Megangal Illatha Vaanam
By R.Prema
()
About this ebook
Read more from R.Prema
Veenaiyadi Nee Enakku rp Rating: 0 out of 5 stars0 ratingsManathukkul Aarathanai Rating: 4 out of 5 stars4/5Pen Manathai Thottu Rating: 4 out of 5 stars4/5Azhagin Sirippu Rating: 0 out of 5 stars0 ratingsManathin Maanaseega Thiravukol Rating: 0 out of 5 stars0 ratingsPiriyaudan Oru Vaarththai Rating: 0 out of 5 stars0 ratingsVasanthakala Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiye Rating: 0 out of 5 stars0 ratings
Related to Megangal Illatha Vaanam
Related ebooks
Janani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Abiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Manamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsKalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsPiriyaudan Oru Vaarththai Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiye Rating: 0 out of 5 stars0 ratingsEn Nandhavanathu Poo Rating: 0 out of 5 stars0 ratingsVeenaiyadi Nee Enakku... Rating: 5 out of 5 stars5/5Vanaththil Oru Thevathai Rating: 5 out of 5 stars5/5Neeyiruntha Manasu Rating: 4 out of 5 stars4/5Manam Virumbuthe Unnaiye! Rating: 4 out of 5 stars4/5Ennul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharum Megam Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Nilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Ondru Than Rating: 0 out of 5 stars0 ratingsNeelakuyile Kannamma Rating: 5 out of 5 stars5/5Amuthai Pozhiyum Nilavey! Rating: 0 out of 5 stars0 ratingsUllangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsEngey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Megangal Illatha Vaanam
0 ratings0 reviews
Book preview
Megangal Illatha Vaanam - R.Prema
15
1
கண்ணாடியின் முன் நின்று தன் நெற்றிப் பொட்டை சரி செய்து கொண்டிருந்தாள் சுகந்தி. இன்று அவளுக்கு ஒரு கம்பெனியில் இண்டர்வியூ இருந்தது. அதற்காக தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தாள்.
இளம்பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டாள். நெற்றி பொட்டு பார்த்தவுடனே பளிச்சென்று தெரிந்தது. இப்போ சில பெண்கள் நெற்றியில் பொட்டு இருக்கா இல்லையா என்பதை அருகில் வந்து கூர்ந்து பார்த்தால் தான் தெரிகிறது. கடவுள் உலகில் 20 சதவீதம் பேரைத்தான் அழகாக படைக்கிறார் என்று ஏதோ புத்தகத்தில் படித்ததாக நினைவு. அந்த 20 சதவீதத்தில் ஒருத்தியாக இருந்தாள் சுகந்தி.
சுகந்தி ஒரு எம்.காம். பட்டதாரி. படிப்பு முடித்து ஆறு மாதம் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. ஒவ்வொரு இண்டர்வியூவின் போதும் நம்பிக்கையுடன் செல்கிறாள். எங்கு போனாலும் சிபாரிசு தேவைப்படுகிறது. அது இல்லாததால் வேலை கிடைக்க தாமதமாகி கொண்டே வந்தது. இப்போதும் நம்பிக்கையை தளர விடாது அம்மாவிடமும், தம்பி அசோக்கிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.
வீட்டை விட்டு வெளியே வந்தவள் வாசலில் நிறுத்தியிருந்த தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். அவள் போக வேண்டியது கேளம்பாக்கத்திலுள்ள ஓர் இன்ஜினியரிங் கம்பெனி காலை 10 மணி முதல் 2 மணி வரை நேரம் ஒதுக்கியிருந்தார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அந்த கம்பெனியை வந்தடைந்த சுகந்தி, அந்த கம்பெனியின் கட்டிடத்தை பிரமிக்க பார்த்தாள். 3 மாடி கட்டிடம், கட்டிடம் முழுவதும் கண்ணாடியால் போர்த்தப்ப்பட்டிருந்தது. லிப்டில் ஏறி இண்டர்வியூ நடக்கவிருக்கும் 2வது தளத்தை அடைந்தாள். அங்கு சென்றதும் அவளுக்கு பிரமிப்பு தோன்றியது.
தன்னைப் போலவே பைல்களை கையில் வைத்துக்கொண்டு நிறைய பேர் இருந்தார்கள். இத்தனை பேரில் தனக்கு இந்த வேலை கிடைக்குமா? மனதில் கேள்வி எழ சுற்றும் முற்றும் பார்த்தாள். சில ஆண்கள் முகத்தில் டென்ஷன் தெரிந்தது, சில பெண்கள் என்னதான் யதார்த்தமாக காட்டிக் கொண்டாலும் லேசான கவலை தெரிந்தது.
ஊம்... பெருமூச்சு விட்டாள். யார் யாருக்கு என்னென்ன பிரச்சினையோ யோசித்தபடியே அங்கிருந்த இருக்கை ஒன்றில் உட்கார்ந்தாள்.
சுகந்திக்கு அப்பா கிடையாது. அவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. சுகந்தி எம்.காம். படித்து கொண்டிருந்தபோது, வயிற்றுவலி என்று படுத்தவர் தான். இரண்டு மாதங்கள் நோயோடு போராடி சிகிச்சை அளித்தும் பலன் இல்லாது உயிரை விட்டார். வயிற்று வலிக்கு உபயம் டாஸ்மாக்.
கையிலிருந்த பணமெல்லாம் வைத்திய செலவுக்கே சரியானது. அம்மா குடும்பத் தலைவி, படித்திருந்தும் அப்பாவால் முடக்கப்பட்டு வேலைக்கு போகாமல் குடும்பத்தை நிர்வகித்தாள். தம்பி அசோக்குக்கு படிப்பு சரியா வரலை. ஆனாலும் ஒரு டிகிரி அவசியம் வேணும்னு அவனை படிக்க வைத்தார்கள். அவனும் தட்டுத் தடுமாறி பி.ஏ. சரித்திரம் முடித்துவிட்டு வேலை தேடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஊர் சுற்றி கொண்டிருந்தான். எனவே இந்த வேலை தனக்கு கிடைத்தால் குடும்பம் என்னும் வண்டி எந்தவித தடங்கலும் இல்லாமல் ஓடும். மனதில் அம்மாவையும், தம்பியையும் நினைத்து பார்த்தாள். அம்மாவின் கவலை தோய்ந்த முகம் மனதில் நிழலாடியது.
இவளின் சிந்தனையை கலைப்பது போல் பியூன் இவள் பெயரை சொல்லி அழைக்கவும், சட்டென்று நிதானித்து வந்தாள். உள்ளே சென்றாள். இரண்டு ஆண்களும், ஒரு பெண்மணியும் இருந்தனர். அவர்களுக்கு வணக்கம் சொல்லி உட்கார்ந்தாள். வழக்கமான கேள்விகள் தங்கு தடையின்றி பதில் ஆங்கிலத்தில் சொன்னாள். கூடுதல் தகுதியாக இந்தியும் தெரிந்து வைத்திருந்தாள். எல்லாம் முடிந்து நீங்க போகலாம், உங்களுக்கு மெயில் அனுப்புகிறோம் என்று கூற சுகந்தி வெளியே வந்தாள். எல்லா இடங்களிலும் சொல்ற பதில்தான். இதை எதிர்பார்த்ததால் ஏமாற்றம் இல்லை. இன்னும் பல பேர் வெளியே காத்திருந்தார்கள். வெளியே வந்தாள். நடுவானில் சூரியன் உக்கிரமாயிந்தான். வீட்டுக்கு திரும்பினாள்.
வீட்டுக்கு வந்த மகளின் முகத்தை பார்த்தே அம்மா புரிந்து கொண்டாள். தம்பியோ கண்டு கொள்ளாது போய்விட்டான். எப்போதும் போல அம்மா பூரணி ஆறுதல் சொன்னாள். தன் அறைக்கு சென்று வேறு உடை மாற்றிக் கொண்டு சற்றே ஓய்வாக சேரில் அமர்ந்தாள்.
2
அது ஒரு தனியார் மருத்துவமனை. அவசர சிகிச்சை பிரிவின் வெளியே ரங்கநாதனின் குடும்பத்தினர் காத்திருந்தனர். உள்ளே அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர்கள், அவர்களைப் பார்த்து, வெரி சாரி நாங்கள் எíவ்வளவோ முயற்சி செய்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று சோகத்துடன் கூறி சென்றனர்.
ரங்கநாதன் பிழைக்க மாட்டார் என்பது அவரது குடும்பத்தினருக்கும் தெரியும். இருந்தாலும் கடைசி முயற்சியாக செய்தனர். ரங்கநாதனுக்கு வயது 50க்கு மேல் ஒன்றிரண்டு இருக்கலாம். அளவான குடும்பம். பையன் மித்ரன், பெண் அதிசயா, மனைவி ருக்மணி என்ற சிறிய குடும்பம்.
மித்ரன் எம்.பி.ஏ. முடித்து சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் வேலைக்கு போகவில்லை. அதிசயா டிகிரி முடித்து கல்யாண கனவுகளுடன் வீட்டில் வலம் வந்து கொண்டிருந்தாள்.