பூங்கிளி கைவரும் நாள் வருமா..?
By R.Manimala
()
About this ebook
அரக்க பரக்க தன்னை அலங்கரித்தாள் பிருந்தா.
ரஞ்சனியின் பிறந்தநாளுக்கென புதிதாய் வாங்கிய 'சல்வாரை' அணிந்துகொண்டாள். அழகு சாதனங்களின் அவசியமின்றியே அழகான பவுர்ணமியைப் போல் ஜொலிப்பவள்தான். எனினும் இது ரஞ்சனியின் குடும்பத்தினர்... முக்கியமாய் அவளின் அண்ணன் மாதேஷும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி அல்லவா? அதனால் தன்னைப் பட்டைத் தீட்டிக்கொண்டிருந்தாள் பிருந்தா.
கறுப்பு பட்டாம்பூச்சியாய் பளிச்சிட்டன கண்கள். வடிவான இதழ்கள்... இளம்ரோஜா நிற 'லிப்ஸ்டிக்' உதவியுடன் மனதைக் கொன்றன.
"மம்மி..."- இங்கிருந்தபடியே அழைத்தாள்.
"என்ன?" பாக்கியலட்சுமியின் குரல் 'ஹாலில்' இருந்து ஒலித்தது.
"என்னோட 'வாட்ச்' எங்க?"
"என்னைக் கேட்டா?"
"என்ன 'மம்மி'? நான் தேடிட்டிருக்கேன்னு தெரியுதுல்ல? வந்து தேடிக் கொடுத்தா என்ன? நேரமாகுது... தாமதமா போனா ரஞ்சனி என்னை - உண்டு இல்லைன்னு பண்ணிடுவா?"- சொல்லிக்கொண்டே இங்கும், அங்குமாக கடிகாரத்தைத் தேடி அறையைக் களேபரமாக்கினாள்.
"அது சரி... உனக்குப் பொறுப்பு இல்லேன்னா, எல்லாரோட தலையையும் போட்டு உருட்டிக்கிட்டிருப்பே.! எங்கே வச்சி தொலைச்சே?" என்றபடி அறைக்குள் வந்தாள் பாக்கியலட்சுமி.
"இங்கேதான் 'மம்மி'... என் மேசையிலதான் வச்சிருந்தேன்!"
"அப்புறம் எங்கே ஓடிப் போச்சு? நிதானமா தேடிப் பாரு.நிதானமா தேடிக்கிட்டிருந்தா... ரஞ்சனி பாட்டியாகிடுவா!" என்றாள் பதிலுக்கு.
"இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல!" என்றபடி அவளுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தாள் அம்மா.
பத்து நிமிடங்கள் ஓடின.
எதேச்சையாக பாக்கியலட்சுமின் கண்களில் பிருந்தாவின் கடிகாரம் தென்பட்டது.
இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு மகளை முறைத்தாள்.
"பிருந்தா..."
"என்னம்மா?"
"தேடுறதை நிறுத்து!"
"ஏன்?"
"தேடினா கிடைக்காது!"
"எ... ன்... ன... து?"- அம்மாவைப் பார்த்து முறைத்தாள்.
"ம்... உன் கடிகாரம்."
"அய்யே... "ஜோக்' அடிக்கிற நேரத்தைப் பாரு!"
"பின்னே என்னடி? ரஞ்சனின்னு பேரைச் சொன்னாலே தலை கால் தெரியாது உனக்கு. அவளுக்கு பிறந்தநாள் வேற... கேட்கணுமா?"
"எதுக்கு இப்ப இந்த அறுவை?"
"கைக் கடிகாரம் கையில் கிடக்கிறப்ப விழுந்து விழுந்து இங்க தேடிக்கிட்டிருக்கிற புத்திசாலி பொண்ணாச்சே நீ?"
அப்போதுதான் பிருந்தா தன் இடக்கையைப் பார்த்தாள். கைக்கடிகாரம் சமர்த்தாக கிடந்தது. அதுவும் ரஞ்சனி பரிசாகத் தந்தது வேறு! பரபரப்புக்கு குறைச்சல் ஏது?ஹி... ஹி... 'சாரிம்மா!" அசடு வழிந்தாள்.
"என்ன 'சாரி'? எதுக்காக டென்ஷன்' ஆகணும்? என் உயிரை வாங்கணும்?"
"பொண்ணுங்க எப்பவும் பொறுமையா இருக்கணும். நிதானத்தை இழந்தா... நேரத்தையும் இழக்கணும்."
"ஐயோ 'மம்மி'... என்னைப் படுத்தாதே! நான்தான் 'சாரி' கேட்டுட்டேன் இல்ல? அப்புறமென்ன'அட்வைஸ்'? நேரம் வேற ஆகிட்டே இருக்கு. இன்னும் உன் பிள்ளை வரலையா?"
"அவனை எதுக்குக் கேக்கறே?"
"எதுக்கா? 'பர்த்டே பார்ட்டி'க்கு கூட்டிட்டுப் போறதுக்கு!"
"ரஞ்சனி உன் தோழி. நீ கலந்துக்கறே... சரி! பிரசன்னா எதுக்கு?"
"எல்லாம் காரணமாத்தான். அவனையும் 'இன்வைட்' பண்ணிருக்கா. ஆபீஸ்லேருந்து இன்னைக்கு சீக்கிரமா வரச் சொல்லிருந்தேன். இன்னும் காணோமே!".
"என்னமோ போ... பிரசன்னா உன்கூட வரமாட்டான்னுதான் என் மனசுக்குப் படுது. நேரமாகுதே... நீ கிளம்பு. அவன் வந்தா சொல்றேன்!"
"இல்ல... அவனைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். சரியான வெண்டைக்காய். அவனை நானே கூட்டிட்டுப் போறேன். இங்கே நின்னுப் பேசிட்டிருக்காம... எனக்காக ஒரு உதவி பண்ணேன். 'பிளீஸ் மம்மி... பிரசன்னா 'செல்'லுக்கு போன் பண்ணி சீக்கிரம் வரச் சொல்லேன்."
"உன்னோடு பெரிய தலைவலியா போச்சுடி!"- சலித்தபடி அறையைவிட்டு வெளியேறினாள் பாக்கியலட்சுமி.
பிருந்தா கண்ணாடி முன் நின்று 'டச்சப் செய்துகொண்டு, தன் மேனியை முழுவதுமாக ஆராய்ந்தாள்.
'சும்மா சொல்லக்கூடாது... அசத்தலாதான் இருக்கேன்!' 'பிங்க் நிற சல்வார் அவளது அழகை மேலும் அதிகப்படுத்தியது.
'இந்த சுடிதார்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...'- என்றோ ஒரு நாள்... இவளுக்கு மட்டுமே கேட்கும்படி 'கிசுகிசு'த்துவிட்டுச் சென்றான்
Read more from R.Manimala
சொல்லத்தான்... நினைக்கிறேன்..! Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைத் தேடும் நெஞ்சம்! Rating: 0 out of 5 stars0 ratingsபூ பூக்கும் நேரம்… Rating: 0 out of 5 stars0 ratingsநீயும் நானும் வேறல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணில் தெரிகின்ற வானம்! Rating: 0 out of 5 stars0 ratingsகாலமெல்லாம் நான் வருவேன் Rating: 0 out of 5 stars0 ratingsவேண்டும் உந்தன் உறவு! Rating: 0 out of 5 stars0 ratingsஎன் அன்பே! Rating: 0 out of 5 stars0 ratingsஉயிரே உன்னை அழைக்கிறேன்..! Rating: 0 out of 5 stars0 ratingsஇரகசிய சினேகிதனே... Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் தர வந்தேன்! Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பு மேகமே..! Rating: 0 out of 5 stars0 ratingsமுத்தமிட ஆசை! Rating: 0 out of 5 stars0 ratingsஇரண்டு மனம் வேண்டும் Rating: 0 out of 5 stars0 ratingsநெஞ்சில் பதிந்த நிலவு! Rating: 0 out of 5 stars0 ratingsஎன் வசம் நான் இல்லை... Rating: 0 out of 5 stars0 ratingsகாதலால் தவிக்கிறேன்! Rating: 0 out of 5 stars0 ratingsவிண்ணைவிட்டு வா கண்ணே..! Rating: 0 out of 5 stars0 ratingsஆசைக் கிளியே… Rating: 0 out of 5 stars0 ratingsஒரு மலரின் பயணம்! Rating: 0 out of 5 stars0 ratingsமறக்குமோ... நெஞ்சம்! Rating: 0 out of 5 stars0 ratingsமலரே என்னை நெருங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsமன்னிக்க மாட்டாயா...? Rating: 0 out of 5 stars0 ratingsமாலை மயக்கம் Rating: 0 out of 5 stars0 ratingsபூங்காற்றே நில்லு... Rating: 0 out of 5 stars0 ratingsகல்யாணமாலை Rating: 0 out of 5 stars0 ratingsஆகாயப் பந்தலிலே… Rating: 0 out of 5 stars0 ratingsமனதோடு... பேச வா..! Rating: 0 out of 5 stars0 ratingsகண்களுக்குச் சொந்தமில்லை Rating: 0 out of 5 stars0 ratings
Related to பூங்கிளி கைவரும் நாள் வருமா..?
Related ebooks
Poonkili Kaivarum Naal Varumaa Rating: 0 out of 5 stars0 ratingsபொன் வானம் பன்னீர் தூவுது... Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsOru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் Rating: 0 out of 5 stars0 ratingsUnnidathil Ennai Koduthean Rating: 0 out of 5 stars0 ratingsபன்னீர் பூ பந்தல் Rating: 0 out of 5 stars0 ratingsPanneer Poopanthal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Nettruvarai Nee Yaro GR Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsSamsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5Hello Mister Kaadhala! Rating: 0 out of 5 stars0 ratingsThanneerile Thaamaraipoo Rating: 0 out of 5 stars0 ratingsKann Simittum Nerathil... Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhvin Thean Thuli... Rating: 4 out of 5 stars4/5Muththazhagi Rating: 0 out of 5 stars0 ratingsமுத்தழகி Rating: 0 out of 5 stars0 ratingsVanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsNandhini 440 Volts Rating: 4 out of 5 stars4/5Kaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5பூமாலையில் ஓர் மல்லிகை..! Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsUppu Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsIrandil Ontru Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Pirintha Vaanam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for பூங்கிளி கைவரும் நாள் வருமா..?
0 ratings0 reviews
Book preview
பூங்கிளி கைவரும் நாள் வருமா..? - R.Manimala
1
‘ஹால்’ மையத்தில் தொங்கிக்கொண்டிருந்த அழகான சர விளக்குகள் மின்சாரத்தில் உயிரூட்டப்பட்டதும், வெள்ளமாய் பாய்ந்தது புது வெளிச்சம்.
பங்களா களைகட்டி இருந்தது.
‘சீரியல் பல்பு’களால் ஆடை அணிந்து ‘தகதகவென மின்னியது. தோட்டத்து செடி கொடிகளையும்கூட விட்டு வைக்கவில்லை. அதற்கும் மின்சாரப் பூக்களை அணிவித்திருந்தார்கள்.
மாலை நேரம்... மங்கிக்கொண்டிருந்த பொழுதாகையால், அந்த இடம் தேவலோகம் போல் மின்னியது.
தோட்டத்துப் புல்வெளி மீது... ஆங்காங்கே வேலைப்பாடு மிகுந்த வெண்ணிற மேசை-நாற்காலிகள் போடப்பட்டு... ஒவ்வொரு மேசையின் மீதும் அழகாக பூங்கொத்துகள் வைக்கப்பட்டு... உணவுக்காக காத்திருந்தன.
விருந்தினர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.
தேவன் அவர்களை வரவேற்று அமர வைத்துக்கொண்டிருந்தார். அவரது உடையிலும் ஆடம்பரம் இருந்தது.
தேவன்-பிரபல தொழிலதிபர். ஒரே நேரத்தில் நான்கைந்து தொழில்களில் கவனம் செலுத்தி, எதிராளிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் திறமையான ‘பிசினஸ்’ புலி!
சமூகத்தில் அவருக்கென, அவரது குடும்பத்துக்கென தனி கவுரவம் இருந்தது. அது அவர் முன்னோர் சேர்த்துவைத்துவிட்டுச் சென்ற சொத்து.
தொழிலை நேசிப்பதைவிட அதிகமாக தனது குடும்பத்தை நேசிப்பவர்.
எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டியபடி ஓடிக்கொண்டிருப்பார். தன் பிள்ளைகளுக்காக கடமையாற்ற வேண்டும் என்றால், எப்பேர்ப்பட்ட முக்கியமான விஷயம் என்றாலும் தூக்கி அடித்துவிட்டு தனது செல்வங்களுக்கு முக்கியத்துவம் தரும் பாசமிகு தந்தை.
அவர் மலேசியா செல்வதாக இருந்தது. அங்கு தொழிலதிபர்கள் மாநாடு நடக்கிறது. அதில் கலந்துகொள்ள ஒரு மாதம் முன்பே அழைப்பு வந்திருந்தது.
ஆனால், இன்று தன் அருமை மகள், ஆசை மகள் ரஞ்சனியின் பிறந்தநாள் என்று தெரிந்ததும்... ‘என் மகளின் பிறந்தநாள் விருந்தைவிடவா மாநாடு முக்கியம்?’ என்று பயணத்தைத் தூக்கி எறிந்தார்.
‘பார்ட்டி’யில் கலந்துகொள்வதற்காக பகட்டான உயர்தட்டு மக்கள் பரிசுகளுடன் வந்துகொண்டிருந்தனர். நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தெருவையே அடைத்திருந்தன.
‘பிறந்த நாளுக்கே இவ்வளவு கூட்டம் என்றால்... திருமணத்துக்கு?’
தேவன் தனக்குத்தானே சிரித்துக்கொண்டார். அந்த சிரிப்பில் பெருமிதம் பளிச்சிட்டது!
இருளை முற்றிலுமாய் விரட்டியடித்து நடிகைகளைப் போல் ஜொலித்துக்கொண்டிருந்தன விளக்குகள்.
நேரமாகிடுச்சே?
- முணுமுணுத்தபடி பங்களாவுக்குள் நுழைந்தார்.
கண்களில் முதலில் தென்பட்டது ஜெயாதான்! இவரின் மனைவி. ஒய்யாரமான உடை அலங்காரத்தில் மின்னலடிக்கும் வைர நகைகளுடன் நாற்பத்தைந்து வயதில் பதினைந்தை அழகு சாதனப் பொருட்களின் உதவியுடனும், தன் புன்னகையினாலும் குறைத்து இன்னமும் கட்டுக் குலையாத அழகுடன் இருந்தாள்.
தேவன் குறுநகையுடன் மனைவியை நெருங்கினார்.
உன் தங்கை ‘ரெடி’யாகிட்டாளா?
தங்கையா... என்ன சொல்றீங்க?
புரியாமல் அவளின் கண்கள் அழகாக விரிந்தன.
ஆமா... வந்திருக்கிறவங்க உன்னைப் பார்த்து அப்படித்தான் சொல்லப் போறாங்க! ரஞ்சனிக்கு அம்மான்னா யாருடி நம்பப் போறாங்க?
என்றார்... அவள் கன்னத்தைச் செல்லமாய் தட்டி.
போங்க...
சிணுங்கினாள் ஜெயா.
அட... வெக்கமா? இப்படி வெக்கப்பட்டு நிக்கறதைப் பார்க்கிறப்ப... இருபத்தைஞ்சு வருஷம் முன்னாடி முதலிரவுல பால் சொம்போட வந்தியே... அந்த ஞாபகம் வருது!
கடவுளே... யார் காதுலயாவது விழுந்துத் தொலைக்கப் போகுது. என்ன இப்படியெல்லாம் பேசிக்கிட்டு?
- முகம் சிவக்க கணவனைப் பார்த்தாள்.
என் பொண்டாட்டியை நான் கொஞ்சுறேன். யாருக்காக பயப்படணும்?
விட்டா... நாள் முழுக்க இதையேதான் பேசிட்டிருப்பீங்க. கிளம்புங்க.
ஓகே... ஓகே... எல்லாரும் வந்தாச்சு. விழாவை ஆரம்பிச்சிடலாம். ரஞ்சனி தயாராகிட்டாளா?
தயாராதான் இருக்கா. நான் அழைச்சிட்டு வர்றேன். வர்றவங்களை நீங்க கவனியுங்க.
சீக்கிரம் அழைச்சிட்டு வா!
என்றபடி வெளியேறினார் தேவன்.
ரஞ்சனியின் அறைக்குள் நுழைந்தாள் ஜெயா. இதுவரை புடவையை அறியாத அவளின் பூவுடல் பட்டுப் புடவை அணிந்து பளபளத்துக்கொண்டிருந்தது. தேவையான அணிகலன்களை அணிந்து தேவதையைப் போல் அமர்ந்திருந்தாள் ரஞ்சனி.
மகளின் அழகை கர்வம் பொங்க ரசித்தாள் தாய்.
கிளம்பிட்டியா?
ஆமா ‘மம்மி’! பிருந்தா வந்துட்டாளா?
‘பிருந்தா’ என்ற பெயரைக் கேட்டதும் சட்டெனத் திரும்பினான் மாதேஷ். ரஞ்சனியின் அண்ணன். அப்பாவுடன் தொழிலிலும் உதவியாக இருக்கும் அழகான இளைஞன்.
இன்னும் வரலையே?
என்றாள் ஜெயா.
அதைக் கேட்டு ரஞ்சனியின் முகம் மட்டுமல்லாது மாதேஷின் முகமும் சோர்ந்துதான் போனது.
இன்னுமா வரல?
வந்துடுவா... நீ வாம்மா. நேரமாயிடுச்சு...!
கண்டிப்பா வந்துடுவால்ல?
உன் தோழியைப் பத்தி உனக்குத் தெரியாதா? கண்டிப்பா வந்துடுவா... நீ கிளம்பு
- மகளின் கையைப் பற்றி அழைத்தாள்.
ரஞ்சனி எழுந்து அம்மாவுடன் சென்றாள்.
மாதேஷ் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான்.
‘பிருந்தா... நீ வருவேயில்ல?’-கேட்டுக்கொண்டான் தனக்குத்தானே!
2
அரக்க பரக்க தன்னை அலங்கரித்தாள் பிருந்தா.
ரஞ்சனியின் பிறந்தநாளுக்கென புதிதாய் வாங்கிய ‘சல்வாரை’ அணிந்துகொண்டாள். அழகு சாதனங்களின் அவசியமின்றியே அழகான பவுர்ணமியைப் போல் ஜொலிப்பவள்தான். எனினும் இது ரஞ்சனியின் குடும்பத்தினர்... முக்கியமாய் அவளின் அண்ணன் மாதேஷும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி அல்லவா? அதனால் தன்னைப் பட்டைத் தீட்டிக்கொண்டிருந்தாள் பிருந்தா.
கறுப்பு பட்டாம்பூச்சியாய் பளிச்சிட்டன கண்கள். வடிவான