தாலாட்டும் உறவுகள்...
()
About this ebook
குட்டி போட்ட பூனையைப் போல அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருந்தாள் செண்பகம்.
வீட்டிற்குள் போவதும்... பின்பு வாசல் கேட்டைத் திறந்து வெளியே எட்டிப் பார்ப்பதுமாய்... பதைபதைப்புடன் காணப்பட்டாள்.
சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தவளுக்கு 'பகீர்' என்று மனம் பதறியது. இது என்ன...? மணி பத்தாகிறது. இன்னும் இந்த மனுஷனைக் காணோமே. என்று தனது கைபேசியை எடுத்து மீண்டும், முயற்சித்து பார்த்தாள்...! 'நீங்கள் அழைத்த எண், உபயோகத்தில் இல்லை' என்ற பதிலே வந்தது.
'தினமும், தோப்புக்கு போயிட்டு ஏழு மணிக்கெல்லாம் டாண்ணு... வீட்டிற்கு வரும் மனுஷன் ஏன் இன்னும் வரக் காணோம்.' எட்டு மணியிலிருந்து பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கைபேசியில் முயற்சித்தும்... இதோ வந்திடுவார்...! என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவளுக்கு... இரண்டு மணி நேரம் ஆகியும் அவரை காணோம் என்றதும் அடி வயிற்றில் ஒரு பயப்பந்து உருண்டது.
'நாமே தோப்புக்கு போய் பார்த்திட வேண்டியது தான்' என்று நினைத்தவள். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். இரண்டு பையன்களும் ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதேப்போல் இன்னொரு அறையில் இரண்டு பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
மூத்தவன் ராமுவை எழுப்பி துணைக்கு அழைத்து போய் பார்த்து வரலாமா என எண்ணியவள் ராமுவை மெதுவாக எழுப்ப... "அட போம்மா நல்ல தூக்கத்தை வந்து கெடுத்திட்டியே...!" என்று எரிந்து விழுந்தான்.
மூத்தவன் ராமு பத்தாவது படிக்கிறான். அவனுக்கு அடுத்தவன் சிவா எட்டாவது. இரு பெண்களும் இரட்டையர் ஆறாவது. ஒருத்தி அஞ்சு, ஒருத்தி மஞ்சு.
இப்படி... ஆண் இரண்டு, பெண் இரண்டு என செண்பகம், சண்முகநாதன் தம்பதியருக்கு நான்கு குலக் கொழுந்துகள்.
'சரி... தனியாகவே தோப்புக்கு போய் பார்த்தே தீரணும்' என்ற முடிவுடன் ஒரு பேட்டரி லைட்டை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி வெளியே வரவும்.
"ஏய்... செண்பா... எங்கேடி... போறே அதுவும் இந்த ராத்திரி நேரத்திலே தனியா?" என்றவாறு அருகில் வந்தார் அடுத்த வீட்டு அலமேலு பாட்டி.
"வாங்க மாமி... தோப்புக்கு போன மனுஷனை இன்னும் காணோம். அதான்"
"தனியாக தோப்புக்கு போக கெளம்பிட்டியாக்கும்" என்ற அலமேலு பாட்டி. "காலம் கெடக்குற கெடையிலே இந்த அர்த்த ராத்திரி... இப்படி தனியா நீ போகலாமா..."
"இல்ல மாமி..."
"இதோ பார் செண்பா காத்து எப்படி வீசுது பார்... இந்த காத்துக்கு பாம்பெல்லாம் பாதையோரம் படுத்துக் கெடக்கும். நீ என்றைக்கு தோப்புக்கு தனியா போயிருக்கே... சொல்லு... உன்னை தனியா... எங்கேயும் சண்முகம் அனுப்ப மாட்டானே... அதனால்... இரு... கொஞ்சம் லேட்டானாலும் வந்திடுவான். இல்லையா... தோப்புல படுத்து கிடந்துட்டு காலையில வந்துடப் போறான். கவலையே படாம போய் படு... போ"
"இல்ல... மாமி... எனக்கு மனசு அடிச்சுகுது."
"அப்போ... போன்... போட்டு கேளு."
"அது எடுக்கவே மாட்டேங்குது. சார்ஜ் இல்லே போலிருக்கு... அதான் அவரும் எனக்கு போன் போட்டு தகவல் சொல்ல முடியல...!"
'இதே மாதிரி தான் என் வீட்டுக்காரர்... இப்படி காத்துல ஆட்டை காணோம்னு தேடிப் போனவரு பாம்பு கடிச்சி... பிணமாக வந்தாரு... நான் போய் என் மகன் மாடசாமியை கூட்டிட்டு வர்றேன்..." என்ற அலமேலு பாட்டி அருகில் இருந்த தன் வீட்டை நோக்கி போனார்.
'இந்த முறை... வாழை தோப்பு காலை வாரி விட்டுடுச்சி... அடியோடு அத்தனை வாழை மரமும் காற்றில் தலை சாய தனது மூன்று வரிச் செயினை அடகு வைத்து வாழையில் போட்டு, வாழைத்தார்களை விற்று செயினை திருப்பிடலாம் என்று எண்ணியிருந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது' அதான் மனுஷன் இடிந்து போயிருந்தார்.
எவ்வளவோ ஆறுதல் கூறினாள் செண்பகம்.
"அதுக்கென்னங்க பண்றது. மூணு வரிச் செயின் போனாப் போகுது நீங்க நல்லா சம்பாதிச்சு ஐந்து வரியா பண்ணிப் போடுங்க..."
"இல்லம்மா... உங்க அண்ணனுங்க உனக்கு ஆசையாப் போட்டது. இந்தப் பாவியால அதை தக்க வைச்சுக்க முடியலையே...!" என்று மிகவும் கவலை கொண்டான் சண்முகம்.
Read more from Sundari Murugan
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்... Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் என்னும் கோவில்… Rating: 0 out of 5 stars0 ratingsயாருக்கு மாப்பிள்ளை யாரோ..? Rating: 0 out of 5 stars0 ratingsஇதயமே விட்டு விலகாதே...! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயவீணை தூங்கும்போது…! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் என்றொரு ஏடெடுத்தேன்! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயத்தில் ஏதோ ஒன்று..! Rating: 0 out of 5 stars0 ratingsவசந்தம் வருமா..? Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் எடுத்த முடிவு! Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னை காணாத கண்ணும்... Rating: 0 out of 5 stars0 ratingsமாறியது நெஞ்சம்! Rating: 0 out of 5 stars0 ratingsநீ எங்கே... நான் அங்கே..! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் துடிக்க மறந்ததேன்..? Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் தேடும் என்னுயிரே..! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயங்களின் சங்கமம்... Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் போகுதே..! Rating: 0 out of 5 stars0 ratings
Related to தாலாட்டும் உறவுகள்...
Related ebooks
Naan Nappinnai Pesukiren Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Pirintha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhvin Thean Thuli... Rating: 4 out of 5 stars4/5Ellaigalin Vilimbil Rating: 5 out of 5 stars5/5Paathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsஆற்றோட்டத்துப் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsAattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKanal Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsSathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Vandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Koottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsUnnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5Nesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Madhil Mel Manasu Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... Rating: 0 out of 5 stars0 ratingskadhal Regai Rating: 5 out of 5 stars5/5நிலவும் நீலமலர்களும்... Rating: 0 out of 5 stars0 ratings23 - m Padi Rating: 5 out of 5 stars5/5Soozhnilaik Kaithigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thotta Rating: 0 out of 5 stars0 ratingsPoovukul Uyir Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் துடிக்க மறந்ததேன்..? Rating: 0 out of 5 stars0 ratingsAnjana Archana Dhayalan Rating: 5 out of 5 stars5/5Corona Kalathu Kurunovelgal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Or Alai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for தாலாட்டும் உறவுகள்...
0 ratings0 reviews
Book preview
தாலாட்டும் உறவுகள்... - Sundari Murugan
1
குட்டி போட்ட பூனையைப் போல அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருந்தாள் செண்பகம்.
வீட்டிற்குள் போவதும்... பின்பு வாசல் கேட்டைத் திறந்து வெளியே எட்டிப் பார்ப்பதுமாய்... பதைபதைப்புடன் காணப்பட்டாள்.
சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தவளுக்கு ‘பகீர்’ என்று மனம் பதறியது. இது என்ன...? மணி பத்தாகிறது. இன்னும் இந்த மனுஷனைக் காணோமே. என்று தனது கைபேசியை எடுத்து மீண்டும், முயற்சித்து பார்த்தாள்...! ‘நீங்கள் அழைத்த எண், உபயோகத்தில் இல்லை’ என்ற பதிலே வந்தது.
‘தினமும், தோப்புக்கு போயிட்டு ஏழு மணிக்கெல்லாம் டாண்ணு... வீட்டிற்கு வரும் மனுஷன் ஏன் இன்னும் வரக் காணோம்.’ எட்டு மணியிலிருந்து பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கைபேசியில் முயற்சித்தும்... இதோ வந்திடுவார்...! என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவளுக்கு... இரண்டு மணி நேரம் ஆகியும் அவரை காணோம் என்றதும் அடி வயிற்றில் ஒரு பயப்பந்து உருண்டது.
‘நாமே தோப்புக்கு போய் பார்த்திட வேண்டியது தான்’ என்று நினைத்தவள். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். இரண்டு பையன்களும் ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதேப்போல் இன்னொரு அறையில் இரண்டு பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
மூத்தவன் ராமுவை எழுப்பி துணைக்கு அழைத்து போய் பார்த்து வரலாமா என எண்ணியவள் ராமுவை மெதுவாக எழுப்ப... அட போம்மா நல்ல தூக்கத்தை வந்து கெடுத்திட்டியே...!
என்று எரிந்து விழுந்தான்.
மூத்தவன் ராமு பத்தாவது படிக்கிறான். அவனுக்கு அடுத்தவன் சிவா எட்டாவது. இரு பெண்களும் இரட்டையர் ஆறாவது. ஒருத்தி அஞ்சு, ஒருத்தி மஞ்சு.
இப்படி... ஆண் இரண்டு, பெண் இரண்டு என செண்பகம், சண்முகநாதன் தம்பதியருக்கு நான்கு குலக் கொழுந்துகள்.
‘சரி... தனியாகவே தோப்புக்கு போய் பார்த்தே தீரணும்’ என்ற முடிவுடன் ஒரு பேட்டரி லைட்டை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி வெளியே வரவும்.
ஏய்... செண்பா... எங்கேடி... போறே அதுவும் இந்த ராத்திரி நேரத்திலே தனியா?
என்றவாறு அருகில் வந்தார் அடுத்த வீட்டு அலமேலு பாட்டி.
வாங்க மாமி... தோப்புக்கு போன மனுஷனை இன்னும் காணோம். அதான்
தனியாக தோப்புக்கு போக கெளம்பிட்டியாக்கும்
என்ற அலமேலு பாட்டி. காலம் கெடக்குற கெடையிலே இந்த அர்த்த ராத்திரி... இப்படி தனியா நீ போகலாமா...
இல்ல மாமி...
இதோ பார் செண்பா காத்து எப்படி வீசுது பார்... இந்த காத்துக்கு பாம்பெல்லாம் பாதையோரம் படுத்துக் கெடக்கும். நீ என்றைக்கு தோப்புக்கு தனியா போயிருக்கே... சொல்லு... உன்னை தனியா... எங்கேயும் சண்முகம் அனுப்ப மாட்டானே... அதனால்... இரு... கொஞ்சம் லேட்டானாலும் வந்திடுவான். இல்லையா... தோப்புல படுத்து கிடந்துட்டு காலையில வந்துடப் போறான். கவலையே படாம போய் படு... போ
இல்ல... மாமி... எனக்கு மனசு அடிச்சுகுது.
அப்போ... போன்... போட்டு கேளு.
அது எடுக்கவே மாட்டேங்குது. சார்ஜ் இல்லே போலிருக்கு... அதான் அவரும் எனக்கு போன் போட்டு தகவல் சொல்ல முடியல...!
‘இதே மாதிரி தான் என் வீட்டுக்காரர்... இப்படி காத்துல ஆட்டை காணோம்னு தேடிப் போனவரு பாம்பு கடிச்சி... பிணமாக வந்தாரு... நான் போய் என் மகன் மாடசாமியை கூட்டிட்டு வர்றேன்..." என்ற அலமேலு பாட்டி அருகில் இருந்த தன் வீட்டை நோக்கி போனார்.
‘இந்த முறை... வாழை தோப்பு காலை வாரி விட்டுடுச்சி... அடியோடு அத்தனை வாழை மரமும் காற்றில் தலை சாய தனது மூன்று வரிச் செயினை அடகு வைத்து வாழையில் போட்டு, வாழைத்தார்களை விற்று செயினை திருப்பிடலாம் என்று எண்ணியிருந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது’ அதான் மனுஷன் இடிந்து போயிருந்தார்.
எவ்வளவோ ஆறுதல் கூறினாள் செண்பகம்.
அதுக்கென்னங்க பண்றது. மூணு வரிச் செயின் போனாப் போகுது நீங்க நல்லா சம்பாதிச்சு ஐந்து வரியா பண்ணிப் போடுங்க...
இல்லம்மா... உங்க அண்ணனுங்க உனக்கு ஆசையாப் போட்டது. இந்தப் பாவியால அதை தக்க வைச்சுக்க முடியலையே...!
என்று மிகவும் கவலை கொண்டான் சண்முகம்.
2
வான்வெளியில் தெரிந்த நட்சத்திர பூக்களை கண் கொட்டாது மல்லாக்க படுத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் சண்முகம்.
ஒரு நட்சத்திரம் உருகி கீழே விழுந்து தனக்கு கிடைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தவன் சிரித்துக் கொண்டான்.
அப்படியெல்லாம் சும்மா கிடைத்தால் சுகம் கிடைக்குமா! நாமே கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து அதில் கிடைக்கும் வருமானம் தானே மதிப்பு.
ஏதோ சாப்பாட்டு கதையை ஓட்ட இனி தென்னந்தோப்பு கை கொடுக்கப் போகுது.
பாவம் செண்பகம். எந்த ஒரு விசேஷ வீட்டிற்கு போகும்போதும் அந்த மூணு வரிச் செயினை போட்டுகிட்டு போவா... அதுவும் இப்ப பறி போயிடுச்சே... அவ கழுத்தில் அந்த செயினை போட்டதும் அழகு மிளிரும். செண்பகத்தோட அண்ணன் அவ... கல்யாணத்துல போட்டது.
செண்பகத்தை நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்ந்தது. சண்முகத்திற்கு தனது அன்புக்குரியவள்... அவளது அண்ணன்களுக்கு அன்பு தங்கை.
‘ச்சே என்னால இப்ப அந்தச் செயினும் போகப்போகுது. சரி செண்பகம் தேடுவா ஒரு போன் போட்டு காலையில் வர்றேன்னு சொல்லிடுவோம். பயந்து போய் இருப்பா. தான் வரலையேன்னு தேடுவா’ என்று கைப்