Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Janani Jagam Nee
Janani Jagam Nee
Janani Jagam Nee
Ebook196 pages1 hour

Janani Jagam Nee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580100805471
Janani Jagam Nee

Read more from Vimala Ramani

Related to Janani Jagam Nee

Related ebooks

Reviews for Janani Jagam Nee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Janani Jagam Nee - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    ஜனனீ ஜகம் நீ

    Janani Jagam Nee

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஜனனீ ஜகம் நீ

    நீலிமா

    மதுரா என்கிற மண்டோதரி

    கோப்பெரும் தேவி

    மணிமேகலை

    ஜானு என்கிற ஜானகி

    குந்தி

    சிகண்டி

    திரௌபதி

    ஊர்வசி

    லஷ்மி பாய்

    தாராவும் ரூமாவும்

    ஜனனீ ஜகம் நீ

    (முன்னுரை)

    வெண்மை நிறம் தண்ணீரைப் போன்றது. தன் சுய நிறம் அற்று அது சார்ந்த நிலத்தின் வண்ணத்தை வெளிப்படுத்தும் தன்மையுள்ளது. பெண்ணும் அப்படித் தான். தனக்கென்று தனி நிறமற்று தான் சார்ந்த குடும்பப் பின்ணணி சார்ந்து, தன் ஆசாபாசங்களைத் துறந்து மெழுகுவர்த்தியாய் உருகிய காலம் அன்று.

    இன்று காலம் மாறிவிட்டது. கற்பகோடி காலமாக கருவிலிருந்து கல்லறை வரை காயம் பட்ட பெண்மை... மெல்ல தலை தூக்க ஆரம்பிக்கும் நேரம்.

    நெல் மணிகளும் கள்ளிச் சொட்டுப் பாலும் காத்திருக்கும் இந்த கால கட்டத்தில், பெண்மையின் வீழ்ச்சி என்பது மனித குல தாழ்வு.

    மங்களகரமான பெண்மைக்கு ஏன் வெள்ளை நிறம்?

    வெள்ளைத் தாமரையில் வெண்பட்டுடுத்தி வீற்றிருப்பவளும் பெண் தான்.

    மலர்களில் சிறந்த மல்லிகையின் நிறமும் வெண்மை தான்.

    பூசனைக்குரிய தும்பைப்பூவும் வெண்மை நிறமுடையது தான்.

    இந்தத் தொடரில் வரும் பெண்களும்... தனி மனுஷியாய் சாதித்தவர்கள் தான்.

    புராண லஷ்மணரை விட்டுப் பிரிந்த ஊர்மிளையும் சித்தார்த்தனை விட்டுப் பிரிந்த யசோதரையும் மாதர் குல மாணிக்கங்கள் என்றால், இதுபோன்று இன்றும் நம்மிடையே வாழ்ந்துவரும் பல சகோதரிகளும் பூசனைக்குரியவர்களே.

    இவர்களில் ஊர்மிளையும் உண்டு யசோதரையும் உண்டு நளாயினி சத்யபாமா சாவித்திரி கோசலை கைகேயி போன்ற எண்ணற்றோர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். பழையனூர் நீலியும் உண்டு பாஞ்சாலியும் உண்டு. அவர்களைப் பற்றிய ஒரு மாறுபட்ட சிந்தனை அவர்களை அடையாளம் காட்டும் தொடர்.

    மாதா பராசக்தியை வணங்கினார் பாரதி.

    வையமெல்லாம் நிறைந்த ஜகன் மாதா அவள்

    ஜனனீ ஜகம் நீ

    இது தான் இந்தத் தொடரின் தலைப்பு.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானவீதியின் இரகசியங்களைச் சொன்னவர்கள் நமது ஞானிகள். விஞ்ஞான சாதனங்கள் ஏதும் இன்றி விண்வெளியினை அளந்தவர்கள் அவர்கள்.

    எந்த ஒன்றும் புதிதாய்த் தோன்றிவிடவில்லை. பெண்மையின் இலக்கணமும் இது தான்.

    இதில் தடைகளை உடைத்தவர்களும் உண்டு, தடுக்கி வீழ்ந்தவர்சகளும் உண்டு.

    தடைகளை நீக்கியவர்களுக்கு கை தட்டுவோம்.

    தடுக்கி வீழ்ந்தவர்களுக்குக் கை கொடுப்போம்.

    அன்புடன்

    விமலா ரமணி

    1

    ஊர்மி இது அவசியம் தானா? அம்மா கேட்டாள்.

    எது அவசியம்? ஊர்மி எதிர் கேள்வி கேட்டாள்.

    நீ வேலைக்குப் போறது அவசியம் தானா?

    தேவைகள் வரும்போது எல்லாமே அவசியம் தான்.

    எதுடி தேவை? ஏதோ புருஷன்காரன் ஒரு காண்டிராக்டிலே வேலைக்காகத் துபாய் போயிருக்கார். வர ஒரு வருஷம் ஆகும் பிறந்த வீட்டிலே நிம்மதியாய் இருக்க வேண்டியது தானே? எதுக்காக ஜாப் சைட்டெல்லாம் போய் வேலை தேடறே?

    என் அசட்டு அம்மா இந்த ஒரு வருஷமும் நான் ஜடமா இங்கே உட்கார்ந்திருக்கணுமா? என்னால முடியாதுப்பா...

    டிவி பாரு... சினிமா பாரு... ஏதாவது தையல் கத்துக்கோ...

    அப்பறம் மியுசிக் க்லாஸ், தையல் கிலாஸ், டான்ஸ் கிலாஸ் எல்லாத்தையும் விட்டுட்ட்டியே

    எனக்குத் தெரியாதும்மா... அப்பா இல்லாத பொண்ணு நீ. உன்னைப் பத்திரமா வளத்து ஆளாக்கி...

    இப்போ என்னங்கறே?...

    அந்தக் காலத்துலே இல்லாததா? ராமர் காட்டுக்குப் போனப்போ லஷ்மணரும் கூடப் போனப்போ... ஊர்மிளா பிறந்த வீட்டிலே தனியா இல்லையா? இப்போ பயமா இருக்கு ஊர்மி. மீடுங்கறாங்க... என்னமோ ஒண்ணும் புரியல்லை.

    எல்லா காலமும் ஒண்ணு தான்... இன்னும் இந்த உலகம் மாறல்லை. பெண்களைக் கொடுமைப் படுத்தறதும் அடிமைப்படுத்தறதும் மாறல்லை. வெவ்வேற பார்மிலே நடக்குது. அதுக்காக நாம அடைஞ்சு கிடக்க முடியாதும்மா. காப்பாத்துன்னு கத்தினா எந்தக் கண்ணனும் புடவை தர வர மாட்டான். நாம தான் நம்பளைக் காப்பாத்திக்கணும்.

    எனக்குத் தெரியாது ஏதாவது இக்கட்டிலே மாட்டிட்டா எனக்கு ஆதரவா யாருமில்லை. அதைப் புரிஞ்சிக்கோ...

    ஊர்மி வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டாள்.

    துபாயிலிருந்த தன் கணவருடன் வாட்ஸ்அப்பில் பேசினாள். ஸ்கைப் கிடையாது. வாட்ஸ்அப் மெசேஜ் கட்டாகிக் கட்டாகி வந்தது.

    நீ வேலைக்குப் போறதுலே எனக்கொண்ணும் ஆஷேபணை கிடையாது. நீ படிச்சவ... உனக்கு நான் சொல்லத் தேவையில்லை. ஆண்கள் நல்லவர்கள் தான். இல்லேன்னு சொல்லல்லை. ஆனா அப்படியே எல்லாரும் இருந்துட்டா நல்லா இருக்கும்னு சொல்றேன்.

    பெரிய கமலஹாசன்னு நினைப்பு...

    இருவரும் சிரித்தனர்.

    கம்ப்யூடர் அறிவு இருந்ததால் வேலை சுலபமாக இருந்தது. போன் கால் அட்டண்ட் செய்வதும் ப்ராஜட்டுகளை முடிப்பதும், இவளுக்கு நேரம் சரியாக இருந்தது.

    முதல் மாதச் சம்பளத்தைத் தன் தாயின் கைகளில் தந்தபோது கண்ணீரே வந்துவிட்டது.

    இரண்டு மாதங்கள் ஓடியதே தெரியவில்லை. இன்னும் பத்து மாதங்களில் இவள் கணவன் துபாயிலிருந்து வந்து விடுவான்.

    வாழ்க்கை ஓரே சீராகப் போனால் கவலை இல்லை. ஆனால் அப்படி நடப்பதில்லை.

    அன்று...

    அவளுக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது.

    அது...?

    லேப்டாப்பை உயிர்ப்பித்தபோது முதலில் அந்த மெயில் தான் வந்திருந்தது.

    (கடிதம் ஆங்கிலத்தில் தான் இருந்தது.)

    என் பேர் ராமன். நான் யூ.எஸ்-ஸில் இருக்கும் ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் எம்.டி. இந்தியாவிலும் ஒரு ஸ்டார்ட் அப் ஆரம்பிக்க விருப்பம். கேண்டிடேட்ஸ் செலக்ட் பண்ணிக் கொண்டிருக்கிறோம். நல்ல வேலைத்திறனுள்ள ஆட்கள் தேவை. உங்க ப்ரபைலைப் பார்த்தேன். கண்டேன் சீதையை" என்று அனுமார் மாதிரி கூவ ஆசை. மன்னிக்க வேண்டும் நான் கொஞ்சம் ஆன்மீக வாதி.

    உங்கள் திறமைக்கு தற்சமயம் நீங்கள் வேலை பார்க்கும் கம்பனி சரியல்ல. இதைப் போல் மூன்று மடங்கு சம்பளம் எங்கள் கம்பெனியால் தர முடியும். பல வெளிநாடுகளுக்கு எங்கள் செலவிலேயே சுற்றுலா அழைத்துப் போவோம். சம்பளம் எவ்வளவு தெரியுமா? 5000 டாலர்... இந்திய ரூபாய்களில் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். என் மின் அஞ்சல் விலாசம் தந்திருக்கிறேன். விருப்பமிருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். போர்ட் ஆப் டைரக்டர்ஸ் முடிவு எடுக்க வசதியாக ஒரு வாரத்துக்குள் பதில் அனுப்புங்கள்."

    இவள் யோசித்தாள். கணவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து முடியவில்லை.

    அம்மாவிடம் பேசினால் அலறுவாள். இருக்கட்டும் இருவருக்கும் இது ஒரு சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்.

    தற்சமயம் வேலை பார்க்கும் அலுவலகம் ரொம்ப தூரத்தில் உள்ளது. கேப் வர சில நாள் தாமதமாகும். பாதி நாட்கள் இவள் ஆட்டோவிலோ கால் டாக்ஸியிலோ பயணிக்க வேண்டும். நைட் ட்யூட்டி என்றால் இன்னும் தொல்லை. அட்மினிஸ்டிரேஷன் லெவல் வேலை என்றால் பரவாயில்லை. புதிய வேலை முயன்று பார்த்தால் என்ன?

    தன் ரெஸ்யூமியை அனுப்பி விட்டு புகைப் படத்தையும் அனுப்பி வைத்தாள்.

    இன்டர்வ்யூவிற்கு வரச் சொல்வார்களோ, இல்லை ஸ்கைப்பில் இன்டர்வ்யூ செய்வார்களோ? ஒரு வாரத்திற்குப் பிறகு பதில் வந்தது. உங்கள் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் காப்பி எடுத்து அனுப்பி வையுங்கள். விசா எடுக்க வேண்டும். ப்ளைட் டிக்கட் செலவு... போக வர செலவு... எல்லாம் எங்கள் கம்பெனி கொடுக்கும். ஒரு முறை யூ.எஸ் வரவேண்டி இருக்கும். பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் காத்திருங்கள். நியூ ஜெர்ஸியில் தங்களை பிக்அப் செய்து கொண்டு எங்கள் குவார்டர்ஸில் தங்க வைத்து, இன்டர்வ்யூ முடித்து பத்திரமாக இந்தியா திருப்பி அனுப்பி வைப்பது எங்க பொறுப்பு.

    இவள் யோசித்தாள். முடிவு எடுக்க சில நாட்கள் தேவைப்பட்டன.

    இரண்டு நாளில் இவளுக்கு போன் வந்தது. ராமன் தான் பேசினார்.

    "மேடம் வணக்கம். உங்க மெயிலுக்குக் காத்திருக்கிறோம் உங்கள் புகைப் படத்தைப் பார்த்தால் என் தங்கை நினைவுக்கு வருகிறாள்.

    ஒரே தங்கை இந்தியாவில் ஒரு விபத்தில் இறந்து போனாள். எனக்கென்று இருந்த ஒரே உறவு அவள் தான். உங்கள் புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு என் தங்கையே திரும்பக் கிடைத்த உணர்வு. இந்தியாவே வராமல் இருந்தேன். எனக்கு உங்கள் புகைப்படத்தைப் பார்த்த பிறகு உங்களைச் சந்திக்கவாவது இந்தியா வர ஆசை. ஒரு நாள் ஒரே ஒரு நாள் உங்கள் வீட்டில் எனக்கு சாப்பாடு போடுங்கள். நன்றி மறக்க மாட்டேன். அம்மாவிடம் என் நமஸ்காரத்தைச் சொல்லுங்கள். எத்தனை சம்பாதித்து என்ன? மனநிம்மதி இல்லை."

    இவளுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

    அம்மாவிடம் பேசிவிட்டு விரைவில் சம்மதக் கடிதம் அனுப்புவதாகச் சொன்னாள்.

    ஒரு வாரத்திற்குப் பிறகு ராமனிடமிருந்து மீண்டும் ஒரு மின் அஞ்சல் வந்தது.

    ஜாப் கன்பர்ம்ட். பட் அதிலே ஒரு சிக்கல். எங்கள் கம்பெனி ரூல் பிரகாரம் விசாவிற்கு நீங்கள் தான் பணம் அனுப்ப வேண்டுமாம். முதல் மாதச் சம்பளத்தோடு அந்த அமௌண்ட்டை நாங்கள் ரீ எம்பர்ஸ் செய்து விடுவோம். மேட்டர் ஆப் ஒன் மன்த். கிட்டத்தட்ட 2500 டாலர் இது ஜாப் விசா. சார்ஜ் சற்று அதிகம் தான். இந்தியாவில் என் ஆபீஸை அருணா என்கிற என் அஸிஸ்டெண்ட் கவனித்துக் கொள்கிறாள். நான் எப்போதும் டூரில் இருப்பேன். அவள் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பி விடுங்கள். அவளே எல்லா ஏற்பாடுகளையும் செய்து விடுவாள். நான் சிங்கப்பூர் போகிறேன் அங்கு ஒரு அசைன் மெண்ட். நான் திரும்பி வந்ததும் தங்களுடன் தொடர்பு கொள்கிறேன். என்று ஆந்திராவில் ஏதோ ஒரு வங்கிக் கிளையின் விபரம் வங்கிக் கணக்கு எண் ஐ.எப்.ஸி கோட் எல்லாம் தெரிவித்திருந்தான்... அவள் பெயர் அருணா.

    இவள் சந்தேகம் வலுத்தது. சைபர் கிரைம் பிரிவிற்குப் போனால் வீணாக விளம்பரம் தான் வரும். அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டாதபடி செயல் பட வேண்டும்.

    கம்ப்யூடர் எக்ஸ்பர்ட் ஒருவரை அழைத்து வந்து, ஸிஸ்டத்தில் இவள் பெயருக்கு வந்திருந்த மின் அஞ்சல்களை ஆராயச் சொன்னாள். அது ஒரு பேக் மெயில் ஐடி என்று தெரிந்தது. ஐ.பி விலாசத்தில் அந்த மாதிரியான விபரங்கள் ஏதுமில்லை.

    இனி கவனமாக இருக்க வேண்டும். எந்த சந்தேகமும் ஏற்படாதபடி செயல் பட வேண்டும்.

    இவள் ராமனுக்கு எஸ்.எம்.எஸ்ஸில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

    என் சிஸ்டம் ஹேங்க் ஆகி இருக்கிறது. ஸ்கிரீன் கறுப்பாகி விட்டது. சர்வீஸுக்குத் தந்திருக்கிறேன். சரியானவுடன் நீங்கள் சொன்ன மாதிரி அனுப்பி வைக்கிறேன்.

    என்னடி என்னமோ ஓடிட்டே இருக்கே? ஏதாவது பிரச்சனையா? அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1