Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Varuvaiyana Ninaithirunthean
Nee Varuvaiyana Ninaithirunthean
Nee Varuvaiyana Ninaithirunthean
Ebook60 pages21 minutes

Nee Varuvaiyana Ninaithirunthean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்திரன், ரேவதி... பெயரில் மட்டும் பொருத்தமில்லை இணைந்த கணவன் மனைவி.

ரேவதியின் மாமியார் மகேஸ்வரி மகுடம் சூடிக் கொள்ளாத பேரரசியாக அந்த பங்களாவில் ஆட்சி செலுத்தி வருகிறாள்.

வீட்டோடு வேலையில்லாத மாப்பிள்ளை மகள்..,இன்னொரு மருமகள்....இப்படி கூட்டுக் குடும்பம் இவர்களுடையது. மகேஸ்வரின் கணவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது...தட்டிக் கேட்க ஆளும் கிடையாது.

திடீரென்று ரேவதியின் நகைகள் காணாமல் போகின்றன. ஹார்ட் அட்டாகிலிருந்து மீண்டு வந்த மாமனார் எதிரில் இந்தச் செய்திகளைச் சொல்லாமல் ரேவதி தவிர்க்கிறாள்.

ஒரு நாளில் பெரியவர் இறக்க வீடே சோகத்தில் மூழ்க திடீரென்று ஏற்பட்ட கேஸ் லீக்கில் ரேவதி கரிக்கட்டையாகிப் பிணமாகிறாள். காவல் துறையின் விசாரணை தொடர..... பல உண்மைகள் வெளிப்படுகின்றன. ரேவதியின் மரணம் கொலையா ?அல்லது தற்செயல் நிகழ்வா ?

குற்றவாளி யார் ?

“நீ வருவாயெனக் காத்திருந்தேன் “ என்கிற டைரி வாசகம் கிடைக்க.. யார் யாருக்காகக் காத்திருந்தார்கள்?

முழுவதும் படித்தால் நாமே குற்றவாளியைக் கண்டுபிடிக்கலாம்..

பிடிப்போமா ?

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580100804922
Nee Varuvaiyana Ninaithirunthean

Read more from Vimala Ramani

Related to Nee Varuvaiyana Ninaithirunthean

Related ebooks

Related categories

Reviews for Nee Varuvaiyana Ninaithirunthean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Varuvaiyana Ninaithirunthean - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    நீ வருவாயென நினைத்திருந்தேன்

    Nee Varuvaiyana Ninaithirunthean

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    ஊதுபத்திகளின் மணம்... மல்லிகைப்பூ வாசம்... இத்யாதி இத்யாதி... நீங்கள் நினைப்பது சரிதான்... இது ஒரு முதலிரவு அறை. வாசனை திரவியங்கள் மலர்களின் வாசம் என்னை முகர்ந்து பார் என்று நாசியைத் துளைத்தது.

    புத்தம்புது படுக்கையில் தூவப்பட்ட மல்லிகை மலர்கள்... பாசமுள்ள மணமக்களுக்கு உகந்த நேச மலர். நெஞ்சத்தின் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் மல்லிகை. 'மல்லிகை என் மன்னன் மயங்கும்...' பாடல் மனத்துள் ஒலிக்க ரேவதி கையில் பால் சொம்புடன் அந்த அறைக்குள் நுழைகிறாள்.

    கதவு சார்த்தி வெளியே சிரிக்கும் ஓசை. இன்னமும் இந்தப் பத்தாம்பசலித்தனமான பழக்கவழக்கங்கள் குறையவில்லை.

    கல்யாணத்திற்கு முதல் நாள் ரிசப்ஷன் வைக்கிறார்கள். பெண் பார்த்தவுடனேயே எதிர்கால ஜோடிகள் வெளியே 'ஷாப்பிங்’ போய் தம் திருமண ஆடைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    விருந்தினர், கர்னாடக சங்கீதக் கச்சேரிக்குப் பதில் லைட் மியூசிக்... அதில் அபத்தமான, அசிங்கமான படப் பாடல்கள்... கைதட்டி சிரித்து ரசிக்கும் கூட்டம்… சில இடங்களில் முதலிரவையே ஹோட்டல் அறையில் ஏற்பாடு செய்கிறார்கள்... நல்லவேளை... மணமகனுக்கோ, மணமகளுக்கோ 'டூப்’ போடுவதில்லை!

    ரேவதி அந்த அறையைப் பார்த்தாள்.

    இது அவள் அறை, இவள் திருமணம் இவள் பிறந்த வீட்டின் வாசலில் அழகான அலங்காரப் பந்தல் அமைத்து... வண்ண வண்ண விளக்குகள் மின்ன...

    ரேவதி வெட்ஸ் சந்திரன் - என்ற தர்மாகோல் எழுத்துக்கள் 'கேட்வாக்' அழகிகள் மாதிரி தங்களை அலங்காரம் செய்து கொண்டு நிற்க…

    மேள தாளத்துடன், பாட்டாசு சப்தத்துடன், வாண வேடிக்கை கோலாகலங்களுடன் நடந்து முடிந்து விட்டது. ரேவதியின் தாய் பத்மா அந்தக் கால மனுஷி.

    "இந்த வீடு ஆகி வந்தது... எத்தனை கல்யாணங்கள் இங்கு நடந்திருக்கின்றன. என் மைத்துனர், நாத்தனார் இப்படி. இந்த அறைக்கு முதலிரவு அறை என்றே பெயர். அதோ அந்த அறை பிரசவ அறை. எத்தனை குழந்தைகள். இந்த அறையில் பிறந்திருக்கின்றன. எனக்குப் பிறந்தது ஒன்று தான்

    Enjoying the preview?
    Page 1 of 1