En Nandhavanathu Poo
By Chitra.G
()
About this ebook
"ஸ்ரீநிதி…நிச்சயித்திருந்த திருமணம் அவளுள் பலவித கனவுகளை துளிர்க்க விட, அவைகளெல்லாம் நிஜமாகும் அந்நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள். அவளின் காத்திருப்பு நிறைவேறியதா?...."
Read more from Chitra.G
Nesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Ennul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsMaya Enum Poonchiragu Rating: 0 out of 5 stars0 ratingsAnbenum Pookkal Malaratum.... Rating: 0 out of 5 stars0 ratingsKattil Vizhuntha Mazhaithuli Rating: 0 out of 5 stars0 ratingsParapatharke Siragugal... Rating: 0 out of 5 stars0 ratingsDheetchanya Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Thangum Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsUn Thogai En Tholil Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Nandhavanathu Poo
Related ebooks
Yamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Neeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Unnudane Naan Rating: 4 out of 5 stars4/5Vaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagave Naan Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Dheetchanya Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Dairy Rating: 5 out of 5 stars5/5Tholai Thoorathu Pasam Rating: 0 out of 5 stars0 ratingsUruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsMegangal Illatha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsNeeyiruntha Manasu Rating: 4 out of 5 stars4/5Ilamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Poove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5Manathai Thiranthathu Poovasam...! Rating: 4 out of 5 stars4/5Anbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Poongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsEngey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Nandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Ennavale...! Rating: 5 out of 5 stars5/5Vasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Ullangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Neeyedhaan En Manaivi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Nandhavanathu Poo
0 ratings0 reviews
Book preview
En Nandhavanathu Poo - Chitra.G
https://www.pustaka.co.in
என் நந்தவனத்துப் பூ
En Nandhavanathu Poo
Author:
சித்ரா.ஜி
Chitra.G
For more books
https://www.pustaka.co.in/home/author/chitra-g
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக் கண்களே.....
ஒலிநாடாவில் பாடும் குரலுடன் தானும் இணைந்து அபிராமி அந்தாதியை பாடிக்கொண்டிருந்தாள் ராகினி.
வாய் பாடினாலும் கை சுவாமி படங்களுக்கு முன்பிருந்த நெய்விளக்கை தூண்டி சரி செய்து கொண்டிருந்தது.
மனமோ, கடவுளே எப்பொழுதும் தளராத மனதையும், எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் உறுதியையும் கொடு என்று வேண்டிக் கொண்டிருந்தது.
அம்மா! நீங்க தினமும் கேட்டாலும், கேட்காவிட்டாலும் அந்த அபிராமி தேவி நமக்கு அனைத்தையும் கொடுத்து இருக்கிறாள். பூஜை செய்தது போதும், வாங்க வந்து டிபன் சாப்பிடுங்க, நீங்களும் இன்னைக்குதான் ஆபீஸ் ஜாயின் செய்யணும் நினைவு இருக்கா
என்றான் ஸ்ரீமன் நாராயணன்.
மனதில் வேண்டியதை புரிந்தது போல சொல்லிய பிள்ளையை திரும்பிப் பார்த்து சிரித்த ராகினி.
எல்லாம் நினைவு இருக்கு, நீங்களும் வாங்க சார் சாப்பிடலாம்
என்று கையில் இருக்கும் நெய் பிசுக்கை துடைத்துக் கொண்டே வந்தாள்.
புதுவீடு வந்து மூன்று நாளாகியும் இன்னும் விஷேசம் முடியவில்லையா! நம்வீட்டில் நாம் இருவர் மட்டும்தானே இருக்கிறோம் எதற்கு இத்தனை?
சாப்பிடும் மேசையில் அம்மா அடுக்கியிருந்த உணவு வகைகளை பார்த்தவாறே ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.
வீடு தேடி அலைந்து, அலைந்து சரியாக சமைத்து சாப்பிட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது, அதனால்தான் செய்தேன். வளர்ற பிள்ளையா அமைதியா சாப்பிடு. அதிகமா ஒன்னும் செய்யலை, மதியமும் இரண்டு பேருக்கும் வேணும் இல்லையா எல்லாம் சேர்த்து செய்துவிட்டேன்.
சொல்லிக் கொண்டே தானும் அமர்ந்து மகனுக்கும் தட்டில் பரிமாறியவரை பார்த்த ஸ்ரீமன்.
அம்மா! புதிய இடம் இங்காயாவது கொஞ்சம் புதுமையாக நீங்க இருக்கக் கூடாதா?
புதுமையா இருக்கிறதா, அப்படி என்ன புதுமை செய்துக்கணும். அனைத்து வசதிகளையும் கொண்ட மூன்று அறை வீடு, உபயோகத்திற்கு கார், உனக்கு வேண்டிய வண்டி, வீட்டிற்கு வேண்டிய அனைத்து சாமான்களும் புதுசுதான். வேறு என்ன புதுமை வேணும்.
நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு நிஜமாகவே புரியலையா?
இல்லை புரியாத மாதிரியே இருக்கிறதா முடிவு செய்துட்டீங்களா? மகனின் குரல் ஆதங்கத்துடன் ஒலித்தது.
புரியுது ஸ்ரீ, உன்கிட்ட நான் ஏன் மறைக்கணும். இப்போ மாற்றத்திற்கு என்ன அவசியம் அதுதான் என் கேள்வி.
உங்களுக்கு இன்னும் வயசாகவில்லை அம்மா! நாற்பத்தைந்து எல்லாம் ஒரு வயசா? வயதானவர்கள் எல்லாம் டை அடித்து தங்களை அழகு படுத்திக் கொள்ளும் பொழுது, நீங்க ஏன் செய்து கொள்ளக் கூடாது.
அது அவரவர்களின் மனோநிலையைப் பொருத்தது, தேவையைப் பொருத்தது.
உங்களுக்கு மட்டும் தேவையில்லையா? நீங்களும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேனேஜராக இன்னைக்கு பதவி ஏற்கப் போறீங்க, அதற்குரிய கெட்டப் வேண்டாமா?
ஏன்? என்னைப் பார்த்தால் அதற்கு தகுதியானவளா தெரிய வில்லையா?
ஐயோ அம்மா! நான் சொல்ல வருவது என்னென்னு தெரிந்தாலும், இப்படி மடக்கி மடக்கி பேசினால் என்ன செய்வது.
ஸ்ரீ, இன்னும் கொஞ்சம் கேசரி வச்சிக்கோ
பேச்சை மாத்தாதீங்க, எனக்கு ஒன்னும் வேண்டாம், நான் எது சொன்னாலும் நீங்கள் கேட்பதில்லை, நான் மட்டும் ஏன் கேட்கணும்
சிறுபிள்ளையாய் முகத்தை திருப்பிக் கொண்டவனைப் பார்த்த ராகினிக்கு சிரிப்புதான் வந்தது.
இப்போ ஒரு மாற்றம் தேவைதான் ஸ்ரீ. ஆனால் அது எனக்கில்லை உனக்குத்தான். வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் செய்து பார்னு சொல்லுவாங்க, ஒரு வழியா வீடு வாங்கியாச்சு, அடுத்து என்ன உன்னோட கல்யாணம்தான்.
அதுக்கென்ன இப்போ அவசரம்
இன்னும் மனத்தாங்கலாக வந்தன மகனின் வார்த்தைகள்.
அவசரமோ? அவசியமோ? நடக்கவேண்டியது எல்லாம் காலா காலத்தில நடந்துடனும், இல்லைன்னா எப்பவும் நடப்பதற்கு காலமும், சூழ்நிலையும் ஒத்துப்போகாது
சொல்லியவரின் வார்த்தைகளில் வலி தெரிந்தது.
முகம் சலனமற்று இருந்தாலும் அம்மாவின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌனமானான்.
மகனின் மௌனம் எதையோ உணர்த்த... சட்டென்று தெளிந்த ராகினி மகனின் மனதை மாற்றும் விதத்தில் "ஆமா... நீ இங்க வந்து ஆறு மாசமாச்சு உனக்குன்னு வேணுமுன்னு எதையும், யாரையும்