Nee Verum Pennthan!
()
Read more from Vedha Gopalan
Kaadhal Puyal Rating: 5 out of 5 stars5/5Uyirvarai Inithaval Rating: 0 out of 5 stars0 ratingsSiruvan Pragalathanum, Narasimharum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Sangili Rating: 5 out of 5 stars5/5Eppadi Kolvenadi Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Pesum Mozhi Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsWhatsapp Ennum Vallal Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Yenadi! Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Siruthuligal Rating: 0 out of 5 stars0 ratingsKaanai Kaattu Pothum Rating: 3 out of 5 stars3/5Ithu Mounamana Neram Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire… Rating: 0 out of 5 stars0 ratingsManathil Amarntha Mayile... Rating: 0 out of 5 stars0 ratingsWhatsappil Vanthavai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhali Kaadhalikavillai Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsNaan Sanditha Prabalangal Rating: 0 out of 5 stars0 ratingsJodi Sera Aasai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsVidiyal Vegu Thooramillai Rating: 0 out of 5 stars0 ratingsPyramidgalum Avai Patriya Athisayangalum Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsVarugirean Veena! Rating: 0 out of 5 stars0 ratingsKaalathukkum Nee Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsEnakkagava Babu? Rating: 0 out of 5 stars0 ratingsAzhagana Aaviye! Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean - part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Malavika!! Rating: 5 out of 5 stars5/5
Related to Nee Verum Pennthan!
Related ebooks
Mel Nokki Paayum Aruvi Rating: 0 out of 5 stars0 ratingsமஞ்சம் வந்த தென்றல்! Rating: 0 out of 5 stars0 ratingsManjam Vantha Thendral Rating: 5 out of 5 stars5/5Un Viral Idukkile Rating: 1 out of 5 stars1/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Puthiya Appa Rating: 0 out of 5 stars0 ratingsVaasalil Vandha Nila Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsMudindhu Vitta Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKuyilosai Kettayo! Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5Vankkathirkuriya Kaadhal! Rating: 0 out of 5 stars0 ratingsPallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Atharkaga Alai Paaigirean Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhaliye..! Rating: 4 out of 5 stars4/5Maavilath Thoranam Rating: 5 out of 5 stars5/5Irandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsKadai Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Unakkaakavaa Naan Rating: 5 out of 5 stars5/5Chinna Chellamey! Rating: 0 out of 5 stars0 ratings1990’il Veliyana Aazhamana Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsA Positive Rating: 0 out of 5 stars0 ratingsMaya Rating: 3 out of 5 stars3/5Thalaa Oru Thota Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nee Verum Pennthan!
0 ratings0 reviews
Book preview
Nee Verum Pennthan! - Vedha Gopalan
http://www.pustaka.co.in
நீ வெறும் பெண்தான்!
Nee Verum Pennthan!
Author:
வேதா கோபாலன்
Vedha Gopalan
For more books
http://pustaka.co.in/home/author/vedha-gopalan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
கருணைத் தேவதையின் கைகளைப்போல் அகலமாய்த் திறந்திருந்தது அந்த ஆஸ்பத்திரியின் கேட். ஸ்டீயரிங்கை வளைத்து அன்னப் படகாக உள்ளே நுழைந்த அம்பாஸிடரை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தவள் கல்யாணி. அவள் ஆணைக்கெல்லாம் கட்டுப்பட்டு முயல்குட்டி மாதிரி அது வழுக்கிச் சென்றது.
'பார்க்கிங் லாட்'டில் வண்டியை நிறுத்தினாள் அவள். அழகாக இடது காலைப் பூமியில் அழுத்தி இறங்கியவள் பக்கம் திரும்பாத பார்வைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். பெண்களுக்கு அழகு தரும் உயரம்; அதற்கேற்ற பருமன்; சந்தன நிறச் சதைப்பூச்சு; அளவான அலங்காரம்; சிம்பிளான ஆர்கண்டி புடவை. அதுவே அவளை 'கிராண்'டாகக் காட்டியது.
கண்ணாடிகளையெல்லாம் ஏற்றிவிட்டோமா? கதவுகளையெல்லாம் 'லாக்' பண்ணிவிட்டோமா? மனத்துக்குள் கேள்விகளைக் கேட்டு, பதிலுக்கு மனத்துக்குள்ளேயே 'டிக்' அடித்துக் கொண்டாள். ஹாண்ட்பாகில் காரின் சாவியை நழுவவிட்டவாறு ஆஸ்பத்திரியின் பிரதான வாயிலை நோக்கி நடந்தாள்.
கடமை உணர்வுடன் வெண்புறாக்களாக நர்ஸ்களும், மேட்ரன்களும் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தனர். கொஞ்சம் கூடத் தனக்குச் சம்பந்தம் இல்லாத நோயாளிகளின் நலனில் இவர்களுக்கு எத்தனை அக்கறை!
சட்டென்று பார்ப்பவர்களுக்கு எழும் எண்ணம் அந்தக் கிழவனுக்கும் எழுந்தது போலும். டாக்டரம்மா... எட்டாம் நம்பர் வார்டு எதுங்க?
அவள் புன்னகையுடன் திரும்பினாள். மன்னிச்சுக்குங்க பெரியவரே. நான் டாக்டர் இல்லை. இப்போதுதான் முதல் தடவையாய் இந்த ஆஸ்பத்திரிக்கு வரேன்! கவலைப்படாதீங்க. என்னுடன் வாங்க நான் வார்டைக் கண்டுபிடிச்சுத் தரேன்.
முதல் வேலையாக அந்தக் கிழவனுக்கு வார்டைக் கண்டுபிடித்துக் காட்டிவிட்டு, அவள், தான் தேடி வந்த ஸ்பெஷல் வார்டைக் கண்டு பிடிப்பதில் முனைந்தாள்.
அவளுக்கு விந்தையாக இருந்தது. ஆண்டவன் எதற்காக இந்த மாதிரி விதவிதமான வித்தியாசங்கள் மிகுந்த - அடிப்படையில் ஒத்த உடல்களைப் படைத்தான்? பிறகு ஏன் அதில் ஆயிரம் விதமான ரிப்பேர்களைக் கொடுத்து, நோயாளிகளுக்கும் - அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொல்லையும் வருத்தமும் கொடுக்கிறான்?
யோசித்து முடிப்பதற்குள் ஸ்பெஷல் வார்டை அடைந்து விட்டாள். 'பெட்' நம்பர் என்ன? ஐந்தா. ஆறா? ஆறுதான். அவள் தீபாவை நோக்கி நடந்தாள்.
ஹலோ தீபா. எப்படி இருக்கிறாய் இப்போ?
ரொம்பத் தேறிட்டேன்பா கல்யாண். இன்னும் இரண்டொரு நாட்களில் டிஸ்சார்ஜ் பண்ணிவிடுவார்கள்.
தீபா, ஆஸ்பத்திரியில் நோயாளியாக அட்மிட் ஆனவள் போலத் தெரியவில்லை. ஏதோ 'ஸ்கிரீன் டெஸ்ட்'டுக்கு ஆயத்தமானவள் போலத்தான் தெரிந்தாள். லேசாக உடம்பு பயமுறுத்தினாலே 'டாணெ'ன்று டெலிபோன் செய்து ஆஸ்பத்திரியில் ஸ்பெஷல் வார்டில் படுக்கை ரிஸர்வ் செய்து கொள்ளும் பணக்காரக் கும்பலில் ஒருத்தியான தீபா மட்டும் விதிவிலக்கா என்ன?
கல்யாணி பழைய கல்லூரித் தோழி என்ற முறையில் தான் தீபாவைப் பார்க்க வந்தாளே தவிர நோயாளி என்ற முறையில் அல்ல.
- ஃபார்மாலிடி!
கொஞ்ச நேரம் தீபா, கல்யாணியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். ஊர்ப்பட்ட விவகாரங்களையும் அலசிக் கொண்டு - அர்த்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.
இப்போது வினோத் வருவதாகச் சொல்லியிருக்கார்.
- லேசாக இழுத்தாள் தீபா.
'உனக்கு நேரமானால் நீ போகலாம்' தொனித்தது அதில். வெட்டிக் கொள்கிறாளா?
உடம்பைப் பார்த்துக்கோ தீப்
- வழக்கமான 'கர்டஸி'ப் புன்னகையுடன் அவள் வார்டை விட்டு வெளியே வந்தபோது வினோத் எதிரே வந்து கொண்டிருந்தான்.
ஹாய்.
ஹலோ.
சொல்லிவிட்டு நிற்காமல் நடந்தாள் கல்யாணி. வினோத் ஒரு டீஸென்ட்டான ரௌடி. தீபாவின் பாய்ஃப்ரெண்ட். சரியான ஜோடி. முகத்துக்குப் பொருந்தாத தொங்கு மீசையும் கிருதாவும் அவனை இன்னும் கோரமாகக் காட்டியது.
இந்தக் காதல் அது இது என்று இவர்கள் எல்லோரும் ஏன் தான் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்கிறார்களோ! மனத்துக்குள் பல்லைக் கடித்துக் கொண்டாள் கல்யாணி.
'தீபா - வினோத்' கல்யாணிக்குக் கொஞ்சம் கூடச் சம்பந்தம் இல்லாத இருவரின் காதலுக்கே இவள் இவ்வளவு எரிச்சல் படுகிறாளே! மூன்றாம் மனிதரின் நிலையில் இல்லாது இரண்டாம் மனிதரின் நிலையில் பார்த்தால் இது இன்னும் எத்தனை பெரிய விஷயம்! வானவில் மாதிரி எட்டாத உயரத்திலேயே இருந்த அந்த இனம்புரியாத வார்த்தை அவள் இன்று வரை அனுபவித்தறியாத 'காதல்' அவளது வாழ்வில் புகுந்து என்னவெல்லாம் ஜாலம் புரியப் போகிறது! அவளுக்கு இந்த நிமிடம் இப்படி ஒரு தீர்க்க தரிசனம் கிடைக்குமா என்ன!
தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்?
தனக்கு?
ஊஹூம். அவளுக்குக் காதல் ஏற்பட்டதில்லை. ஏற்படப் போவதும் இல்லை. சத்தியமாக அதற்குச் சந்தர்ப்பமே இல்லை.
காரணம்?
காரணம் அவள் கழுத்தில் மஞ்சள் நிறத்தில் நெளிந்து கொண்டிருந்தது.
அவள் காதலை அனுபவித்ததில்லை. கல்யாணத்துக்கு முன். கல்யாணத்திற்குப்பின் ஏற்படுவதை அவள் காதல் என்று ஒப்புக் கொள்ளமாட்டாள். அதன் பெயர் தாம்பத்யம்.
'டமால்'
தன்மேல் மோதிக் கொண்டு தலையைத் தேய்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தாள் கல்யாணி. கிட்டத்தட்டக் கல்யாணியின் வயதும் உருவமும் தான் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. மைனஸ் செழுமை. ப்ளஸ் அழகு. ரொம்பப் பதைபதைப்புடன் தென்பட்டாள்.
ஸாரி.
பரவாயில்லை.
- அந்தப் பெண்ணின் புன்னகை செத்துப் போயிருந்தது - அதாவது ஜீவனற்று.
சோகத்தில் 'ஐயோ பாவமாக' இருந்தாள் அவள். - ரோஜாவைப் பனி மூடியிருந்தது போல்.
ஏம்மா... யாருக்கு என்ன உடம்பு? ஏன் இப்படிப் பதற்றமாக...
என்... என் பிள்ளை அட்மிட் ஆகியிருக்கிறான். மாடிப் படியில் உருண்டு விழுந்து மண்டையில் அடி. தயவுபண்ணி வழியை விடுங்கள். ப்ளீஸ்
- கல்யாணியைத் தள்ளாத குறையாக அவள் விரைந்தாள்.
'ஏதேனும் உதவி செய்ய முடியுமா?' - யோசித்து முடிக்கு முன்பே கல்யாணியின் கால்கள் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து சென்றன.
ஏன் டாக்டர்... கிடைத்துவிட்டதா?
முயற்சிகள் நடக்கின்றன. கொஞ்சம் தொந்தரவு பண்ணாமல் அப்படி உட்காருகிறீர்களா?
டாக்டரின் தலை மறைந்ததும் அந்தப் பெண்ணை நெருங்கினாள் கல்யாணி.
என்னவோ கிடைத்துவிட்டதா என்று டாக்டரைக் கேட்டீர்களே... என்ன தேவை?
கல்யாணியை 'ஓ நீங்களா' என்பது போன்ற பார்வையில் நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
ரத்தம். என் பிள்ளைக்கு ரத்தம் ஏற்றினால் தான் அவன் பிழைப்பானாம். மாடிப்படியில் உருண்டு விழுந்து பலத்த அடியில் நிறைய ரத்தம் சேதாரமாகி...
அவள் கண்ணீர், பேச்சுக்கு அணை போட்டது.
கவலைப்படாதீர்கள்... என் ரத்தம் உங்கள் மகனுக்குப் பொருந்தினால் நான் டொனேட் பண்ணத் தயார்.
ஹும். நிறையப் பேர் தயார்தான். ஆனால் என் பிள்ளையின் ரத்தம் ரொம்ப ரேர் குரூப்பாம். கிடைப்பதே கஷ்டம். என்னுடையதே பொருந்தவில்லை.
எதற்கும் பார்த்துவிடலாமே. பொருந்தாவிட்டால் வேறு ஏற்பாடு செய்வது பற்றி யோசிக்கலாம்.
இரண்டு மணி நேரத்தில் ஒரு நெருங்கிய தோழியுடன் பேசுவதுபோல் - பழகுவதுபோல் - நெருங்கி விடுவோம் என்று கல்யாணியோ, வனிதாவோ நினைத்தே பார்க்கவில்லைதான்.
ஆம். அதுதான் அந்தப் பெண்ணின் பெயர்.
நடந்ததெல்லாம் கனவுபோலத் தோன்றியது.
எப்போது?
இப்போது - அரைமணி நேரம் முன்பு நடந்து முடிந்த நிகழ்ச்சிகளா அவை! வனிதாவுக்குப் போன ஜென்மத்து நினைவுபோல் இருந்தது எல்லாம்.
தான் பாட்டுக்குச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயதுச் சுரேஷ் குட்டி மாடிப்படிகளில் உருண்டு விழுந்தது.
அவனுடைய ரத்தம் கிட்டத்தட்ட காலியாகவே ஆகி விட்ட நிலையில் - 'ரத்தம், ரத்தம்' என்று எல்லோரும் ஆஸ்பத்திரி முதல் பிளட் பாங்க்வரை அலசிக் கொண்டே இருந்தபோது 'மடால்' என்று ஒரே மோதலில் பரிச்சயமான கல்யாணி... முன்பின் தெரியாதவள் - 'இதோ நானிருக்கிறேன்' என்று ஆபத்பாந்தவளாக முன்வந்தது எத்தனையோ ஜென்மங்களில் செய்த புண்ணியமோ என்னவோ, கல்யாணி கொடுத்த ரத்தம் சுரேஷுக்குப் பொருந்திய விந்தை நடந்தது
அப்பாடி. இனிமேல் கவலை இல்லை. ஹி இஸ் அவுட் அஃப் டேஞ்சர்,
என்று உண்மையான