Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Puyal
Kaadhal Puyal
Kaadhal Puyal
Ebook92 pages46 minutes

Kaadhal Puyal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580128404606
Kaadhal Puyal

Read more from Vedha Gopalan

Related to Kaadhal Puyal

Related ebooks

Reviews for Kaadhal Puyal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Puyal - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    காதல் புயல்

    Kaadhal Puyal

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    தொலைவில் வடபழனி கோயில் கம்பீரமாய் நின்றிருந்தது.

    மிருதுளா நிமிர்ந்து பார்த்தாள். தன் வாழ்வில், காதல் புயலாய் வீசி, எத்தனை தூரத்துக்கு அலைக்கழிக்கப்போகிறது என்பது தெரியாமலேயே அந்தப் பக்கத்து வீட்டு மாமிக்கு ஆறுதல் சொன்னாள்.

    கவலைப்படாதீங்க மாமி... உங்க மகளுக்கு புத்தி சொல்ல நானாச்சு. காதலாம் கத்திரிக்காயாம்... காதல் என்ற வார்த்தை அளித்த கோபத்தில் லேசாய்ப் புருவம் உயரச் சொன்ன போது, அத்தனை பிரசினைக்கிடையிலும் 'மிருதுளா பேருக் கேத்தாப்பல எத்தனை அழகு' என்று அந்த மாமியின் மனதில் வியப்பு தோன்றி மறைந்தது.

    அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் மிருதுளா பக்கத்து வீட்டில் இருந்தாள்.

    எங்கே மாமி உங்க பொண்ணு? ஒன்றாம் வகுப்பு டீச்சர் மாதிரி சுறுசுறுப்பாய்க் கண்டிப்புக்குரலில் கேட்டவாறு அந்த வீட்டுக்குள் நுழைந்த மிருதுளா புடவைத்தலைப்பை இழுத்துச் செருகிக்கொண்ட விதம் வேடிக்கையாய் இருந்தாலும் புடவை என்பது ஒரு பெண்ணுக்கு இந்த அளவுக்குக்கூடப் பொருந்துமா என்று கேட்க வைக்கிற விதமாய் இருந்தது. ஊரில் உலகத்தில் எத்தனையோ பெண்கள் புடவை கட்டுகிறார்கள்.

    அத்தனை பேருக்கும் இப்படியா பொருந்துகிறது?

    'ஏய் ஜனனி... இங்க வா."

    எ... என்னக்கா? அந்தப் பெண், கோழிக் குஞ்சு போல் இருந்தது.

    உன் வயசு என்ன? ரோடின் ஓரத்தில் வளையம் கட்டி வித்தை காட்டுபவனின் குரலில் கேட்டாள்.

    பதினேழு.

    ஏண்டி.... ஏண்டீ இப்பிடிப் பண்றீங்க? உன்னை எத்தனை ஆர்வமாய் உங்க அம்மா படிக்க வெக்கறாங்க. எத்தனை சிரமப்பட்டு பீஸ் கட்டி காலேஜ்ல சேர்க்கப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்காங்க. இப்ப இது ரொம்ப அவசியமா? மிருதுளாவின் கையில் அந்தக் காகிதம் படபடத்தது. லவ் லெட்டர். சமீபத்தில் மீசை முளைத்த எவனுக்கோ அந்தப் பெண் ஜனனி சினிமா டயலாக்குகளைக் கோர்த்த மாதிரி எழுதியிருந்த காதல் கடிதம்.

    இந்தப் பையனை உனக்கு எத்தனை நாளாய்த் தெரியும்?

    இன்றைக்கோடு சரியாய் எண்பத்தி எட்டாவது நாளாய்ப் பழக்கம்.

    கேலியாய்ச் சிரித்தாள். அப்பாடியோவ்.... சுவத்துல கோடு போட்டுக் கணக்குப் பண்ணிக்கிட்டு வர்றியா? பாரதிராஜா படம் பார்த்த பாதிப்பு! ஏண்டீ.... பிளஸ் டூவில் கணக்கில் என்ன மார்க்கு... நீ சொன்னியே அந்த எண்பத்தி எட்டாவது எடுத்திருப்பியா? அம்மாக்காரி தலை குனிந்து பனித்துளிபோல் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க, அந்தச் சின்னப்பெண் ஜனனி கோபமாய் நிமிர்ந்தாள்.

    அக்கா.... இது எங்க வீட்டு விவகாரம். என் பர்சனல் மேட்டர். நீங்க தலையிட வேண்டாம், என்று சண்டைக்கோழி போல் சிலிர்த்து நிமிர்ந்தாள்.

    ஜனனீ... நீ அந்தப் பையனைக் கல்யாணம் செய்துப்பியா?

    சத்தியமாய்.... காட் பிராமிஸாய்... என்றது இளரத்தம்.

    அவனும் அதே உறுதியோட இருக்கானா? அதே சத்தியம், அதே காட் பிராமிஸ் உறுதி கூறியது.

    ரைட். இன்னிக்கு அந்தப் பையனைக் கூட்டிக்கிட்டு வா. நான் பேசறேன், என்றாள் தீர்மானமாக.

    இத பாருங்க. அவரை ஒண்ணும் மாத்திட முடியாது. உயிர் போனாலும் எங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து தான் போகும், என்று முகம் சிவக்க அவள் சொன்ன விதத்துக்கு மிருதுளா சிரித்தாள்.

    சரிதாண்டீ நீ கூட்டிக்கிட்டு வா, நான் பேசி அவனை மாத்த முடியாதுன்னு நீ நிஜமாகவே நினைச்சால்..... நம்பினால்..... தைரியமாய் அவனைக் கூட்டிக்கிட்டு வாயேன் பார்ப்போம், என்றாள். வேண்டுமென்றே சவால் குரலில் சொன்னாள்.

    அவள் ஐடியா பலித்தது. அன்றைக்கு மாலையிலேயே இன்ஸ்டிட்யூட் விட்டு வரும்போது அந்தப் பையனையும் கூட்டி வந்தாள் அந்தப் பெண். அவனை நிமிர்ந்து பார்த்தவுடனேயே பொத்துக்கொண்டு வந்த சிரிப்புக்குப் புடவைத் தலைப்பால் அணை வைத்தாள் மிருதுளா. இவனா? இவனுக்குக் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமாவது தெரியுமா? மிருதுளா ஒரு முறை ஊதினாலே பறந்து போய் இந்து மகா சமுத்திரத்தில் விழுந்து விடுவது போலிருந்த அவனிடம் அதிரடியாய்க் கேட்டாள். தம்பீ... இவளைக் கல்யாணம் பண்ணிக்கறியா?

    அந்தச் சின்னப் பெண் ஏற்கெனவே நிறைய அட்வைஸ் பண்ணிக் கூட்டி வந்திருப்பாள் போலும். உலகமே அழிஞ்சாலும் என் முடிவு மாறாது, என்றான் முறைப்பாய்.

    அடேயப்பா... கொஞ்சம் பழைய சினிமா டயலாக் தான். இருந்தாலும் பரவாயில்லை, என்றவள், சரி... உன் பேரண்ட்ஸைக் கூட்டி வர்றியா. நாள் பார்க்கலாம், என்றாள் அதிரடியாக.

    "நா... நாளா... எ...

    Enjoying the preview?
    Page 1 of 1