Mazhai Tharum Megam
By GA Prabha
5/5
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Manathin Arathanai Rating: 5 out of 5 stars5/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mazhai Tharum Megam
Related ebooks
Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Ullangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsViral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsIthu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Aattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAntha Vanam Enthan Vasam Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsThedamal Ponal Kaanamal Poven Rating: 0 out of 5 stars0 ratingsNetru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Poongatru Puthithanathu Rating: 0 out of 5 stars0 ratingsNee Irukkum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Idhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsNesathin Nizhal Karuppu Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Naan Ezhuthanaal... Nee Vaarthaiyaavai... Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsThirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Kaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Kaadhal Puyal Rating: 5 out of 5 stars5/5Unnai Karam Pidithean Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nesavu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mazhai Tharum Megam
1 rating0 reviews
Book preview
Mazhai Tharum Megam - GA Prabha
http://www.pustaka.co.in
மழை தரும் மேகம்
Mazhai Tharum Megam
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
"நம் கடமை பணிபுரிவது மட்டுமே.
அதன் பலன் குறித்து சிந்திப்பது அல்ல."
ஓம்…ம்…ம். ஓம்…ம்…ம்.
மெல்லிய ரீங்காரம்,மயிலிறகின் தடவலாய் வருடிப் போனது. விடியலின் பனிக் குளிரில், மெல்லிய இருளில் சுருண்டு கிடந்த அந்த ஸ்டோர் தன் நழுவும் நினைவுகளில் இருந்து மீண்டது.
ஓம்…ம். ஓம்…ம்.
பரவச உணர்வுடன்,நாதம், தனக்குள் மெல்லிய அதிர்வுடன் இறங்குவதை ரசித்த படி கண்மூடிப் படுத்திருந்தாள் புவனா. அறை முழுவதும் குளிர், மெல்லிய நீல நிற ஒளியுடன் பரவியிருந்தது. இருள் போர்த்திய வேஷத்துடன், பொருள்கள் மௌனத்துடன் நின்றிருந்தது.
இடைவிடாத ஓம் நாதம்.
அந்த லஷ்மி விலாஸ் ஸ்டோர்ஸின் உரிமையாளரான செட்டியார், அஞ்சரை மணிக்கே சேன்டிங் மந்திரத்தை போட்டு விடுவார். ஒரு தென்றல் போல் அந்த நாதம், ஸ்டோர் முழுதும் வியாபித்து அங்கு உள்ள ஆறு குடித்தனங்களையும் எழுப்பிவிடும்.
அமைதியான விடியலில், நாத ஏன் இதயத்தின், சுமைகளை இறக்கி, லேசாக்கி விடுகிறது. ‘ப்ளீச்’ என்று இருள் விலகி விடும் உணர்வு. இரவு முழுதும் குழம்பிய தெளிவில்லாத உணர்வுகளுக்கு விடியல் ஒரு தீர்வு தந்து விடுகிறது.
அதிகாலை இருள், லேசான குளிர், இதயத்தை நிறைக்கும் ‘ஓம்’கார நாதம் எல்லாமே புவனாவை ஒரு பரவச நிலைக்கு இழுத்துச் சென்றது.
உதடு உடன் சேர்ந்து ‘ஓம்’ ஒலியை உச்சரித்தது.
குழப்பத்தையும், கவலைகளையும் தரும் எந்த நினைவுகளும் இல்லாமல் இருப்பது கூட ஒரு வித தியானம்தான். இப்படி மந்திர ஒலியோடு மனதையும் சேர்த்து கட்டிப் போடுவது, புத்தியை தெளிவாக்கவும், உள்ளத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
காத்திருக்கும் கடமைகளை சலிப்பின்றி நிறைவேற்றவும் முடியும்.
புவனா மனதை இரண்டு நிமிடம் அடக்கினாள். கண்மூடி. ‘ஓம்’ குவித்து, சிந்தனைகளை அதில் சேகரித்து நின்றதில் உடல் சலிப்பிலிருந்து விலகி, தூக்கம் பறந்தோடியது. கைகளை தேய்த்து, கண்களில் ஏற்றி விழித்தாள். தேர் எதிரே மாட்டியிருந்த விநாயகரை நோக்கி, கைகுவித்து ‘ஓம் கணபதியே நமஹ’ என்று கூறினாள். உடல் சலிப்பு முற்றிலும் பறந்தோடியது.
எழுந்து அமர்ந்த நிலையில் அன்று செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிட்டாள்.
சின்னத் தம்பி பிளஸ்டூ பரிட்சைக்கு பீஸ் தர வேண்டும். தங்கைக்கு கண் பரிசோதனை செய்ய கூட்டி போக வேண்டும். பெரிய தம்பி ஜெயந்தன் சென்னையில் பி.ஈ., படிக்கிறான். உடனடியாக பத்தாயிரம் வேண்டும் என்று போன் செய்ந்திருந்தான். நேற்று செட்டியாரிடம் சொல்லியிருந்தாள். இன்று ஞாபகப்படுத்த வேண்டும். பணம்… பணம்… அதன் தேவைகள் வரவை விட செலவுகளே அதிகமாக…
சலித்த மனதை இழுத்து பிடித்தாள்.
சோர்வடையாதே. உன்னால் முடியும். பீ பிரிபேர்ட். ஃபேஸ் எவ்வரிதிங்
– மந்திரமாய் உச்சரித்தாள்.
வாசல் தெளிக்கும் ஓசை. கதவைத் திறந்து வெளியில் வந்தாள். சின்ன மரப்படிகளில் இறங்கி வந்தாள். கீழே அம்மா விழித்திருந்தாள். தங்கை ஓரமாக அமர்ந்து ரெகார்ட் வரைந்து கொண்டிருந்தாள்.
சசி ஈவினிங் ரெடியா இரு. ஐ டாக்டர் கிட்ட போலாம்
சரிக்கா!
தம்பி குமார் எங்கம்மா?
பேப்பர் போட போயிட்டான்.
குமார் வீடு, வீடாக பேப்பர் போடுகிறான். அதில் கிடைக்கும் சம்பளத்தில், புவனாவை தொந்தரவு செய்யாமல், தனக்கும், சசிக்கும் வேண்டிய நோட்டு, புத்தகங்களை வாங்கிக் கொள்வான்.
வாக்கிங் போய்ட்டு வந்துடறேம்மா
– கிளம்பி வெளியில் வந்தாள். வாசலில் அழகான கோலம் மலர்ந்திருந்தது. மிகப் பெரிய தாமரையைச் சுற்றி சின்ன சின்ன மயில்கள் ஆடிக் கொண்டிருந்தது. புவனாவின் போர்ஷனுக்கு எதிர் போர்ஷன் மாலதியின் தங்கை ரமா கோலத்துக்கு கலர் கொடுத்து கொண்டிருந்தாள்.
முறை வாசல் என்றாலும் ரமா தினசரி கோலம் தானேதான் போடுவேன் என்று பிடிவாதத்துடன் அந்த பொறுப்பை ஏற்றிருந்தாள். விதவிதமாக கோலம் போடும் ஆசை.
குட்மார்னிங் புவனாக்கா
வெரி குட்மார்னிங்
எனக்கும் குட்மார்னிங் சொல்லுடி
– மாலதி வாயில் பிரஷ் நுரையுடன் வந்தாள்.
ஹாய் மாலு? நீ எப்ப வந்தே?
ஜஸ்ட் நௌ
இப்போ… அஞ்சரைக்கா?
அஞ்சு மணிக்கு
என்ன மாலு?
– புவனா திகைத்தாள். என்னடி?
எஸ். நேத்து நைட் பத்தரைக்கு வாசலுக்கு வந்துட்டேன். அர்த்த ராத்திரில வர வேணாம்னு திண்ணைல படுத்திருந்துட்டு காலைல முதல் டவுன் பஸ்ல ஏறி வந்துட்டேன். இங்க இருக்கிற துடியலூர் தானே
என்ன விஷயம் மாலு
அஸ் யூஸ்வல்
ஒரு பரிதாபம் சூழ்ந்தது அவள் மனதில். எத்தனை ஆசைகள், கனவுகளுடன் மாலதியின் திருமணம் நடந்தது. அப்போதெல்லாம் எத்தனை துடிப்பு, மலர்ச்சிஅவள் முகத்தில். எங்கே போயிற்று அத்தனையும்? புவனாவைப் போலவே தான் மாலதிக்கும் பொறுப்புகள்.
ஒரு தங்கை. ரெண்டு தம்பிகள். பெரிய தம்பி படிப்பு முடிந்து வேலைக்கு வேலைக்கு வரும்வரை தன் சம்பளத்தை பிறந்த வீட்டுக்கு தருவேன் என்று வாக்குறுதி பெற்ற பிறகுதான் திருமணம் நடந்தது. சரி, சரி என்று தலையாட்டியஅவள் புருஷன் கதிர், இப்போது தடுக்கிறான். சரியான சீர் தரவில்லை. அதை வாங்கி வா, இதை வாங்கி வா என்ற டார்ச்சர். நேற்று இரவு வெளியில் துரத்தி விட்டானாம்.
போன் பண்ணியிருக்கலாமே மாலு
ஒரு நப்பாசைதான். உள்ள கூப்பிட மாட்டாரான்னு
ப்சு
– புவனா ஒரு தவிப்புடன் அவள் கையை பற்றிக் கொண்டாள். என்னதான் பிரச்சினை மாலு
"என் மூக்குதான். வாஸ்து பிரகாரம் அதோட அமைப்பு சரியில்லை.
ஏய். போதும்
நிஜமா. நான் இன்னைக்கு லீவ் தெரியுமா?
எதுக்கு
பிரம்மாகிட்ட மனு தர போப் போறேன். என்னை கொஞ்சம் அழகாக்குன்னு
அவரால முடியாத காரியம்
கிண்டல்
– மாலு முறைத்தாள். பாரு. ஸோ ஸ்வீடா வரப்போறேன். அசின், த்ரிஷாவுக்கு போட்டியா
எப்படி உன்னால சிரிக்க முடியுது?
சிரிக்காட்டி வெந்து போயிருவேன்
– மாலதி உள்ளே போனாள். புவனாவுக்கு வாக்கிங் போக மனமில்லை. திரும்பி உள்ளே வந்தாள்.
மொத்தம் எதிர், எதிராக மூன்று, மூன்றும் ஆறு வீடுகள். ஒரு பக்கம் மாலு. அவள் அப்பாவுக்கு ஸ்வீட் ஸ்டாலில் வேலை. அடுத்து மணி – சமையல். அடுத்து சங்கரன் வக்கீல் செட்டியாரிடமே கணக்குப் பிள்ளை. அடுத்து விசுவம். பஸ் ஸ்டாண்டில் டீக்கடை. அடுத்து கணவனை இழந்த செட்டியாரின் தங்கை தன் மகனுடன் குடியிருந்தார்.
ஒவ்வொரு வீட்டிலும் ஹால், கிச்சன், மாடியில் ஒரு அறை என்ற அமைப்பில் வீடு. ஆயிரம் ரூபாய் வாடகை. தனித்தனி பாத்ரூம் வசதிகள். தண்ணீர் வசதி என்பதால் யாரும் இங்கிருந்து கிளம்பியதில்லை. புவனாவின் தம்பி ஜெயந்தனே இங்கு வந்துதான் பிறந்தான். செட்டியாரும் அத்தனை குடும்பங்களையும் தன் குழந்தைகள் போல் பிரியம் காட்டுவதால் இங்கிருந்து யாரும் போக விரும்புவதில்லை.
புவான உள்ளே வரும் போது