Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kumari Penne! Kuyilaale!
Kumari Penne! Kuyilaale!
Kumari Penne! Kuyilaale!
Ebook103 pages38 minutes

Kumari Penne! Kuyilaale!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802716
Kumari Penne! Kuyilaale!

Read more from Vimala Ramani

Related to Kumari Penne! Kuyilaale!

Related ebooks

Reviews for Kumari Penne! Kuyilaale!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kumari Penne! Kuyilaale! - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    குமரிப் பெண்ணே! குயிலாளே!

    Kumari Penne! Kuyilaale!

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    வைகறைப் பொழுது!

    பொழுது இன்னும் புலரவில்லை.

    கீசுகீசென்று ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?

    என்ற ஆண்டாள் பாடினாளே - அந்த வைகறைப் பொழுது.

    'மையிட்டெழுதாமல், மலரிட்டு முடியாமல், செய்யாதன செய்யாமல்'

    கன்னிப் பெண்கள் நோன்பிருக்க வேண்டிய பொழுது.

    இந்த அதிகாலைப் பொழுதில்...?

    அதோ செல்லி கிளம்பி விட்டாள். தன் பரிசலை ஓட்டிக் கொண்டு அந்த ஆற்றைக் கடக்க ஆரம்பித்து விட்டாள்.

    அவளைப் பொறுத்தவரை இந்தப் பணிதான் நோன்பு!

    இந்த பணிதான் தவம்! யக்ஞம் எல்லாமே!

    அவள் அப்பன் பொன்னனுக்கு உடம்பு முடியாமல் போனதிலிருந்து செல்லிதான் இந்த பரிசலை ஓட்டிக் கொண்டு இக்கரைக்கும் அக்கரைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறாள்.

    செல்லி ஆற்றங்கரைக்கு அந்தபுறமிருக்கும் கிராமத்தை சேர்ந்தவள்.

    அந்தக் கிராமம் ஒரு சிறிய தீவு மாதிரி எல்லாமே இக்கரையிலிருந்து அக்கரைக் பரிசல் மூலமாகவோ அல்லது கட்டு மரம் மூலமாகவோதான் வரவேண்டும்.

    அது எந்தக் கிராமம் எங்கே இருக்கிறது என்பதல்ல முக்கியம்.

    அந்த கிராமத்தின் மக்கள் முக்கியம் அவர்களின் உணர்வுகள் முக்கியம்...

    இதோ இந்த செல்லி உட்பட.

    தன்னிறைவு பெறாத கிராமமாதலால் ஏதோ சில கீரை வகைகளைத் தவிர பாக்கி அத்தனை காய்கறிகள், பழங்கள், வருகிறவர்கள், போகிறவர்கள் கடிதங்கள், அல்லது செய்திகள் இப்படி எல்லாமே...எல்லாமே செல்லியின் இந்த பரிசல் மூலமாகத்தான் போயாக வேண்டும்.

    நல்ல வேளை, இதற்கு இன்னொரு போட்டிப் பரிசல் கிளம்பவில்லை. பழமையில் ஊறிய கிராமம். தன் கட்டுப்பாடுகள் மீறாத கிராமம். தனக்கென்று சில விதிமுறைகளை, பண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள கிராமம். சில சமயம் அக்கரையிலிருந்து வரும் சில வெளியூர்காரர்களால் அல்லது சில பயணிகளால் கிராமத்தில் அவ்வப்பொழுது சில சலசலப்புகள் ஏற்படுவதுண்டு. செல்லி அந்த புதியவர்களை அக்கரை சேர்த்ததும் அது மறைந்து விடும்.

    இந்த அழகான கிராமத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது. அந்த கோயில் பூஜைகளை நடேச சாஸ்திரிகள்தான் பக்தி சிரத்தையுடன் கவனித்துக் கொள்கிறார். கோவிலுக்கென்று மானியமோ, டிரஸ்டிகளோ, தனிநிர்வாகமோ ஏதுமில்லாத காரணத்தால் நிர்வாகம் நன்றாகவே நடக்கிறது. நடேச சாஸ்திரிகளே நாலு வீட்டில் போய்ப் பிள்ளையாருக்கு என்று அரிசி, பூஜைக்கு வேண்டிய திரவியங்கள், பூக்கள் இத்தியாதி சாதனங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வருவார்.

    சிலர் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை சிரிக்கும். சிலர் வீட்டில் பவழ மல்லிகை பாய் விரித்துக் கிடக்கும். எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு வருவார். சிலர் வீட்டில் அரிசி தருவார்கள். சிலர் பணம் தருவார்கள். எப்படியோ பிள்ளையாரும் பட்டினி கிடக்காமல் நடேச சாஸ்திரிக்ளும் பட்டினி இல்லாமல் இருக்கிறார்கள். தனக்குஸ் சாப்பிட என்று வடிக்கிற ஆழாக்கு அரிசியைப் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து விடுவார் சாஸ்திரிகள். சாஸ்திரிகளின் பெண் சுகன்யா அவர் பறித்து வருகிற பூக்களை மாலை தொடுத்துத் தருவாள். விஷ்ணு சித்தர், ஆண்டாள் மாதிரி... அப்பாவும் பெண்ணும்!

    ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி! சுகன்யாவோ..?

    நடேச சாஸ்திரிகளைக் கண்டால் ஊரில் உள்ள அனைவருக்கும் ஒரு மதிப்பு. ஒரு நல்ல பிராமணர், வேதம் படித்தவர், பிள்ளையாரை தம் பிள்ளையாகப் பாவித்து நேசம் செலுத்துபவர்... என்கிற மரியாதை! மதிப்பு!

    அவருக்கென்று ஒரு சின்னஞ் சிறிய வீடு வாடகை இல்லாமல் தரப்பட்டிருந்தது. சில சமயம் நடேச சாஸ்திரிகள் அக்கறைக்குப் போவார்...

    இதே பரிசலில்தான்.

    அவரைக் கண்டால் செல்லிக்கு கைகால் நடுங்கும்.

    அய்யிரு - என்கிற பயம்.

    படிச்சவர் - என்கிற மரியாதை.

    பூஜை பண்றவர் -என்கிற பக்தி

    பரிசலில் சாஸ்திரிகள் ஏறிவிட்டால் செல்லி ஒதுங்கி ஓரமாக நின்றபடி பரிசல் ஓட்டுவாள்.

    'அய்யர் எத்தனை பெரிய மனுசன்'!

    நடேச சாஸ்திரிகளோ ஏதோ ஜபம் பண்ணியபடி சுலோகம் சொல்லியபடி அந்த ஆற்றைக் கடப்பார்.

    அநாவசியமாக யாருடனும் பேச மாட்டார். அவர் உண்டு அவர் காரியம் உண்டு என்கிற மாதிரி... சுகன்யாவை அப்பாவுடன் இரண்டொரு முறை அக்கரை கொண்டு போய்விட்டிருக்கிறாள் செல்லி.

    சுகன்யா நேர் எதிரிடை! ஓயாத பேச்சு. அவர் சுலோகம் சொல்ல சொல்ல ஏதோ கேள்விகள்!

    போங்கப்பா.. எப்பப் பார்த்தாலும் ஜெபம்...திருவிழாவிலே நான் கேட்டதெல்லாம் வாங்கித்தரேளா?

    சுகன்யா பேசுவதையே காதில் வாங்கிக் கொள்ளாமல் சுலோகம் சொல்லும் சாஸ்திரிகள்...

    இவர்கள்...?

    அப்பாவும் பெண்ணுமா...?

    என்ன எதிரிடை குணங்கள்...?அத்தா பெரிய மனுஷன் தவம் மாதிரி கண்ணை மூடிக்கிட்டு செபிச்சுட்டு வரும்போது இந்தப் பொண் ஏன் சும்மா தொண தொணன்னு பேசிக்கிட்டு இருக்கு?

    திருவிழாவுக்கு போறாங்களா? என்னக் கேட்டிருக்கும்? வேறென்ன? பத்து ரூபாய்க் கொலுசு கேட்டிருக்கும்... ரிப்பன், குஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1