Siruvan Pragalathanum, Narasimharum
()
About this ebook
பெரியவர்கள் படிக்கும்படி எழுதுவதே பெரும்பாடு. எளிதாக…. சின்னச் சின்ன வாக்கியங்களாக புரியும்படியாக போரடிக்காமல் போக வேண்டும்
பெரியவர்களுக்கு எழுதுவதுகூட ’ஓரளவு’ சுலபம். குழந்தைகளுக்கு எழுதுவது மிகமிகக் கஷ்டம். இரட்டிப்பு எளிமை வேண்டும். சிக்கலான வார்த்தைகளை அவிழ்த்துக் கொண்டிருக்க அவர்களுக்குத் தெரியாது.
அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்தபோது என் இரண்டு பேரன்களும் “ பாட்டி கதை சொல்லுங்க பாட்டி..” என்று ராத்திரியில் bed time story கேட்பார்கள். புராண..இதிஹாசக் கதைகளைச் சொல்வேன். சில சமயங்களில் நானே கற்பனையில் புதுப்புதுக் கதைகளை இட்டுக்கட்டி சயன்ஸ் ஃபிக்ஷன் கதைகளைச் சொல்வதும் உண்டு. அவற்றை உங்களுக்கும் சொல்கிறேன்...
Related to Siruvan Pragalathanum, Narasimharum
Related ebooks
Acham Thavir Ucham Thodu Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsMuransuvai Rating: 0 out of 5 stars0 ratingsThelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratingsVanadeviyin Maindhargal Rating: 0 out of 5 stars0 ratingsC. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Jaya Jaya Shankara Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Leelai Rating: 0 out of 5 stars0 ratingsInnilai Rating: 5 out of 5 stars5/5Sree Matha Rating: 5 out of 5 stars5/5Thiruppavai Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAzhwarkalai Aarathippom Rating: 0 out of 5 stars0 ratingsKathaigal Vithaigal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsKottaipurathu Veedu Rating: 5 out of 5 stars5/5Thirikadukam Rating: 0 out of 5 stars0 ratingsAthimalai Devan - Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsVerena Neeirunthai! Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Rating: 4 out of 5 stars4/5Sorgam Naduvile Rating: 0 out of 5 stars0 ratingsSikkal Singaravelava Jeevanai Sivanakkiduvai Rating: 0 out of 5 stars0 ratingsPalan Tharum Parigara Koyilgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsTamilnadu 50 Rating: 0 out of 5 stars0 ratingsஅருணகிரிநாதர் Rating: 0 out of 5 stars0 ratingsAaram Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsKantha Peruman Saritham Rating: 0 out of 5 stars0 ratingsKaaviya Kavingnar Vaali Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Thirukkural Rating: 0 out of 5 stars0 ratingsVainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Siruvan Pragalathanum, Narasimharum
0 ratings0 reviews
Book preview
Siruvan Pragalathanum, Narasimharum - Vedha Gopalan
https://www.pustaka.co.in
சிறுவன் பிரகலாதனும், நரசிம்மரும்
Siruvan Pragalathanum, Narasimharum
Author:
வேதா கோபாலன்
Vedha Gopalan
For more books
https://www.pustaka.co.in/home/author/vedha-gopalan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் – 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17
அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19
அத்தியாயம் – 19
அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22
அத்தியாயம் – 22
என்னுரை
வணக்கம்
பெரியவர்கள் படிக்கும்படி எழுதுவதே பெரும்பாடு. எளிதாக…. சின்னச் சின்ன வாக்கியங்களாக புரியும்படியாக போரடிக்காமல் போக வேண்டும்.
இந்த எளிமை என் ஆசான்கள் எனக்குக் கற்றுத் தந்த பாடம். ஆசான்கள்? அது பெரிய லிஸ்ட். அவற்றல் முதன்மையாக வருபவர்கள் குமுதம் பத்திரிகையை நிறுவிய ஆசிரியர் திரு எஸ்.ஏ.பி அண்ணாமலை, குமுதத்தின் தூண்களில் ஒருவரான எழுத்து மன்னன் திரு ராகி ரங்கராஜன்.. அதே பதவியில் இருந்த திரு ஜ ரா சுந்தரேசன்.. எழுத்துலகின் எம் ஜி ஆரான சுஜாதா போன்றவர்கள் எனக்குக் கற்றுத் தந்த பாடம் எளிமை தவிர வேறில்லை.
பெரியவர்களுக்கு எழுதுவதுகூட ’ஓரளவு’ சுலபம். குழந்தைகளுக்கு எழுதுவது மிகமிகக் கஷ்டம். இரட்டிப்பு எளிமை வேண்டும். சிக்கலான வார்த்தைகளை அவிழ்த்துக் கொண்டிருக்க அவர்களுக்குத் தெரியாது. புரியாக வாக்கியங்களைப் பிரித்துக் கொடுக்க அம்மா அப்பாக்களுக்குப் பொறுமையும் நேரமும் இல்லை.
எனவே எழுத்து பெரும் பொறுப்பு எனில் சிறுவர்களுக்காக எழுதுவது இரட்டிப்புப் பொருப்பு.
அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்தபோது என் இரண்டு பேரன்களும் பாட்டி கதை சொல்லுங்க பாட்டி..
என்று ராத்திரியில் bed time story கேட்பார்கள். புராண..இதிஹாசக் கதைகளைச் சொல்வேன். சில சமயங்களில் நானே கற்பனையில் புதுப்புதுக் கதைகளை இட்டுக்கட்டி சயன்ஸ் ஃபிக்ஷன் கதைகளைச் சொல்வதும் உண்டு. (ராக்கெட் மெர்க்குரிக்கு வீனஸ்க்கு என்று போகும் என்று நான் கதைவிடும்போது "அங்கேயெல்லாம் டெம்ப்ரேச்சர் மனித வாழ்க்கைக்கு ஏற்றதாய் இரக்காதே பாட்டி என்பான் பேரன். )
அமெரிக்காவில் புத்தக வாசிப்புக்குக் குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே நன்கு தயார் செய்வார்கள். பள்ளிக்கூட லைப்ரெரியிலிருந்து கட்டாயமாக வாரத்துக்கு இரண்டு புத்தகங்கள் எடுத்து வந்து வாசித்து, அடுத்த வாரம் அதை வகுப்பில் விளக்க வேண்டும்.
ஆகவே ஏகப்பட்ட புத்தகங்கள் எடுத்து வருவான் என் பேரன். பெரியவர்களும் படிக்கும்படி சுவாரஸ்யமாக இருக்கும் அவை.
சிறுவர்களுக்கு எப்படி எழுத வேண்டும் என்பது அதைப் பார்த்தாலே விளங்கும். ஒரு குறிப்பிட்ட பதிப்பாளரின் சீரிஸில் குழந்தைகளுக்காக இது போல நூறு நூறு பக்கங்களாக ஏகப்பட்ட புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். அவை அத்தனையும் குழந்தைகளுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் ஏகப்பட்ட தகவல்கள். சுவாரஸ்யமாயிருக்கும்.
அந்த யுக்திகளை நினைவு வைத்துக்கொண்டு நான் எழுதியதே இந்த நூல். ஆகவே பெற்றோரே.. உங்கள் குழந்தைகள் மட்டுமன்றி நீங்களும் இவற்றை வாசித்துப் பலனடையலாம்.
என் எழுத்துக்களை எப்போதும் சிறந்த முறையில் மின் புத்தகமாகப் பிரசுரிக்கும் புஸ்தகா டிஜிடல் நிறுவனத்துக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
என் எழுத்துப் பணிகளுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்துக்கொண்டிருக்கும் என் அன்புக் கணவர் எழுத்தாளர் திரு பாமாகோபாலனுக்கு என்றைக்கும் நன்றி.
அன்பு + நன்றிகளுடன்
வேதா கோபாலன்
பனி பொழியும் டிசம்பரின் கடைசி நாள், 2021
என் செல்லக் குழந்தைகளே? நலமாய் இருக்கிறீர்களா?
நீங்களெல்லாம் சமர்த்துக்குழந்தைகள். அம்மா அப்பா சொல்வதைக் கேட்டு நன்றாய் வளர்வீர்கள். எனக்கு நன்றாய்த் தெரியும்.
இப்போது உங்களுக்குப் பள்ளிக்கூடம் லீவா? அல்லது பிசியாய்ப் பள்ளிக்கூடப் படிப்பில் ஆழ்ந்து போயிருக்கிறீர்களா?
லீவு என்றால் இந்த மின்புத்தகத்தை முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பீர்கள். அத்தனை சுவாரஸ்யமான புராணக்கதை இது.
இந்த மின்புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் உங்களுக்கு ஒரு பெரிய சந்தேகம் வரும். ‘அம்மா அப்பா சொல்வதைக் கேட்டு நன்றாய் வளர வேண்டும் என்றுதானே பெரியவர்கள் எல்லோருமே சொல்வார்கள்? இந்த வேதாப் பாட்டியுமே சற்று முன்னால் அப்படித்தானே சொல்றாங்க? ஆனால் இந்தப் புராணத்தில் வரும் பிரஹல்லாதன் அப்படிச் செய்யவில்லையே? ஆனால் அந்த பையனை நாடே போற்றுகிறதே?’ என்று கேட்பீர்கள்.
அதற்கான விடையையும் இந்தப் புத்தகத்திலேயே சொல்லியிருக்கிறேன் என் செல்லங்களே?
சரி.. இப்போது கதைக்குள் போவோமா?
வாருங்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு…. வேதா கோபாலன்
அத்தியாயம் – 1
மொத்தம் எத்தனை அவதாரங்கள்?
சற்றுமுன் பிரஹல்லாதன் என்ற பெயரைக் குறிப்பிட்டிருக்கிறேன் பாருங்கள்.. இவனைப் பற்றித்தான் இந்தக் கதையில் நாம் பார்க்கப்போகிறோம். இது கதை அல்ல குழந்தைகளே. புராணம்.
இவன் பெயரைச் சிலர் பிரஹல்லாதன் என்று குறிப்பிடுவார்கள். சிலர் பிரஹலாதன் என்பார்கள். வேறு சிலரோ பிரகலாதன் என்பார்கள்.
நாம் வசதியாகப் பிரகலாதன் என்றே சொல்வோமா?
இந்த அற்புதமான சிறுவனைப் பற்ற நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால்,முதலில் நாம் தசாவதாரங்களைப் பற்றி அறிய வேண்டும்.
அவதாரம் என்ற வார்த்தைக்கு முதலில் அர்த்தம் பார்ப்போம்.
அவதாரம் என்றால் இறங்கி வருதல் என்று அர்த்தம்.
நம்மை நல்வழிப்படுத்தித் தீமைகளிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக இறைவனே இறங்கி வருவதன் பெயர்தான் அவதாரம்.
இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். அப்போது உங்களுக்கெல்லாம் நன்றாகப் புரியும்.
உங்களுக்கெல்லாம் கிணறு என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாவிட்டால் உங்கள் பெற்றோரிடமோ அல்லது பாட்டி தாத்தாவிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
முன்பெல்லாம் உங்கள் பாட்டி காலத்தில் வீட்டில் தண்ணீர் எடுக்கக் கிணறுதான் பயன்படும்.
அந்தக் கிணற்றில் ஒரு பொருள் விழுந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். உதாரணத்துக்கு உங்களுக்கு மிகவும் பிடித்தமான, நீங்கள் வழக்கமான ஆரோக்யபானம் அருந்தும் டம்ளர் விழுந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.
கிணறு மிகவும் ஆழமாக இருக்கும். நாமெல்லாம் அதிலிருந்து ஒரு பொருளைச் சுலபமாக எடுக்க முடியாது. எனவே கிணற்றில் இறங்கி அதை எடுக்கத் தெரிந்த