உம். நீயே இப்படிச் கத்தலாமா? ப்ளீஸ் ஸ்பேர் வித் மீ... கொஞ்ச நேரம் பல்லைக்கடிசுட்டு வலியைப் பொறுத்துக்கோ... உன் பிள்ளையை எடுத்துப் போட்டுடறேன்...- டாக்டர் கமலம் அன்புடன்... அதே சமயத்தில் கண்டிப்புடன் பேசினாள்.

    பாவம், ஜானகியும் பொறுத்துப் பொறுத்துத்தான் பார்க்கிறாள்... முடியவில்லை. வலி தாங்க முடியவில்லை... வலி... வலி அது ஒன்று தான் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது...

    நேற்று மாலையே ஆஸ்பத்திரியில் 'அட்மிட்’ ஆகிவிட்டாள், இன்னமும் பிரசவம் முடியவில்லை. மகன் வெளியே வர மறுக்கிறான்.

    வலி வருவதற்காக 'டிரிப்ஸ்' எல்லாம் கொடுத்தாகி விட்டது. ஆரம்பத்தில் இருந்த ஜானகியின் முனகல் சப்தம் மெல்ல மெல்ல பெரிதாகி, இப்போது கத்தலாகி அந்த ஆஸ்பத்திரி முழுவதுமாக வியாபித்துக் கொண்டிருக்கிறது. கத்திக் கத்திக் குரல்... வறண்டுவிட்டது. தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகப் புரட்டிப் புரட்டிப் போட்டதில் மண்டை வலி எடுத்து... ஜானகி சோர்ந்து சோர்ந்து போனாள், நினைவு வருவதும் திரும்புவதுமாக... இது என்ன சோதனை? பிரசவம் என்பது இத்தனை கொடிய மரண வலியா: 'தாய்' அந்தப் பதவியை அடைய இத்தனை துன்பங்களைச் சகித்துக் கொள்ள வேண்டுமா?

    கல்யாணமாகிப் பத்து வருடங்களுக்குப் பிறகு ஜானகி கருத்தரித்திருந்தாள்.

    'இடுப்பு எலும்பு நடுவில் வளர்ந்திருக்கிறது. பிரசவம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும் 'சிசேரின்' இல்லாமல் குழந்தையை எடுக்கப் பார்க்கிறேன்' - என்று டாக்டர் கமலம் 'எக்ஸ்ரே'யைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.

    ஜானகிக்கு ஜோஸ்யம், ஜாதகம் இதில் எல்லாம் ரொம்ப நம்பிக்கை.

    குழந்தை தானாகப் பிறக்க வேண்டும். நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும். பத்து வருடங்களுக்குப் பிறகு பிறக்கப்போகிற குழந்தை அதிர்ஷ்டக் குழந்தையாக அவதரிக்க வேண்டும். அவள் பாலோடு அன்பையும், அமுதோடு பண்புகளையும் கலந்து ஊட்டுவாள். அதில் அவள் பிள்ளை வளம் பெற வேண்டும். எத்தனை எத்தனையோ கனவுகள்.

    நல்ல நேரத்தில் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக வலி எடுத்த பின்னும் தன் கால்களை உயரக் கட்டித் தொங்கவிட்ட சோழ அரசியின் நினைவு வந்தது. கருவறைக்குள் வெகு நேரம் தங்கிய அவன் மகன் நல்ல நேரம் வந்தவுடன் பிறந்தானாம். கருக்குழியுள் வெகு நேரம் கட்டுண்டு கிடந்த அந்தக் குழந்தையின் கண்கள் சிவப்பாக... ரத்தச் சிவப்பாக இருந்ததாம். சிவந்த அக்கண்களைப் பார்த்த அரசி- என் மைந்தா… கோச்செங்கண்ணா- என்று விளித்தாளாம்.

    எப்போதோ படித்த இலக்கியக் கதை.

    ஜானகிக்கும் மகன் பிறப்பான். அரச குமாரனாகப் பிறக்காவிட்டாலும் அழகுள்ள மகனாய்ப் பிறப்பான். அதனால்தான் அவனாக் பிறக்க வேண்டும்...ஆயுதம் போடக் கூடாது என்று ஜானகி முதலிலேயே டாக்டரிடம் சொல்லியிருந்தாள். அதிர்ஷ்டத்தை மாற்றக் கூடாது. ஜானகியின் கணவன் ராகவன் பிரசவத்திற்கு அவளை ஊருக்கு அனுப்பு முன் சொன்னான்...

    "ஜானகி கல்யாணமாகிப் பத்து வருடங்கள் கழித்து உண்டாகியிருக்கிறாய், குழந்தைச் செல்வத்துக்காக ஏங்கி ஏங்கி விரதம்

    Enjoying the preview?
    Page 1 of 1