Neelam Pirintha Vaanam
()
About this ebook
வானிலிருந்து நீலத்தைப் பிரித்து விட்டால் என்னவாகும்? நீலம் பிரிந்த வானம் என்ற இச்சிறுகதை அழகான குடும்ப அமைப்பைச் சொல்கிறது. இத்துடன் கூடிய சிறுகதைகள் தொகுப்பின் ஆரமாய் மின்னுகிறது. வாங்க! படிக்கலாம்!
Read more from Mala Madhavan
Othapanai Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsMuttrathu Mullai Rating: 0 out of 5 stars0 ratingsAzhagooril Poothavaley Rating: 5 out of 5 stars5/5Inaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsBhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsAdithya Ondram Vaguppu Rating: 0 out of 5 stars0 ratingsYaayum Ngyaayum Yaaraagiyaro... Rating: 0 out of 5 stars0 ratingsPoovey! Poovey! Penn Poovey! Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Seerattu Rating: 0 out of 5 stars0 ratingsRewa Rating: 0 out of 5 stars0 ratingsPathala Karandi Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Geetham Paaduthey Rating: 0 out of 5 stars0 ratingsPoimai Perunthee! Rating: 0 out of 5 stars0 ratingsSivamalar Rating: 0 out of 5 stars0 ratingsNatpirkku Veettrirukkai Yathenin Rating: 0 out of 5 stars0 ratingsNaalam Naalam Thirunaalam Rating: 0 out of 5 stars0 ratingsKrishnai Vandhal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Neelam Pirintha Vaanam
Related ebooks
Neeye Enthan Nila Saaraladi! Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Samsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Merke Oru Uthayam Rating: 0 out of 5 stars0 ratingsதாலாட்டும் உறவுகள்... Rating: 0 out of 5 stars0 ratingsSathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5பொன் வானம் பன்னீர் தூவுது... Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Sikkiya Minnal Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsAattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsஆற்றோட்டத்துப் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Kolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Uppu Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsOru Athikaalaik Kolai Rating: 0 out of 5 stars0 ratingsUnnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5Unnai Ondru Ketppen Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Cylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Neelam Pirintha Vaanam
0 ratings0 reviews
Book preview
Neelam Pirintha Vaanam - Mala Madhavan
https://www.pustaka.co.in
நீலம் பிரிந்த வானம்
Neelam Pirintha Vaanam
Author:
மாலா மாதவன்
Mala Madhavan
For more books
https://www.pustaka.co.in/home/author/mala-madhavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
யார் பிழை?
நீலம் பிரிந்த வானம்
தேவரே வருக
வாய்ப்பு
தேவையறிந்து...
நீ… நான்… நீர்…
பெருந்தலை
தேன்கூடு
சாமியாடி
வனநீலி
மன்னிப்பாயா
வராகத்திலொரு வஞ்சி
பேய்ப்பசி
தெரியும் ஆனா தெரியாது
இடைச்சிக்கல்
தோத்தாங்குளி
சும்மாவா கிடைத்தது சுதந்திரம்
யார் பிழை?
வீரா சுறுசுறுப்பாகக் கிளம்பிச் சாப்பிட அமர்ந்தான்.
ஏ! புள்ள சீதா! வந்து சோத்தப் போடு. ஆக்கி இருக்கியா இல்லையா?
ஐய்ய! இதென்ன உடுப்பு ஐத்தான்! செயிலுக்குள்ள இருக்காப் போல! யாரு குடுத்தாக?
கேட்டபடி சோற்றுப் பானையை எடுத்து வரச் சென்றாள் சீதா.
ஏன்... என்ன பிழை இதுல? நம்ம குமரேசு இல்ல... துபாய்ல இருந்து வாங்கிட்டு வந்தானாம். கூட ரெண்டு செண்டு பாட்டிலும் கொடுத்தான். அதான் இந்த உடுப்பப் போட்டுக்கிட்டு அப்படியே கொஞ்சம் கெத்தா வெளியே போயிட்டு வரலாமுன்னு...
யோவ் 420 தப்பிச்சு வந்துட்டியான்னு பின்மண்டையிலே போட்டு கூட்டிக்கிட்டு போவாங்க போலீசு... வேணுமா உங்களுக்கு? துபாயாம் துபாயி.
முகவாயில் கைவைத்து இடித்துக் கொண்டாள் சீதா.
தோ! பாரு செண்டு! வாசனையா இருக்கில்ல!
சாப்பிடற இடத்துல... அட! சாப்பாட்டு மேல... அடடா! கொட்டிடுச்சே! குமரேசு கொடுத்தார்ன்னு... பாருங்க... சோறு மணக்குது
அதற்குள் வாசலில் குரல் கேட்க எழுந்து சென்றாள் சீதா.
இரு போலீஸ்காரர்கள் வாசலில் நிற்க, என்னவென்று கேட்டதில் சிறையில் இருந்து கொலைக் குற்றவாளி தப்பி விட்டதாகக் கூற சீதாவின் கண் தன்னிச்சையாய் வீரா மேல் பதிந்து மீண்டது.
உட்கார்ந்திருந்த அவனின் முதுகுப்புறம் மட்டுமே தெரிய... பாய்ந்தனர் போலீஸ்.
அகப்பட்டியாடா பயலே!
சார்! சார்! நான் ஒண்ணும் செய்யல சார்!
இடைப்புகுந்த சீதா இவர் என் வூட்டுக்காரருங்க. இவரு உடுப்பு செயிலு உடுப்பு மாதிரி இருக்குன்னு இவரப் புடிச்சிட்டீங்களாக்கும். இதே போல முப்பது உடுப்பு ஊர்ல எல்லோருக்கும் முருகேசு கொடுத்திருக்கு. கிளம்பி எல்லோரையும் புடிச்சுட்டுப் போங்க!
என்றவள் வீராவிடம் திரும்பி
போட்டுக்கிட்ட உன் மேலயும் பிழையில்ல... கொடுத்த முருகேசு மேலயும் பிழையில்ல... அதப் பார்த்து ஏமாந்து குத்தவாளின்னு புடிக்க வந்தாங்க... பாருங்க... இவங்க மேல தான் பிழை!
உடுப்பைக் கழட்டி வீசி எறிந்தான் வீரா.
நீலம் பிரிந்த வானம்
ஏழு வயதுச் சிறுவன் கண்ணன். அவன் கேள்விகள் எல்லாம் அசாத்தியம். போன ஜென்மத்துப் புத்திசாலித்தனம் அப்படியே வந்திருக்கோ? நீலமேகம் தன் மடியில் உட்கார்ந்து கேள்வி கேட்கும் அவனையே பார்த்திருந்தார்.
தாத்தா! நீலமேக ஸ்யாமளனாம் கிருஷ்ணன். உனக்குத் தெரியுமா?
இல்லையேப்பா. நீ சொல்லு. தெரிஞ்சுக்கறேன்
விளையாட்டாட்டாய்ச் சொன்னார்.
ஆமா... நீலம் தான் பிரபஞ்சம். நீலம் தான் அமைதி. நீலம் தான் சமாதானம். நீலம் தான் எங்கும் ஈஸியா ஊடுருவும்.
வாஷிங்மெஷினில் துணி போட்டுக் கொண்டிருந்த நீலமேகத்தின் மருமகள் நந்தினி
ஆமாடா கண்ணா. கடைசியா சொன்னியே அது ரொம்ம்ம்ம்ப சரி!
தாத்தாவின் முகம் சுருங்குவதைப் பார்த்த கண்ணன்
நீ வா தாத்தா! நாம பேசலாம்!. நீ வானத்தை நீலக்கலரே இல்லாம பார்த்திருக்கியா?
நானே அப்படித்தான் கண்ணா இருக்கேன் என் ஸ்யாமளி இல்லாம. மனம் புலம்பியது.
ஸ்யாமளி அவருடன் ஐம்பது வருட தாம்பத்யம் நடத்திய அசாத்திய பொறுமைக்காரி. நீலமேகத்தின் அத்தனை கோபத்துக்கும், பொறுமையில்லாத் தனத்துக்கும் கிடைத்த சுமைதாங்கி.
நான் இல்லன்னா உங்களை யாரும் சீண்ட மாட்டா!
சமயத்தில் மனம் பொறுக்காது சொல்வாள்.
எனக்கு நாலு பிள்ளை இருக்காடி. நாலு மாட்டுப் பொண்ணு வருவா. நான் வரேன்... நான் வரேன்னு எம் மடி நிறைய பேரப் பசங்க வருவா!.
ஜம்பமடித்ததுக்கு மூன்று பிள்ளைகள்"அப்பா! உனக்கு இந்த வீடு சரிப்படாதுப்பா! உனக்கு இந்த சீதோஷ்ணம் ஒத்துக்காதுப்பா! உனக்கு இந்த ப்ளாட் சிஸ்டம்லாம் சரியா வராதுப்பான்னு சொல்லி தள்ளி விட்டார்கள்.
கடைசிப் பிள்ளையாத்தில் தான் இப்போது இருக்கிறார். அதுவும் பேரன் கண்ணன் தனக்கு தாத்தா வேண்டுமென்று படுத்தியதால்.
அவரும் வந்ததில் இருந்து மருமகளுக்கு எல்லாவிதத்திலும் ஒத்தாசை பண்ணுகிறார். சமையல் பாத்திரம் தேய்ப்பதில் இருந்து சாமான்களை கடைக்குப் போய் வாங்கும் வரை. இருந்தாலும் ஒட்டாத வாழ்க்கை. இப்போதெல்லாம் கோபமே வருவதில்லை. காட்ட ஸ்யாமளி இல்லையே!
பேரன் மடியிலேயே தூங்கி விட்டான். இவரும் சும்மா கண்ணை மூடிக் கொண்டிருந்தார். வாழ்க்கையை வாழ ஏதோவொரு பற்றுக் கோல் வேண்டியிருக்கிறது. அந்தப் பற்றுக் கோல் அவ்வளவு எளிதாக வசப் படுவதில்லை.
கண்ணப்பா!
எனப் பேரனை ஆசையாய்த் தடவி கண்ணை மூடிக் கொண்டார். தூங்கி விட்டாரென நினைத்து கண்ணனை மெதுவாக அவரிடமிருந்து பிரித்துத் தூக்கிப் படுக்கையில் விட்டு வந்த நந்தினி...
உள்ளே வந்த கணவனிடம் சொன்னாள்.
மத்த மூணு லேடீஸும் ஜாலியா இருக்கும் போது நான் மட்டும் உங்கப்பாவ சகிச்சுக்கணும்ன்னு அவசியமில்ல!
அவர் தான் உனக்கு எல்லா ஒத்தாசையும் பண்றாரே நந்தினி.
நம்ம கண்ணன் அவரோடயே இருக்கறது எனக்குப் பிடிக்கல
"நம்ம கண்ணன் அவரோடயே இருக்கறது எனக்குப் பிடிச்சிருக்கு. நல்லதைக் கத்துப்பான். நல்லதைக் கேட்டுப்பான். இப்ப அவன் கிட்ட கேளு. லோகத்துல இருக்கற அத்தனை விஷயமும் அவனுக்குத் தெரியும். ஏன்னா