Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesapoovin Narumanam
Nesapoovin Narumanam
Nesapoovin Narumanam
Ebook214 pages2 hours

Nesapoovin Narumanam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

''ஒரே திசையில் சென்று கொண்டிருக்கும் வாழ்வில் சலிப்பு உண்டாக ஒரு மாற்றம் வேண்டி வருகிறான் தமிழ். மாற்றத்தை வேண்டி வந்த இடத்தில் சந்திக்கும் மலரிடம் நேசம் உண்டாக அவன் விரும்பிய மாற்றமும், வாழ்க்கையின் துணையும் கிடைக்கின்றது"

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142706776
Nesapoovin Narumanam

Read more from Chitra.G

Related to Nesapoovin Narumanam

Related ebooks

Reviews for Nesapoovin Narumanam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesapoovin Narumanam - Chitra.G

    https://www.pustaka.co.in

    நேசப்பூவின் நறுமணம்

    Nesapoovin Narumanam

    Author:

    சித்ரா.ஜி

    Chitra.G

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chitra-g

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 1

    விஷ்ணு சஹஸ்ரநாமம் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரலில் வீடு முழுவதும் தெய்வீகத்தை பரப்பிக் கொண்டிருந்தது. அக்குரலின் இனிமையுடன் மாய உலகத்திற்குள் நுழைந்தது போல சாம்பிராணியின் புகையில் வீடு நிறைந்திருந்தது. இளம் காலையில் ஒரு புத்துணர்ச்சியை பரப்பிய சூழ்நிலையில் கையில் கற்பூரத்தட்டுடன் வீட்டின் அனைத்து அறைகளுக்குள்ளும் நுழைந்து வந்து கொண்டிருந்தார் துளசி.

    தட்டுடன் சமையல் அறைக்குள் நுழைந்தவர், சரஸ்வதி வந்தாச்சா? பூஜையில் இருந்ததால் கவனிக்கலை, இந்தா ஆரத்தி எடுத்துக்கோ

    நானும் இப்பதாம்மா வந்தேன், நீங்க பூஜையில் இருந்ததால்தான் நானும் குரல் கொடுக்கலை... காலையில் என்ன டிபன் செய்யட்டும்

    முதலில் காபி போட்டு டேபிளில் வச்சிடு. தமிழு வந்துட்டான். ஆறுமாசமா நாக்கு செத்துகிடக்கும், அவனுக்கு என்ன பிடிக்குமோ அது செய்

    சரிம்மா! தம்பி எத்தனை மணிக்கு வந்தாங்க...

    ராத்திரி பனிரெண்டுக்கு மேல ஆச்சு சரசு

    அப்படியாம்மா! அப்ப எழுந்திரிக்க லேட் ஆகும் இல்லையா? நிதானமா செய்யட்டுமா, சூடா சாப்பிடுமே

    ஏன் சரசு! தம்பி வந்த நினைப்புல எங்களையெல்லாம் மறந்துட்டாங்களா உங்க எஜமானியம்மா என்றவாறு வந்தார் ராஜரத்தினம்.

    பதில் சொல்றதுக்குள்ள கேள்வி கேட்க வேண்டாமுன்னு சொல்லு சரசு

    அப்படி என்ன சொல்ல போற துளசி! காலையில் மனைவியுடன் தர்க்கம் ஆரம்பித்தார் கணவர்.

    ஐயாவும், தாரணியும் நேரத்தில கிளம்புவாங்க எப்பவும் போலவே சீக்கிரமா ஆரம்பின்னு சொல்ல வந்தேன். ஆமா நீங்க ஏன் எழுந்தவுடன் நேரா இங்க வந்தீங்க? வாக்கிங் இல்ல போகணும்

    அதுவா... என்று ஆரம்பித்தவரை

    நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியும். நான் சொன்னதையே சரசுகிட்ட சொல்ல வந்திருப்பீங்க சரிதான... ஆனா நான் மட்டும்தான் பையன்மேல பாசம் காட்டுறதா வெளியில் சொல்லுவீங்க. ஏன்தான் இந்த அப்பாக்கள் எல்லாம் மனசுல பாசத்தையும் வெளியில கடுமையையும் காட்டுறீங்களோ தெரியலை. அன்பையும் அக்கறையையும் வெளிப்படையா காமிச்சா குறைஞ்சா போயிடுவீங்க. எப்ப பாரு இதையே செய்வது

    அதுதான் இப்போ தெரிஞ்சி போச்சே விடு துளசி, ஆமா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?

    இன்னைக்கு தமிழுக்கு ஜெட்லாக் இருக்கும். தூக்கக் கலக்கத்திலேயே இருப்பான். லைட்டாதான் செய்யச் சொல்லி இருக்கேன். கொஞ்சம் இங்கித்திய சூழ்நிலைக்கு மாறட்டும் அப்புறம் எல்லாம் செய்யலாம்.

    சரி துளசி! நான் வாக்கிங் கிளம்புறேன் தமிழை எழுப்பவேண்டாம் அவனாகவே எழுந்திரிக்கட்டும்.

    சரிங்க என்றவர் செல்லும் கணவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    பின்னலாடை ஏற்றுமதி செய்யும் தொழிலில் குறிப்பிடப்படும் நபராக இருப்பவர் ராஜரத்தினம். ஆரம்பத்தில் சொந்த ஊரான சேலத்தில்தான் அவருக்கு கடை இருந்தது. அவரின் தொழிலுக்கு வேண்டிய துணிகளும் அருகில் இருந்த திருப்பூரில் இருந்து வருவதால் வசதியாக இருந்தது.

    நாளாக நாளாக தொழில் வளர்ந்து கொண்டே வந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்றுமதி செய்யலாம் என்று சென்னைக்கு வந்து பலவருடங்கள் ஆகிவிட்டது.

    பெற்றவர்கள் அவர்களின் விவசாய நிலங்களை பார்த்துக் கொண்டு கிராமத்தில் வசிக்க, இவரின் ராஜ்ஜியம் இங்கு கொடிகட்டிப் பறக்கிறது. இரண்டு பிள்ளைகள். பெரியவன் தமிழரசு. இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான். எப்பொழுதும் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் மாறி, மாறி வேலை. காடாறுமாதம், நாடாறுமாதம் ஆண்ட விக்கிரமாதித்த மகாராஜாவைப் போல எப்பொழுதும் ஓட்டம்.

    அடுத்தவள் தாரணி, இவளும் இன்ஜினியரிங் கடைசி வருடம் படிக்கிறாள்.

    மகனிடம் வெளிப்படையாக பாசத்தைக் காட்டாத தந்தையாகவே ஆரம்பத்தில் இருந்து பழகியதால் இன்றளவும் அப்படியே நடந்து கொள்கிறார் ராஜரத்தினம்.

    மகனிடம் காட்டிய கடுமையை மகளிடம் காட்டமுடியவில்லை அவரால். மகள் தாரணி அப்பா செல்லம். ஆனால் மகனின் ஒவ்வொரு செயலிலும் கவனம் கொள்வார். இன்றும் அப்படியே செய்துவிட்டு செல்லும் கணவரைப்  பார்த்து மனதிற்குள் சிரித்த துளசி.

    சரசு! தக்காளி சட்னிக்கு கொஞ்சம் புதினாவும் ஒரு கைப்பிடி போடு தமிழுக்கு அந்த டேஸ்ட் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார்.

    நடந்து கொண்டே ஹாலிற்குள் சென்றவரை கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்து வந்த மகள் தாரணி எதிர்கொண்டாள்.

    அம்மா அண்ணா எழுந்துட்டானா?

    ஏண்டி! ராத்திரி ஒன்பது மணியில் இருந்து தூங்குற நீ இப்போதான் எழுந்து வர, அத்தனை மணிநேரம் பயணம் செய்தவன் உனக்கு முன்னாடி எழுந்திருப்பானா?

    ஏன் அவன் பிளைட்ல உட்கார்ந்துகிட்டு வரலையா தள்ளி கிட்டுத்தான் வந்தானா? என்னவோ அமெரிக்காவுல இருந்து நடந்தே வந்த மாதிரி பேசுற

    இரண்டு போட்டேனா பாரு. முதலில் அண்ணான்னு சொல்லி அவன் வயசுக்கு மரியாதை கொடு. நீ வருவடி ஏரோப்ளேனை தள்ளிக்கிட்டு

    பின்ன என்ன அவன் என்னமோ புதுசா வெளிநாடு போயிட்டு வந்த மாதிரி பில்ட்அப் செய்யுற, அவன் வருஷத்துல பாதிநாள் வெளியில்தான் இருக்கிறான்.

    எப்போ வந்தா என்னடி. கொஞ்ச நாளைக்கு நம்மளைவிட்டு பிரிந்துதானே இருக்கிறான். நடுராத்திரி வந்தான் இன்னும் சரியா பேசக் கூட இல்லை அம்மாவின் பாச உணர்வுகள் ஆதங்கமான வார்த்தைகளாக வெளிப்பட்டது.

    சரி... சரி... உனக்கு காலேஜுக்கு நேரம் ஆகுது கிளம்பு சாயங்காலம் வந்து பேசிக்கலாம்

    சரிம்மா, நீயாவது அவன் வரும்போது பார்த்த இல்லை என்னை எழுப்புன்னுதான சொல்லிட்டு படுத்தேன். நீதான் அதை செய்யலையே...

    உன்னை எப்புடிடா தூக்கத்தில் தொந்தரவு செய்யறது. காலையில் நீயும் படிக்கப் போகணும் இல்லையா, நல்லா தூங்கி எழுந்தாதான் படிப்பது மனதிற்குள் ஏறும். எங்க இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு தூங்க நேரம் கிடைக்கிறது, எப்பவும் ஓட்டம்தான். அந்த கிளாஸு, இந்த கிளாஸுன்னு போறதுக்கே நேரம் பத்தலை

    என்னமோ நாங்க விரும்பி போற மாதிரியே சொல்ற. அவங்க அப்படி... இவங்க இப்படி.. எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும் அப்பத்தான் இந்தக் காலத்தில் பிழைக்க முடியுமுன்னு சொல்லி அனுப்புறது நீங்க, அப்புறம் தூங்க நேரம் இல்லைன்னு பாட்டு வேற

    என்ன சொல்ற சத்தமா சொல்லிட்டு போ

    ம்ம்..எனக்கு கிளம்ப நேரம் ஆச்சுன்னு சொல்றேன். அப்பா, பாம்பு காது மனசுக்குள்ள முணுமுணுத்தாலும் கேட்குது.

    ***

    துளசி! எப்பம்மா தமிழு ஆபீஸுக்கு போறான், லீவு இருக்கும் இல்லை

    தெரியலைங்க! அவன் அங்கிருந்து கிளம்பறதுக்கு முன்னால் கேட்டேன், வந்தவுடனே வேலைக்குப் போகனுமான்னு வந்து பேசிக்கலாம்னு சொன்னான். எழுந்திரிக்கட்டும் கேட்கிறேன். இன்னும் ஒரு தோசை வைத்துக் கொள்ளுங்களேன் அதற்குள் கைகழுவுறீங்க

    போதும் துளசி! காலையில் ஹெவியா வேண்டாம். ஊருக்குப் போலாமான்னு யோசிச்சேன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்பவும் போன்ல பேசறதுதான அதனால்தான் கேட்டேன்.

    பார்க்கலாங்க, என்ன சொல்றான்னு. என்கிட்டயும் அத்தை சொன்னாங்க, ஒருநடை வந்துட்டு போனா என்ன, இன்னமும் ஓடி ஓடி உழைக்கணுமான்னு

    அவங்களுக்கு என்ன தெரியும். ஒவ்வொரு நாளும் நாலு பேர் புதுசா முளைக்கிறான். கொஞ்சம் கண் அசந்தாலும், அடிக்கிற காத்துல பறக்குற தூசியா காணாம போயிடுவோம்.

    ‘எப்பவும் அப்படி இருக்க முடியுமா கொஞ்சம் குடும்பத்தையும் கவனிக்கணும் இல்லை’

    அதுக்குத்தான் நீ இருக்கியே துளசி. உனக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்துடுறேன் இல்லையா?

    பணம் மட்டுமா வாழ்க்கை கேட்க நினைத்ததை உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொண்டார். பணம் இல்லாமலும் வாழ முடியாதே...

    குழந்தைகளாவது இந்த அவசர உலகத்தில் இருந்து மீண்டு சுதந்திரமா வாழணும் என்று நினைக்கிற தாயாக இதுவரை அவரால் ஒன்றும் செய்ய முடிந்ததில்லை.

    இந்த முறையாவது மகனிடம் பேசவேண்டும் என்று முடிவெடுத்தார். மகன் மனதில் எடுத்திருக்கும் முடிவை அறியாமல்.

    சரி துளசி நான் கிளம்பட்டுமா? இன்னைக்கு ஷிப்பிங் இருக்கு வர நேரமானாலும் ஆகும் தமிழு எழுந்தானா சொல்லு, இல்லைனா நேரம் கிடைக்கும்போது போன் பேசுறேன். தாரணி கிளம்பியாச்சா, நான் போகும் போது டிராப் செய்யட்டுமா இல்லை வேற காரில் போறாளா?

    அப்பா! நான் ரெடி உங்ககூடவே வரேன்

    தாரணி சாப்பிட்டு போ

    வேணாம்மா, உங்க ஆசைப் பையனுக்கே ஊட்டிவிடு, எனக்கு இப்போ பசிக்கலை

    ஏய்! இந்த பாலையாவது குடி அவசரமாக டம்ளரை மகளின் வாயிற்குள் திணித்தார் துளசி.

    பார்த்து துளசி, அவளுக்கு புரையேறிவிடும்

    ம்ம்... காலையில் இருந்து என்கிட்டே வம்பு வளர்த்தா இல்லையா, அந்த நேரத்துல கிளம்பி இருக்க வேண்டியதுதான?

    அதுக்கென்ன இப்போ. அவ குழந்தைதானே...

    ஆமா, இவ மட்டும் செல்லம் உங்களுக்கு

    அப்படித்தான்னு வைச்சிக்கோ துளசி என்ற தாரணியிடம்.

    அடி கழுதை பேரையா சொல்ற என்று கையை ஓங்கினார் துளசி விளையாட்டாக...

    அப்பா பாருங்கப்பா என்று அம்மாவிடம் சிக்காமல் அப்பாவின் பின்னால் ஓடி ஒளிந்தாள் மகள்.

    "சரி... சரி... பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க இரண்டு பேரும். சிரிப்புடன் வழியனுப்பி வைத்தார் துளசி. மகளையும் கணவரையும்...

    அத்தியாயம் 2

    அம்மா!

    தமிழு! வாப்பா, இன்னும் கொஞ்சநேரம் தூங்கலாம் இல்லையா, அதற்குள் ஏன் எழுந்த?

    இல்லைமா! போதும். இப்போ தூக்கம் போயாச்சு, அப்படியே குளிச்சிட்டும் வந்துட்டேன். பசிக்குது

    என்ன டிபன், சரஸ்வதி அக்கா! சீக்கிரம்

    இதோ தம்பி ரெடி

    எப்படி இருக்கிறீங்க, அக்கா?

    நான் நல்லா இருக்கேன் தம்பி. நீங்க?

    நானும் ரொம்ப நல்லா இருக்கேன், பார்த்தால் தெரியலையா? கடோத்கஜன் மாதிரி

    போங்க தம்பி உங்களுக்கு எப்பவும் விளையாட்டுதான். காஞ்சி கருவாடு மாதிரி வந்து இருக்கீங்க

    அடடா! அம்மாவுக்குப் போட்டியா நீங்களும் ஆரம்பிச்சாச்சா... நாங்க என்ன, ஓடி ஓடியா வேலை பார்க்கிறோம், உட்கார்ந்த இடத்தில் தானே

    எப்படி இருந்தாலும் உழைப்புதான தம்பி, உட்கார்ந்து செஞ்சாலும், ஓடி செஞ்சாலும்

    அப்படி சொல்லு சரசு, அப்பனும், மகனும், வீடு தங்காம எதுக்கு ஓடறாங்கன்னு புரியல

    சரிம்மா நான் போய் தம்பிக்கு சூடா ரெண்டு தோசை போட்டுட்டு வரேன்

    அதுதான், ஓட்டத்தை நிறுத்திடலாம்னு முடிவு செய்திருக்கேன்ம்மா.

    அப்பாடி! ஒருவழியா வெளியில் போறதில்லைன்னு முடிவு செய்திட்டியா? நல்ல முடிவு, சீக்கிரம் உனக்கு ஒரு கல்யாணத்தை  செய்துட்டா நம்ம வேலை முடிஞ்சது மகனிடம் பேசவேண்டும் என்று முடிவு செய்திருந்தவரின் எண்ணத்திற்கு பாலூற்றுவதைப்போல குளிர்ச்சியாக இருந்தது மகனின் வார்த்தைகள்.

    இல்லைம்மா, எங்கேயும் போவதில்லன்னு நிதானமாக வந்தது தமிழின் வார்த்தைகள்.

    மகனின் வார்த்தைகளில் வித்தியாசம் தெரிந்தவுடன் என்ன சொல்ற தமிழு.! துளசியும் விழித்துக் கொண்டார்.

    "இனி இந்த வேலைக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1