Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalin Pon Sangili
Kaadhalin Pon Sangili
Kaadhalin Pon Sangili
Ebook102 pages52 minutes

Kaadhalin Pon Sangili

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128404705
Kaadhalin Pon Sangili

Read more from Vedha Gopalan

Related to Kaadhalin Pon Sangili

Related ebooks

Reviews for Kaadhalin Pon Sangili

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Super story. Very relevant to the current society. Great Message to the society .

Book preview

Kaadhalin Pon Sangili - Vedha Gopalan

http://www.pustaka.co.in

காதலின் பொன் சங்கிலி

Kaadhalin Pon Sangili

Author:

வேதா கோபாலன்

Vedha Gopalan

For more books

http://pustaka.co.in/home/author/vedha-gopalan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

1

செய்தி:

விளையாட்டுத்துறையில் சூதாட்டத்துக்குத் தடை போட்டிருந்தாலும் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை சட்டபூர்வமாக்கும்போது, சட்டவிரோத சூதாட்டங்கள் நின்றுவிடும். சட்டவிரோத செயல்களும் நின்றுவிடும். சூதாட்டத்தைப்போலவே, விபசாரத்தையும் சட்டபூர்வமாக்கலாமா? என்று கேட்டால் நான், 'ஆம்' என்றுதான் சொல்வேன். விபசாரம் நடக்கிறது என்பதை மறுக்க முடியுமா? எல்லா இடத்திலும் விபசாரம் நடக்கிறது. அதை சட்டபூர்வமாக்கினால், அத்தொழிலில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வருவாய் முறைப்படுத்தப்படும். விபசார தொழிலும் கட்டுப்பாட்டுக்குள் வரும்''

சொன்னவர் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே

அகலமாகத் திறந்திருந்த ‘கேட்’ டில் வண்ண வண்ணத் தோரணங்கள் படபடத்தன.

சில மணி நேரத்தில் கலாட்டா அமர்க்களப்படப்போவது தெரியாமல் அந்தக் கல்லூரிப்பரப்பு இம்மி இடுக்கு விடாமல் களையோ களை கட்டியிருந்தது.

நுங்கம்பாக்கம் பகுதியே கலகலத்துக்கொண்டிருந்தது.

வழக்கமாகவே கல்லூரி என்பதை டிக்ஷ்ணரியில் பார்க்காமலேயே உற்சாகம், சந்தோஷம், அரட்டை என்று அர்த்தம் கிடைக்கும். ‘கோ எட்’ கல்லூரியில் இவை இரட்டிப்பாக இருக்கும். ஏதேனும் விழா என்றும் விசேஷம் என்றும் வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்.

சில்வர் ஜுபிளி என்று உரக்கக் கூவிக்கொண்டிருந்தன ஒவ்வொரு அலங்காரமும். அதுபாட்டுக்கு அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது பத்து நாட்களாய். பாட்டுக்கு என்றா சொன்னேன். ஊஹும். பேச்சுப்போட்டி... கட்டுரைப்போட்டி... கவிதை.போ, சினிமா க்விஸ், சம்பிரதாய டான்ஸ், சம்பிரதாயத்தை மீறிய டான்ஸ், டம்ப் ஷரட் என்று ஏகப்பட்ட போட்டிகள் இளைஞர்களை உற்சாகத்தில் துள்ள வைத்துக்கொண்டிருந்தன.

கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் என்பதால் ஏகப்பட்ட கலர்கள் மிக்ஸ் ஆகியிருந்தன. மருத்துவம் பயில்பவர்களும் சட்டம் பயில்பவர்களும் உள்ளே நுழையும்போது நாங்க படிக்கும் படிப்பு உசத்தி தெரியுமா? என்கிற தோரணையில் முகம் உயர்ந்திருக்க, ரொம்பத்தான் அல்ட்டாதேம்மே... இது எங்க கல்லூரி ஜூபிளியாக்கும் என்கிற ரீதியில் இந்தக் கல்லூரியின் முகங்கள் பொலிந்திருக்க... ரகளையான மகிழ்ச்சி.

மேடையில் நிகழும் சின்னச்சின்ன அசைவுகளுக்குக்கூட ஆறு ரிக்டரில் கல்லூரி அதிரும்படி கைதட்டல் எழும்பிய அந்தக் குதூகலத்தை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆசிரியைகள் தங்களின் அற்புத அலங்காரத்துக்கு ஒரு வாய்ப்பாக அந்த விழாவைப் பயன்படுத்தியதால், வளர்ந்த குழந்தைகளை போன்ற அந்த மாணவ மாணவியரைக் கட்டுப்படுத்திப் பொங்கும் பாலில் தண்ணீர் தெளிக்க மனசு வரவில்லை.

அடுத்ததாக… மிஸ் திரிபுரா பாடுவார்கள் பெயரை மைக்கில் சொன்ன நிமிஷமே பல்வேறு கல்லூரி மாணவ மாணவியரின் கைதட்டலில் அரங்கம் குலுங்கியது.

காரணம் இருந்தது.

காரணம் நம்பர் ஒன்று: அவளின் அழகு

கா.ந.2: இந்தப் பெயரை இந்தச் சில நாட்களில் அவர்கள் ஆறாவது முறையாகக் கேட்கிறார்கள்

கா.ந.3: எந்தப் போட்டி என்றாலும் அதில் அவள் சளைக்காமல் கலந்து கொண்டு மற்ற யாரையுமே முதல் பிரைஸ் வாங்க விட மாட்டாளோ என்று நினைக்க வைத்த விதம்.

கா.ந.4: ஓரிரண்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் அதிலும் சுமாராய்ச் செய்தவர்களுமே ‘நான் எவ்ளோ திறமைசாலி பார்த்தியா?" என்கிறமாதிரி வளைய வருகையில் இவள் மிக இயல்பாய்ப் பேசி சிரித்து நடந்து கொண்ட விதம்.

பை த வே…

அந்தக் காரணம் நம்பர் ஒன்றைச் சற்று விரிவாக்காமல் போனால் அந்தக் காரணமே நிறைவுபெறாமல் போய்விடும். அவள் அப்படி ஒன்றும் பிரமாதமான கலர் என்று சொல்வதற்கில்லை. இந்தக் காலத்து இளைஞர்கள் வெறும் கலரைப் பார்த்து விழும் ரகமும் இல்லை.

அந்த நெற்றியின் வளைவு... அதில் கூந்தலின் நடனம்... இருக்கிறதா இல்லையா என்று சொல்ல வைக்கும் இடை மட்டுமல்ல... சின்னஞ்சிறு பொட்டும்கூட...

முகத்தில்

இருக்கும்

அவை இரண்டும்

கண்களா - அல்லது

கடல்களா?

என்று ஒரு மாணவன் இன்ஸ்டன்ட்டாய்க் கவிதை எழுதும் அளவுக்கு முகம் முழுக்கப் பரவியிருந்த கண்கள்.

சில உடைகள் சிலருக்குப் பொருந்தும். இவளுக்கு எல்லாம் பொருந்தும் என்று சில நாட்களிலேயே எல்லோருக்கும் புரிந்துவிட்டது. நவ நாகரிகமான உடை அவளின் சதைப்பிடிப்பான உடலை இறுக்கிப்பிடித்தது. நாட்டுப்புறப்பாடல் போட்டியன்று அணிந்துவந்த கண்டாங்கிச் சேலையிலும் அழகு அள்ளியது.

எந்த காலேஜ் மச்சி அவ? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டவர்களில் ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் இருந்தார்கள்.

அவள் கல்லூரியின் பெயர் கேட்டுச் சற்று அதிர்ச்சியும் அடைந்தார்கள். அப்படி ஒன்றும் பிரபலக் கல்லூரியும் இல்லை. அவர்கள் படிப்பது போல் பொறியியல், மருத்துவம் என்று சொல்லிக்கொள்ளும்படியா பிரமாதமான கோல்ஸ்ஸூம் இல்லை. பி எஸ் ஸி விலங்கியலாம்.

எனினும்…

பூ... இவ்ளோதானா என்று புறந்தள்ள முடியாதபடி இருந்தன அவளின் திறமைகள்.

சில மாணவர்கள் குறும்புத்தனமாக ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டியபோது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று கையெழுத்திட்டு, அரை

Enjoying the preview?
Page 1 of 1